Wednesday 25 September 2019

சங்ககாலப் பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்


சங்ககாலப் பாண்டியரின் 
அரண்மனையும் கோட்டைவாயிலும் 
எங்கே உள்ளன ?

கீழடி அருகே, தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடமானது ஒரு தொழிற்கூடம் என்கின்றனர். அப்படியானால் இந்த நகரை ஆண்ட பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும் எங்கே உள்ளன ? 
என்ற கேள்வி எழுகிறது.

பண்டைத் தமிழரின்  தொன்மையான நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  இன்றைய கீழடி அன்றைய மதுரையாக இருந்துள்ளது.  இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்த “கூடல் என்ற ஆலவாய்நகரம்” என்கிறது திருவிளையாடல் புராணம்.  தொல்லியலாளர் தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

பன்றி முத்திரையும் பாண்டியனின் மந்திரிகளும்
தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டெடுத்துள்ள ஆயிரக்கணக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் சிறப்பு வாய்ந்தனவாக உள்ளன.  இவையனைத்தும் பண்டைத் தமிழரின் நாகரிகத்தின் நகர நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன.  கண்டெடுக்கப் பெற்றுள்ள பொருட்களில் ஒன்றான வராக உருவம் பதித்த பவளம்மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இந்தப் “பன்றி உருவம் பதித்த பவளம்” பண்டைய பாண்டியமன்னனிடம் மந்திரிகளாகப் பணியாற்றிய 12 மந்திரிகளின் இலட்சினையாக இருக்கவேண்டும். இதுவே முத்தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த நகரமாக இருக்க வேண்டும்.  இங்குதான் மூன்றாம் தமிழ்ச்சங்கம் கூடித் தமிழாய்ந்து இருக்க வேண்டும் https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post.html என எழுதியுள்ளேன்.

இதை வாசித்த நண்பர் ஒருவர், 12 மந்திரிகளின் முத்திரைதான் இந்தப் பன்றி உருவம் பதித்த பவளம் என்று சொன்னால், “பாண்டிய மன்னர்கள் தொடர்பான எந்த ஆதாரமும் கீழடியில் இது வரை கிடைக்க பெறவில்லையே…..” என்று என்னிடம் கேட்டார்.


பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்
என்னிடம் கேட்டால், பாண்டிய மன்னர்கள் வசித்த அரண்மனையும், அரண்மனைக் கோட்டை வாயிலும் புதையுண்டுள்ள சிவன்கோயிலுக்குத் தென்கிழக்கே, சந்திரமூலையிலே (அஃனிமூலையிலே) உள்ளன என்றும், பாண்டியர்கள் வழிபட்ட சிவாலயமானது தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடத்திற்கு அருகே சுமார் 500மீட்டர் கிழக்கே புதையுண்டுள்ளது என்பேன்.

அகரம் தமிழரது சிகரம்
பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும்.  மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும்.  

கோட்டைக் கருப்பணசாமி  
(https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும்.

இவ்வளவு கண்டுபிடித்துள்ள நமது தொல்லியலாளர்கள் புதையுண்டுள்ள பாண்டியர்களது அரண்மனையையும் தோண்டியெடுத்து உலகு அறியச் செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்நகர் போற்றுவோம்,
திருவாலவாய் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Sunday 22 September 2019

சங்கப்பாடல்களில் சிவபெருமான்

சங்கப்பாடல்களில் சிவன்
(அண்ணல் ஆலவாயன்)


சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ  வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். 

சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை எனலாம்.   ஆனால் சங்க இலக்கியங்கள் சிவபெருமானை “அண்ணல்” என்று போற்றுகின்றன.  அண்ணல் என்றால் தலைவன் தலைமை என்று பொருள்.  சங்கப்பாடல்களில் 79 பாடல்வரிகளில் அண்ணல் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.   மேலும் சிவபெருமான்  ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,  மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெற்றுள்ளனான். 

