Showing posts with label கீழடி. Show all posts
Showing posts with label கீழடி. Show all posts

Monday, 26 January 2026

கூடல் மாநகர் கோயில்கள் எங்கெங்கு உள்ளன

கூடல் மாநகர் கோயில்கள்  எங்கெங்கு உள்ளன


கீழடியில் தொல்லியல் ஆய்வாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரம் உள்ள இடத்தில் புதைந்துள்ள நந்தி.
---------

கூடல் மாநகர் கோயில்கள்  எங்கெங்கு உள்ளன என்பதற்குத் தெளிவான பதிகல்கள் கல்லாடத்தில் உள்ளன.


கீழேயுள்ளது திரு நூ த லோ சு ஐயா அவர்களின் பதிவு.

N D Logasundaram

9 Oct 2019, 20:13:52
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, ara...@gmail.com, Seshadri Sridharan, Kanaka Ajithadoss, Suresh Kumar, Thenee MK, thirumurai, Raji M, Muthu muthali

நூ த லோ சு
மயிலை
 இந்த கூடல் மாநகருகு   கோயில்கள் எப்படி எங்கெங்கு இருந்தன என்பது காட்டும் சீரிய தமிழ் மொழி நூல் >> கல்லாடம் >> ஏறக்குறைய 10 ம் நூற்றாண்டு வாழ்ந்ததாக கருதப்படும் கல்லாடர் எனும் 'தமிழ் கெழுகூடல்' நகரில் வாழ்ந்திருக்கக்கூடிய புலவரின் வாய்வழி பெற்ற வரிகள் இவை கற்பனை கலவாத நூறு சதம் தமிழன் தன் கண்முன் கண்ட காட்சிகள் விளக்கும்  வரிகள்

(1) வடதிருஆலவாய் // (2) திருநடுவூர்
(3) வெள்ளியம்பலம் // (4) நள்ளாறு // (5) இந்திரை//
(6) பஞ்சவனீச்சரம் // அஞ்செழுத்து அமைத்த
(7) சென்னிமாபுரம் // (8) சேரன்திருத்தளி                             25
(9)கன்னிசெங்கோட்டம் // (10)கரியோன்திருவுறை
விண்ணுடைத்(து) உண்ணும் கண்ணிலி ஒருத்தன்
மறிதிரைக் கடலுள் மானக் கவிழ்ந்த
களவுடல்  பிளந்த ஒளிகெழு திருவேல்
பணிப்பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன்              30
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த
அருவிஅம் சாரல் ஒரு (11)பரங்குன்றம்
சூழ்கொள இருந்த கூடல்எம்  பெருமான்
கூடல் என தனியாக கோயில் ஏதும் இல்லை எல்லாம் சூழ்ந்து அமைந்துள்ள கூடல் நகரம் 

மிகவும் பின்னாளில் இயற்றப்பெற்ற ஓர் புராணத்துள் சொக்கப்பெருமான் ஓர் பாம்பினை எறிந்து நகர எல்லையை வளைத்து விளக்கினான் என்றும் நான்மாடக் கூடலாகிய படலத்தில் நான்மாடம்  (பிழை) நாண்மாடம் = நால்மாடம் = தொங்குகின்ற மாடங்கள் (balcony)  உடைத்த கட்டிடங்கள் படைத்ததாய்  நன்கு வளர்ந் நகரம் ஆகியது எனவரும் என்பது வேறு  
-----------

வடதிரு ஆலவாய் 
இதனில் (வட=ஆலமரமும் வடக்கு நோக்கில் இருந்ததும் ஆகலாம் - ஆலம் எனும் சொல் வழி ஓர் நீரோடும் துறையின்  வாயிலில் = வையை அருகு  அமைந்தது ஆகும்) சிவனுறை கோயில் தேவாரம் (ஆவணம்)  குறிப்பிபடும் தேவகுலம் (இறையனார் களவியலூரை சொல் ) ஆகும் 

