Monday 31 December 2018

புராணக் கதைகள் ஏன் குடும்பக் கதைவடிவில் சொல்லப்பட்டுள்ளன? என்னிடம் கேட்டால்

புராணக் கதைகள் 
ஏன் குடும்பக் கதைவடிவில் சொல்லப்பட்டுள்ளன?

என்னிடம் கேட்டால்?


புராணக் கதைகள் அனைத்தும் அனைவரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் குடும்பக்கதைகள் போலச் சொல்லப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு சந்திரனுக்கு 27 (நட்சத்திரங்கள்) மனைவிகள் என்று சொல்லப்பட்டிருக்கும்.  சூரியனுக்கு உஷா தேவி, சாயா தேவி என்ற இரண்டு மனைவியர் என்றும், சூரியனுக்கும் சாயாவிற்கும் பிறந்தவன் சனீசுவரன் என்றும் சொல்லப்பட்டிருக்கும்.

நமக்குத் தேவைப்படும் உணவோ மருந்தோ அப்படியே கொடுக்கப்படாது. மருந்தை அப்படியே விற்கவும் முடியாது, அப்படியே சாப்பிடவும் முடியாது.
மருந்துத் தயாரிப்பாளர் உற்பத்தி செய்த மருந்தை முதலில் ஒரு கூடு (capsule) போட்டு பத்திரப்படுத்தி வைப்பார்.  கூட்டு மாத்திரையை அப்படியே விற்க முடியாது. 10 எண்ணிக்கை கூட்டுமருந்தை ஒரு அட்டையில் அடைத்து வைத்து இருப்பார்கள். இதுபோல் 10 அட்டைகள் அடங்கியதை ஒரு காகித அட்டைப்பெட்டியில் அடைத்து வைத்து விற்பார்கள்.


இதுபோல் தான் புராணக்கதைகளும் இருக்கும், பல்வேறு படிநிலைகளைத் தாண்டி அது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பயன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

நாம் அட்டைகளை நீக்கி விட்டு கூட்டு மாத்திரையைச் சாப்பிடுகிறோம். நமது வயிறு கூட்டுமாத்திரையில் உள்ள மருந்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்.

நாம் புராணக்கதைகளை ஒன்றிக் கேட்டு அதன் அட்டைகளை நீக்கிவிட்டு கருத்தை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

துவரிமான், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், சிறப்புரை

மதுரை 
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் 
ஒருங்கிணைப்பாளர்கள் முகாம்



மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையத்தின் நிறுவுனத் தலைவர் திரு கா.சந்திரசேகரன் அவர்கள், “சிறப்புமிக்க திருவிளையாடல் புராண ஆராய்ச்சி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுமாறு அடியேனை அழைத்தார்.
அடியார்களுடன் கலந்திருப்பதும், கால்மாறி ஆடிய கருணைக்கடலின் திருவிளையாடல்களின் சிறப்புகளைத் திருவிளையாடல் புராணத்தில் உள்ளபடி எடுத்துக் கூறுவதும் ஒரு கொடுப்பினை யல்லவா?  எனவே மிகவும் மகிழ்ந்து ஒத்துக் கொண்டேன்.


நேற்று மார்கழி 15 (30.12.2018) ஞாயிற்றுக் கிழமை யன்று காலை மணி 10.30க்கு துவரிமான் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் எனது சிறப்புரை நிகழ்ந்தது.



திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பெற்று 64 திருவிளையாடல்களாகச் சொல்லப் பெற்றுள்ளதற்கான காரணம், மதுரைக்கு மதுரை மதுராபுரி கூடல்நகர் திருஆளவாய் என்ற பெயர்கள் உண்டானதற்கான காரண காரியங்கள், மற்றும் புராணம் காட்டும் மானிடவாழ்க்கைநெறி முதலானவற்றைப் புராணத்தின் அடிப்படையில் விளக்கிக் கூறினேன்.  “கண்ணகி பற்றித் திருவிளையாடல் புராணத்தில் குறிப்புகள் ஏதும் ஏன் இடம்பெறவில்லை?” என்ற காரணங்களைத் தொகுத்துக் கூறினேன்.  “திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ள பொன்னனையாளை 64 நாயன்மார்களின் வரிசையில் வைத்துச் சுந்தரர் பெருமான் ஏன் பாடவில்லை ?” என்பதற்கான காரணங்களையும் தொகுத்துக் கூறினேன்.  அடியார் பலரும் மிகுந்த கவனத்துடன் செவிமடுத்துக் கேட்டது எனக்கு மட்டட்ற மகிழ்ச்சியை அளித்தது.



மதிய உணவிற்குப் பிறகு, மதுரை திருப்பணிச் செம்மல்  உயர்திரு. கருமுத்து க. தியாகராசன் அவர்கள் உரையாற்றினார்கள். 36ஆவது திருவிளையாடல் நடைபெறக் காரணமான பொன்னனையாளின் சிறப்பையும் அவள் நடத்தி வந்த  அன்னதானத்தின் சிறப்பையும் எடுத்துக் கூறினார்.

புராணங்களைப் பொய் யென்று பேசியும் எழுதியும் வருகின்றனர் சிலர். சிலர் புராணங்களைத் தொன்மம் என்றும் கட்டுக் கதைகள் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது போன்ற சில அற்புதமான நிகழ்ச்சிகள் அன்றாடம் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன எனச் சில நிகழ்ச்சிகளை உதாரணத்துடன் எடுத்துக்காட்டி விளக்கினார் உயர்திரு.கருமுத்து க. தியாகராசன் அவர்கள்.
திருமலை நாயக்கர் குமரகுருபரரை அழைத்து மீனாட்சியம்மன் சந்நிதியில் அமர்த்தி மீனாட்சி பிள்ளைத்தமிழ்ப் பாமாலையைப் பாடச் சொல்லி அரங்கேற்றம் செய்கிறார்.  அப்போது சிறுபெண்குழந்தை வடிவில் அன்னை மீனாட்சி வந்து மன்னன் மடியில் அமர்ந்து மொத்தப் பாடலையும் கேட்டு மகிழ்ந்து தன் கழுத்தில் உள்ள முத்தாரத்தைப் பரிசாகக் கொடுத்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்.

இப்போது நடைபெற்று முடிந்துள்ள குடமுழுக்குத் திருப்பணியின் போது,  குடமுழுக்கை எந்த நாளில் வைத்துக் கொள்ளலாம் எனச் சீட்டு எழுதிப் போட்டு அன்னை மீனாட்சியிடம் வேண்டிக் கொண்டபோது, ஒரு சிறுமியே மீனாட்சி உருவத்தில் வந்து சீட்டு எடுத்துக் கொடுத்தும் தன்னுடைய பெயர் மீனாட்சி என்று கூறி அருளிச் செய்த நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்தார்.
இதுபோன்று அன்றாடம் நடைபெறும் திருவிளையாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்திட வேண்டுமென விருப்பம் தெரிவித்து அவரது பக்தியில் தோய்ந்த உரையை நிறைவு செய்தார்.



