Monday 25 February 2019

பாண்டியர் வம்சம்

பாண்டியர் குலம் 


துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தனது பௌத்திரனாகிய ஆசிரிதன் புத்திரன்.  இவனே பாண்டி தேச ஸ்தாபகன்.  இவன் வமிசத்து வந்தோர் பல்லாயிரம் பாண்டியர்.  இவனே குலசேகர பாண்டியன்  போலும்.   இவன் தென் மதுரையை நகராக்கி நான்க வருணத்துச் சனங்களையும் ஸ்தாபனஞ் செய்து காசியிலிருந்து ஆதிசைவர்களையும் கோயிற் பூசைக்காகக் கொணர்ந்து இருத்தி அகஸ்தியர் அநுமதிப்படி அரசு புரிந்தவன்.  இவன் மகன் மலையத்துவச பாண்டியன்.  மலயமலையைத் தனது கொடியில் தீட்டிக் கொண்டமையால் மலயத்துவசன் என்னும் பெயர் அவனுக்கு உண்டாயிற்று.







முகநூல் நண்பர்  Prabakar Yadav  அவர்களின் பதிவு இது.
இந்தப் பக்கங்கள் அபிதான கோசம் என்ற நூலில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
(இதையும் படிக்கவும் - https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/03/blog-post.html )

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்