மதுரையின் மத்தியில் சிவன்கோயில் -


திருமாலின் தொப்புளில் தாமரைப் பூ தோன்றி மலர்ந்துள்ளது.  அந்தத் தாமரைப் பூவைப் போன்று அழகாக உள்ளது கூடல் (மதுரை). அந்தப் பூவின் அக இதழ்களைப் போன்று தெருக்கள் உள்ளன.   தாமரைப் பூவின் மத்தியில் அதன் பொகுட்டு இருப்பது போன்று,  இந்த ஊரின் மத்தியில் அண்ணல் (சிவபெருமானின்) கோயில் உள்ளது.  தாமரைப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள்.   அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழும் புலவர்கள்.  அந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த  நான்கு வேதங்கள்.  இந்த நான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் அதிகாலை வேளையில் இந்த வேதங்களை ஓதுகின்றனர்.  இவர்கள் ஓதும்  குரலைக் கேட்டு,   மிக்க இன்பமான துயிலிலிருந்து மதுரை மக்கள் எழுகின்றனர்.  வாழ்த்துப் பெற்ற  வஞ்சியும் உறைந்தையும் போல கோழி கூவும் போது மதுரை மக்கள் எழுவதில்லை.


பரி பாடல் 30 
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்  - பரி 30/4
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

-------------------------------------------

1) அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை - நற் 194/5
2) அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென - நற் 236/8
3) வண்ணம் மிகுந்த அண்ணல் யானை - நற் 273/6
4) அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி - நற் 372/7

4) மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை - குறு 260/5
5) திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு - குறு 338/1
6) அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என - குறு 343/2
7) புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு - குறு 344/3
8) கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு - குறு 363/1
9) அண்ணல் நெடு வரை சேறி ஆயின் - குறு 392/3

10) நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே - ஐங் 198/4
11) அண்ணல் யானை அரசு விடுத்து இனியே - ஐங் 466/2

12) அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் - பதி 12/12
13) அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த - பதி 22/26
14) அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் - பதி 23/14
15) இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல்/வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் - பதி 33/1,2
16) அண்ணல் யானை அடு போர் குட்டுவ - பதி 42/8
17) ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் - பதி 44/7
18) வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என - பதி 51/23
19) குடவர் கோவே கொடி தேர் அண்ணல்/வாரார் ஆயினும் இரவலர் வேண்டி - பதி 55/9,10
20) காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல்/மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் - பதி 64/15,16
21) தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்/மாடோர் உறையும் உலகமும் கேட்ப - பதி 70/22,23
22) வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல்/முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து - பதி 81/18,19
23) பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல்/கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும் - பதி 86/8,9

24) ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய - கலி 9/10
25) ஆர மார்பினை அண்ணலை அளியை - கலி 52/15

26) செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்/இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் - பரி  1/30,31
27) மு கை முனிவ நால் கை அண்ணல்/ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் - பரி  3/36,37
28)  கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்  - பரி 8/127
29) மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7

அவையும் நீயே அடு போர் அண்ணால்/அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே - பரி  13/15,16

30) ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப - பரி 17/14
31) இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு/அணி மிக வந்து 
 இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க - பரி  23/65,66
32) கணம்_கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி - பரி 23/86
33) மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்  - பரி 30/4
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே

34) அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ - அகம் 23/8
35) இரு திரி மருப்பின் அண்ணல் இரலை - அகம் 34/4
36) அண்ணல் யானை வெண் கோடு கொண்டு - அகம் 61/9
37) மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு - அகம் 64/11
38) அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த - அகம் 75/8
39) அண்ணல் யானை அடு போர் சோழர் - அகம் 96/13
40) பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை - அகம் 115/13
41) வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு - அகம் 146/1
42) அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் - அகம் 208/4
43) தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு - அகம் 238/7
44) மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை - அகம் 251/15
45) வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு - அகம் 304/9
46) அண்ணல் யானை அடு போர் வேந்தர் - அகம் 373/16

47) ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் - புறம் 42/1
48) கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி - புறம் 55/4
49) ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்/நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல - புறம் 67/2,3
49) அண்ணல் யானை அடு_களத்து ஒழிய - புறம் 93/13
50) அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே - புறம் 95/9
51) அண்ணல் யானை வேந்தர்க்கு - புறம் 115/5
52) அண்ணல் நெடு வரை ஏறி தந்தை - புறம் 116/15
53) அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய - புறம் 126/20
54) ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல்/இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று - புறம் 129/5,6
55) அண்ணல் யானை எண்ணின் கொங்கர் - புறம் 130/5
56) வென் வேல் அண்ணல் காணா ஊங்கே - புறம் 141/7
57) அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை - புறம் 158/2
58) நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்/கல் கண் பொடிய கானம் வெம்ப - புறம் 174/23,24
59) திண் தேர் அண்ணல் நின் பாராட்டி - புறம் 198/6
60) வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்/தார் அணி யானை சேட்டு இரும் கோவே - புறம் 201/12,13
61) இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்/எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் - புறம் 202/13,14
62) இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்/இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் - புறம் 203/6,7
63) கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ - புறம் 205/11
64) அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை - புறம் 249/7
65) பொலம் புனை ஓடை அண்ணல் யானை - புறம் 287/5
66) அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து - புறம் 288/2
67) பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு/ஒருவரும் இல்லை மாதோ செருவத்து - புறம் 311/4,5
68) அண்ணல் யானை அணிந்த - புறம் 326/14
69) ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல்/கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் - புறம் 337/1,2
70) வினவல் ஆனா வெல் போர் அண்ணல்/யார் மகள் என்போய் கூற கேள் இனி - புறம் 353/6,7
71) அண்ணல் யானை வழுதி - புறம் 388/15
72) அண்ணல் யானை வேந்தர் - புறம் 390/27
73) மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி - புறம் 393/9

74) திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என - மலை 319
75) அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப - சிறு 200
76) கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்/கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் - மது 207,208
77) அண்ணல் யானை அடு போர் வேந்தர் - மது 348
78) அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் - குறி 54
79) அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் - குறி 171

------------------
நன்றி - பாடல் வரிகள் தொகுப்பு உதவி http://tamilconcordance.in/


-----------------------

பரங்குன்றை வாழ்த்தல்
125
“உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
தண் பரங்குன்றம்! நினக்கு”
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி 8/127
--------------------------------------------


“விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்”
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7
-----------------------------------------------------------------------------------------

Sunday 1 September 2019

இது ஆலவாய் என்ற பண்டைய மதுரையின் வராக முத்திரையா?

வராக முத்திரை 

கீழடி அருகே அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ள வராகமுத்திரையானது ஆலவாயை ஆண்ட வராகர்களின் முத்திரையா?

இன்றைய கீழடி அருகே அன்றைய மதுரை இருந்தது. இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.

இந்தத் தொன்மையான ஆலவாய் நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.  அதில் செங்கல் கட்டுமானம், இரட்டை சுவர், சுடுமண் குழாய், கட்டைவிரல் அளவுள்ள சுடுமண் பானை, வராக உருவத்துடன் கூடிய சூதுபவளம், உயர் வகுப்பு பெண்கள் கழுத்தில் அணியும் கழுத்து மாலை பதக்கம் எனப் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.  இதில் “வராக உருவம் பதித்த பவளம்” மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


கீழடி அருகே புதையுண்டுள்ள இந்தப் பண்டைய ஆலவாய் நகரம் கடல்கோளால் அழிவதற்கு முன்னர், இந்த ஆலவாய் நகரை இராசராச பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.   அவனது ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள பன்றிமலையில் பன்றியின் அம்சமாகத் தோன்றிய 12 சகோதர்கள் இருந்தனர். இந்தப் 12 பேர்களையும் தனது அமைச்சர்களாக ஆக்கி இராசராசன் சிறப்புடன் தேசம் ஆண்டு வந்தான்.  