கூட்டத்திற்கு வந்திருந்த அடியார்கள் ஒவ்வொருவராக,  அவரவர் செய்துவரும் திருப்பணிகளை எடுத்துக்கூறி அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து கொண்டனர்.
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையத்தின் தலைவர் திரு.சந்திரசேகரன் அவர்களும், செயலாளர் முனைவர்.கண்ணன் அவர்களும், பொருளாளர் திரு. சரவணன் அவர்களும் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  அடியார்களைப் பெரிதும் உபசரித்து மகிழ்ந்தனர்.



முகாம் நிறைவடைந்தவுடன், நானும் திருப்பூவணம் பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் பொருளாளருமான ஐயா முத்துக்குமாரசாமி அவர்களும் கோயில் எதிரே உள்ள அருள்மிகு முனீசுவரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம்.  அனைவரும் முனீசுவரர் மேல் மிகுந்த பக்தியும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். முனீசுவரர் கோயில் வளாகத்தில் கிராமத்தினர் யாரும் காலணி அணிந்து செல்வதில்லை.  உலகமக்களெல்லாம் கணினியுடனும் கைபேசியுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் கலிகாலத்தில், காலில் செருப்பு அணியாமல் கடவுளுடன் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கிராமத்தினரைக் கண்டு பெரிதும் வியந்து மகிழ்ந்தோம்.



மொத்தத்தில் என் வாழ்நாளில் நான் வாழ்ந்த நாளில் ஒருநாளாக நேற்றைய மார்கழி 15ஆம் நாள் விளங்கியது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
------------------------------------------------------------------------------
தினமலர் பத்திரிக்கைச் செய்தி
மார்கழி 16 ( 31.12.2018) திங்கள் கிழமை,வாடிப்பட்டி: மதுரை துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் முகாம் நடந்தது.மைய நிறுவன தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை ஓய்வு பெற்ற துணை பதிவாளர் காளைராஜன், தியாகராஜர் கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன், செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன் மற்றும் பலர் பேசினர். நிகழ்ச்சியை நிர்வாகி முருகேசன் ஒருங்கிணைத்தார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2180902

Wednesday 19 December 2018

திருவிளையாடல் புராணம் - பரஞ்சோதி முனிவர் பாடியருளிய வரலாறு

திருவிளையாடல் புராணம் 
பரஞ்சோதி முனிவர்  மொழிபெயர்த்துப் பாடி அருளிய வரலாறு


சிவபெருமான் மதுரையில் அருளிச் செய்த நிகழ்ச்சிகளைத்                ‘திருவிளையாடல் புராணம்’ கூறுகிறது.  வடமொழியில் இருந்த இந்தக் கதைகளைப் பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார்.  பரஞ்சோதி என்பது சிவபெருமானின் பெயர்களுள் ஒன்றாகும்.   நாரைக்கு முத்தி கொடுத்த திருவிளையாடலைக் கூறும்  திருவிளையாடல் புராணம் 2310ஆவது பாடல் சிவபெருமானைப் சிவபரஞ்சோதி என்று குறிப்பிடுகிறது.

மதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் எண்ணிலடங்கா.  அவற்றுள் 64 நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.  மதுரை மாநகருக்குக் கடம்பவனம், கூடல்நகர், நான்மாடக் கூடல், ஆலவாய், சிவபுரம், மன்றல், மதுரா நகர், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன.

பாடல் -
" அறு கால் பீடத்து உயர் மால் ஆழி கடைந்த அமுதை அரங்கேற்று மா போல் 
அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை அரும் தமிழால் பாடி 
அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில் அமரர் சூழும் 

அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு ஏற்றி னானே."

பரஞ்சோதி முனிவர் வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காட்டில் பிறந்தவர்.  இவர் தமிழும் வடமொழியிலும் புலமை மிகுந்தவர்.  சங்கர சங்கிதை என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்து எழுதித்தர வேண்டும் எனப் பெரியவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த வடமொழிநூலை மொழிபெயர்த்துப் பாடிச் சொக்கநாதர் (மீனாட்சி சுந்தரேசுவரர்) சந்நிதியில் அரங்கேற்றியதாகக் கந்தசாமிப் புலவர்  மேலேயுள்ள அவையடக்கப் பாடலில் குறிப்பிடுகிறார்.


(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 24.)
அண்ணல் பால் தெளிந்த நந்தி அடிகள் பால் சனற்குமாரன்
உள் நிறை அன்பின் ஆய்ந்து வியாதனுக்கு உணர்த்த வந்தப்
புண்ணிய முனிவன் சூதற்கு ஒதிய புராணம் மூ ஆறு
எண்ணிய இவற்றுள் காந்தத் தீச சங்கிதையின் மாதோ.

 (திருவிளையாடற் புராணம் பாடல் எண் 25.)
அறைந்திடப் பட்டது ஆகும் ஆலவாய் புகழ்மை அந்தச்
சிறந்திடும் வடநூல் தன்னைத் தென் சொலால் செய்தி என்று இங்கு
உறைத்திடும் பெரியோர் கூறக் கடைப் பிடித்து உறுதி இந்தப்
பிறந்திடும் பிறப்பில் எய்தப் பெறுதும் என்று உளம் தேறா.

18 புராணங்களில் ஒன்று காந்தத் தீச சங்கிதை என்ற புராணம் ஆகும்.  இதில் ஈசனது கதைகள் பாடப்பெற்றுள்ளன.

திருவிளையாடற் புராணம் பாடல் எண்  221

இன்ன ஆறனுள் சங்கர சங்கிதை என்று
சொன்ன நூலினை உணர்த்தினான் சங்கரன்  துணைவிக்கு
அன்ன போது அவள் மடியினில் இருந்து கேட்டு அதனை
மின்னு வேல் பணி கொண்ட வேள் வெளிப்பட உணந்தான்.

குன்று எறிந்த வேள் வழிபடு குறு முனிக்கு உரைத்தான்
அன்று தொட்டு அஃது அகத்திய சங்கிதை ஆகி
நின்ற தன்னது கேட்பவர்க்கு அரன் அடி நீழல்
ஒன்றும் இன்ப வீடு அளிப்பதா ஒரு தலன் உரைக்கும்.

14
சங்கிதை என்ற வடநூலில் உள்ளதை மொழிபெயர்த்துப் பாடுகிறேன் என்று பரஞ்சோதி முனிவரே குறிப்பிடுகிறார். 


இவர் ‘திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’, ‘மதுரை பதிற்றுப் பத்தந்தாதி’ என்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.  திருவிளையாடல் புராணமானது மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது.   மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன.  மொத்தம் 3,363 பாடல்கள் உள்ளன.