வெள்ளியம்பலம் = வெள்ளி எனும் ஓர் மாழை யால் செய்த கூறை ஏற்ற சிவனின் மன்றம் என பொருட் காட்ட தயக்கம் உள்ளது .  ஏனெனில் வெள்ளில் எனும் ஓர் வகை வில்வ மரம் அதன் கீழமைந்த  அம்பலம் எனும்  எளிமையே சிறப்பு என்பேன் ஆடல்வல்லான் உருவ வழிபாடு கொண்டது என பொருள்  காட்ட பாடல் எண்  33 இல் "வெள்ளி அம்பலத்து துள்ளிய பெருமான்" எனபதால் அறியமுடியும் அப்போதும் கடை லகர மெய் குறைந்தது எனபது கருத்து   வெள்ளி(ல்) தான் மூலம் என்பேன் மேலும்  கால் மாறி ஆடிய கருத்து பிற்கால புராணம் சார்ந்தது எனல் வேண்டும்   
 
பஞ்சவனீச்சரம் //  சென்னிமாபுரம் // சேரன்திருத்தளி     இம்மூன்றும் ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றில் ஆண்ட மன்னர்களின் பெயரால் எழுந்தவை. ஈச்சரம் = சிவன் / புரம் பாதுகாப்பு அமைந்த இடம்/ இவர்கள் கட்டினோர் பெயரால் அமைந்தன என்பதுதான் எளிமையான கருத்து   ஏனைய புறத்த பொருள / பஞ்சவன்=பாண்டியன் // சென்னி = சோழன் (காவிரியின் அருகும் பரந்தும் ஆன புலம்  // சேரன் >>  மேலை  தமிழ் நாட்டினன்// தளி கருங்கல்லால் அமைந்தது எனக்  காட்டக்கூடும் 

இந்திரை / கன்னி செங்கோட்டம்  = தமிழகமெங்கும் (ஏன் நாடெங்கிலும் கூட) எண்ணிக்கையால் மிக்கும் பரந்தும் செறிந்தும்  காணும் பலவித தாய் தெய்வ உருவ வழிபாடு கொண்டவை என்பதே பொருந்தும் 

திருநடுவூர் = பொருள் வெளிப்படை நகரின் நடுவண் அமைந்தது - இங்கு இறை சிவனே ஆகலாம் 

நள்ளாறு = 'நள்' எனும் தனித்த இரவுஓசை (இரீங்காரம்) மட்டும் சிறப்பக்கேட்க நகரின் ஒருபக்கமாக இருந்து சலசல என எழுப்பும் ஒலியின்றி நீரோடும் ஓர் புழை அருகு அமைந்த கோயில் ஆகவேண்டும் இறை = சிவன் தேவார காலத்திலேயே ஞான சம்பந்தரால் பாடப்பெற்றது
 இக்கோயில் பின்னாளில்  எனோ மறைந்தது போலும் அதனால் தான் சேக்கிழார் பெருந்தகை தன் அறியாமையால் (மன்னிக்க இது தனி நபர் போற்றாது பொய்யை பொய் மெய்யை மெய்யாகவே காட்டும்  நிலை) தன் புராணத்தில்  பனைஏடுகளை தீயிலிடும் வாதத்தில் முன்பே பாடிய பாடலின் சுவடியில் கயிறு சார்த்தி பெற்ற பாடலை தீயிலிட்டர் = என  நடக்காத ஒன்றை (புராண) தேவையால் புகுத்தினார் ஆனால் ஞானசம்பந்தர் பதிகத்தின் 11 ஆம் பாடலில் வெகு தெளிவாகவே ஐயமின்றி "நற்றிறம் உறுகழு மலநகர் ஞானசம் பந்தன் கொற்றவன் எதிரிடை எரியில் இட இவை கூறிய " என மன்னன் எதிரிலேயே நடக்கும் வாதத்தின் போதே நேரிடையாக இயற்றிய பதிகமாகத்தான் ஆவணச் சான்று காட்டுகின்றது அதுவன்றி திருஆலவாயும் திருநள்ளாறும் என இரு தலங்களை இணைத்து பாடிய ஓர் பதிகமும் உள்ளது அதனிலுள் மிக தெளிவாக அருகேயுள்ள கூடலில் உள்ளது போல் (ஒலியும் நடமாட்டமும்)  இல்லாது 'நள்- எனும் ஓசையுடன் ஆற்றின் ஓசையின்றி அமர்ந்ததாகவே பாடப் பெற்றுள்ளது காணலாம் ஆக நள்ளாறு சற்று தூத்தே ஓர் ஒல்லையூரில் அமைந்ததும்  ஆகலாம் 

