Tuesday 18 December 2018

மதுரையைச் சூழ்ந்துள்ள கோயில்கள்

மதுரையைச் சூழ்ந்துள்ள  கோயில்கள்

மதுரையைச் சூழ்ந்துள்ள கோயில்களைக் கல்லாடம் பட்டியிலிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஐயா நூ த லோ சு அவர்களுக்கும்,
நண்பர் திருமதி.தேமொழி அவர்களுக்கும் எனது நன்றி.

---------------------------------------------------------------------
நூ த லோ சு 
மயிலை 
N D Logasundaram <selvindls61@gmail.com>8 April 2015 at 00:40

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil <mintamil@googlegroups.com>
கல் லாடம் 61  
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - - 
வடதிருஆலவாய் திருநடுவூர்                                  22
வெள்ளியம்பலம் நள்ளாறு இந்திரை                    23  
பஞ்சவனீச்சரம் அஞ்செழுத்து அமைத்த                 24
சென்னிமாபுரம் சேரன் திருத்தளி                              25
கன்னி செங்கோட்டம் கரியோன் திருவுறை          26
விண் உ டைத்து (உ)ண்ணும் கண்ணிலி ஒருத்தன் 27
மறிதிரைக் கடலுள் மா வெனக் கவிழ்ந்த                  28 
களவுடற் பிளந்த ஒளிகெழு திருவேல்                       29
பணிப் பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன்            30
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த                31
அருவி அம்சாரல் ஒரு பரங்குன்றம்            32
சூழ்கொள இருந்த கூடலம்பெருமான்                        33
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -

என 11 கோயில்கள் ஆலவாய் அண்ணல் கோயிலைச் சூழ்ந்துள்ள 
மற்ற கோயிஉல்களாக காட்டப்படுகின்றன 

இந்தப்ப் பாடல் வரிகளில் கூடலம் பெருமானைச் சூழ்ந்து நின்ற கோயில்கள் பட்டிலி டப்பட்டுள்ளன. 
இவற்றில் பரன்குன்றத் துடன் நிற்காது கரியோன் திவுறை என கள்ளழகர் கோயிலும் குறிக்கப்படுகின்றது.
இம்மையே நன்மை தருவர் கோயில் காஞ்சமலைக் கோயில் திருவேடகம் ஆப்பனூர் திருப்பூவணம் போன்றவை மற்றவையில் அடங்கும் எனலாம்  வெள்ளியம்பலம் (எது?) இன்றும் உள்ளது.

நூ த லோ சு 
மயிலை


--------------------------------------------------------------------------------------

தேமொழி <jsthemozhi@gmail.com>
8 Apr 2015, 06:49
to   mintamil <mintamil@googlegroups.com>

சங்கப் பாடல்களிலேயே  "நான்மாடக்கூடல்" என்பது வழக்கில் இருந்தது தெரிகிறது .....

நான் தேடியதில் கிடைத்த தகவல்கள் கீழே காண்க:

நான்மாடக்கூடல் என்பதற்கு வேறுவகையிலும் பொருள் கொள்ளப்பட்டிருப்பதும் காட்டப்பட்டுள்ளது...

கூடனெடுங்கொடி யெழவே (கலித். 31)
நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92, 65).
குன்றத்தாற் கூடல் வரவு (பரிபா. 8, 28)
_____________________________________________________
பத்துப்பாட்டு மூலமும்
நச்சினார்க்கினியருரையும்


 [மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் :] பிறங்கிய மாடம் மலிபுகழ் கூடல்-பெரிய நான்மாடத்தாலே மலிந்தபுகழைக் கூடுதலையுடைய மதுரை (699) என மேலேகூட்டுக.
 "நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92:65) என்பதும், ‘நான்குமாடம் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று;
______________________________________________________


நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின்
--21. வஞ்சின மாலை
சிலப்பதிகாரம் - 2. மதுரைக் காண்டம்
_______________________________________________________


“மாடமலி மறுகிற் கூடல்” (முருகு.71); 
“மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்” (மதுரைக்.429); 
“மாடக் கூடல்” (பரி.20 : 106); 
“மாட மதுரை”, “மாட மதுரையும்” (சிலப்.பதி. 203, 8 : 3, 9: 76, 15 : 112); “நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும்” (கலித். 92) என்பதும், 

‘நான்கு மாடங் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று; அவை 
திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்; 

இனி, கன்னி, கரியமால், காளி, ஆலவாயென்றுமாம்’ என்னும் அதன் விசேடவுரையும், “அம்புத நால்களா னீடு கூடல்” (திருநள்ளாறும் திருவாலவாயும்; தே.) என்னும் திருவாக்கும், 
“மதிமலி புரிசை மாடக் கூடல்” (திருமுருகப் பாசுரம்) என்பதும், “ஈசனார் மகிழ்ந்த தானம்” (திருவால.நகர. 12) என்பது முதலிய திருவிருத்தங்கள் நான்கும், 
“கன்னிதிருமால்காளி யீசன் காக்குங் கடிமதில்சூழ் மாமதுரை” (திருவால.பயன் முதலியன. 5) என்பதும் இங்கே கவனிக்கத்தக்கவை.
__________________________________


சங்ககாலத்தில் கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். அவை பல மாடங்களைக் கொண்டிருந்தன. மாடங்கள் மிகுந்தும் சிறந்தும் விளங்கிய மதுரை பற்றிப் புறநானூறு, மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, கலித்தொகை போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
 

மாட மதுரை (புறம். 32)
மாடமலி மறுகிற்கூடல்  (திருமுருகு. 71)
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி, 429)
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் (கலித்தொகை, 92)
+
"மதிமலி புரிசை மாடக் கூடல்" (திருமுகப் பரசுரம்). 
___________________________________________________


நான்மாடக் கூடல் என்னும் என்னும் பெயர் மதுரையைக் குறிக்கிறது. எனினும் அது 'நான்கு மாடக் கூடல்' என்பதன் குறுக்கம்.

திருவாலவாய் (மதுரை)
திருநள்ளாறு
திருமுடங்கை
திருநடுவூர்
ஆகியவை அக்கால நான்கு மாடக் கூடல்கள்.

நச்சினார்க்கினியர் விளக்கம்
கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என இவற்றை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். [1]
கூடல் என்பது கோபுரத்தைக் குறிக்கும்.

அடிக்குறிப்பு[தொகு]
கலித்தொகை பாடல் எண் 92, அடி 65-ல் வரும் 'நான்மாடக் கூடல்' என்னும் தொடருக்கு நச்சினார்கினியர் தரும் உரை
_________________________________________________________


திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை

66

...............  நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

நிலவொளி வெளிப்படுமாறு வெண்மையான சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.



74

இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

 அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக் கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
___________________________ 


வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் .. . .5
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.

பரிபாடல் திரட்டு
முதற் பாடல்

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே- தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.

பரிபாடல் திரட்டு
ஏழாம் பாடல்

..... தேமொழி 





No comments:

Post a Comment