இந்திரன் பழி தீர்த்த படலம் முதல், வருணன் அனுப்பிய கடல்நீரை சிவன் வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன. நான் மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன. திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

Tuesday 18 December 2018

“திருவிளையாடல் புராண ஆராய்ச்சி” என்ற தலைப்பில் சிறப்ரை


மதுரை துவரிமான் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மண்டபத்தில் விளம்பிவருடம் மார்கழி 15 (30.12.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை “சிறப்பு மிக்க திருவிளையாடல் புராண ஆராய்ச்சி” என்ற தலைப்பில் சிறப்ரை

அனைவரும் வருக



மதுரைக்குக்குக் ‘கூடல்’ என்றும் ‘நான்மாடக் கூடல்‘ என்றும் எதனால் பெயர் உண்டானது?“

மதுரைக்குக்குக் 
கூடல் என்றும், ‘நான்மாடக் கூடல்‘ என்றும் எதனால் பெயர் உண்டானது?“




மதுரை மாநகருக்குக் கடம்பவனம், ஆலவாய், சிவபுரம், மன்றல், மதுரா நகர், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன.  அவற்றுள் நான்மாடக் கூடல்“ என்ற பெயரும் ஒன்று. பரஞ்சோதி முனிவர் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தை எழுதியுள்ளார்.  

திருவிளையாடல் புராணத்தில் 105 பாடல்களில் ‘நான்மாடக் கூடல்‘ என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  இந்தப் பாடல்கள் கீழே இணைக்கப் பெற்றுள்ளன.

332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.


1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.


1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.

மேற்கண்ட 332, 1309 மற்றும் 1332 ஆவது பாடல்களில், மதுரைக்குக் “கூடல்“ என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணம்  விளக்கப்பட்டுள்ளது.


1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.

மேலே கண்ட 1596 ஆவது பாடலில் வைகைநீர் கூடல் செய்த இடம் மதுரை என்ற குறிப்பு உள்ளது.

பண்டைய பாண்டிய நாட்டை ‘அபிடேகபாண்டியன்‘ ஆட்சி செய்து வந்த காலத்தில், பேரூழி ஏற்பட்டது.  இதனால் கடல் பொங்கிச் சீற்றம் கொண்டு (Tsunami) , கடலலைகள் மதுரைவரை வந்தன.  அப்போது பூமியில் படிந்த கடல்நீர் எல்லாம் ஆவியாகி ஏழு மேகங்களாக மாறின. இம் மேகங்கள், பூசணிக்காய் போன்ற நீர்த்துளிகளுடன், பளிங்குத் தாரைபோன்ற நீர்த் தாரைகளுடன்  இடைவிடாது மழையாய் பெய்தன. இப் பெரு மழையில் மதுரை மாநகரம் அழியும் நிலை ஏற்பட்டது.  அப்போது, மதுரை அருள்மிகு சோமசுந்தரர் திருவருள் செய்து, தனது ஜடாமுடியிலிருந்து நான்கு மேகக் கூட்டங்களை அனுப்பினார்.  இந்த நான்கு மேகக் கூட்டங்களும் மதுரையை வளைத்து மாடங்களாகிச் சந்துவாய் தெரியாதவாறு, மதுரைக்கு மேலே ஒரு குடைபோல் காத்து நின்றன. இதனால் பெருமழையின்  அழிவிலிருந்து மதுரை மாநகரம் காப்பாற்றப் பெற்றது.  இந் நிகழ்ச்சியால் மதுரைக்கு, “நான்மாடக் கூடல்“ என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.  மதுரையில் “எழுகடல் தெரு“ என்ற பெயரில் ஒரு வீதி உள்ளதும் இங்கு கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இப் புராணப் பாடல்களின் வாயிலாக, பண்டைக்காலத்தில் மதுரையானது சுனாமியால் பாதிப்பு அடைந்துள்ளது என்ற செய்தியையும், அதன் பின்னரே மதுரைக்கு “நான் மாடக் கூடல்” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி.காளைராசன்


--------------------------------------------------------

திருவிளையாடல் புராணத்தில்  கூடல் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு 

332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.

1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.

1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.

1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.

மதுரைக்குக் “கூடல் என்ற பெயர் இடம் பெற்றுள்ள திருவிளையாடற் புராணப் பாடல்கள்
31.
அறு கால் பீடத்து உயர் மால் ஆழி கடைந்த அமுதை அரங்கேற்று மா போல்
அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை அரும் தமிழால் பாடி
அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில் அமரர் சூழும்
அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு ஏற்றி னானே.

136.
தேர் ஒலி கலினப் பாய் மான் சிரிப்பு ஒலி புரவி பூண்ட
தார் ஒலி கருவி ஐந்தும் தழங்கு ஒலி முழங்கு கைம்மான்
பேர் ஒலி எல்லாம் ஒன்றிப் பெருகு ஒலி அன்றி என்றும்
கார் ஒலி செவி மடாது கடி மணி மாடக் கூடல்.

165.
தேசு அவிர் நீல மாடம் செம் மணிச் சென்னி மாடம்
காசறு கனக மாடம் சந்திர காந்த மாடம்
மாசு அற விளங்கு மின்ன மாட நீண் மாலைக் கூடல்
பாசிழை மடந்தை பூண்ட பன் மணிக் கோவை அன்ன.

253.
அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம் அமர்ந்தோர் சீவன்
முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா ஞானம்
புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம் தென் கூடல்
பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால் பகர்வர் நல்லோர்.

312.
அற உருவன் ஆலவாயான் ஆமஞ் செவி மடுத்தால் அடைந்த பத்துப் 
பிறவி வினை அறு நினைந்தான் ஊறு பெரும் பவப் பாவப் பிணி போம் கூடல்
இறைவனை இன்று இறைஞ்சுதும் என்று எழுந்து மனைப்புறம் போந்தால் ஈரைஞ்நூறு
மறமுறு வெம் பவத்து இழைத்த பாதக வல் வினை அனைத்தும் மாயும் மன்னோ.

321.
ஒருகால் அட்டாங்கமுடன் பஞ்சாங்கமுடன் நாத ஒண் செம் கால் வெண்
குரு காலு மலர்த் தடம் சூழ் கூடல் நாயகற் பணிவோர் கோல் ஒன்று ஓச்சி
பொருகாலின் வரு பரித்தேர் மன்னவராய் வரும் தம் புடைவந்து எய்தி
இருகாலும் தலைவருட எக்காலும் தமை வணங்க இருப்பர் அன்றே.

325.
மான் மதச் சுந்தரன் கொடிய பழி அஞ்சு சுந்தரன் ஓர் மருங்கின் ஞானத்
தேன் மருவி உறை சோம சுந்தரன் தேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த
கான் மருவு தடம் பொழில் சூழ் ஆலவாய்ச் சுந்தரன் மீன் கணங்கள் சூழப்
பால் மதி சூழ் நான் மாடக் கூடல் நாயகன் மதுரா பதிக்கு வேந்தன்.

326.
சிர நாலோன் பரவரிய சமட்டி விச்சா புர நாதன் சீவன் முத்தி
புர நாதன் பூஉலக சிவ லோ காதிபன் கன்னி புரேசன் யார்க்கும்
வரம் நாளும் தரு மூல லிங்கம் என இவை முதலா மாடக் கூடல்
அரன் நாமம் இன்னம் அளப்பு இலவாகும் உலகு உய்ய வவ்வி லிங்கம்.

