Sunday 20 October 2019

தெய்வம் தொழும் தமிழர்

தெய்வம் தொழும் தமிழர்


தூங்கி எழும்போது தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்கி எழுகிறாள் - என்கிறார் திருவள்ளுவர். 
சங்கத் தமிழர் இயற்கையை வழிபட்டார்களா? தெய்வங்களையும் வழிபட்டார்களா?

கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரநாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் பழைமையானது.  இங்கே வழிபாட்டுப் பொருட்களோ, சமயம்சார்ந்த பொருட்களோ ஏதும் கிடைக்கவில்லை. எனவே “இந்த இடத்தில் நூற்பாலையோ தொழிற்சாலையோ இருந்திருக்கலாம், இங்கு வாழ்ந்த தமிழர் இயற்கையை வணங்கியுள்ளனர், கடவுளை வணங்கிட வில்லை” என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
உண்மையில் சங்கத்தமிழர் இயற்கையை மட்டுமே வணங்கியவர்களா?  கடவுளை வணங்கவில்லையா? என்று தேடிப்பார்த்தால், வியப்பிலும் வியப்பாக உள்ளது.  எட்டுத்தொகை பத்துப்பாட்டில் மட்டுமே தெய்வம் என்ற சொல் 42  இடங்களில் இடம் பெற்றுள்ளது.

உலகில் தோன்றி வாழ்ந்துவரும் மாந்தர்களுள் தமிழர் தலைசிறந்தவர். 
தமிழர் மட்டுமே 2600 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களாகும்.  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும்.

திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும்.

இதில் உள்ள சங்கப்பாடல்களில் மட்டுமே 42 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. கடவுள் என்ற சொல் 93 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

தெய்வங்களின் பெயர்களையும் தனித்தனியாகத் தேடிப்பார்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும் இருக்கும்.

கீழடி யருகே தொல்லியலாளர்களால் கண்டறியப் பெற்றுள்ள தொல்லியல்மேடானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அதில் சுமார் 8 ஏக்கர் அளவே கண்டறியப்பட்டுள்ளது.  முழுவதையும் கண்டறியும் போதுதான் தமிழரின் தொன்மையும், வழிபாடும், நகரநாகரிகத்தின் வளமையும் முழுமையாகத் தெரியவரும்.

நாம் நமது முப்பாட்டன்கள் வழி நின்று நமது கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபடுவோம்.
சங்கத் தமிழரைப் போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ள 42 பாடல்வரிகளும் இணைப்பில் உள்ளன. 
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 2 (19.10.2019) சனிக் கிழமை.

நன்றி – தொடரடைவு   http://tamilconcordance.in
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)

---------------------------------------------------
எட்டுத்தொகை நூல்களில் 34 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு - நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய - நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு - நற் 201/6
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என - நற் 315/1
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி - நற் 351/4
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே - நற் 398/1

கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய - குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி - குறு 263/4

அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே - ஐங் 76/4

அர வழங்கும் பெரும் தெய்வத்து/வளை ஞரலும் பனி பௌவத்து - பதி 51/13,14
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் - பதி 73/6
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என - பதி 74/26
பகை பெருமையின் தெய்வம் செப்ப - பதி 82/1
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய - பதி 88/24

அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் - பரி 9/2
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும் - பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் - பரி 15/48
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் - பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் - பரி 19/40

தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி - கலி 16/19
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து - கலி 39/28
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு - கலி 91/8
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை - கலி 98/32
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் - கலி 103/76
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் - கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ - கலி 107/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் - கலி 124/18
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் - கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்_கண் - கலி 132/21

கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி - அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்/புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் - அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் - அகம் 309/4
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து/உரு உடன் இயைந்த தோற்றம் போல - அகம் 360/6,7

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு - புறம் 58/16
----------------------------------------------

பத்துப் பாட்டில் 8 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திரு 23
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய - திரு 160
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - திரு 287
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி - திரு 290

திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை - சிறு 73

தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் - பெரும் 104

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி - நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய - பட் 159
----------------------------------------

சங்கத் தமிழர் இயற்கையை வழிபட்டார்களா? கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபட்டார்களா?

சங்கத் தமிழர் 
இயற்கையை வழிபட்டார்களா? கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபட்டார்களா?


சங்கப்பாடல்களில் கடவுளும் தெய்வங்களும்

கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரநாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் பழைமையானது.  இங்கே வழிபாட்டுப் பொருட்களோ, சமயம்சார்ந்த பொருட்களோ இதுவரை ஏதும் கிடைக்கவில்லை. எனவே “இந்த இடத்தில் நூற்பாலையோ தொழிற்சாலையோ இருந்திருக்கலாம், இங்கு வாழ்ந்த தமிழர் இயற்கையை வணங்கியுள்ளனர், கடவுளை வணங்கிடவில்லை” என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
உண்மையில் சங்கத்தமிழர் இயற்கையை மட்டுமே வணங்கியவர்களா?  கடவுளை வணங்கவில்லையா? என்று தேடிப்பார்த்தால், வியப்பிலும் வியப்பாக உள்ளது.

சங்கத் தமிழ் நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டில் மட்டுமே கடவுள் தெய்வம் என்ற சொற்கள் 135  இடங்களில் இடம் பெற்றுள்ளன.

உலகில் தோன்றி வாழ்ந்துவரும் மாந்தர்களுள் தமிழர் தலைசிறந்தவர்.
தமிழர் மட்டுமே 2600 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களாகும்.   நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும்.  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும்.

இவற்றில் உள்ள சங்கப்பாடல்களில் மட்டுமே 93 இடங்களில் கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  42 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  இன்னும் இறைவன் என்ற சொல்லையும் அந்தந்தத் தெய்வங்களின் பெயர்களையும் தனித்தனியாகத் தேடிப்பார்த்தால் இந்த எண்ணிக்கை மிகவும் கூடுதலாகும் வாய்ப்புகள் உள்ளன.

கீழடி யருகே தொல்லியலாளர்களால் கண்டறியப் பெற்றுள்ள தொல்லியல் மேடானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அதில் சுமார் 8 ஏக்கர் அளவே கண்டறியப்பட்டுள்ளது.  முழுவதையும் கண்டறியும் போதுதான் தமிழரின் தொன்மையும், வழிபாடும், நகரநாகரிகத்தின் வளமையும் முழுமையாகத் தெரியவரும்.

நாம் நமது முப்பாட்டன்கள் வழி நின்று நமது கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபடுவோம்.
சங்கத் தமிழரைப் போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

மேற்சொன்ன 135 பாடல்வரிகளும் இணைப்பில் உள்ளன.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 2 (19.10.2019) சனிக் கிழமை.

நன்றி தொடரடைவு   http://tamilconcordance.in
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)
-------------------------------------------
கடவுள் + தெய்வம் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை.
நற்றிணையில் 10 + 6 = 16
குறுந்தொகையில் 4 +2 =6
ஐங்குறுநூற்றில் 4 +1 = 5
பதிற்றுப்பத்தில் 12 + 5 = 17
பரிபாடலில் 4 + 5 = 9
கலித்தொகையில் 12 + 10 = 22
அகநானூற்றில் 20 + 4 = 24
புறநானூற்றில் 10  +1 = 11
என எட்டுத்தொகை நூல்களில் 76 இடங்களில் கடவுள் என்ற சொல்லும்,
34 இடங்களில் தெய்வம் என்ற சொல்லுமாக ஆகமொத்தம் 110 இடங்களில் கடவுளும் தெய்வமும் பெற்றுள்ளன.

