மலைகள் சந்திக்கின்ற மலைகளின் மையத்தில் மதுரை மாநகரம் உள்ளது.
மதுரை மாநகரின் மையமாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. கோயிலின் மையமாகச் சுயம்புலிங்கம் உள்ளது.
https://youtu.be/ySnqdvWXT4U
மலைகள் சந்திக்கின்ற மலைகளின் மையத்தில் மதுரை மாநகரம் உள்ளது.
மதுரை மாநகரின் மையமாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. கோயிலின் மையமாகச் சுயம்புலிங்கம் உள்ளது.
https://youtu.be/ySnqdvWXT4U
மதுரைக்கு வந்த சுனாமி
திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை எனப்படும் சுனாமிகள் குறித்து மூன்று பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது:
உக்கிர குமாரன் (படலம் 11):
சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகனான உக்கிர குமாரன் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு மிகப்பெரிய ஆழிப்பேரலை (சுனாமி) வந்தது. அப்போது மன்னன் உக்கிர குமாரன் தனது வேலை எறிந்து அந்தச் சுனாமியைத் தடுத்து நிறுத்தினார்.
அபிடேக பாண்டியன் (படலம் 17):
வீரபாண்டியனின் மகனான அபிடேக பாண்டியனது ஆட்சிக்காலத்தில் மீண்டும் ஒரு பேரூழி ஏற்பட்டது. அப்போது கடல் பொங்கி எழுந்து சுனாமியாக மதுரையை அழிக்க வந்தது. இந்த மன்னன் அந்தப் கடல் நீரை வற்றச் செய்து மதுரையைக் காப்பாற்றினார்.
கீர்த்திவீடணன்:
அதுல கீர்த்தியின் மகனான கீர்த்திவீடணன் ஆட்சிக் காலத்தில் ஒரு மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஏழு கடல்களும் பொங்கி எழுந்து ஆழிப்பேரலையாக (சுனாமியாக) மாறி உலகையே அழித்தன.
இந்த மாபெரும் பிரளயத்திற்குப் (சுனாமிக்குப்) பின்னரே, சந்திர குலத்தில் வந்த வங்கியசேகர பாண்டியன் என்ற மன்னன் இன்றைய மதுரை நகரைப் பண்டைய பெருமை விளங்கும் வகையில் மீண்டும் உருவாக்கினார்.
ஆய்வாளர்
காசிஸ்ரீ முனைவர் கி. காளைராசன்
மேனாள் துணைப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி.
The Thiruvilayadal Puranam
prominently recounts the occurrences of massive tidal waves—referred to as Aazhipperalai (tsunamis)—that struck Madurai during the reigns of three specific Pandya kings:
Ugra Kumaran (Chapter 11): During the reign of Ugra Kumaran—the son of Sundara Pandian (Lord Somasundareswarar)—a colossal tidal wave (tsunami) surged toward Madurai. At that critical moment, King Ugra Kumaran hurled his spear, thereby halting and repelling the advancing tsunami.
Abisheka Pandian (Chapter 17): During the reign of Abisheka Pandian—the son of Veerapandian—another catastrophic deluge occurred. The sea rose in fury, manifesting as a tsunami that threatened to obliterate Madurai. This king intervened by causing the floodwaters to recede, thereby saving the city of Madurai.
Keerthiveedanan: During the reign of Keerthiveedanan—the son of Athula Keerthi—a monumental cosmic deluge (Pralayam) took place. On this occasion, the seven seas rose in unison, transforming into a massive tidal wave (tsunami) that engulfed and destroyed the entire world.
It was only after this colossal deluge (tsunami) that a king named Vangiyasekara Pandian—a scion of the Lunar Dynasty (Chandra Kulam)—rebuilt the city of Madurai as it stands today, restoring it to its former glory and ancient grandeur.
*****
How do the solar and lunar
lineages affect the dance?