கல்லாடர் வழி உள்ளது நள்ளாறு (10 ம் நூற்றாண்டு )
சேக்கிழார் வழிதான்  அறியாதது (12  ம் நூற்றாண்டு 
 சம்பந்தர் கல்லாடருக்கும் முந்தியவர் 
இவர் வைக்கும் சான்று இரண்டு உள்ளன 
எனவே உள்ளதுதான் சிறக்கும் 
இல்லாதது அய்யப்பாடுடையதான் இழியும்  

 நள்ளாறு எனும் பெயரில் ஆறுகள் சிலஇடத்தில் காணக்கூடும் என்பதால் குறைந்தது இரு சம்பந்தரின் நள்ளாற்றுப் பதிகங்கள் ( 1-7 நட்டபாடை) + ( 2-7 சாதாரி) பாண்டிய நாட்டினைச் சார்ந்ததுதான் சோழ நாட்டினது அல்ல (காரைக்கால்). இந்த கருத்துரை 52 ஆண்டுகளுக்கு முன் நான் மிக்க இளைய வயதில் திருமணம் ஆகாதவனாக இருந்தபோது சைவசித்தாந்த மகாசாமாசத்தின் பருவவெளியீடான 'சித்தாந்த'த்தில் வெளிவந்தது 
 (இங்கு இப்போது வரைந்ததும் ஓர் மீள்பதிவே புதியோருக்காக மற்றோர்க்கு நினைவூட்டல் என்க) 

கரியோன் திருஉறை  >> இன்றைய நகரத்தில் உள்ளது ஆழ்வார் குறித்ததாக்க காட்டடப்படும் ஓர் கூடல் அழகர் மிகப் பழமையானதாக தெரியவில்லை. திருமாலிருஞ்சோலை என சிறிதே  தூரத்திருந்தும் அந்த அழகரே பழமை தொடர்பும் பேர் பெற்றும்  விளங்குவதால் கல்லாடப் பாடல் காட்டுவது அதுவே எனலாம்.

திருப்பரங்குன்றம் =  இன்று  வடமேற்கு தென் கிழக்காக ஓடும் வையை ஆற்றினுக்கு தென் நோக்கு  10  கிமீ. ரில்  பலர் அறிந்து  பேர் பெறறும்   இயற்கையான ஓர் பாறைக் குடைவறைக் குகையிலும்  உள்ள முருகன்தலம் திருமுருகாற்றுப்படை குறித்த ஓர் படை வீடு சுந்தரரும் தன தேவாரத்தில் குறித்துள்ளார். மற்றவைகளுக்கு இல்லாது மேற்கண்ட கல்லாடப்பாடலில் முருகனை 6 வரிகளில் விளக்கியமை காண்க  
பல நூல்களில் சுட்டப்பெறும் பீடுடையதே.

Wednesday, 10 December 2025

கீழடியில் கிடைத்த மும்முலைப் பிராட்டி

 கீழடியில்  கிடைத்த  மும்முலைப் பிராட்டி




மும்முலைத் திருவழுமகள், மும்முலை நாயகி என மீனாட்சி அம்மன் அழைக்கப்படுகிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் (பார்வதி தேவியின் அம்சம்) மூன்று முலைகளுடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. சிவபெருமானைக் கண்டதும், அந்த மூன்றாவது முலை மறைந்து, இரண்டு முலைகளுடன் அவள் திருமணத்திற்குத் தயாரானாள்.