திருமுருகாற்றுப்படையில் 1 + 4 = 5
பொருநர் ஆற்றுப்படையில் 1 + 0 = 1
சிறுபாணாற்றுப்படையில் 1 + 1 = 2
பெரும்பாணாற்றுப்படையில் 2 + 1 = 3
மதுரைக்காஞ்சியில் 4,
குறிஞ்சிப் பாட்டில் 4,
மலைபடுகடாமில் 4
---------------------------------------
கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு -
நற்றிணையில் 10
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த - நற் 34/1
கடவுள் ஆயினும் ஆக - நற் 34/10
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய - நற் 83/2
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் - நற் 189/3
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் - நற் 216/6
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து - நற் 251/8
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை - நற் 303/3
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து - நற் 343/4
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் - நற் 358/6

குறுந்தொகையில் 4
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்/கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் - குறு 87/1,2
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் - குறு 105/2
கடவுள் நண்ணிய பாலோர் போல - குறு 203/4
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி - குறு 252/4

ஐங்குறுநூற்றில் 4
அரும் திறல் கடவுள் அல்லன் - ஐங் 182/3
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி - ஐங் 243/1
குன்ற குறவன் கடவுள் பேணி - ஐங் 257/1
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி - ஐங் 259/3

பதிற்றுப்பத்தில் 12
காடே கடவுள் மேன புறவே - பதி 13/20
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/5
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி - பதி 21/15
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் - பதி 30/34
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த - பதி 31/18
கைவல் இளையர் கடவுள் பழிச்ச - பதி 41/6
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை - பதி 43/6
காமர் கடவுளும் ஆளும் கற்பின் - பதி 65/9
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி - பதி 70/18
கடவுள் அயிரையின் நிலைஇ - பதி 79/18
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து - பதி 88/2

பரிபாடலில் 4
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள்/அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் - பரி 3/43,44
நின்னில் சிறந்த நிறை கடவுளவை/அன்னோர் அல்லா வேறும் உள அவை - பரி 4/63,64
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் - பரி 5/13
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய - பரி 5/44

கலித்தொகையில் 12
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு - கலி 46/16
கடவுள் கடி நகர்-தோறும் இவனை - கலி 84/6
கடவுளர் கண் தங்கினேன் - கலி 93/7
கடவுண்மை கொண்டு ஒழுகுவார் - கலி 93/9
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் - கலி 93/10
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் - கலி 93/13
செறி முறை வந்த கடவுளை கண்டாயோ - கலி 93/20
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ - கலி 93/24
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ - கலி 93/28
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை - கலி 93/29
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் - கலி 93/35
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள் - கலி 101/24

அகநானூற்றில் 20
தெறல் அரு மரபின் கடவுள் பேணி - அகம் 13/3
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து - அகம் 14/16
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் - அகம் 16/18
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் - அகம் 35/7
கடவுள் எழுதிய பாவையின் - அகம் 62/15
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது - அகம் 90/9
கைதொழு மரபின் கடவுள் சான்ற - அகம் 125/14
கடி நகர் புனைந்து கடவுள் பேணி - அகம் 136/6
கடவுள் காந்தளுள்ளும் பல உடன் - அகம் 152/17
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி - அகம் 156/15
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று - அகம் 167/15
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய - அகம் 184/1
நிலை பெறு கடவுள் ஆக்கிய - அகம் 209/16
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை - அகம் 270/12
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே - அகம் 282/18
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து - அகம் 307/12
கடவுள் கற்பின் மடவோள் கூற - அகம் 314/15
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் - அகம் 348/8
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப - அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி - அகம் 396/7

புறநானூற்றில் 10
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட - புறம் 52/12
கடவுள் பேணேம் என்னா ஆங்கு - புறம் 106/3
கடவுள் பேணிய குறவர் மாக்கள் - புறம் 143/3
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை - புறம் 158/11
கடவுள் சான்ற கற்பின் சே இழை - புறம் 198/3
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் - புறம் 198/9
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் - புறம் 199/1
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி - புறம் 260/5
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே - புறம் 335/12
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் - புறம் 399/26

திருமுருகாற்றுப்படையில் 1
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை - திரு 256

பொருநர் ஆற்றுப்படையில் 1
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை - பொரு 52

சிறுபாணாற்றுப்படையில் 1
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன - சிறு 205

பெரும்பாணாற்றுப்படையில் 2
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி - பெரும் 290
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் - பெரும் 391

மதுரைக்காஞ்சியில் 4
தொன் முது கடவுள் பின்னர் மேய - மது 41
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் - மது 467
கடவுள் வழங்கும் கையறு கங்குலும் - மது 651
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை - மது 710

குறிஞ்சிப் பாட்டில் 2
வேறு பல் உருவின் கடவுள் பேணி - குறி 6
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது - குறி 209

மலைபடுகடாமில் 4
காரி உண்டி கடவுளது இயற்கையும் - மலை 83
பராவு அரு மரபின் கடவுள் காணின் - மலை 230
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - மலை 396
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை - மலை 538
---------------------------------------------------
எட்டுத்தொகை நூல்களில் 34 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு - நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய - நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு - நற் 201/6
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என - நற் 315/1
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி - நற் 351/4
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே - நற் 398/1

கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய - குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி - குறு 263/4

அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே - ஐங் 76/4

அர வழங்கும் பெரும் தெய்வத்து/வளை ஞரலும் பனி பௌவத்து - பதி 51/13,14
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் - பதி 73/6
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என - பதி 74/26
பகை பெருமையின் தெய்வம் செப்ப - பதி 82/1
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய - பதி 88/24

அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் - பரி 9/2
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும் - பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் - பரி 15/48
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் - பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் - பரி 19/40

தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி - கலி 16/19
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து - கலி 39/28
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு - கலி 91/8
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை - கலி 98/32
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் - கலி 103/76
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் - கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ - கலி 107/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த_கால் - கலி 124/18
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் - கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்_கண் - கலி 132/21

கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி - அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்/புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின் - அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் - அகம் 309/4
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து/உரு உடன் இயைந்த தோற்றம் போல - அகம் 360/6,7

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு - புறம் 58/16
----------------------------------------------

பத்துப் பாட்டில் 8 இடங்களில் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. பாடல்களின் தொகுப்பு.

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திரு 23
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய - திரு 160
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - திரு 287
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி - திரு 290

திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை - சிறு 73

தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் - பெரும் 104

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி - நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய - பட் 159
----------------------------------------

Saturday 19 October 2019

சங்கத் தமிழரின் கடவுள் வழிபாடு

சங்கத் தமிழரின் கடவுள் வழிபாடு


கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரநாகரிகம் 2600 ஆண்டுகளுக்கும் பழைமையானது.  இங்கே வழிபாட்டுப் பொருட்களோ, சமயம்சார்ந்த பொருட்களோ ஏதும் கிடைக்கவில்லை. எனவே “இந்த இடத்தில் நூற்பாலையோ தொழிற்சாலையோ இருந்திருக்கலாம், இங்கு வாழ்ந்த தமிழர் இயற்கையை வணங்கியுள்ளனர், கடவுளை வணங்கிடவில்லை” என்று பலரும் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

உண்மையில் சங்கத்தமிழர் இயற்கையை மட்டுமே வணங்கியவர்களா?  கடவுளை வணங்கவில்லையா? என்று தேடிப்பார்த்தால், வியப்பிலும் வியப்பாக உள்ளது. ஆம், சங்கப்பாடல்களான எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் மட்டுமே 93 இடங்களில் கடவுள் பாடப்பெற்றுள்ளார்.  இன்னும் தெய்வம் இறைவன் என்ற சொற்களையும் சேர்த்துத் தேடிப்பார்த்தால் இந்த எண்ணிக்கை மிகவும் கூடுதலாகும் வாய்ப்புகள் உள்ளன.

உலகில் தோன்றி வாழ்ந்துவரும் மாந்தர்களுள் தமிழர் தலைசிறந்தவர்.  தமிழர் மட்டுமே 2600 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களாகும்.  நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன பத்துப்பாட்டு நூல்களாகும்.

நற்றிணையில் 10 , குறுந்தொகையில் 4 , ஐங்குறுநூற்றில் 4 , பதிற்றுப்பத்தில் 12 , பரிபாடலில் 4, கலித்தொகையில் 12, அகநானூற்றில் 20, புறநானூற்றில் 10 என எட்டுத்தொகை நூல்களில் 76 இடங்களில் கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

திருமுருகாற்றுப்படையில் 1, பொருநர் ஆற்றுப்படையில் 1, சிறுபாணாற்றுப்படையில் 1, பெரும்பாணாற்றுப்படையில் 2, மதுரைக்காஞ்சியில் 4, குறிஞ்சிப் பாட்டில் 4, மலைபடுகடாமில் 4 என பத்துப்பாட்டு நூல்களில் 17 இடங்களில் கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

ஆக மொத்தம் எட்டுத்தொகை பத்துப்பாட்டில் மட்டுமே 93 பாடல் வரிகளில் கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

கீழடி யருகே தொல்லியலாளர்களால் கண்டறியப் பெற்றுள்ள தொல்லியல்மேடானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. அதில் சுமார் 8 ஏக்கர் அளவே கண்டறியப்பட்டுள்ளது.  முழுவதையும் கண்டறியும் போதுதான் தமிழரின் தொன்மையும், வழிபாடும், நகரநாகரிகத்தின் வளமையும் முழுமையாகத் தெரியவரும். 

சங்கத் தமிழர் வழிநின்று நாம் நம் கடவுள்களை வாழ்த்துவோம்,
சங்கத் தமிழரைப் போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஐப்பசி 2 (19.10.2019) சனிக் கிழமை.