The solar and lunar lineages directly
influence which foot Lord Shiva plants during his cosmic dance, as they
represent the underlying masculine and feminine energies of the ruling
dynasties at each temple:
How
does the Chidambaram dance compare to the Madurai dance?
The cosmic dances of Lord Shiva in Chidambaram and Madurai differ significantly in their philosophical meanings, physical postures, and underlying spiritual principles:
மதுரையில் சிவபெருமான் கால்மாறி ஆடியதற்கான 4 காரணங்கள்:
(1) மன்னனின் அன்பான வேண்டுகோள்.
(2) ஆண் - பெண் தத்துவம்:
சிதம்பரம் சிவபெருமானின் ஆண்பாகத்தின் (வலது கால்) ஆளுமை.
மதுரை மீனாட்சி அம்மையின் பெண்பாகத்தின் (இடது கால்) மேன்மை.
(3) சூரிய - சந்திர வம்சங்கள்:
சோழர்கள் சூரிய வம்சத்தினர் (ஆண் கிரகம்) வலது கால் ஊன்றிய நடனம்.
பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் (பெண் கிரகம்) இடது கால் ஊன்றிய நடனம்.
(4) சிவலிங்கத்தின் மீதான மரியாதை:
மதுரையில் நடராசர் இடது காலைத் தூக்கி ஆடினால், அது சிவலிங்கத்திற்கு நேராகக் காலைத் தூக்குவது போல் அமைந்துவிடும். சிவலிங்கத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தூக்கிய திருவடி பக்தர்களை நோக்கும் வகையிலும் நடராசர் கால்மாறி ஆடுகிறார்.
https://youtu.be/S2Kjc-txlfU
கோவிலூர் மடலாயம் வெளியீடு - திருநெல்லை மாத இதழ்
1) தை - பிப்ரவரி 2025 https://publuu.com/flip-book/265728/1786263/page/48
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 1) சித்தி விநாயகனை வணங்குவோம்.
2) மாசி மார்ச் 2025 https://publuu.com/flip-book/265728/1837860/page/28
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 2) சித்திரையைக் கொண்டாடுவோம் - சித்திரை 1 கோள்நிலை
3) பங்குனி ஏப்ரல் 2025 https://publuu.com/flip-book/265728/1892809/page/28
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 3) இறைவன் ஆடிய திருவிளையாடலில் யார் யாரெல்லாம் இடம் பெற்றுள்ளனர்
4) சித்திரை மே 2025 https://publuu.com/flip-book/265728/1951653/page/34
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 4)
5) வைகாசி ஜுன் 2025 https://publuu.com/flip-book/265728/2007068/page/30
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 5) அடையடக்கம், அறங்கேற்றம்.
6) ஆனி ஜுலை 2025 https://publuu.com/flip-book/265728/2059617/page/28
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 6) பாண்டிய நாட்டின் சிறப்பு.
7) ஆடி ஆகஸ்ட் 2025 https://publuu.com/flip-book/265728/2105446/page/17
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 7) திருநகரப் படலம்.
8) ஆவணி செப்டம்பர் 2025 https://publuu.com/flip-book/265728/2154119/page/26
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 8) திருக்கயிலாயச் சிறப்பு
9) புரட்டாசி அக்டோபர் 2025 https://publuu.com/flip-book/265728/2207897/page/32
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 9) தலம் தீர்த்தம் மூர்த்தி இவற்றின் சிறப்புகள்
10) ஐப்படி நவம்பர் 2025 https://archive.org/details/thirunellai-2025-november/page/35/
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி - 10) மதுரைக் காண்டம் 1. இந்திரன் பழிதீர்த்த படலம்
11) கார்த்திகை டிசம்பர் 2025 https://heyzine.com/flip-book/ba0e1b6c8a.html#page/33
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி – 11) மதுரைக் காண்டம் 2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
12) மார்கழி சனவரி 2026 https://heyzine.com/flip-book/8d58ff3a0b.html#page/28
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி – 12) மதுரைக் காண்டம் 3. திருநகரங் கண்ட படலம்
13) தை பிப்ரவரி 2026
திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி – 13) மதுரைக் காண்டம் 4.