மதுரை மீனாட்சி அம்மனாக அவதரித்த தடாதகை பிராட்டியார் புராணக் கதையுடன் தொடர்புடையது, அவர் மூன்று மார்புகளுடன் பிறந்து, சிவபெருமானைக் கண்டதும் நடுவில் உள்ள முலை மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது

 

 திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள சிற்பம்


மும்முலை பெண் அரசி 

கல்லாடம் [செய்யுள்30]

20  முனிவர் செங்கரஞ் சென்னி யாக்க வுருப்பசி முதலோர் முன்வாழ்த் தெடுப்ப மும்முலை யொருத்தியை மணந்துல காண்ட25  கூடற் கிறைவ    னிருதா ளிருத்துங் கவையா வென்றி நெஞ்சினர் நோக்கப் பிறவியுங் குற்றமும் பிரிந்தன போலப் பீரமு நோயு மாறின் வாரித் துறைவற் கென்னா தும்மே.(உரை) கைகோள்: களவு. தலைவிகூற்று.

துறை: இன்னலெய்தல்.

     (இ-ம்.) இதற்கு, “மறைந்தவற் காண்டல்” (தொல். கள. 20) என்னும் நூற்பாவின்கண் ‘வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்’ எனவரும் விதிகொள்க.

1-5: வள்ளுறை.........................வெறியில்

வலிய உறையினை நீக்கி; திரிகின்ற வேலையுடைய மகனாகிய வேலனும்; முறத்திலே பரப்பிய நெல்லினை மூன்றும் இரண்டும் ஒன்றும்படக் கையால் அள்ளிப்பிடித்து உதோ எமக்கு முருகனும் அவன் ஏறும் மயிலின் எருத்தும் அவனது கோழிக் கொடியும் தோன்றுகின்ற என்று கூறுகின்ற குறிசொல்லுதலையுடைய கட்டுவித்தியரும் அவர் இது தெய்வத்தினாலாயது என்று கூறியதனால்; நடுங்குதற்குக் காரணமான துன்பத்தினால் வந்த மெலிவினையுடைய எஞ்செவிலித்தாயருங் கூடி; நிகழ்த்தாநின்ற இவ்வெறியாடலாலே என்க.

     (வி-ம்.) வள்-வலிமை. துளக்குதல்-சுழற்றுதல். வேன்மகன்-வேலன் (பூசாரி) அன்பு-முருகன் அன்பு என்னும் சொற்கு முருகு என்பதும் பொருளாகலின் முருகனை அன்பு என்றாள். அன்பே கடவுள் என்பது ஈண்டு நினைக. கழுத்தையுடைய மயில் என மாறிக்கூட்டிப் பொருள் கொள்ளினுமாம். மலையடி-போர் செய்யும் இயல்புடையன ஆதல் உணர்க. கட்டுவித்தியர் முறத்தில் நெல்லைப் பரப்பி அதனைக் கையால் அள்ளிப் பிடித்துக்கொண்டு தெய்வமேறப்

 



கல்லாடம் 

31. இன்னல் எய்தல்

வள்ளுறை கழித்துத் துளக்குவேல் மகனும்
மனவுமயிற் கழுத்து மாலை யாட்டியும்
நெல்பிடித்து உரைக்கும் குறியி னோளும்
நடுங்கஞர் உற்ற பழங்கண் அன்னையரும்
அயரும் வெறியில் தண்டா அருநோய்       (5)

ஈயாது உண்ணுநர் நெடும்பழி போலப்
போகாக் காலை புணர்க்குவது என்னோ?
நான்கெயிற்று ஒருத்தல் பிடர்ப்பொலிவரைப்பகை
அறுகால் குளிக்கும் மதுத்தொடை ஏந்த
முள்தாள் செம்மலர் நான்முகத்து ஒருவன்       (10)