332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.

339.
வய ஏனக் குருளை களை மந்திரிகள் ஆக்கியதும் வலி உண்டாகக்
கயவாய்க்குக் குருமொழி வைத் அருளியது நாரைக்குக் கருணை நாட்டம்
தயவால் வைத்து அருண் முத்தி நல்கியதும் கூடல் நகர் தன்னைச் சித்தர்
புய நாகம் போய் வளைந்து திரு வால வாயாக்கிப் போந்த வாறும்.

1307.
பூதங்கள் அல்ல பொறி அல்ல வேறு புலன் அல்ல உள்ள மதியின்
பேதங்கள் அல்ல இவை அன்றி நின்ற பிறிது அல்ல என்று பெருநூல்
வேதம் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளி என்ப கூடல் மறுகில்
பாதங்கள் நோவ வளை இந்தன் ஆதி பகர் வாரை ஆயும் அவரெ.

1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.

1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.

1334.
தேட அரும் கதிர் மணி முடிச் செழியனும் பாண்டி
நாடரும் திரு எய்தி மேல் நல்ல வீடு எய்தக்
கூடல் அம் பதி மேவிய குணம் குறி கடந்த
வேடர் அங்கு ஒரு சித்த மெய் வேடராய் வருவார்.

1425.
பின்னும் சில் வரங்கள் நல்கப் பெற்று நான் மாடக் கூடல்
மன்னும் சின் மயனை வந்து வந்தித்து வருநாள் காமன்
என்னும் சில் மலர்ப் பூம் தண்தார் இராச சேகரனைப் பெற்று
மின்னும் சில்லியம் தேர் வேந்தன் மேதினி புரக்கும் மன்னோ.

1459.
தாய் இலாப் பிள்ளை முகம் தனை நோக்கித் தெருவின் இடைத் தளர்வாள் உள்ளம்
கோயிலாக் கொண்டு உறையும் கூடல் நாயகனை மனக் குறிப்பில் கண்டு
வேயில் ஆக்கிய தடம் தோள் கௌரி திரு மந்திரத்தை விளம்ப லோடும்
சேயிலாய்க் கிடந்து அழுத குழவி விசும்பு இடை மேல் தெரியக் கண்டாள்.

1492.
குரவன் செம்கோல் கைக் கொண்ட குலோத்துங்க வழுதி செம்கண்
அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை நித்தம்
பரவு அன்பின் வழிபாடு ஆனாப் பத்திமை நியமம் பூண்டான்
இரவு அஞ்சும் கதுப்பின் நல்லார் ஈர் ஐயா இரவர் உள்ளான்.

1504.
மாண்டவளைத் தன் வெந் இடை இட்டான் மகவு ஒக்கல்
தாண்ட அணைத்தான் தாய் முலை வேட்டு அழும் தன் சேயைக்
காண் தொறும் விம்மாக் கண் புனல் சோரக் கடிது ஏகா
ஆண் தகை மாறன் கூடல் அணைந்தான் அளி அன்றான்.

1555.
கொலை இரும் பழிக்கு அன்று அஞ்சும் கூடல் எம் பெருமான் கொன்றை
மிலை இரும் குஞ்சி வேங்கை மெல் இணர்க் கண்ணி வேய்ந்து
கலை இரு மருப்பில் கோடிக் காது அளவோடும் தாடி
சிலை இரும் தடக்கை வேடம் திரு உருக் கொண்டு தோன்றி.

1571.
ஆததாய் இயும் கண்டு ஆனா அற்புதம் அடைந்து கூடல்
நாதனார் நவின்ற ஆற்றான் நல்நெறி விரதச் செய்கை
மாதவ ஒழுக்கம் தாங்கி வரு முறை மதிய மூன்றில்
பாதகம் கழிந்து தெய்வப் பார்ப்பன வடிவம் ஆனான்.

1574.
அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்.

1576.
கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி ஞாலம்
காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில் உடுத்த கூடல்
மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி வாழ்வான்.

1583.
அறம் கடை நின்றாள் உள்ளம் ஆற்றவும் கடையன் ஆகிப்
புறம் கடை நின்றான் செய்த புலமை தன் பதிக்கும் தேற்றாள்
மறம் தவிர் கற்பினாள் தன் மனம் பொதிந்து உயிர்கள் தோறும்
நிறைந்த நான் மாடக் கூடல் நிமலனை நினைந்து நொந்தாள்.

1584.
தாதக நிறைந்த கொன்றைச் சடையவன் புறம்பு செய்த
பாதகம் அறுக்கும் கூடல் பகவன் எவ்வுயிர்க்கும் தானே
போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் புலைஞன் செய்த
தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு உள்ளம் கொண்டான்.

1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.

1598.
அம்மனை அருளிச் சொன்னபடி எலாம் அருளிச் செய்து
தெம் முனை அடுவாள் வீரர் சித்தனை மாய்த்தார் ஈது
மெய்மை ஆம் என்று கண்ட மைந்தரும் விளம்பக் கேட்டான்
எம்மை ஆளுடை கூடல் இறை விளையாடல் என்றான்.

1599.
கொடியை நேரிடையாள் ஓடும் கொற்ற வாள் இளைஞ ரோடும்
கடிய நான் மாடக் கூடல் கண்ணுதல் அடிக்கீழ்த் தாழ்ந்து
நெடியன் நான் முகனும் தேறா நெறியது சிறிய ஏழை
அடியனேன் அளவிற்றே நின் அருள் விளையாடல் என்றான்.

1613.
கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம்
கொண்டல் கண் வளர் மதில் வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்
அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய்
விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்.

1630.
குண்டு அழல் கணின் எழுந்த அக் கொடிய வெம் பசுவைப்
பண்டு போல் அவர் விடுத்தனர் கூடல் அம் பதிமேல்
உண்டு இல்லையும் எனத் தடுமாற்ற நூல் உரைத்த
பிண்டியான் உரை கொண்டு உழல் பேய் அமண் குண்டர்.

1648.
உலகு அறி கரியாத் தன் பேர் உருவினை இடபக் குன்றாக்
குல உற நிறுவிச் சூக்க வடிவினால் குறுகிக் கூடல்
தலைவனை வணங்க ஈசன் தண் அருள் சுரந்து பண்டை
இலகு உரு ஆகி இங்ஙன் இருக்க என இருத்தினானே.

1651.
அன்னது தெரிந்து விந்தம் அடக்கிய முனி அங்கு எய்தி
மன்னவற்கு ஆக்கம் கூறி மழவிடைக் கொடியோன் கூடல்
பன்னரும் புகழ்மை ஓது பனு வலை அருளிச் செய்ய
முன்னவன் பெருமை கேட்டு முகிழ்த்தகை முடியோன் ஆகி.

1680.
அடியவர் குறைவு தீர்த்து ஆண்டு அருள்வதே விரதம் பூண்ட
கொடி அணி மாடக் கூடல் கோ மகன் காமன் காய்ந்த
பொடி அணி புராணப் புத்தேள் புண்ணியன் அருளினாலே
இடி அதிர்விசும்பு கீறி எழுந்தது ஓர் தெய்வ வாக்கு.

