Thursday 23 June 2022

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு

 தினமலர் செய்தி - கீழடியில் 8ம் கட்ட அகழாய்வுமணலுாரை புறக்கணித்த தொல்லியல் துறை

திருப்புவனம்--தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் 8ம் கட்ட அகழாய்வில் மணலுாரை தொல்லியல் துறை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையினர் பண்டைய மக்களின் வாழ்வியல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மாநில தொல்லியல் துறை கீழடியுடன் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வை மேற்கொண்டது. ஆனால் 8ம் கட்ட அகழாய்வு பிப்ரவரி 13ல் தொடங்கப்பட்ட போது அகரம், கொந்தகை, கீழடியில் மட்டும் பணிகள் ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது. மணலூரில் பணிகள் தொடங்கப்படவில்லை.மணலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துச்சாமி கூறுகையில், பண்டைய காலத்தில் மணலூரை மையப்படுத்தி மதுரை நகரம் இயங்கி வந்தது. இன்றளவும் கழுகேர்கடை, அகரம், கொந்தகை, கீழடி உள்ளிட்ட கிராமங்களில் திருவிழாக்கள் என்றால் மணலூர் கண்மாயில் இருந்து தீர்த்தம் எடுத்து தான் தொடங்குவார்கள், என்றார்.பேராசிரியர் காளைராசன் கூறுகையில், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலானகுழு ஓர் ஆண்டிற்கும் மேலாக மணலூரில் ஆய்வு செய்த பின் தான் கீழடியில் அகழாய்வை தொடங்கினர். முதன் முதலில் அகழாய்வு தொடங்கிய இடம் மணலூர் கண்மாயை ஒட்டிய பகுதி தான், பண்டைய காலத்தில் அதுவும் மணலூராகத்தான் இருந்திருக்கும், என்றார்.மணலூர் அருண் கூறுகையில், பண்டைய இதிகாசங்களில் மணவூர் என குறிப்பிட்டுள்ளது. தற்போதைய மணலூரைத்தான், அகழாய்வில் முதன் முதலில் மணலுாரில் தான் இரும்பை உருக்க பயன்படுத்தும் உலைகலன் கிடைத்தது. அகழாய்வு முதன் முதலில் மணலுாரில் இருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும், இரு முறை அகழாய்வு செய்தும் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தொல்லியல் துறையினர் 8ம் கட்ட அகழாய்வை நடத்தவில்லை.மணலுார் அம்மன் கோயிலை ஒட்டிய கண்மாய் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும், ஏற்கனவே இந்த இடத்தில் மணல் அள்ளிய போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது எனவே மணலுாரில் அகழாய்வை தொடங்க வேண்டும், என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3059803

Saturday 18 June 2022

கீழடி – மணலூர் கல்வெட்டு

கீழடி – மணலூர் குறிப்புகள் 

திருவிளையாடற் புராணம் உக்கிரபாண்டியனுக்கு மணவூர் காந்திமதியைத் திருமணம் செய்துவைத்ததாக உள்ளது.

தீந்தண் புனல்சூழ் வடபுலத்து மணவூ ரென்னுந் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திருமரபின் விளங்குஞ் சோம சேகரனென்
றாய்ந்த கேள்வி யவனிடத்துத் திருமா தென்ன வவதரித்த
காந்தி மதியை மணம்பேச விருந்தா ரற்றைக் கனையிருள்வாய்.


மணலூர் மணவூர் "சீர்க்கிரி" (?)என்று மகாபாரதத்தில் உள்ளது.

ஸிகதா என்றால் மணல், வடமொழியில். எனவே, ஸிக்கதாபுரி < மணலூர் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

சோமசுந்தர பாண்டியனும் தடாதகைப் பிராட்டியும் இன்புற்றுப் பிறந்தவன் உக்கிரபாண்டியன்.  இவனுக்கு மணவூர் சோமசேகரனின் புதல்வியான காந்திமதியைத் திருமணம் செய்து வைத்தனர்.
உக்கிரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு கடல் (சுனாமி) கரைகடந்து மதுரை வரை வந்துள்ளது.  இதனால் காந்திமதி பிறந்து வளர்ந்த மணவூர் மண்ணுள் புதையுண்டு போனது.
மணவூரின் மேற்கே தற்போது (கீழடி அருகே) தொல்லியல்துறையினரின் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
மணவூர்  புதையுண்டுள்ள இடத்தில் பண்டைக் காலத்திய காந்திமதி வாழ்ந்த வரலாற்றுத் தடையங்களைத் தேடித் திரிந்த போது,  அன்னை மீனாட்சியின் பெயரையும் காந்திமதி என்ற பெயரையும் தாங்கிய  இக்காலத்திய கல்வெட்டு ஒன்றை என்னால்  காண முடிந்தது.






dorai sundaram  22/10/2016

கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு:
1 சாலிகவாகன
2 சகாப்த்தம்  1.. ( த்த- கூட்டாக ஒரே எழுத்து)
3 5 ற்மேல்ச் செ
4 ல்லாய்நின்ற பிரமா
5 தீட்ச வரு. சித்திரை (மீ)
6 30 உ சங்கிலி சேரு
7 வை காறரவர்கள்  ப
8 பட்டையமாவது மது
9 ரையில் மீனாட்சி சுந்த
10 ரறைக்கட்டளைக்(கி)
11  காந்திமதி மகள் தா
12 யம்மாளுக்கு நம்மிட (க்கு- கூட்டாக ஒரே எழுத்து)
13 பேற் குடுத்து மண (த்து- கூட்டாக ஒரே எழுத்து)
14 லூரில் கோரஞ்
15 செய்தடி 3(1) உ
16 (உம்பள) .. கல்
17 லுங் காவே(ரி) வரை(க்)
18 கும்