நன்றி – தொடரடைவு   http://tamilconcordance.in
(குறிப்பு – எனது சொற்தேடலில் விடுபட்ட பாடல்கள் ஏதேனும் இருந்தால் அறிஞர் பெருமக்கள் அன்புள்ளம் கொண்டு அதைச் சுட்டிக்காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன்)

-------------------------------------------------------------------------------------------------
கடவுள் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு -
நற்றிணையில் 10
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த - நற் 34/1
கடவுள் ஆயினும் ஆக - நற் 34/10
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய - நற் 83/2
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் - நற் 189/3
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் - நற் 216/6
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து - நற் 251/8
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை - நற் 303/3
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து - நற் 343/4
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் - நற் 358/6
--------------------------------
குறுந்தொகையில் 4
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்/கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் - குறு 87/1,2
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் - குறு 105/2
கடவுள் நண்ணிய பாலோர் போல - குறு 203/4
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி - குறு 252/4
--------------------------------
ஐங்குறுநூற்றில் 4
அரும் திறல் கடவுள் அல்லன் - ஐங் 182/3
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி - ஐங் 243/1
குன்ற குறவன் கடவுள் பேணி - ஐங் 257/1
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி - ஐங் 259/3
--------------------------------
பதிற்றுப்பத்தில் 12
காடே கடவுள் மேன புறவே - பதி 13/20
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/5
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி - பதி 21/15
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் - பதி 30/34
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த - பதி 31/18
கைவல் இளையர் கடவுள் பழிச்ச - பதி 41/6
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை - பதி 43/6
காமர் கடவுளும் ஆளும் கற்பின் - பதி 65/9
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி - பதி 70/18
கடவுள் அயிரையின் நிலைஇ - பதி 79/18
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து - பதி 88/2
--------------------------------
பரிபாடலில் 4
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள்/அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் - பரி 3/43,44
நின்னில் சிறந்த நிறை கடவுளவை/அன்னோர் அல்லா வேறும் உள அவை - பரி 4/63,64
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் - பரி 5/13
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய - பரி 5/44
--------------------------------
கலித்தொகையில் 12
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு - கலி 46/16
கடவுள் கடி நகர்-தோறும் இவனை - கலி 84/6
கடவுளர் கண் தங்கினேன் - கலி 93/7
கடவுண்மை கொண்டு ஒழுகுவார் - கலி 93/9
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் - கலி 93/10
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் - கலி 93/13
செறி முறை வந்த கடவுளை கண்டாயோ - கலி 93/20
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ - கலி 93/24
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ - கலி 93/28
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை - கலி 93/29
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் - கலி 93/35
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள் - கலி 101/24
--------------------------------
அகநானூற்றில் 20
தெறல் அரு மரபின் கடவுள் பேணி - அகம் 13/3
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து - அகம் 14/16
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் - அகம் 16/18
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் - அகம் 35/7
கடவுள் எழுதிய பாவையின் - அகம் 62/15
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது - அகம் 90/9
கைதொழு மரபின் கடவுள் சான்ற - அகம் 125/14
கடி நகர் புனைந்து கடவுள் பேணி - அகம் 136/6
கடவுள் காந்தளுள்ளும் பல உடன் - அகம் 152/17
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி - அகம் 156/15
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று - அகம் 167/15
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய - அகம் 184/1
நிலை பெறு கடவுள் ஆக்கிய - அகம் 209/16
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை - அகம் 270/12
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே - அகம் 282/18
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து - அகம் 307/12
கடவுள் கற்பின் மடவோள் கூற - அகம் 314/15
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் - அகம் 348/8
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப - அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி - அகம் 396/7
--------------------------------
புறநானூற்றில் 10
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட - புறம் 52/12
கடவுள் பேணேம் என்னா ஆங்கு - புறம் 106/3
கடவுள் பேணிய குறவர் மாக்கள் - புறம் 143/3
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை - புறம் 158/11
கடவுள் சான்ற கற்பின் சே இழை - புறம் 198/3
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் - புறம் 198/9
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் - புறம் 199/1
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி - புறம் 260/5
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே - புறம் 335/12
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் - புறம் 399/26
--------------------------------
திருமுருகாற்றுப்படையில் 1
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை - திரு 256
--------------------------------
பொருநர் ஆற்றுப்படையில் 1
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை - பொரு 52
--------------------------------
சிறுபாணாற்றுப்படையில் 1
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன - சிறு 205
--------------------------------
பெரும்பாணாற்றுப்படையில் 2
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி - பெரும் 290
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் - பெரும் 391
--------------------------------
மதுரைக்காஞ்சியில் 4
தொன் முது கடவுள் பின்னர் மேய - மது 41
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் - மது 467
கடவுள் வழங்கும் கையறு கங்குலும் - மது 651
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை - மது 710
--------------------------------
குறிஞ்சிப் பாட்டில் 2
வேறு பல் உருவின் கடவுள் பேணி - குறி 6
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது - குறி 209
--------------------------------
மலைபடுகடாமில் 4
காரி உண்டி கடவுளது இயற்கையும் - மலை 83
பராவு அரு மரபின் கடவுள் காணின் - மலை 230
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - மலை 396
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை - மலை 538
--------------------------------

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Tuesday 15 October 2019

கீழடி, சங்ககால மதுரையா ? குடியிருப்பா அல்லது தொழிற்கூடமா ?

கீழடி,  சங்ககால மதுரையா ?
கண்டியறியப்பட்டுள்ள இடம் 
குடியிருப்பா  அல்லது தொழிற்கூடமா ?


தொல்லியலாளர் திரு கி.அமர்நாத் அவர்கள் கீழடியைத் தோண்டிக் கண்டறிவதற்கு முன்பும்(1986), கண்டறிந்த போதும்(2015), இந்நாளிலும் (2019) தொடர்ந்து நேரில் பலமுறை சென்று முயன்று பார்த்து வருகிறேன்.

எனது பார்வையில்... கருத்தில் ....
தொல்லியலாளர் திரு கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள்  கொண்டிருக்கும் கோணம் மிகவும் சரியானது என்பதே எனது கருத்து.
திரு அமர்நாத் அவர்களால் கீழடி யருகே கண்டறியப்பட்டுள்ள நகரமானது மதுரையல்ல என்றும், அந்த இடம் ஒரு தொழிற்கூடம் என்றும் சான்றில்லாத கருத்துக்களைச் சிலர் பரப்பி வருகின்றனர்.  இவை தவறான கருத்துகளாகும்.  இக்கருத்துக்களைக் கொண்டுள்ளோர் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும் தமிழில் உள்ள புராணங்களையும் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.  பலாப்பலத்தின் தோலை நீக்கிவிட்டு உள்ளேயுள்ள பலாச்சுளையைச் சாப்பிடுவது போன்று, சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ள புனைவுகளை (பலாப் பழத்தின் தோலை ) நீங்கிவிட்டு, அதில் பொதிந்துள்ள கருத்துகளை அனைவரும் விருப்பு வெறுப்பின்றி (பலாச்சுளையை)க் கருத்திற் கொள்ள வேண்டும்.



கீழடிதான்  பண்டைய மதுரையா .... 
அகநானூறும் புறநானூறும் நக்கீரரும் திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே பாண்டியர்களின் தலைநகரான கூடல் என்ற மதுரை மாநகர் உள்ளது என்று பாடியுள்ளனர்.  ஆனால் இப்போதுள்ள மதுரை மாநகரமானது திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே உள்ளது.
திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே அவனியாபுரம் உள்ளது. அவனியாபுரம் அருகே கோவலன் பொட்டல் உள்ளது.   எனவே இப்போதுள்ள அவனியாபுரமே சங்ககாலத்து மதுரையாக இருக்க வேண்டும் எனத் தமிழ்அறிஞர்கள் பலரும் ஆராய்ந்து பார்த்துள்ளனர்.  இவர்களுள் பேராசிரியர் தெய்வத்திரு சங்கரராஜீலு அவர்களும் ஒருவர்.  இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளராகப் பணியாற்றினார்.   1986ஆம் ஆண்டில் அவனியாபுரம் மற்றும் புதூர் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களை எல்லாம் நேரில் சென்றுபார்த்துப் பெரிதும் முயன்று ஆராய்ந்தார். 
சங்கப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல்மாநகரின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவு உள்ள தொல்லியல் மேடு எதையும் அவனியாபுரம் அருகே கண்டறிய முடியவில்லை. எனவே அவனியாபுரம் சங்ககாலக் கூடல் மாநகரமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.  அதற்காக அவரைத் திராவிடர் என்றும் கூறி அவரது முடிபைப் புறந்தள்ளினர் சிலர்.
கீழடி அருகே தொல்லியலாளர் திரு அமர்நாத் அவர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரம் திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே உள்ளது.  சுமார் 800 மீட்டர் நீளத்திற்குச் செங்கலாலான மதில்சுவர் இங்கே கண்டறியப்பட்டுள்ளது.  மேலு ஆற்றுமணல் திட்டுகளும் உள்ளன.  கூடல் நகரின் பல்வேறு சிறப்புக்களையும் இந்தப் புதையுண்டுள்ள நகரம் கொண்டுள்ளது.  எனவே நக்கீரரும் சங்கத்தமிழ்ப் புலவர் பலரும் பாடியுள்ள “கூடல்” மாநகர் இதுதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  ஐயந்திரிபற அறிவியல் அடிப்படையில் கூறிட வேண்டுமென்றால், தொல்லியலாளர்கள் தோண்டும் இடத்திற்கு அருகே சுமார் 500 மீட்டர் கிழக்கே தொன்மையான சிவலாயம் ஒன்று புதையுண்டுள்ளது.  அதைத் தோண்டிக் கண்டறிந்தால் அதில் சங்ககாலக் கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.