1685.
பொருநரே அனையான் நேர்ந்து போந்து நான் மாடக் கூடல்
கருணை நாயகனைத் தாழ்ந்து கை தொழுது இரந்து வேண்டிப்
பரவி மீண்டு ஒளி வெண் திங்கள் பல் மணிக் குடைக்கீழ் ஏகிக்
குரு மதி மருமான் கோயில் குறுகுவான் குறுகும் எல்லை.

1702.
அறைந்தவர் கழல் கால் சேனை காவலன் அனிகம் தம்தம்
சிறந்த சேண் நாட்டில் செல்லத் செலுத்துவான் போன்று நிற்ப
நிறைந்த நான் மாடக் கூடல் நிருத்தன் அந் நிலை நின்று ஆங்கே
மறைந்தனன் மனித்த வேடம் காட்டிய மறவ ரோடும்.

1703.
கண்டனன் பொருனை நாடன் வியந்தனன் கருத்தா சங்கை
கொண்டனன் குறித்து நோக்கி ஈது நம் கூடல் மேய
அண்டர் தம் பெருமான் செய்த ஆடல் என்று எண்ணிக் கண்ணீர்
விண்டனன் புளகம் போர்ப்ப மெய்யன்பு வடிவம் ஆனான்.
1704.
தனக்கு உயிர்த் துணையா நின்ற சாமந்தன் தன்னை நோக்கி
உனக்கு எளி வந்தார் கூடல் உடைய நாயகரே என்றால்
எனக்கு அவர் ஆவார் நீயே என்று அவற்கு யாவும் நல்கி
மனக்கவல்பு இன்றி வாழ்ந்தான் மதி வழி வந்த மைந்தன்.

1710.
கோளா அரவம் அரைக்கு அசைத்த கூடல் பெருமான் குறை இரக்கும்
ஆளாம் அரசன் தவறு சிறிது அகம் கொண்டு அதனைத் திருச் செவியில்
கேளர் போல வாளாதே இருப்ப மனையில் கிடைத்த அமலன்
தாள் ஆதரவு பெற நினைந்து தரையில் கிடந்து துயில் கின்றான்.

1738.
பொய் தவ வடிவாய் வந்து நம் மனைப் பொன்னின் அன்னார்
மெய் தழை கற்பை நாண வேரொடும் களைந்து போன
கைதவன் மாடக் கூடல் கடவுள் என்று எண்ணித் தேர்ந்தார்
செய் தவவலியால் காலம் மூன்றையும் தெரிய வல்லார்.

1739.
கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீர் ஆழி
வெற்புத் திரிந்த மதில் கூடல் மேய வணிகர் கன்னியராய்ப்
பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு
அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்.

1760.
கொத்து இலங்கு கொன்றை வேய்ந்த கூடல் ஆதி மாட நீள்
பத்தியம் பொன் மருகு அணைந்து வளைபகர்ந்த பரிசு முன்
வைத்து இயம்பினாம் இயக்க மாதர் வேண்ட அட்டமா
சித்தி தந்த திறம் இனித் தெரிந்த வாறு செப்புவாம்.
1825.
திரண்டு அதிர்ந்து எழுந்து வந்த சென்னி சேனை தன் நகர்க்
இரண்டு யோசனைப் புறத்து இறுக்கும் முன்னர் ஒற்றரால்
தெருண்டு தென்னனை மாட நீ கூடல் மேய சிவன் தாள்
சரண் புகுந்து வேண்டுக என்று சார்ந்து தாழ்ந்து கூறுவான்.

1848.
ஆயது ஓர் அமையம் தன்னில் அளவு இலா உயிர்க்கும் ஈன்ற
தாயனார் துலை போல் யார்க்கும் சமநிலை ஆய கூடல்
நாயனார் செழியன் தானை நனந்தலை வேத நாற்கால்
பாயதோர் தண்ணீர்ப் பந்தர் பரப்பி அப் பந்தர் நாப்பண்.

1889.
பலர் புகழ் சுந்தரேச பாத சேகரன் ஆம் தென்னன்
அலை புனல் உடுத்த கூடல் அடிகளுக்கு அன்பன் ஆகிக்
கொலை புணர் வேலால் வெம் கோல் குறும்பு எனும் களைகள் தீர்த்து
மலர் தலை உலகம் என்னும் வான் பயிர் வளர்க்கும் நாளில்.

1890.
பத்துமான் தடம் தேர் நூறு பனைக்கை மா நூற்றுப் பத்துத்
தத்துமான் அயுத மள்ளர் தானை இவ் அளவே ஈட்டி
இத்துணைக்கு ஏற்ப நல்கி எஞ்சிய பொருள்கள் எல்லாம்
சித்து உரு ஆன கூடல் சிவனுக்கே செலுத்தும் மன்னோ.

1898.
கடல் என வருமா ஊர்ந்து கைதவன் சேனை முன்போய்
அடல் அணி மேருக் கோட்டி ஆலவாய் நெடு நாண் பூட்டி
மடல் அவிழ் துழாய்க் கோன் ஆட்டி வாய் எரி புரத்தில் ஊட்டி
மிடல் அணி கூடல் கோமான் வேடு உருவாகி நின்றான்.

1906.
மீனவன் மதுரை மூதுர் மேல் திசைக் கிடங்கில் வீழ
மான வெம் புரவி யோடும் வளவனும் வீழ்ந்தான் கூடல்
கோன் அவன் அருளால் வானோர் குரை கடல் கடையத் தோன்றும்
ஆனையின் எழுந்தான் தென்னன் கோழிவேந்து ஆழ்ந்து போனான்.

1909.
பொடி ஆர்க்கும் மேனிப் புனிதர்க்குப் புனித ஏற்றுத்
கொடியார்க்கு வேதக் குடுமிக்கு இணையான கூடல்
படியார்க்கும் சீர்த்திப் பதி யேர் உழவோருள் நல்லான்
அடியார்க்கு நல்லான் அறத்திற்கும் புகழ்க்கும் நல்லான்.

1927.
கன்னி நான் மாடக் கூடல் கடி நகர் வணிக மாக்கள்
தன்னின் மா நிதிக் கோன் அன்னான் தனபதி என்னும் பேரான்
மன்னினான் அனையான் கற்பின் மடவரல் சுசீலை என்பாள்
பொன்னி நாள் முளரிச் சேக்கைப் புண்ணியத் திருவின் அன்னாள்.

1932.
விளை நிலன் அடிமை பைம் பூண் வெறுக்கை நல் பசுக்கள் ஏனை
வளனும் மாற்றவர் கைக் கொள்ள வன் சிறை இழந்த புள் போல்
தளர் உறு மகனும் தாயும் சார்பு இலாத் தம்மனோர்க்கு ஓர்
களை கணாய் இருக்கும் கூடல் கடவுளே சரணம் என்னா.