இராசராச பாண்டியனது ஆட்சிக்காலத்திற்குப் பின்னாள் , ஆதுலகீர்த்தி பாண்டியனின் மைந்தனாகிய கீர்த்தி வீடணன் காலத்தில் பிரளயத்தினால் கடல்வெள்ளம் (சுனாமி) தோன்றியது.   அந்தக் கடல்கோளால் ஆலவாய் என்ற இந்தத் தொன்மையான மதுரையானது முற்றிலும் அழிந்து போனது.  எல்லாமும் மண்ணுள் புதைந்து போயின.  பன்றிகளின் அம்சமாகத் தோன்றி அமைச்சர்களாக விளங்கி நல்லாட்சி செய்த 12 மந்திரிகளின் இலட்சினைகளும் புதைந்து போயின.
இந்தக் கடல்கோளில் சோமசுந்தரப் பெருமான் விமானமும், மீனாட்சி அம்மை ஆலயமும், இடபமலையும், யானை மலையும், நாக மலையும், பசுமலையும், பன்றி மலையும் மட்டும் அழியாமல் இருந்தன.

கடல்வெள்ளம் வற்றிய பிறகு உலகம் மீண்டும் சிவபெருமானால் படைக்கப்பட்டது.  தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன் சூரியன் அக்கினி என்னும் மூவர் குலத்தினின்றும் இறைவனால் படைக்கப்பட்டனர்.
சந்திர குலத்தில் தோன்றிய  ‘வங்கிய சேகர பாண்டியன்’ என்பவன் சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலைச் சுற்றி ஒரு சிறு நகரத்தை அமைத்து நீதி வழுவாமல் அரசாண்டான்.  இந்த நகரமே இன்றைய மதுரை நகரமாகும்.

பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு, நாயக்கர் ஆட்சி, வெள்ளையன் ஆட்சி முடிந்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், பண்டைய ஆலவாய் நகரைக் கண்டறிந்து தொல்லியல் துறையில் அகழாய்வுகள் செய்துவருகின்றனர்.
இந்த அகழாய்வில்தான் பண்டைய வராக முத்திரை உடைய சூதுபவளம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழரின் தொன்மை போற்றுவோம்.
மாமதுரை போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆவணி 15 (01.09.2019) ஞாயிற்றுக் கிழமை


நன்றி - படம், தினமலர்.
பார்வை -
1) தினமலர் செய்தி https://www.dinamalar.com/news_detail.asp?id=2356972&fbclid=IwAR1VISgDBzbFai7nhiBsT-wC4vC2VjPJyFe3Ct0Wvp2X2aARnW60W7deRXY
2) திருவிளையாடல் புராணம்  45ஆவது படலம் - பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்,
3) திருவிளையாடல் புராணம் 46ஆவது படலம் - பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

வராகம் கேழல் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு
2219.
பல் வகைக் சாதி உள்ள பன்றியில் கணங்கள் எல்லாம்
வெல் படைத் தறுங்கண் சேனை வீரராய் முன்பு செல்லச்
செல் எனத் தெழித்துச் செம் கண் தீயுக மானம் என்னும்
மல்லர் வாம் புரவி மேல் கொண்டு எழுந்தனன் வராகவீரன்.

2236.
மண்ணில் குறித்து வலிக்கண்டு வராக வேந்தை 
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால்
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால்.

2266.
வந்து இறைஞ்சிய வராக மா மைந்தரை நேர் கண்டு
அந்தம் இல் களிப்பு அடைந்து வேந்து அமைச்சியல் கிழமை
தந்து வேறு பல் வரிசையும் தக்க வா நல்கிக்
கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர்.