குறிப்பு:   கல்வெட்டில் சாலிவாகன் சகாப்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும்
தெளிவின்மை காரணமாகக் கல்வெட்டின் காலத்தைத் துல்லியமாகக்  கணிக்க இயலவில்லை. தமிழாண்டின் பெயர் பிரமாதீட்ச  என்னும் குறிப்பு கி.பி. 1853, 1913 ஆகிய இரு ஆண்டுகளையும் குறிக்கும். 
சங்கிலி சேர்வைக்காரர் என்பவர் பட்டையம் அளித்துள்ளார். மீனாட்சிசுந்தரர்
அறக்கட்டளை என்பதாக் இறைவர்க்கு ஒரு கொடை அளிக்கப்படுகிறது. 
காந்திமதி மகள் தாயம்மாள் குறிக்கப்படுகிறார். பட்டயம் அவருக்கு  அளிக்கப்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
“நம்மிட பேர் குடுத்து மணலூரில் கோரஞ்செய்தபடி”  என்பதன்  பொருளும் புலப்படவில்லை.  கொடை, கல்லும் காவேரியும் உள்ளவரை
நடக்கவேண்டும் என்னும் குறிப்புள்ளது.

சுந்தரம்.


 ஸ்ரீ சங்கலிச்சேர்வை வாரிசான திருமதி. காந்திமதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தேவாரம் பாடியவர்க்கு மானியமாக மணலூரில் உள்ள மூன்று தடி நிலத்தை உபயமாக வழங்கியுள்ளார் 

 எவனொருவன் அக்கல்வெட்டையோ  அல்லது அந்த உபயம் அளித்த நிலத்தையோ அழிக்கவோ அல்லது தான் அதை அடைய முற்பட்டாலோ காவிரிக் கரை துவங்கி குமரிக்கரை வரை உள்ள மக்கள் செய்யும் எல்லாப் பாவங்களும் அவனைச் சேரும் .

15 செய்தடி 3(1) உ
16 (உம்பள) .. கல்
17 லுங் காவே(ரி) வரை(க்)
18 கும்

சம்பளம் உம்பளம்

இது “உம்பள” என்னும் சொல். தானமாகக் கொடுத்த நிலம் எனப் பொருள். உம்பளம்¹ umpaḷam
, n. [T. umbaḷamu, K. umbaḷi.] Land granted rent-free for the performance of services; மானியநிலம். Loc.
உம்பளித்தல், உம்பளம் = தானமாக பரம்பரையாக அனுபவித்துக்கொள்ள தரும் முற்றூட்டு, கொடைநிலம்.

தானமாகக் கொடுப்பதை “உம்பளிக்கை” எனச் சொல்கிறோம்.

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=759
”இதே போல் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டுகள் மூன்றில் குறிக்கப்பட்டிருந்த மைத்துனர் அழகப் பெருமாள், அண்ட நாட்டுப் பெருமணலூர் மந்திரி பல்லவராஜன், திருமல்லி நாட்டுத் தடங்கண்ணிச் சிற்றூருடையான் சோறந் உய்யநின்றாடுவானான குருகுலராயன் ஆகிய அரசு அலுவர்களின் பெயர்கள் அவை மாறவர்மன் சுந்தரபாண்டியரின் கல்வெட்டுகள் என்பதை உறுதிசெய்ய உதவின. ”

http://www.thehindu.com/features/metroplus/society/keezhadi-archaeological-excavation/article7557728.ece
The second locality has more of graffiti on pottery, bone tools and iron weapons. “We have got the fish symbol, both as an art and as a ‘sign representing a clan,” says Vadivel. Red-and-black pottery, groove tiles used for laying roofs and the typical flat brick measuring 38 centimetres are the other indications that the city unearthed belongs to the Sangam Age. “Keezhadi could as well be the ‘Peru Manalur’, the city of Sangam Pandiyas mentioned in literature,” suggests Amarnath. 

பழைய திருவிளையாடற் புராணத்தில் மணலூர்புரம் என்றுள்ளது. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலில் மணவூர் என்றுள்ளது. மஹாபாரதத்தின் வடமொழிச் சுவடிகளில் - பஞ்ச த்ராவிட தேசத்துச் சுவடிகளில் - மணலூர்புரம் என்றுள்ளது. 
நா. கணேசன்




-----------------------------------------------------------

தினமணி செய்தி -  மணலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் தனது வயலில் கண்டெடுத்த பழங்கால கல்வெட்டு குறித்து கொடுத்த தகலின் பேரில் கி.பி 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டினை சொ. சாந்தலிங்கம்  உதவி செயலர் பா. ஆத்மநாதன் ஆகியோர் கல்வெட்டை படியெடுத்தனர். 

https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2014/aug/06/திருப்புவனம்-அருகே-பழங்கால--952340.html

-----------------------------------------------------------