14) மாசி மார்ச் 2026
https://heyzine.com/flip-book/d4af43e52b.html#page/30 திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி – 14) மதுரைக் காண்டம் 5. திருமணப் படலம்
15) பங்குனி ஏப்ரல் 2026 https://heyzine.com/flip-book/d4ea579250.html#page/35 திருவிளையாடற் புராணம் தொடர் - ஆடலுக்கு ஆட்படுவோம் (பகுதி – 15) மதுரைக் காண்டம் 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
https://youtu.be/S2Kjc-txlfU

இதே போன்று, நக்கீரர் காலத்திலும் 27 நட்சத்திரங்களையும் சந்திரனையும் அரண்மனை விதானத்தில் வரைந்துள்ளனர். நுண்ணிய களிமண் பூசி, அதற்கு மேல் மெழுகு பூசி, அதற்கு மேல் நட்சத்திரங்களின் வடிவங்களை வரைந்து வைத்துள்ளனர். அதில் ரோகிணி நட்சத்திரத்துடன் சந்திரன் சேர்ந்துள்ளது. அந்தக் காட்சியைத் தலைவி காண்கிறாள். ரோகிணியுடன் சந்திரன் சேர்ந்துள்ளான். சந்திர வம்சத்தின் தோன்றிய பாண்டியனாகிய தனது தலைவன் வந்து தன்னைச் சேரவில்லையே என்று தலைவி ஏங்குகிறாள். இதை முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமப் புலவன் நக்கீரன் நெடுநல்வாடையில் சிறப்பாகக் காட்சிப் படுத்திப் பாடியுள்ளார்.
தமிழ் வருடப்பிறப்பு சித்திரை1
பாரததேசத்தின் பல பகுதிகளிலும் மற்றும் உலகின் பல நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாகக் கொண்டாப்பட்டு வருகிறது.
வருடம் 365.24 நாட்களைக் கொண்டது.
இத்தனை நாட்களுக்கும் சித்திரை 1 தலையானது.
சித்திரை 1 அன்று 12 இராசிகளில் *முதல் ராசியான வருடையில்* (ஆடு, மேழம், மேஷம்), 27 நட்சத்திரங்களில் *முதல் நட்சத்திரமான அசுவினியில்* சூரியன் தோன்றுகிறது.
சித்திரை 1 அன்று விண்ணில் நடைபெறும் இது ஒரு வானியல் நிகழ்வு.
12 இராசிகளில் மேஷ ராசி ஏன் தலையானது?
27 நட்சத்திரங்களில் அசுவினி ஏன் முதலாவது?
ஏனென்றால் வருடத்திற்கு 365 நாட்களில், சித்திரை 1 அன்றுதான்
கூடல் என்ற மதுரைக்கு (கீழடிக்கு) நேர் கிழக்கே சூரியன் உதிக்கிறது.
அன்று மதுரையின் உச்சியில் சூரியன் தோன்றும், நிழல் தெரியாது.
இதனால் 12 இராசிகளாகவும் 27 நட்சத்திரங்களாகவும் வானியலைப் பிரித்தவர் கூடல் மாநகரில் வாழ்ந்த நமது முன்னோரான *சங்கத் தமிழர்* என்பது உறுதியாகிறது.
*வானியல்* அறிவியலைத் தோற்றுவித்தவர் சங்கத் தமிழர் என்பதற்கு இதுவே சரியான சான்று ஆகும்.
சங்கத் தமிழரைப் போற்றுவோம்
சித்திரை 1 வருடப் பிறப்பைக் கொண்டாடுவோம்
கூடல் என்ற மதுரையைப் பேணிக் காப்போம்.
அன்புடன்
காசிஸ்ரீ முனைவர் கி. காளைராசன்