Sunday 10 July 2022

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

 

கம்பராமாயணத்தில்  54 பாடல்வரிகளில் நீலன் 

சிலப்பதிகாரத்தில் 2 இடங்களில் நீலன், 3 இடங்களில் நீலி

நீலன் (2)

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் - வஞ்சி:28/80

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற - வஞ்சி:28/109

 

நீலி (3)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை - மது:12/68

சங்கரி அந்தரி நீலி சடாமுடி - மது:12/154

நிலைக்களம் காணாள் நீலி என்போள் - மது:23/159

------------------------------------------------------------

 நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்        80

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி

வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின்

கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது

தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே

செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு        85

வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய

சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்

அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு

தமரின் சென்று தகை அடி வணங்க

 

சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு        100

கயம் தலை யானையின் கவிகையின் காட்டி

இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து

உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி

அமர்க்களம் அரசனது ஆக துறந்து

தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல்        105

கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்

புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று

ஏனை மன்னர் இருவரும் கூறிய

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற

------------------------------------------------------------

 

வளை உடை கையில் சூலம் ஏந்தி        60

கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை_ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை

இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன்        65

தலை மிசை நின்ற தையல் பலர் தொழும்

அமரி குமரி கவுரி சமரி

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை

ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை

 

அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு        150

படு கடன் இது உகு பலி முக மடையே

வம்பலர் பல்கி வழியும் வளம் பட

அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்

சங்கரி அந்தரி நீலி சடாமுடி

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்        155

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு

கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்

விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்

 

அங்காடி பட்டு அரும்_கலன் பகரும்        150

சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன்

வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன்

பரதன் என்னும் பெயரன் கோவலன்

விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்        155

ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு

வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி

கொலை_கள பட்ட சங்கமன் மனைவி

நிலைக்களம் காணாள் நீலி என்போள்

 

பாடல் தொகுப்பு உதவி - http://tamilconcordance.in/

No comments:

Post a Comment