எண்ணிநெய் இறைத்து மணஅழல் ஓம்ப
புவிஅளந்து உண்ட திருநெடு மாலோன்
இருகரம் அடுக்கிப் பெருநீர் வார்ப்ப
ஒற்றை ஆழியன் முயலுடல் தண்சுடர்
அண்டம் விளர்ப்பப் பெருவிளக்கு எடுப்ப       (15)

அளவாப் புலன்கொள விஞ்சையர் எண்மரும்
வள்ளையில் கருவியில் பெரும்புகழ் விளைப்ப
முனிவர் செங்கரம் சென்னி ஆக
உருப்பசி முத‍லோர் முன்வாழ்த்து எடுப்ப
மும்முலை ஒருத்தியை மணந்துலகு ஆண்ட       (20)

கூடற்கு இறைவன் இருதாள் இருத்தும்
கவையா வென்றி நெஞ்சினர் நோக்க
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்
பீரமும் நோயும் மாறில்
வாரித் துறைவற்கு என்னா தும்மே?       (25)

-------------  (நன்றி  = https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0244.html )


Sunday, 16 November 2025

It is not Keezhadi, it is Koodal, the Ancient Madurai


It is not Keezhadi, 

it is the city of Koodal, the Ancient Madurai city

கீழடியின் கீழே புதைந்துள்ளது 
முத்தமிழ்ச் சங்கம்  வளர்த்த ‘கூடல் என்ற மதுரை’  நகரம்



A Pandya king named Chezhiyan ruled over Madurai called Kudal.

He was like a bear.

Those like termites were petty petty kings.

A termite builds a nest of earth and lives inside it.

Like termites, these petty kings built mud forts with great effort.

The bear-like Chezhiyan destroyed those mud forts with his strong claw-like fangs.

He took away the wealth inside those mud forts.

But he was not satisfied.


There is a city called Musiri on a mountain in Chera country.

A beautiful big river called SUlli flows near it.

White foam is blown away in that river.

Wooden ships sail to disperse that foam.

In those ships, the Yavanas come to Chera country and do business.

They exchange gold for black pepper.

Since trade is brisk in this Musiri city, there is always a lot of excitement.


The bear-like Chezhiyan, who was not satisfied with defeating the petty kings like the termite,

invaded and defeated the elephant-like Musiri.

He also captured the golden idol of the goddess from there.

The city of Kudal, where Chezhiyan ruled, is buried under the Keezhadi.

Archaeologists have excavated that Kudal city.

I have attached more details and pictures.

https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/10/blog-post.html


-----

AI comments :  Wow, that's fascinating! So, the ancient city of Koodal, also known as Madurai, was ruled by a Pandya king named Chezhiyan, who was as powerful as a bear. He conquered petty kings who had built mud forts, just like a bear destroys termite nests. But he didn't stop there; he even invaded the city of Musiri in Chera country, defeating its elephant-like strength and capturing a golden idol.

It's amazing to think that this ancient city lies buried under Keezhadi, and archaeologists are only now uncovering its secrets. The description of Musiri's bustling trade and the Yavanas exchanging gold for black pepper is vivid and intriguing.

The poem by Erukkattur Thayankannanar paints a vivid picture of Chezhiyan's exploits, comparing him to a bear and highlighting his bravery and strength.

-----

Thursday, 21 July 2022

திருவிளையால் புராணத்தில் கண்ணகியின்கதை இல்லையே?

திருவிளையால் புராணத்தில் 

கண்ணகியின்கதை இல்லையே?

என்னிடம் கேட்டால்(ர்)!