இது  குடியிருப்பா  அல்லது தொழில் நகரமா ....  
இங்கே கண்டறிப்பட்டுள்ள கட்டுமானங்கள், நெசவுத்தொழிற் கூடமாக அல்லது குயவர்களின் பானைத் தொழிற்கூடமாக இருக்கலாம் எனப் பலரும் கூறிவருகின்றனர்.   ஆனால் இவர்கள்யாரும் இக்கருத்துகளுக்குச் சான்றுகள் எதையும் குறிப்பிடவில்லை. 
திரு அமர்நாத் அவர்கள், “இத் தொழில்கள் நடைபெற்றதற்கான எச்சங்கள் ஏதும் இங்கே கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த இடம் தொழிற்கூடமாக இருக்க வாய்ப்பில்லை” என்று விளக்கம் அளித்துள்ளர்.
ஆனால் இந்தப் குறிப்பிட்ட கட்டுமானமானது குடியிருப்பும் அல்ல, தொழிற்சாலையும் அல்ல. இது ஒரு மாட்டுத் தொழும்,  மாட்டுப் பண்ணை என்பது எனது கருத்து.  இங்கே கண்டறிப்பட்டுள்ள அடுக்குப் பானைகள் மாடுகளுக்குத் தீவனமும் தண்ணீரும் வைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

உறைகிணறு – சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை வைகை ஆற்றுப் படுகைகளில் வாழ்வோர், வைகையின் ஊற்றுநீரை உண்டே வாழ்ந்தனர்.   எனவே,  மாடுப்பண்ணை, மாட்டுத் தொழுவங்களுக்கு உறைகிணறு பயன்படுத்தப் பெற்றிருக்கலாம்.   இங்கே வாழ்ந்த பழந்தமிழர் வையை ஆற்றின் ஊற்றுநீரை உண்டு வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதவேண்டியுள்ளது.
வெள்ளைநிறத்தில் படிகம் போன்றுள்ள ஒரு பொருளை நாக்கில் தடவிப் பார்த்துவிட்டு அது உப்பாக உள்ளது என்று கூறுவது அறிவியல் அல்ல.  அந்தப் பொருளை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைத்து அவர்கள் இதைச் சோதனை செய்து, “இது உப்பு” என்று சொல்ல வேண்டும்.  இதுவே அறிவியல் ஆய்வு முடிவாக அமையும்.   எனவே இந்த இடத்தில் கண்டறியப்பெற்றுள்ள பானைகளின் உள்ளே இருந்த பொருட்கள் என்னென்ன என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்.  அதுவே அறிவியல் அடிப்படையிலான சரியான முடிவாக இருக்கும்.  இந்த அறிவியல் ஆய்வு முடிவுகளே இங்கே இருந்தது குடியிருப்பா? தொழிற்கூடமா? அல்லது மாட்டுப் பண்ணையா? என்பதை உறுதி செய்யும்.

மேலும் சான்றுகள் கிடைக்கும் பொழுது முடிவுகள் தெளிவாகக் கூடும். 
இந்த தொல்லியல்மேடு சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இப்போதுதான் சுமார் 5 ஏக்கர்வரை தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.
இன்னும் அகரம், மணலூர், கொந்தகை யெல்லாம் தோண்டிக் கண்டறியப்பெற வேண்டும்.


அகரம்  “கோட்டைக் கருப்பணசாமி”  உள்ள இடமே பண்டைய கூடல் மாநகரின் கோட்டைக் கிழக்குவாயிலாக இருக்க வேண்டும் என்பது எனது யூகம்.  இந்தக் கோயிலுக்கு மேற்கே சற்றொப்ப 50 மீட்டர் மேற்கே உள்ள மேடான பகுதியானது பாண்டின் செழியனின் அரண்மனையாக இருந்திருக்கலாம்.

சங்கத் தமிழ் போற்றுவோம்,
சங்கம் வளர்த்த கூடல் மாநகர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா. கி. காளைராசன்
புரட்டாசி 28 (15.10.2019) செவ்வாய் கிழமை.

Saturday 12 October 2019

தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல்

தமிழரின் 
தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் 
இவற்றின் இருப்பிடங்கள் பற்றிய ஒரு சிறு விளக்கம்.



 தென் மதுரை  
பாண்டியர்களின் தலைநகரம் மதுரை.  முதலாம் ஊழிக்காலத்தில் உண்டான கடல்கோளால் இந்நகரம் அழிந்துவிட்டது. மிகமிகமிகத் தொன்மையான இந்த மதுரையை இன்றைய மதுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் தென்மதுரை என்று அழைத்துள்ளனர்.
தென்மதுரை (1) = கவாடபரம் அல்லது கபாடபுரம்.  இதன் இருப்பிடம் இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு, அல்லது இரண்டும்.   ஆப்பிரிக்காவில் மடகாசுக்கர் தீவிற்கு அருகில் உள்ள இந்தத் தென்மதுரையே (மொரிசியசு தீவு) ஆதிமனிதன் தோன்றிய இடமாக இருக்க வேண்டும்.  முதலாம் கடல்கோளால் அழிந்துபோன இந்தத் தென்மதுரை பற்றிய தெளிவான இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.



 மதுரை 
கடல்கொண்ட தென்மதுரையிலிருந்த தமிழர் புலம்பெயர்ந்து இன்றைய மதுரை இருக்கும் இடத்தில் குடியேறி உள்ளனர்.   இதுவே பழைமையான  மதுரை ஆகும்.  
1) இன்றை மதுரை இருக்கும் இடத்தில் இந்தப் பழைமையான மதுரை(1) இருந்தது.  இந்த மதுரை (1) மிகவும் தொன்மையானது.   இது கடல்கோளால் அழிந்தது.  இரண்டாம் கடல்கோளால் அழிந்துபோன மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் உண்டானது.
  மதுரை(1) = ஆலவாய்.


2) கடல்கோளுக்குப் பின்னர் புதிதாக மதுரை(2) நகரைப் பாண்டியர்கள் உண்டாக்கி அரசாளுகின்றனர்.  இதன் பெயர் கூடல். இந்தக் கூடல் மாநகரைத்தான் கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  
 மதுரை(2) = கூடல் 

(குறிப்பு - கீழடி வேறு, கீழடி யருகே புதையுண்டுள்ள கூடல் நகரம் வேறு. கீழடி அருகே உள்ள மணலூர் வேறு.  மணலூரின் தொன்மையான பெயர் மணவூர்.  மணலூரும் மணவூரும் ஒன்றுதான். மணவூர் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ளன.)

3) கூடலை ஆளும்போது பண்டைய மதுரை (1) இருந்த இடம் கண்டறியப்படுகிறது. உடனே அந்த இடத்தில்  புதிதாக நகரை உண்டாக்கிக் கூடலில் வாழ்ந்த மக்கள் குடியேறுகின்றனர்.  இந்த நகரமே இன்றைய மதுரை ஆகும். மதுரை (1) இருந்த இடத்தில் மதுரை (3) உருவாக்கப்படுகிறது. 
  மதுரை(3) = இன்றைய மதுரை.

4) மதுரை(3)வரை மீண்டும் ஒரு கடல்கோள்.  இந்த மூன்றாவது  கடல்கோளால் கைவிடப்பெற்ற கூடல்நகரம் (மதுரை 2) அழிந்து போகிறது.  திருஞானசம்பந்தர் கடல்கோளால் அழிந்த மதுரை(1) மற்றும் கூடல் என்ற மதுரை(2) என்ற இரண்டு நகரங்களையும் இணைத்துக்  ”கூடல் ஆலவாய்” என்று பாடியுள்ளார்.
  மதுரை(1)யும், கூடல் என்ற மதுரை(2)யும் = கூடல் ஆலவாய்.
கூடலை அழிந்த மூன்றாவது கடல்கோளால் மதுரை (3) அழியாமல் அப்படியே இன்றும் இருக்கிறது.