1961.
இம் எனப் பலரும் காண மறைந்தவர் இரும் தண் கூடல்
செம்மல் என்று அறிந்து நாய்கச் சிறுவனுக்கு உவகை தூங்க
விம்மிதம் அடைந்து வேந்தன் வரிசைகள் வெறுப்ப நல்கிக்
கைம் மறி வணிகர் கோயில் புதுக்கினான் கனகம் கொண்டு.

1973.
மறையோர்கள் பின்னும் பழி மேலிடு வண்ண நோக்கி
இறையோய் இது நான் முகன் சென்னி இறுத்த கூடல்
அற வேதியனைத் தினம் ஆயிரத் எண்கால் சூழல்
உறவே ஒழிக்கப் படும் இன்னம் உரைப்பக் கேட்டி.

1984.
நிரா மய பரமானந்த நிருத்த நான் மாடக் கூடல்
பராபர இமையா முக்கண் பகவ பார்ப்பதி மணாள
புராதன அகில நாத புண்ணிய மருதவாண
அரா அணி சடையா என்று என்று அளவு இலாத்துதிகள் செய்தான்.

1987.
திருப்பணி பலவும் செய்து தென் திசை வழிக் கொண்டு ஏகிச்
சுருப்பணி நெடு நாண் பூட்டுஞ் சுவைதண்டச் சிலையால்காய்ந்த
மருப்பணி சடையான் கோயில் வழி தொறும் தொழுது போற்றிப்
பொருப் பணி மாடக் கூடல் பொன்னகர் அடைந்தான் மன்னோ.

2037.
தென்னவர் பெரும யான் உன் திரு உள வலனும் கூடல்
முன்னவன் அருளும் ஊட்டும் முயற்ச்சியான் முயன்றுபாடி
அன்னவன் விருது வாங்கி அவனை வீறு அழிப்பன் என்றான்
மன்னவன் நாளைப் பாடு போ என வரைந்து சொன்னான்.

2064.
பாடல் மறையும் தெளியாப் பரமன்
கூடல் கோயில் கொண்டான் என்னே
கூடல் போலக் கொடி ஏனகமும்
ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே.
2095.
ஏவல் மைந்தர் போய் விளங்கி வந்து இசைத்தலும் வீணைக்
காவலன் கனா நிகழ்ச்சியும் ஒத்தலில் கைக்கும்
பூ அலங்கலான் இஃது நம் பொன் நகர்க் கூடல்
தேவர் தம்பிரான் திரு விளையாட்டு எனத் தெளிந்தான்.

2103.
இத் தொழில் அன்றி வேறு தொழில் இவற்கு இன்மையாலே
பத்திரன் இலம்பாது எய்த பொறுப்பரோ பழனக் கூடல்
சித்தவெம் அடிகள் வேந்தன் பொன்னறைச் செல்வம் வௌவிப்
பத்தர் யாழ் இடத் தோள் ஏந்திப் பாடுவான் காணவைப்பார்.

2123.
மின் அவிரும் செம் பொன் மணி மாடக் கூடல் மேய சிவன் யாம் எழுதி விடுக்கும் மாற்றம்
நன்னர் முகில் எனப் புலவர்க்கு உதவும் சேர நரபாலன் காண்க தன் போல் நம்பால் அன்பன்
இன் இசை யாழ்ப் பத்திரன் தன் மாடே போந்தான் இருநிதியம் கொடுத்து வர விடுப்பதுஎன்னத்
தென்னர் பிரான் திரு முகத்தின் செய்தி நோக்கிச் சோர் பிரான் களிப்பு எல்லை தெரியான் ஆகி.

2141.
ஒண் நுதலாய் வெண் தலை கொண்டு உண் பலிக்கு நம் மனையின் ஊடேகூடல்
கண் நுதலார் உள் ஆளக் கானம் இசைத்து என் உள்ளம் கவர்ந்தார் போலும்
கண் நுதலார் பாடு அவி நயம் கண்டு ஆகம் கலப்பேன் பாதி
பெண் உருவமாய் இருந்தார் வெள்கி விழித்து ஆவி பெற்றேன் போலும்.

2149.
கூடல் அம் பதியில் ஆடக மேருக் கொடிய வில்குரிசில் அடியவனுக்குப்
பாடலின் பரிசில் ஆகிய செம் பொன் பலகை இட்டபடி பாடின மன்னான்
வீடரும் பொருவில் கற்புடையாள் ஓர் விறலி யைப் பரமன் இறை அருள் பற்றி
மாடகம் செறியும் யாழ் வழி பாதி வாது வென்ற வரலாறு இசைப்பாம்.

2156.
ஆடு அமைத் தடம் தோளினாய் அவளொடும் கூடப்
பாட வல்லையோ பகர் எனப் பாடினி பகர்வாள்
கோடரும் தகைக் கற்பும் இக் கூடல் எம் பெருமான்
வீடரும் கருணையும் எனக்கு இருக்கையால் வேந்தே.

2201.
என்னை ஆளுடைய கூடல் ஏக நாயகனே உங்கள்
அன்னையாய் முலைதந்து ஆவி அளித்து மேல் அமைச்சர் ஆக்கிப்
பின்னை ஆனந்த வீடு தரும் எனப் பெண் ஓர் பாகன்
தன்னை ஆதரித்தோன் சொன்னான் பன்னிரு தனயர் தாமும்.

2229.
நீநில் எனத் தன் பெடை தன்னை நிறுத்தி நீத்து என்
கானில் என வாழ் கருமாவின் கணங்கள் எல்லாம்
ஊனில் உயிர் உண்டனம் என்று இனி ஓடல் கூடல்
கோனில் என ஆர்ப்பவன் போலக் கொதித்து நேர்ந்தான்.

2235.
சத்திப் படைமேல் விடு முன்னர்த் தறுகண் வீரன்
பத்திச் சுடர் மாமணித் தார்ப் பரிமாவின் பின் போய்
மொத்திக் குடர் செம்புனல் சோர முடுகிக் கோட்டால்
குத்திச் செகுத்தான் பொறுத்தான் அலன் கூடல் வேந்தன்.

2258.
அனையராய் அவர் வைகு நாள் அறைபுனல் கூடல்
புனித நாயகன் அருள் திறம் உயிர்க்கு எலாம் பொதுவாய்
இனிய ஆவன என்பதை யாவரும் தேற
வனிதை பால் மொழி மங்கைதன் மணாளனை வினவும்.

2280.
ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளது ஆகப்
பார் இடத்து இல்லை ஏனை பதி இடத்து ஒன்றே என்றும்
சிர் உடைத்து ஆகும் கூடல் செழும் நகர் இடத்தும் மூன்றும்
பேர் உடைத்து ஆகும் என்றால் பிறிது ஒரு பதி யாது என்றான்.

2283.
ஆய் மலர்க் கான நீங்கி ஆடக மாடக் கூடல்
போய் மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து ஆம்பல்
வாய் மலர்க் கயல் உண் கண்ணாள் மணாளனை வலம் செய்து அன்பில்
தோய் மலர் கழல் இனானை அகத்தினால் தொழுது அர்ச்சித்தே.