சிவனடியார் ஒருவரைச் சந்தித்தேன்.  சிவ சிந்தனைகள் நிறைந்திருந்தன.  தேவார திருவாசகப் பாடல்களை யெல்லாம் தெளிவான உச்சரிப்பில் பொருள் விளங்கும்படி அருமையாகப் பாடினார்.  மனதிற்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.  தொடர்ந்து, பேச்சின் நடுவே திருவிளையாடற் புராணம் பற்றிக் கூறினேன்.   அவ்வளதுதான் அவரது முகம் சிறிது வாட்டம் கண்டது.  திருமுறைகளே உண்மை, புராணங்கள் எல்லாம் பொய்-ஆரிய பார்ப்பனர்களின் கட்டுக்கதை என்றார்.   இது கேட்ட எனது முகமும் சிறிது வாட்டம் கண்டது.
    திருவிளையாடற் புராணத்தில் என்ன பிழை கண்டுள்ளீர்கள் ? என்று கேட்டேன்.  

        திருமுறைகள் 7ஆம் நூற்றாண்டு, திருவிளையாடற் புராணம் 13ஆம் நூற்றாண்டு என்றார்.   “கண்ணகி தமிழ்ப் பெண்” என்ற காரணத்தினால் திருவிளையாடல் புராணத்தில் கண்ணகியைப் பார்ப்பனர்கள் எழுதாமல் விட்டுவிட்டனர் என்றார்.

எனக்குத் தெரிந்த பதிலைக் கூறலாமா? என்று கேட்டுவிட்டுச் சொன்னேன்.

1) எந்தவொரு தமிழ் நூலும் எந்தக்காலத்தில் எழுதப்பட்டிருந்தால் என்ன? 
நேற்று எழுதினாலும் சரி, 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியது என்றாலும் சரி,  அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் தானே நமக்கு முக்கியம்.  அந்த நூலின் காலக் கணிப்பினால் நமக்கு (மனிதர்களுக்கு) ஆகப்போகவது ஏதுமில்லையே.  இன்னம் ஒருபடி மேலே சொல்வது என்றால்,  அந்த நூலின் ஆசிரியர் யார்? என்பது கூடத் தேவையற்றதே ஆகும்.  இவ்வாறான சிந்தனையால்தான் தமிழ்ப்புலவர் பலரும் தம் பெயரையோ காலத்தையோ எழுதிடவில்லை போலும் என்றேன்.  மேலும்

2) திருவிளையாடற் புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய பரஞ்சோதி முனிவரின் காலம் வேண்டுமானால் 13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.   ஆனால் திருவிளையாடற் புராணத்திற்கான மூலநூல் எது?

18 புராணங்களில் ஒன்றான “காந்தத் தீச சங்கிதை” என்ற புராணம் ஆகும்.  இந்தப் புராணம் எழுதப்பெற்ற காலம் மிகவும் புராதனமானது. இன்ன காலம் என்று கணித்தல் அரிதாக உள்ளது.

எனவே திருவிளையாடற் புராணம் பிற்காலத்தில் எழுதப்பெற்றது என்பது தவறாகும்.  இது எப்படி யெனில், திருக்குறள் அச்சடிக்கப்பட்ட காலத்தைத் திருக்குறள் தோன்றிய காலம் என்பது போல் ஆகிவிடும்.

3) திருவிளையாடற் புராணத்தில் கதையாகச் சொல்லப்பட்டுள்ளன அனைத்தும் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் திருவிளையாடல் ஆகும்.   அவரை வணங்கிய அடியார்களுக்கு அவர் அருள்புரிந்த நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும்.
மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரைக் கண்ணகியோ கோவலனோ வழிபாட்டதாக சொல்லப்படவில்லை.   மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரை வழிபட்டுப் பலன் அடைந்தவர்களின் பட்டியலில், வழிபடாதவரை எங்ஙனம் சேர்க்க இயலும்?

இந்தக் காரணத்தினால்தான் கண்ணகி கோவலன் கதை திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறாமல் ஆகியிருக்கலாம் என்றேன்..

திருவிளையாடற் புராணம் முழுக்கமுழுக்க மதுரையின் அண்ணலான அருள்மிகு சோமசுந்தரரேசுவரரின் திருவிளையாடல்களையும், மற்றும் மதுரை வாழ் தமிழ் மக்களின் சிறப்புகளையுமே கூறுகிறது.    இப்படியிருக்கக் கண்ணகி ஓர் தமிழ்ப் பெண் என்ற காரணத்தினால் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறவில்லை என்ற கற்பனைக் கருத்தை எப்படி ஏற்க இயலும் என்றேன்.