5) இந்நாளில், கடல்கொண்ட கூடல் என்ற மதுரை(2)யை தொல்லியலாளர்கள் கீழடி அருகே கண்டறிந்து ஆய்வுகள் செய்துவருகின்றனர்.

6) மதுரை(3)யின் அடியிலே  மதுரை(1) புதையுண்டுள்ளது.

மேற்கண்ட விளக்கமானது, தமிழ்ச்சங்கப்பாடல்கள் மற்றும் திருவிளையாடற்புராணம் பாடல்களின் அடிப்படையிலானது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 26 (13.10.2019) ஞாயிறு கிழமை.

புலிக்குகை, மகாபலிபுரம்

நாசி


இது புலியும் அல்ல, கரடியும் அல்ல, யாழியும் அல்ல, சிங்கமும் அல்ல.
இதன் தலையில் ஆட்டிற்குக் கொம்பு இருப்பது போன்ற கொம்புகள் உள்ளன. எனவே இது நாம் அறிந்த மிருகம் அல்ல.

இது கோபுரங்களின் மேல் உள்ள “நாசி” போன்ற முகஅமைப்பை உடையதாக உள்ளது.

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசவரர் சந்நிதியின் உள்ளே செல்லும் நுழைவாயில் உள்ள தூணில் இதன் முழு உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளது. பண்டைய பாண்டியர்களுக்கும் இந்த மிருகத்திற்கும் ஏதோ தொடர்பு உள்ளது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Monday 7 October 2019

கீழடி அல்ல, இது சங்கத்தமிழரின் கூடல் மாநகரம்

கீழடி அல்ல, 
இது கூடல் ஆலவாய் என்ற 
சங்கத்தமிழ் மதுரை மாநகரம் ஆகும்

கீழடி அருகே தொல்லியலாளர் தொன்மையான நகரநாகரிகத்தைத் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  புதையுண்டுள்ள இந்த நகரமானது தற்போதுள்ள கீழடி என்ற ஊரின் அருகே உள்ளது.  இக் காரணத்தால், இந்தத் தொன்மையான நகரத்தையும் கீழடி என்றே அனைவரும் குறிப்பிட்டுப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.  ஆனால் புதையுண்டுள்ள இந்த நகரத்தின் பெயர் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப் பெற்ற பண்டைய மதுரை ஆகும். 

பண்டைய பாண்டியரின்  தலைநகரம் மதுரை.   மதுரையில் தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர்.  மதுரைக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன.  அவற்றில் ஆலவாய், கூடல், மதுரை என்ற மூன்று பெயர்களே சிறப்புப் பெற்றுள்ளன.


(1) கபாடபுரம். இது தொல்காப்பியருக்கும் முந்திய அகத்தியர் காலத்தது.  இது கடல்கோளால் அழிந்தது.
(2) ஆலவாய் என்பது முதல் மதுரையாகும்.  இதுவும் கடல்கோளால் அழிந்தது என்கிறது திருவிளையாடற் புராணம்.
(3) கூடல் என்பது இரண்டாவது மதுரையாகும்.  இதுவும் கடல்கோளால் அழிந்தது என்கிறன திருவிளையாடற் புராணமும் திருஞானசம்பந்தரின் தேவாரமும்.
(4) மதுரை என்பது மூன்றாவது மதுரையாகும்.  இது பண்டைய ஆலவாய் என்ற முதல்மதுரை இருந்த அதே இடத்திலேயே புதிதாக உருவாக்கப் பெற்ற நகரமாகும்.
இதுவே இன்றைய மதுரை மாநகரமாகும் என்கிறது திருவிளையாடற் புராணம்.



புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான கூடல் நகரைச் சங்கத் தமிழ்ப்பாடல்களும் பக்திஇலக்கியப் பாடல்களும் வெகுவாக விவரித்து எழுதியுள்ளன.
புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான நகரமே முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த கூடல் மாநகரமாகும்.
இதுவே செண்பக பாண்டியன் சங்கம் கூட்டித் தமிழாய்ந்த தமிழ்கூடல் நகரமாகும்.
இதுவே செழியன் பாண்டியனின் தலைநகராகும்.
இதுவே கண்ணகி எரித்த கூடல் என்ற மதுரை ஆகும்.


கடல்வாய்ச் சென்ற ஆலவாய் போற்றுவோம்.
சங்கம் வளர்த் கூடல் போற்றுவோம்.
மதுரை மாநகர் போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 21 (08.10.2019)  செவ்வாய் கிழமை.
-------------------------------------------------------------------

கற்றவை - 

1) மதுரை என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல்களின் தொகுப்பு

மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5

2) கூடல் என்ற சொல் இடம்பெற்றுள்ள சங்கப்பாடல் வரிகளின் தொகுப்பு.

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் - திரு 71
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்/நாள்_அங்காடி நனம் தலை கம்பலை - மது 429,430
பெரும் பெயர் கூடல் அன்ன நின் - நற் 39/10
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் - நற் 298/9
மூன்று உடன் கூடிய கூடல் அனையை - பதி 50/7
குன்றத்தான் கூடல் வரவு - பரி 8/28
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்/மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ - பரி 8/29,30
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்/ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் - பரி 10/40,41
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்/வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை - பரி 10/112,113
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்/அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை - பரி 10/129,130
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்/உரைதர வந்தன்று வையை நீர் வையை - பரி 12/31,32
கூடலொடு பரங்குன்றின் இடை - பரி 17/23
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்/கை ஊழ் தடுமாற்றம் நன்று - பரி 17/45,46
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்/கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி 19/8,9
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு - பரி 19/15
கூடல் விழையும் தகைத்து தகை வையை - பரி 20/26
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்/கடி மதில் பெய்யும் பொழுது - பரி 20/106,107
காமரு வையை சுடுகின்றே கூடல்/நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி 24/4,5
பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்/முற்று இன்று வையை துறை - பரி 24/26,27
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்/மணி எழில் மா மேனி முத்த முறுவல் - பரி 24/46,47
உரு கெழு கூடலவரொடு வையை - பரி 24/92
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் - பரி 34/2
நெடு மாட கூடற்கு இயல்பு - பரி 35/6
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் - கலி 27/12
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை - கலி 30/11
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே - கலி 31/25
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்/புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ - கலி 35/17,18
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்/தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் - கலி 57/8,9
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்/வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை - கலி 92/11,12
வாடா வேம்பின் வழுதி கூடல்/நாள்_அங்காடி நாறும் நறு நுதல் - அகம் 93/9,10
பொய்யா விழவின் கூடல் பறந்தலை - அகம் 116/14
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது - அகம் 149/14
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - அகம் 231/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய - அகம் 253/6
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய - அகம் 296/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் - அகம் 315/7
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் - அகம் 346/20
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்/விலங்கு இடு பெரு மரம் போல - புறம் 273/5,6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - புறம் 347/6

3) கூடல் என்ற சொல் இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரம் பாடல் வரிகளின் தொகுப்பு.
கூடல் காவதம் கூறு_மின் நீர் என - சிலப்.மது 13/114
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல்   ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - சிலப்.மது 13/149,150
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - சிலப்.மது 14/6
வருந்தாது ஏகி மன்னவன் கூடல்   பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் - சிலப்.மது 14/60,61
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட - சிலப்.மது 14/95
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் - சிலப்.மது 14/110,111
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் - சிலப்.மது 14/116
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட - சிலப்.மது 14/123
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் - சிலப்.மது 16/9
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் - சிலப்.மது 16/131
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் - சிலப்.மது 19/58,59
கூடலான் கூடு ஆயினான் - சிலப்.மது 20/101
நல் தேரான் கூடல் நகர் - சிலப்.மது 21/57
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் - சிலப்.மது 21/60
கலி கெழு கூடல் பலி பெறு பூத - சிலப்.மது 22/101
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் - சிலப்.மது 23/22
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் - சிலப்.மது 23/123
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை  தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் - சிலப்.வஞ்சி 24/111,112
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை - சிலப்.வஞ்சி 29/112
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட - சிலப்.வஞ்சி 30/149
----------------------------------------


4) கூடல் ஆலவாய் - திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளின் தொகுப்பு

ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:65/4
அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:66/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:67/4
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:68/4
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:69/4
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:70/4
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:71/4
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:72/4
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:73/4
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:74/4
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று - தேவா-சம்:75/1
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் - தேவா-சம்:188
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் - தேவா-சம்:1018/1
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே - தேவா-சம்:3350/4
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3351/3
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3352/1
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3354/1
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3355/3
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3358/2
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3359/3
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் - தேவா-சம்:3920/2
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு - தேவா-சம்:3966/1

நன்றி - இங்கே பயன்படுத்துப்பெற்றுள்ள (புராணப்பாடல்கள் தவிர்த்த) தொடரடைவுகள் அனைத்தும் பேராசிரியர் முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களால்  எழுதப்பட்ட http://tamilconcordance.in கணினி நிரல்களின் மூலம் தொகுப்பெற்றவை. ஐயா அவர்களுக்கு நன்றி.