2308.
தன் நிகர் தவத்தோர் யாரும் தடம் படிந்து ஏறி நித்த
மன்னிய கருமம் முற்றிச் சந்தியா மடத்தில் வைகி
மின்னிய மகுடம் சூடி வேந்தனாய் உலகம் காத்த
பொன்னியல் சடையான் கூடல் புராண நூல் ஒதுகின்றார்.

2309.
அண்ணல் எம் பெருமான் செய்த அருள் விளையாட்டும் ஆதிப்
பண்ணவன் சிறப்பும் கூடல் பழம் பதிச் சிறப்பும் தீர்த்தத்
தெண்ணரும் சிறப்பும் சேர்ந்தோர்க்கு எளிவரும் இறைவன் என்னும்
வண்ணமும் எடுத்துக் கூறக் கேட்டு அங்கு வதியும் நாரை.

2310.
மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.

2310.
மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.

2323.
வேதன் நெடு மால் ஆதி விண் நாடர் மண் நாடர் விரத யோகர்
மாதவர் யாவரும் காண மணி முறுவல் சிறிது அரும்பி மாடக் கூடல்
நாதன் இரு திருக் கரம் தொட்டு அம்மியின் மேல் வைத்தகையான் நாட்டச் செல்வி
பாதமலர் எழுபிறவிக் கடல் நீந்தும் புணை என்பர் பற்று இலாதோர்.

2324.
ஓலவாய் மறைகள் தேறா ஒருவன் தன் உலகம் தன்னைச்
சேலவாய் உழலும் நாரைக்கு அருளிய செயல் ஈது அம்ம
நீலவாய் மணி நேர் கண்ட நெடிய நான் மாடக் கூடல்
ஆலவாய் ஆகச் செய்த அருள் திறம் எடுத்துச் சொல்வாம்.

2388.
புரத்தினுள் உயர்ந்த கூடல் புண்ணியன் எழுதி எய்த
சரத்தினுள் அவிந்தார் சென்னிக்கு உற்றுழிச் சார்வாய் வந்த
அரத்தினை அறுக்கும் வை வேல் அயல் புல வேந்தர் நச்சு
மரத்தினை அடுத்து சந்துங் கதழ் எரி மடுத்தது என்ன.

2410.
மறையினால் ஒழுகும் பன்மாண் கலைகள் போல் மாண்ட கேள்வித்
துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ மீண்டு ஏகிக் கூடல்
கறையினார் கண்டத்தாரைப் பணிவித்துக் கரந்தார் ஒற்றைப்
பிறையினார் மகுடத் தோற்றத்தார் அறிஞராய் வந்த பெம்மான்.

2434.
மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணி மாறன்
தென்னவர் ஆகித் திகிரி உருட்டும் தென்கூடல்
முன்னவர் அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்றப்
பன் மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணி பூண்டான்

2440.
அன்னது ஒர் நாமம் பெற்றனர் இன்று மணிக் கூடல்
முன்னவர் அந்தத் தாமம் அவர்க்கு முடிக்கு ஏற்றும்
இன்னது ஓர் நீரார் சண்பக மாறன் என்ற பேர்
மன்னி விளங்கினன் வங்கிய சூடா மணிதானும்.

2454.
நிலம் தரு திருவின் ஆன்ற நிழல் மணி மாடக் கூடல்
வலந்தரு தடம் தோள் மைந்தர் வானமும் வீழும் போக
நலம் தரு மகளிரோடு நாக நாடவர் தம் செல்வப்
பொலம் தரு அனைய காட்சிப் பூம் பொழில் நுகர் வான் போவார்.

2566.       
சம்பக மாறன் என்னும் தமிழ்நர்தம் பெருமான் கூடல்
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்.

2567.
கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான் செம்பொன்
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் இப்பால்
தென் தமிழ் அனையான் தேறத் தெருட்டிய திறனும் சொல்வாம்.

2568.       
முன்பு நான் மாடக் கூடல் முழு முதல் ஆணையால் போய்
இன்புற அறிஞர் ஈட்டத்து எய்தி ஆங்கு உறையும் கீரன்
வன்புறு கோட்டம் தீர்ந்து மதுரை எம் பெருமான் தாளில்
அன்பு உறு மனத்தன் ஆகி ஆய்ந்து மற்று இதனைச் செய்வான்.

2571.
மையறு மனத்தான் வந்து வழிபடு நியமம் நோக்கிப்
பை அரவாரம் பூண்ட பரஞ்சுடர் மாடக் கூடல்
ஐயனும் அணியன் ஆகி அகம் மகிழ்ந்து அவனுக்கு ஒன்று
செய்ய நல் கருணை பூத்து திரு உளத்து இதனைத் தேர்வான்.

2634.
தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன் கூடல்
மன்னவன் கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட
உன்னது சோத்த நாம் கேட்டு உவந்தனம் இனிய தாயிற்று
இன்னம் ஒன்று உளது கேட்டி என்றனன் அருளிச் செய்வான்.

2650.
அந்தம் இல் அழகன் கூடல் ஆலவாய் அமர்ந்த நீல
சுந்தரன் உலகம் ஈன்ற கன்னிஅம் கயல் கண்ணாள் ஆம்
கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு வேறு இடத்து வைகி
மந்தணம் ஆன வேத மறைப் பொருள் உணர்த்தும் மாதோ.

2656.
வரை பக எறிந்த கூர்வேல் மைந்தனும் தந்தை கையில்
உரை பெறு போத நுலை ஒல் எனப் பறித்து வல்லே
திரை புக எறிந்தான் ஆகச் செல்வ நான் மாடக் கூடல்
நரை விடை உடைய நாதன் நந்தியை வெகுண்டு நோக்கா.

2674.       
பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ்க் கூடல்
வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள்
துள்ள அன்பு கூர் தொடுத்து திருத் தோள் உறப் புல்லித்
தள்ளரும் தகைக் கற்பினாள் தனது கைக் கொடுத்தான்.

2785.
எழுந்தார் உடைய பெருந்துறையார் இருந்தாள் பணிந்தார் இனி இப் பிறப்பில்
அழுந்தார் வழிக் கொண்டார் அடைந்தார் அகன்றார் நெறிகள் அவிர் திங்கள்
கொழுந்தார் சடையார் விடையார் தென் கூடல் அடைந்தார் பாடு அளி வண்டு
உழும் தார் வேந்தன் பொன் கோயில் உற்றார் காணப் பெற்றார் ஆல்.

2823.
என்று இரங்குவோர் இரங்கு ஒலி இளம் சிறார் அழுகை
சென்று தாயார் தம் செவித் துளை நுழைந்து எனச் செல்லக்
குன்று இரும் சிலை கோட்டிய கூடல் நாயகன் கேட்டு
அன்று வன் சிறை நீக்குவான் திரு உளத்து அமைத்தான்.

2867.
நெஞ்சே உரையே செயலே எல்லா நின வென்றாய்
வஞ்சே போலும் அஃதேல் இன்று வாராயோ
பஞ்சேர் அடியாள் பாகா கூடல் பரமேட்டீ
அஞ்சேல் என்னாய் இது வோ அருளுக்கு அழகு ஐயா.

