Thursday 25 June 2020

மதுரை மாநகரின் காவல் தெய்வங்கள்

மதுரை மாநகரின் காவல் தெய்வங்கள்

“கீட்டிசைக் கரிய சாத்தனுந் தென்சார்

     கீற்றுவெண் பிறை நுதற் களிற்றுக்

கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங்

     குடவயின் மதுமடை புடைக்குந்

தோட்டிளந் தண்ணந் துழாயணி மௌலித்

     தோன்றலும் வடவயிற் றோடு

நீட்டிரும் போந்தி னிமிர்குழ லெண்டோ

     ணீலியுங் காவலா நிறுவி ....” (திருவிளையாடற் புராணம் பாடல் எண் 514.)

உரை - கீட்டிசைக் கரிய சாத்தனும் தென்சார் கீற்று  வெண்பிறை நுதல் களிற்றுக் கோட்டு இளம் களபக் கொள்கை அன்னை அரும் குடவயின் மதுமடை உடைக்கும் தோட்டு இளம் தண்ணம் துழாய் அணி மௌலித் தோன்றலும் வட எயிற்றோடு நீட்டிரும் போந்தின் நிமிர் குழல் எண் தோள் நீலியும் காவலா நிறுவி.

பொருள் - 

மதுரையின் காவல் தெய்வங்களாக 

1) கிழக்கே - கரிய சாத்தனும் 

2) தெற்கே - கீற்று  வெண்பிறை நுதல் களிற்றுக் கோட்டு இளம் களபக் கொள்கை அன்னை 

3) மேற்கே - மதுமடை உடைக்கும் தோட்டு இளம் தண்ணம் துழாய் அணி மௌலி

4) வடக்கே - எயிற்றோடு நீட்டிரும் போந்தின் நிமிர் குழல் எண் தோள் நீலி