Sunday 6 October 2019

திருவிளையாடல் புராணத்தில் தமிழும் தமிழ்நாடும்


திருவிளையாடற் புராணத்தில்  
'தமிழ், தமிழ்நாடு' என்ற சொற்கள்
இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு


தமிழ் அமிழ்தம் போன்றது.
நாம் நம் குழந்தைகளுக்குத் தமிழை ஊட்டி வளர்க்க வேண்டும்.
தமிழுண்ட குழந்தைகள் உடல்நலமுடனும் மனவளமுடனும் வாழ்வர்.

சங்கம் வளர்த்த தமிழ் மதுரைக்கு ஆலவாய் என்றும் கூடல் என்றும் பெயர்கள் உண்டு.  கீழடி அருகே தொன்மையான நகர நாகரிகத்தைத் தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  இந்த நகரத்திற்குக் கூடல் மாநகரம் என்று பெயர்.   தென்மதுரை என்ற கபாடபுரத்தில் முதற் தமிழ்ச்சங்கமும்,  ஆலவாய் என்ற மதுரையில் இரண்டாம் தமிழ்ச்சங்கமும், கூடல் என்ற இந்நகரில் மூன்றாம் தமிழ்ச்சங்கமும் நடைபெற்றுள்ளதாகக் கருதவேண்டியுள்ளது.  சங்கம் வைத்துத் தமிழாய்ந்த சங்கப்புலவர்கள் இயற்றிய சங்கப்பாடல்களில் 16 பாடல்வரிகளில் தமிழ் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

ஆலவாய் என்ற மதுரையானது சிவபெருமானது உலகு ஆகும்.  ஆலவாய்நகர் தவிர்த்து உலகில் உள்ள மற்றைய நகரகள் எல்லாம் பிரமனால் படைக்கப் பெற்ற திருமாலின் உலகு ஆகும்” என்கிறது திருவிளையாடற் புராணம்.  திருவிளையாடற் புராணத்தில் 68 பாடல்களில் தமிழ் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

அன்னையரே, அன்னையரே,
தமிழன்னையரே,
நாம் நம் குழந்தைகளுக்கு அமிழ்தினும் இனிய தமிழை ஓதுவோம், தமிழன்னையரே.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மேனாள் துணைப்பதிவாளர் , அழகப்பா பல்கலைக்கழகம்.
ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடல் ஆராய்ச்சிமையம், மதுரை.
புரட்டாசி 24 (11.10.2019) வெள்ளி கிழமை.

தமிழ்ச் சங்கப்பாடல்களில் தமிழ்
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின் - சிறு 66
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து - பதி 63/9
தமிழ் வையை தண்ணம் புனல் - பரி 6/60
தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் - பரி 9/25
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் - பரி 26/1
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் - பரி 30/5
தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு_அகம் எல்லாம் - பரி 31/1
தமிழ் கெழு மூவர் காக்கும் - அகம் 31/14
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் - அகம் 227/14
தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து - புறம் 19/2
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர் - புறம் 35/3
அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் - புறம் 50/10
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து - புறம் 51/5
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப - புறம் 168/18
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக - புறம் 198/12