2332.
தேன் இழி குதலைத் தீம் சொல் சேல் நெடும் கண்ணி கோயில்
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த
கான் இழி இடபக் குன்றம் கரிவரை நாகக் குன்றம்
ஆன் இழி வரை வராக வரை முதல் அழிவு இலாத.

கேழல் என்ற சொல் உள்ள பாடல்
2227.
தூங்கு இருள் வறுவாய்ச் சிங்கம் இரண்டு உறை துறையின் மாடோர்
ஆங்கு இரு மருப்புக் கேழல் வந்து நீர் பருகி மீளும்
வீங்கு இருள் உடல் கார் எனும் ஒன்று உறை துறையில் வீரத்து
ஆங்கு இரு மடங்கல் நீர்க்குத் தலைப்பட அஞ்சும் அன்றே.


திருவிளையாடல் புராணம் 'கேழ்' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

திருவிளையாடல் புராணம்
'கேழ்' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

கேழ் = ஒளி, நிறம், ஒப்பு
கேழ்த்த = adj. bright, abundant., நிறங்கொண்ட. கேழ்த்த வடித்தாமரை (திவ். இயற். 3, 96)
மிகுந்த. கேழ்த்த சீரன் (திவ். திருவாய், 3, 1, 7)
கேழ்பவர் = நன்மையுடையார் the blessed.
கேழ்பு = நன்மை blessing.
கேழல் = நிறம், பன்றி, குளநெல்
கேழ்வரகு = ஒருவகைத் தவசம், கேப்பை
கேழற்பன்றி = ஆண்பன்றி

50.
பல நிற மணி கோத்த என்ன பல் நிற ஏறு பூட்டி
அலமுக இரும்பு தேய வாள் வினைக் கரும் கால் மள்ளர்
நில மகள் உடலம் கீண்ட சால் வழி நிமிர்ந்த சோரிச்
சலம் என நிவந்த செம் கேழ்த் அழல் மணி இமைக்கும் மன்னோ.

170.
தம் உயிர்க்கு இரங்கார் ஆகித் தருக்கொடு மானம் ஈர்ப்ப
தெம் முனை எதிர்ந்தார் ஆற்றும் செரு எனக் குருதிச் செம்கேழ்க் 
கொய்ம் மலர்க் குடுமிச் சேவல் கோழிளம் தகர் யோர் முட்டி
வெம் முனை நோக்கி நிற்பார் வேறு அவற்று ஊறு நோக்கார்.

352.
அழல் அவிர்ந்து அனைய செம் கேழ் அடுக்கிதழ் முளரிவாழ்க்கைத்
தொழுதகு செம்மல் தன்னைத் தொழுது மீண்டு  அகன்று நீங்கா
விழை தகு காதல் கூர விச்சுவ உருவன் தன்னை
வழிபடு குருவாக் கொண்டான் மலர் மகன் சூழ்ச்சி தேறான்.

756.
கொங்கையின் முகட்டில் சாந்தம் குளிர் பனிநீர் தோய்த்து அட்டிப்
பங்கய மலர் மேல் அன்னம் பவளச் செவ்வாய் விட்டு ஆர்ப்பத்
தங்கிய என்ன வார நூபுரம் ததும்பச் செங்கேழ் 
அங்கதிர்ப் பாதசாலம் கிண் கிணி அலம்பப் பெய்து.

773.
பண்ணுமின் இசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில்
நண்ணும் இன் சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அம் கேழ் 
வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால் ஒத்த
அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது அம்மா.

1696.
கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண்
மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி
நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர்
ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான்.

2344.
கீழ்த் திசைத் தலைச் சென்று தன் கேழ் கிளர் வாலை
நீட்டி மா நகர் வலம் பட நிலம் படிந்து உடலைக்
கோட்டி வாலை வாய் வைத்து வேல் கொற்றவற்கு எல்லை
காட்டி மீண்டு அரன் கங்கணம் ஆனது கரத்தில்.