Thursday 23 June 2022

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு

 தினமலர் செய்தி - கீழடியில் 8ம் கட்ட அகழாய்வுமணலுாரை புறக்கணித்த தொல்லியல் துறை

திருப்புவனம்--தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் 8ம் கட்ட அகழாய்வில் மணலுாரை தொல்லியல் துறை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையினர் பண்டைய மக்களின் வாழ்வியல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மாநில தொல்லியல் துறை கீழடியுடன் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வை மேற்கொண்டது. ஆனால் 8ம் கட்ட அகழாய்வு பிப்ரவரி 13ல் தொடங்கப்பட்ட போது அகரம், கொந்தகை, கீழடியில் மட்டும் பணிகள் ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது. மணலூரில் பணிகள் தொடங்கப்படவில்லை.மணலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துச்சாமி கூறுகையில், பண்டைய காலத்தில் மணலூரை மையப்படுத்தி மதுரை நகரம் இயங்கி வந்தது. இன்றளவும் கழுகேர்கடை, அகரம், கொந்தகை, கீழடி உள்ளிட்ட கிராமங்களில் திருவிழாக்கள் என்றால் மணலூர் கண்மாயில் இருந்து தீர்த்தம் எடுத்து தான் தொடங்குவார்கள், என்றார்.பேராசிரியர் காளைராசன் கூறுகையில், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலானகுழு ஓர் ஆண்டிற்கும் மேலாக மணலூரில் ஆய்வு செய்த பின் தான் கீழடியில் அகழாய்வை தொடங்கினர். முதன் முதலில் அகழாய்வு தொடங்கிய இடம் மணலூர் கண்மாயை ஒட்டிய பகுதி தான், பண்டைய காலத்தில் அதுவும் மணலூராகத்தான் இருந்திருக்கும், என்றார்.மணலூர் அருண் கூறுகையில், பண்டைய இதிகாசங்களில் மணவூர் என குறிப்பிட்டுள்ளது. தற்போதைய மணலூரைத்தான், அகழாய்வில் முதன் முதலில் மணலுாரில் தான் இரும்பை உருக்க பயன்படுத்தும் உலைகலன் கிடைத்தது. அகழாய்வு முதன் முதலில் மணலுாரில் இருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும், இரு முறை அகழாய்வு செய்தும் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தொல்லியல் துறையினர் 8ம் கட்ட அகழாய்வை நடத்தவில்லை.மணலுார் அம்மன் கோயிலை ஒட்டிய கண்மாய் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும், ஏற்கனவே இந்த இடத்தில் மணல் அள்ளிய போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது எனவே மணலுாரில் அகழாய்வை தொடங்க வேண்டும், என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3059803

No comments:

Post a Comment