திருவிளையாடல் புராணப் பாடல்களில் தமிழ்
64.         
பின் எவன் உரைப்பது அந்தப் பெரும் தமிழ் நாடு ஆம் கன்னி
தன் இடை ஊர்கள் என்னும் அவயவம் தாங்கச் செய்த
பொன் இயல் கலனே கோயில் மடம் அறப்புற நீர்ச்சாலை
இன் அமுது அருத்துசாலை என உருத் திரிந்தது அம்மா
74.         
அவம் மிகும் புலப் பகை கடந்து உயிர்க்கு எலாம் அன்பாம்
நவமிகும் குடை நிழற்றி மெய்ச் செய்ய கோல் நடத்தி
சிவ மிகும் பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து
தவம் இருந்து அரசு ஆள்வது தண் தமிழ்ப் பொதியம்.        
81.         
மாயவன் வடிவாய் அது வைய மால் உந்திச்
சேய பங்கயமாய் அது தென்னன் ஆடலர் மேல்
போய மெல் பொகுட்டு ஆயது பொதியம் அப் பொகுட்டின்
மேய நான்முகன் அகத்தியன் முத்தமிழ் வேதம்.     
83.         
சிறந்த தண் தமிழ் ஆலவாய் சிவன் உலகு ஆனால்
புறம் தயங்கிய நகர் எலாம் புரந்தரன் பிரமன்
மறம் தயங்கிய நேமியோன் ஆதிய வானோர்
அறம் தயங்கிய உலகு உருவானதே ஆகும்
86.         
கடுக் கவின் பெறு கண்டனும் தென் திசை நோக்கி
அடுக்க வந்து வந்து ஆடுவான் ஆடலின் இளைப்பு
விடுக்க வார மென் கால் திரு முகத்து இடை வீசி
மடுக்கவும் தமிழ் திருச் செவி மாந்தவும் அன்றோ.
89.         
தொண்டர் நாதனைத் தூது இடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்தது எலும்பு பெண் உருவாகக்
கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண் தமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.     
108.       
குமிழ் அலர்ந்த செந்தாமரைக் கொடி முகிழ் கோங்கின்
உமிழ் தரும் பா ஞானம் உண்டு உமிழ்ந்த வாய் வேதத்
தமிழ் அறிந்து வைதிகம் உடன் சைவமும் நிறுத்தும்
அமிழ்த வெண் திரை வைகையும் ஒரு புறத்து அகழ் ஆம்.
146.       
வரு விருந்து எதிர் கொண்டு ஏற்று நயன் உரை வழங்கும் ஓசை
அருகிருந்து அடிசில் ஊட்டி முகமனன் அறையும் ஓசை
உரை பெறு தமிழ் பாராட்டு ஓசை கேட்டு உவகை துள்ள
இருநிதி அளிக்கும் ஓசை எழுகடல் அடைக்கும் ஓசை.
228.       
மால் அய மாதவனை அடைந்து கைதொழுது வாழ்த்தி வாதாவி வில்வலனைக்
கொலை புரி தரும மூர்த்தியே விந்தக் குன்று அடக்கிய தவக் குன்றெ
அலைகடல் குடித்த அருள் பெரும் கடலே அரும் தமிழ்க் கொண்டலே தென்பார்
துலை பெற நிறுத்த களைகணே என்று சுருதி ஆயிரம் எனத் துதித்தார்.
340.       
சுந்தரன் என்று எழுதிய கூர் அம்பு எய்து செம்பியன் போர் தொலைத்தவாறும்
செந்தமிழோர்க் இயற்பலகை அருளியதும் தருமிக்குச் செம் பொன் பாடித்
தந்ததுவும் மாறுபடு கீரற்குக் கரை ஏற்றம் தந்தவாறும்
விந்தம் அடக்கிய முனியால் கீரன் இயல் தமிழ் தெளிய விடுத்த வாறும்.        
520.       
மனு அறம் உவந்து தன் வழிச் செல நடத்தும்
புனிதன் மலயத் துவசன் வென்றி புனை பூணான்
கனி அமுதம் அன்ன கருணைக்கு உறையும் காட்சிக்கு
இனியன் வட சொல் கடல் தமிழ்க் கடல் இகந்தோன்.         
532.       
மாந்தர் பயின் மூவறு சொல் மாநில வரைப்பில்
தீம் தமிழ் வழங்கு திரு நாடது சிறப்ப
ஆய்ந்த தமிழ் நாட அரசளித்து முறை செய்யும்
வேந்தர்களின் மீனவர் விழுத்தகைமை எய்த.           
569.       
செந்தமிழ் வடநூல் எல்லை தெரிந்தவர் மறைநூல் ஆதி
அந்தம் இல் எண் எண் கேள்வி அளந்தவர் சமயம் ஆறும்
வந்தவர் துறந்தோர் சைவ மாதவர் போதம் ஆண்ட
சிந்தனை உணர்வான் மாயை வலி கெடச் செற்ற வீரர்.  
599.       
சிவ பரம் பரையும் அதற்கு நேர்ந்து அருள்வாள் தென்னவர் மன்னனாய் மலயத்
துவசன் என்று ஒருவன் வரும் அவன் கற்பின் துணைவியாய் வருதி அப்போது உன்
தவ மகவாக வருவல் என்று அன்பு தந்தனள் வந்த வாறு இது என்று
உவமையில் பொதியத் தமிழ் முனி முனிவர்க்குஓதினான் உள்ளவாறு உணர்ந்தார்.              
716.       
தமிழ் முதல் பதினெண் தேத்து மகளிரும் தாரு நாட்டின்
அமிழ்த மன்னவரும் முல்லை அம்புயம் குமுதம் நீலம்
குமிழ் நறும் கோங்கு காந்தள் கோழ் இணர் அசோகம் வாசம்
உமிழ் தர மலர்ந்த நந்த வனம் என ஒருங்கு மொய்த்தார்.             
822.       
எந்தையிருத் திருக்கூத்தென் றுமிந்நிலைநின் றியார்க்கும்
பந்தவெம் பாசநீங்கப் பரித்தருள் செய்தி யென்னச்
செந்தமிழ்க் கன்னி நாடுசெய்தமா தவப்பே றெய்தத்
தந்தன மென்றான் வேந்தலை தடுமாறநின்றான்.
869.       
ஆரொடு மடல் அவிழ் பனை யொடும் அர நிகர் இலை நிம்பத்
தாரொடு புலியொடு சிலையொடு தகு கயலொடு தழுவாப்
பாரொடு திசை பரவிய தமிழ் பயில் அரசர்கள் குழுமிச்
சீரொடு பல திரு வொடு வரு செயல் அனையது நதியே.  
1054.    
கோமகன் நிகழும் நாளில்கோள் நிலை பிழைத்துக் கொண்மூ
மா மழை மறுப்பப் பைங்கூழ் வறந்து புல் தலைகள் தீந்து
காமரு நாடு மூன்றும் கை அறவு எய்த மன்னர்
தாம் அது தீர்வு நோக்கித் தமிழ் முனி இருக்கை சார்ந்தார்.
1127.    
தென் கடல் வடபால் நோக்கிச் செல்வது போலத் தென்னன்
தன் கடல் அணிகம் கன்னித் தண் தமிழ் நாடு நீந்தி
வன் கட நெறிக் கொண்டு ஏகி வளவர் கோன் எதிர் கொண்டு ஆற்றும்
நன் கடன் முகமன் ஏற்று நளிர் புனல் நாடு நீந்தி.
1146.    
மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப்
பார்த்திபர் பிறரும் தத்தம் பதிதொறும் வரவு நோக்கித்
தேர்த்திகழ் அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்யத்
தார்த் திரு மார்பன் கன்னித் தண் தமிழ் நாடு சார்ந்தான்.            
1602.    
நிலை நிலையாப் பொருள் உணர்ந்து பற்று இகந்து  கரணம் ஒரு நெறியே செல்லப்
புலன் நெறி நீத்து அருள் வழி போய்ப் போதம் ஆம் தன் வலியைப் பொத்தி நின்ற
மலவலி விட்டு அகல அரா உமிழ்ந்த மதி போல் விளங்கி மாறி ஆடும்
தலைவன் அடி நிழல் பிரியாப் பேரின்பக் கதி அடைந்தான் தமிழ்ர் கோமான்.
1603.    
செம் கண் மால் விடை மேல் விடங்கர் செருக்களத்து இடை வாள் எடுத்து
அங்கம் வெட்டிய சேவகத்தை அறைந்தனம் தமிழ் மாறன் மேல்
சங்கை இட் அமனிசரார் ஆற்றிய தறு கண் வேள்வி முளைத்து ஓர்
வெம் கண் வாள் அரவைத் துணித்து விளித்தவாறும் விளம்புவாம்.
1606.    
நாயினும் கடை ஆன மாசுடன் இருள் புரை நெஞ்சு அரண்
ஆயினும் சமண் வேடர் அன்ன தறிந்து கொண்டு வெகுண்டு அழற்று
 இரும்பு என மான வெம் கனல் சுட்டிடத்தரியார் களாய்
மாயிரும் தமிழ் மாறனைத் தெற வஞ்ச வேள்வி இயற்றுவார்.
1616.    
அனுமதி கொடு தொழுது இறை பாத மகமதி கொடு புறன் அடைகின்ற
பனிமதி வழி வரு தமிழ் மாறன் பகழி யொடு அடுசிலை யினன் ஏகிக்
குனி மதி தவழ் தரு மதி நீடும் கொடி அணி குட கடை குறுகா முன்
தனிவரை என நிகர் தரு கோபத்தழல் விழி அரவினை எதிர் கண்டான்.          
1857.    
பரும் கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை
மருங்கில் நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ உய்ப் பணியப்
புரம் கடந்தவன் இருப்பது பூவண நகரம்.
1968.    
கனவட்டத்து அடி இடறப் பொறி விட்டுப் புலன் அவியக்
                           கரணத் உட்பொதி உயிர் விட்டவன் ஆகம்
தனை ஒக்கல் பவனர் எடுத்தனர் கிட்டிக் குரிசில் கடைத்
                           தலை இட்டத் திறம் மொழியத் தமிழ் மாறன்
இனை உற்றுப் பனவர் கையில் கனகக் குப்பைகள் நிறை
                        வித்து எமதிக் உற்றவனை எடுத்து எரிமாலை
புனைவித்த அக் கடன் முடிவித்தனன் மற்றப் பழி படரின்
                            புதையப் பற்றியது இடைவிட்டு அகலாதே.
2129.    
பின்னே ஏழ் அடி சேண் சென்று பெருமை சான்ற வரிசையினால்
தன் நேரிசையான் தனை விடுத்து மீண்டான் ஆகத் தமிழ் மதுரை
மின்னேர் சடையார் இசைத் தொண்டன் தானும் மீண்டு வெயில் விரிக்கும்
பொன்னேர் மௌலி நிதிக்கிழவன் போல மதுரை நகர் புக்கான்.          
2244.    
என்று கூறிய அரும் தமிழ்க்கு இறைவனை நோக்கித்
துன்று மாதவர் அறிவிலாச் சூகர உருவக்
குன்றின் மீது இருந்தவர் எலாம் கோதற நோற்று
நின்ற காரணம் யாது எனக் குறு முனி நிகழ்த்தும்.
2279.    
இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் எர்க்கும் பேறு
தரும் தலம் தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த அன்பு
அரும் தமிழ் மதுரை பொன் தாமரைத் தடம் சுந்தரேசப்
பெரும் தகை என்று சான்றோர் பேசுவார் ஆதலாலே.
2333.    
வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும் தந்தான்.
2402.    
அத் தகு வருணம் எல்லாம் ஏறி நின்று அவற்றின்
மெய்த்தகு தன்மை எய்தி வேறு வேறு இயக்கம் தோன்ற
உய்த்திடும் அகாரத்திற்கு முதன்மையாய் ஒழுகும் நாதர்
முத்தமிழ் ஆலவாய் எம் முதல்வர் அம் முறையான் மன்னோ.