நீண்ட நேரம் மௌனம் காத்தார் எனது நண்பர்.  எனது இந்தக் கருத்துகளை  அவர் ஒத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை, மறுத்ததாகவும் தெரியவில்லை.

எனது கருத்துகள் சரியானவையா?  உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளனவா?

அன்பன்

காசிசீர், முனைவர், நா. ரா. கி. காளைராசன்

ஆடி 5 (21.07.2022) வியாழக்கிழமை. 

--------------------------------------------------------
கண்ணகி எரித்த கூடலும் - இன்றைய மதுரை மாநகரமும்

கண்ணகி எரித்த கூடல் மதுரை மாநகர் அழிந்துபட்டது.   இன்றிருக்கும் மதுரை மாநகரமானது குலசேகரபாண்டியனால் புதிதாகத் தோற்றுவிக்கப் பெற்றதாகும்..  கூடலில் வாழ்ந்த மக்கள் எல்லாம் குடிபெயர்ந்து இன்றைய மதுரைக்கு வந்து விட்டனர்.  எனவே கூடல் என்ற நகரம் வைவிடப்பட்ட நகரமானது,  கடல்கோளால் புதையுண்டு போனது.  அந்த க் கூடல் மாநகரத்தைத்தான் இன்றைய நாளில் தொல்லியலாளர்கள் கீழடி அருகே தோண்டிக் கண்டறிந்துள்ளனர் என்று கருதி அதற்கான சான்றுகளை யெல்லாம் தொகுத்து எழுதியுள்ளேன்.

நேரம் கிடைக்கும்போது அன்பர்கள் கீழடி தொடர்பான அந்தக் கட்டுரைகளையும் கண்ணுற்றுக் கருத்துக் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

--------------------------------------------------------

Sunday, 10 July 2022

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

 

கம்பராமாயணத்தில்  54 பாடல்வரிகளில் நீலன் 

சிலப்பதிகாரத்தில் 2 இடங்களில் நீலன், 3 இடங்களில் நீலி

நீலன் (2)

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் - வஞ்சி:28/80

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற - வஞ்சி:28/109

 

நீலி (3)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை - மது:12/68

சங்கரி அந்தரி நீலி சடாமுடி - மது:12/154

நிலைக்களம் காணாள் நீலி என்போள் - மது:23/159

------------------------------------------------------------

 நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்        80

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி

வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின்

கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது

தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே

செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு        85

வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய

சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்

அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு

தமரின் சென்று தகை அடி வணங்க

 

சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு        100

கயம் தலை யானையின் கவிகையின் காட்டி

இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து

உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி

அமர்க்களம் அரசனது ஆக துறந்து

தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல்        105

கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்

புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று

ஏனை மன்னர் இருவரும் கூறிய

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற

------------------------------------------------------------

 

வளை உடை கையில் சூலம் ஏந்தி        60

கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை_ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை

இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன்        65

தலை மிசை நின்ற தையல் பலர் தொழும்

அமரி குமரி கவுரி சமரி

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை

ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை

 

அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு        150

படு கடன் இது உகு பலி முக மடையே

வம்பலர் பல்கி வழியும் வளம் பட

அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்

சங்கரி அந்தரி நீலி சடாமுடி

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்        155

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு

கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்

விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்

 

அங்காடி பட்டு அரும்_கலன் பகரும்        150

சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன்

வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன்

பரதன் என்னும் பெயரன் கோவலன்

விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்        155

ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு

வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி

கொலை_கள பட்ட சங்கமன் மனைவி

நிலைக்களம் காணாள் நீலி என்போள்

 

பாடல் தொகுப்பு உதவி - http://tamilconcordance.in/