2878.
பின் அவன் ஆணையாலே மறைப்பு உண்ட பெரு நீர்க் கூடல்
மன்னவன் அறிவு தோன்ற இன்று ஒரு வயமா வீரன்
தன்னை நாம் கண்டு எழுந்து தடம் கரம் கூப்பி நின்ற
என் எனத் தவிசின் மீள இருந்திட நாணி நின்றான்.

3001.       
வளைந்த மெய் உடைய அந்த மாதவ நரை மூதாட்டிக்கு
அளந்த பங்கு அடைப்பான் கூலி ஆள் கிடையாமல் ஆற்றத்
தளர்ந்து இனி என்னே மன்னன் தண்டிக்கின் என் செய்கேன் என்று
உளம் தடுமாறிக் கூடல் உடைய நாயகனை உன்னா.

3049.
வன்பு தாழ் மனத்தோர் வலி செய இன்ன மன்னான் மறுக்கம் உண்டேயோ
முன்பு போகிய ஆள் என் செய்தான் என்னாய் முடியுமோ இனி எனத் திரங்கி
என்பு போல் வெளுத்த குழலினாள் கூடல் இறைவனை நோக்கி நின்று இரங்க
அன்பு தேன் ஆக வருத்திய சிற்றூண் அமுது செய்து அருளினார் அருளால்.

3058.
அச்சம் உற்று உவகை ஈர்ப்ப அதிசய வெள்ளத்து ஆழ்ந்து
பொச்சம் இல் அன்பர் எங்கு உற்றார் எனப் புகுந்து தேடி
நச்சு அரவு அசைத்த கூடல் நாயகன் கோயில் நண்ணி
இச்சையில் இருக்கின்றாரைக் கண்டு போய் இறைஞ்சி வீழ்ந்தான்.

3110.
துண் துழாவும் கைம்மாவும் வெறுக்கைக் குவையும் மணிக் குவையும்
வண்டு வீழும் தார் அளக வல்லி ஆய மொடு நல்கிக்
கண்டு கூடல் கோமகனைக் காலில் வீழ்ந்து தன்னாடு
பண்டு போலக் கைக் கொண்டு போனான் தேன் ஆர் பனம் தாரான்.

3119.
பொய் உரை பிதற்றும் இந்தப் புன் சமண் களைகட்டு ஈண்டு
மெய் உரை வேத நீதி வியன் பயிர் தலைச் செய்து ஓங்கச்
செய்யுநர் எவரோ என்று சிந்தையில் கவலை பூண்டு
நையுநர் ஆகிக் கூடல் நாதனை வணங்கப் போனார்.

3121.
வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில்
பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல்
ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும்
நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா.

3137.       
செம்பியன் நாடு நீந்தித் தென்னவன் நாடு நண்ணி
வெம்பிய சுரமும் முல்லைப் புறவமும் மேக வில்லைத்
தும்பிகை நீட்டி வாங்கும் மலைகளும் துறந்து பாகத்
தம்பி கையுடையான் கூடல் நகர்ப் புறம் அனுகச் செல்வார்.

3150.       
சிட்டர் நோக்கி அத் தீயினை தென் தமிழ்க் கூடல்
அட்ட மூர்த்தியை அங்கு இருந்து அரு மறைப் பதிகம்
துட்டர் பொய் உரை மேற் கொண்டு தொல் முறை துறந்து
விட்ட வேந்தனைப் பற்று எனப் பாடினார் விடுத்தார்.

3230.
கண்டு கூடல் கோமகனும் கற்பும் நிறைந்த பொற்புடைய
வண்டு கூடும் தார் அளக வளவன் மகளும் மந்திரியும்
தொண்டு கூடி மடியாரும் காழிக்கு அரசைத் தொழுது துதி
விண்டு கூடற்கு அரிய மகிழ் வெள்ளத்து அழுந்தி வியந்தனர் ஆல்.

3237.       
இன்று நீர் இட்ட ஏடு இங்கு யாவரும் காண நேரே
சென்றதே எங்கே என்றான் அதனை யாம் செம்பொன் கூடல்
மன்றவர் அருளால் இன்னே வருவிப்பம் என்று வாது
வென்றவர் நதியின் மாடே மேல் திசை நோக்கிச் செல்வார்.

3250.       
வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்
கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான் தன்னை
இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும் பெற்று
விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார்.

3300.
அல்லல் உற்று அழுங்கி நின்றாள் பரிவு கண்டு அம் தண் கூடல்
எல்லை இல் கருணை மூர்த்தி அருளினால் எவரும் காணத்
தொல்லையின் படியே அன்னாள் சொல்லிய கரிகள் மூன்றும்
ஒல்லை வந்து இறுத்த கோயில் உத்தர குணபால் எல்லை.

3313.
கோட்டம் சிலை குனித்த கூடல் பிரான் ஆடல்
கேட்ட அம் செவி படைத்த பேறு அடைந்தேம் கெட்ட படி
நாட்டம் களிப்ப நறுமலர் தூஉய்க் கண்டு இறைஞ்ச
வேட்டங்கள் யாங்கள் என ஓதினார் மெய்த் தவரே.

3318.
ஐம் புலனும் கூடல் பெருமான் அடி ஒதுக்கி
நம்பன் உரு ஐந்து எழுத்து நாவாடக் கை கூப்பித்
தம் புனித சைவ தவத் தெய்வத் தேர் மேல் கொண்டு
உம்பர் வழி நடக்கல் உற்றார்கள் நற்றவரே.

--------------------------------
திருவிளையாடற் புராணப் பாடல்களை இணையத்தில் வழங்கியுள்ள தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு http://www.tamilvu.org/ நன்றி.

--------------------------------------------------------------------------
(கலித்தொகை 92-10)
நனவினால் போலும் நறு நுதால் அல்கல் 
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில்வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவின் அகத்து

(கலித்தொகை-குறிஞ்சிக்கலி - 57-8)
பூம் தண் தார்ப் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் 
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின் மொழி

(அகநானூறு 315/7)
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் 
அருங்கடி வியன் நகர்ச் சிலம்பும் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி

ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரு பெயர் கூடல் அன்ன நின் 10
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே

அரும்பு அவிழ் பூஞ்சினை தோறும் இருங் குயில்
ஆனாது அகவும் பொழுதினான் மேவர
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு

நான்மாடக்கூடல் (65) – நச்சினார்க்கினியர் உரை – நான்கு மாடம் கூடலின் ‘நான் மாடக் கூடல்’ என்றாயிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்

எம் மனை வாராயாகி முன்னாள்
நும் மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள் நெடுந்தேர்
இழை அணி யானைப் பழையன் மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் 20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க்
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி
ஏதின் மன்னர் ஊர் கொளக்
கோதை மார்பன் உவகையின் பெரிதே

நெடு நல் யானை அடு போர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய 15
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து

--------------------------------------------