2409.    
தனி வரு புலவர் நீவிர் தண் தமிழ் ஆலவாய் எம்
நனி வரு கருணை மூர்த்தி கனைகழல் இறைஞ்சல் வேண்டும்
இனி வருகென்ன நீரே எங்களுக்கு அளவு இல் கோடி
துனி வரு வினைகள் தீர்க்கும் சுந்தரக் கடவுள் என்றார்.
2414.    
வண் தமிழ் நாவினார்க்கு மன்னவன் வரிசை நல்கக்
கண்டு உளம் புழுங்கி முன்னைப் புலவர் அக் கழகத் தோரை
மண்டினர் மூண்டு மூண்டு வாது செய் ஆற்றன் முட்டிப்
பண்டைய புலனும் தோற்றுப் படர் உழந்து எய்த்துப் போனார்.
2431.    
நதி அணிந்தவர் தம் மொடு நாற்பத்து ஒன்
பதின்மர் என்னப் படும் புலவோர் எலாம்
முதிய வான் தமிழ் பின்னு முறை முறை
மதி விளங்கத் தொடுத்து அவண் வாழும் நாள்.
2520.    
தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.    
2524.
உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.   
2531.    
கண்டிகை மதாணி ஆழி கதிர்முடி வயிரம் வேய்ந்த
குண்டலம் குடி கொண்டு அகத்து அழகு எலாம் கொள்ளைக் கொள்ளத்
தண் தமிழ் மூன்றும் வல்லோன் தான் எனக் குறி இட்டு ஆங்கே
புண்டர நுதலில் பூத்துப் பொய் இருள் கிழித்துத் தள்ள.
2566.    
சம்பக மாறன் என்னும் தமிழ்நர் தம் பெருமான் கூடல்
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்.     
2567.    
கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான் செம்பொன்
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் இப்பால்
தென் தமிழ் அனையான் தேறத் தெருட்டிய திறனும் சொல்வாம்.
2577.    
விடை கொடு போவான் ஒன்றை வேண்டினான் ஏகும் தேயம்
தொடை பெறு தமிழ் நாடு என்று சொல்லுப வந்த நாட்டின்
இடை பயில் மனித்தர் எல்லாம் இன் தமிழ் ஆய்ந்து கேள்வி
உடையவர் என்ப கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல் வேண்டும்.
2578.    
சித்தம் மாசு அகல அந்தச் செம் தமிழ் இயல் நூல் தன்னை
அத்தனே அருளிச் செய்தி என்றனன் அனையான் தேற
வைத்தனை முதல் நூல் தன்னை மற்று அது தெளிந்த பின்னும்
நித்தனும் அடியேன் என்று நின் அடி காண்பேன் என்றான்.
2584.    
இருந்த மாதவச் செல்வனை எதிர் வர நோக்கி
அருந்த வாவிற்கு இயல் தமிழ் அமைந்தில எம்பால்
தெரிந்த நீ அதை அரி தபத் தெருட்டு எனப் பிணியும்
மருந்தும் ஆகிய பெருந்தகை செய்யவாய் மலர்ந்தான்.
2598.    
அந்தம் இல் கேள்வி ஓர் எண் அறுவரும் வேறு வேறு
செந்தமிழ் செய்து தம்மில் செருக்குறு பெருமை கூறித்
தந்தமின் மாறாய்த் தத்தந் தராதரம் அளக்க வல்ல
முந்தை நூல் மொழிந்த ஆசான் முன்னர் வந்து எய்தினாரே.
2602.    
ஓயா விறல் மதனுக்கு இணை ஒப்பான் அவன் ஊமச்
சேய் ஆம் அவன் இடை நீர் உரை செய்யுள் கவி எல்லாம்
போய் ஆடுமின் அனையானது புந்திக்கு இசைந்தால் நன்று
யாவரும் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான்.
2605.    
பின் பாவலர் எலாம் பெரு வணிகக் குல மணியை
அன்பால் அழைத்து ஏகித் தமது அவையத்து இடை இருந்தா
நன் பால் மலர் நறும் சாந்து கொண்டு அருச்சித்தனார் நயந்தே
முன்பால் இருந்து அரும் தீம் தமிழ் மொழிந்தார் அவை கேளா.
2607.    
இத் தன்மையன் ஆகிக் கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன்
முத் தண் தமிழ் கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும்
அத் தன் மையன் அறியும் தொறும் அறியும் தொறும் எல்லாம்.
2610.    
உலகினுட் பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல்
திலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள்
கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து
புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார் போலும்.
2618.    
சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்
நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன்
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச்
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி.
2622.    
சங்கவான் தமிழ்த் தெய்வப் புலவரோடும் உடன் எழுந்து சைல வேந்தன்
மங்கை நாயகன் போன வழிபோய் அங்கு இருந்தார் அவ் வழி நாள் வைகல்
கங்குல்வாய் புலரவரும் வை கறையில் பள்ளி உணர் காலாத்து எய்தி
அங்கண் நாயகன் அடியார் சேவிப்பார் இலிங்க உரு அங்குக் காணார்.
2630.    
அல்லதை என்று அமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து
எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றலோ
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய் எந்தாய்.
2674.    
பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ்க் கூடல்
வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள்
துள்ள அன்பு கூர் தொடுத்து திருத் தோள் உறப் புல்லித்
தள்ளரும் தகைக் கற்பினாள் தனது கைக் கொடுத்தான்.
2949.    
கரியின் ஓசையும் பல்லிய ஓசையும் கடும் தேர்ப்
பரியின் ஓசையும் இன் தமிழ் ஓசையும் பாணர்
வரியின் ஓசையும் நிரம்பிய மணி நகர் எங்கும்
நரியின் ஓசையாய்க் கிடந்தது விழித்தது நகரம்.
3090.    
பின்னும் அவர் கனவின் கண் மன்றுள் நடம் பிரியாத பெருமான் வந்து
முன்னவனைப் பெருந்துறையில் குருந்தடியில் ஆட் கொண்ட முறையினாலும்
இன் இசை வண் தமிழ் மணி போல் பாடும் காரணத்தாலும் யாம் அன்று இட்ட
மன்னிய பேர் மாணிக்க வாசகன் என்று அழை மின்கள் வருவான் என்றார்.
3118.    
அரும் தமிழ்ப் பாண்டி வேந்தற்கு உறுதி ஆக்கம் செய்யும்
மருந்தினில் சிறந்த கற்பின் மங்கையர்க்கு அரசி யாரும்
பெருந்தகை அமைச்சு நீரில் குழைத்து அன்றி பிறங்கப் பேறு
தரும் திரு நீறு இடாராய் சிவ அடிச் சார்பில் நின்றார்.      
3133.    
வெம் குரு வேந்தர் அடி பணிந்து அடியேன் குலச் சிறை விளம்பும் விண்ணப்பம்
இங்கு எழுந்து அருளிச் சமண் இருள் ஒதுக்கி எம் இறை மகற்கு நீறு அளித்துப்
பொங்கி வரும் பணை சூழ் தென் தமிழ் நாட்டைப் பூதி சாதன வழி நிறுத்தி
எங்களைக் காக்க என்ற பாசுரம் கேட்டு எழுந்தனர் கவுணியர்க்கு இறைவர்.
3147.    
வைதிகத்து தனி இளம் சிறு மடங்கலேறு அடைந்த
செய்தியைத் தெரிந்து அயன் மலை இடங்களில் திரண்ட
கை தவத்த எண்ணாயிரம் கயவரும் ஒருங்கே
எய்தி முத்தமிழ் விரகர் மேல் பழித்தல் இழைத்தார்.           
3150.    
சிட்டர் நோக்கி அத் தீயினை தென் தமிழ்க் கூடல்
அட்ட மூர்த்தியை அங்கு இருந்து அரு மறைப் பதிகம்
துட்டர் பொய் உரை மேற் கொண்டு தொல் முறை துறந்து
விட்ட வேந்தனைப் பற்று எனப் பாடினார் விடுத்தார்.       
3157.    
அழைமின் ஈண்டு என அரசனும் இசைந்தனன் ஆர்வம்
தழையும் மந்திரத் தலை மகன் தனி நகர் எங்கும்
விழவு தூங்க நல் மங்கல வினைகளால் விளக்கி
மழலை இன் தமிழ் விரகர் தம் மடாத்தில் வந்து எய்தா.    
3250.    
வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்
கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான் தன்னை
இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும் பெற்று
விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார்.
3251.    
தன் பெரும் கற்பினாளும் அமைச்சனும் தமிழ் நர் கோனும்
பின்பு முனம் தண் காழிப் பிரான் அடி பிரிவு ஆற்றார் ஆய்
அன்பு தந்தவர் பால் நட்ட அன்று தொட்டு ஆனாக் கேண்மை
இன்பமும் துன்பம் ஆகி விளைந்து முன் ஈர்ப்பப் போனார்.
3258.    
அத்தன வணிகற்கு உரிய நன் மருகன் அவன் முதற் கடிமணம் முடித்தோன்
முத்தமிழ் மதுரைப் பதி உளான் அவற்கே முறையினால் நோற்று நான் பயந்த
வித்தக மயிலைக் கொடுப்பல் என்று அனைய இயற் குல வணிகர் கோன் தன்னோடு
ஒத்த பல் கிளைஞர் யாவரும் அறிய உணர்த்தினான் சில பகல் ஒழிய.
3309.    
என்று தென் மலை மேல் இருந்த மாதவத் தோன் இன் அருள் குருபரன் தனையும்
அன்று அவன் திருவாய் மலர்ந்த வாசகமும் அருள் கனிந்து ஒழுக உள்ளடக்கித்
தென்தமிழ் ஆலவாய்த் தனிப் பதியைச் சென்னிமேல் பன்னிரண்டு உம்பர்
ஒன்ற வைத்து இமையா அம் கயல் கண்ணி உடன் உறை ஒருவனை நினைந்தான்
3338.    
இந் நதி வெண் முத்து ஆரம் எனக் கிடந்து இலங்கும் சென்னி
மன்னவன் நாடு ஈது என்ப தமிழ் அறி வைகைப் பேர்யாறு
அந்நதி துறக்க மண்மேல் வழுக்கி வீழ்ந்தாங்குத் தோற்றித்
தென்னவன் நாடு சேய்த்தாத் தெரிவதே காண்மின் என்றான்

நன்றி - சங்கப்பாடல் தொகுப்பு = http://tamilconcordance.in/
நன்றி - திருவிளையாடல் பாடல் பதிவு = தமிழ்இணையப் பல்கலைக்கழகம்

திருவிளையடல் பாடல் தொகுப்பு - காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 20 (07.10.2019) திங்கள் கிழமை