Wednesday, 6 May 2026

மதுரையில் சிவபெருமான் கால்மாறி ஆடியதற்கான 4 காரணங்கள்



 மதுரையில் சிவபெருமான் கால்மாறி ஆடியதற்கான 4 காரணங்கள்:

(1) மன்னனின் அன்பான வேண்டுகோள்.

(2) ஆண் - பெண் தத்துவம்: 

சிதம்பரம் சிவபெருமானின் ஆண்பாகத்தின் (வலது கால்) ஆளுமை.  

மதுரை மீனாட்சி அம்மையின் பெண்பாகத்தின் (இடது கால்) மேன்மை.

(3) சூரிய - சந்திர வம்சங்கள்: 

சோழர்கள் சூரிய வம்சத்தினர் (ஆண் கிரகம்) வலது கால் ஊன்றிய நடனம்.  

பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் (பெண் கிரகம்) இடது கால் ஊன்றிய நடனம்.

(4) சிவலிங்கத்தின் மீதான மரியாதை: 

மதுரையில் நடராசர் இடது காலைத் தூக்கி ஆடினால், அது சிவலிங்கத்திற்கு நேராகக் காலைத் தூக்குவது போல் அமைந்துவிடும். சிவலிங்கத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தூக்கிய திருவடி பக்தர்களை நோக்கும் வகையிலும் நடராசர் கால்மாறி ஆடுகிறார்.


https://youtu.be/S2Kjc-txlfU

No comments:

Post a Comment