Wednesday 25 September 2019

சங்ககாலப் பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்


சங்ககாலப் பாண்டியரின் 
அரண்மனையும் கோட்டைவாயிலும் 
எங்கே உள்ளன ?

கீழடி அருகே, தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடமானது ஒரு தொழிற்கூடம் என்கின்றனர். அப்படியானால் இந்த நகரை ஆண்ட பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும் எங்கே உள்ளன ? 
என்ற கேள்வி எழுகிறது.

பண்டைத் தமிழரின்  தொன்மையான நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  இன்றைய கீழடி அன்றைய மதுரையாக இருந்துள்ளது.  இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்த “கூடல் என்ற ஆலவாய்நகரம்” என்கிறது திருவிளையாடல் புராணம்.  தொல்லியலாளர் தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

பன்றி முத்திரையும் பாண்டியனின் மந்திரிகளும்
தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டெடுத்துள்ள ஆயிரக்கணக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் சிறப்பு வாய்ந்தனவாக உள்ளன.  இவையனைத்தும் பண்டைத் தமிழரின் நாகரிகத்தின் நகர நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன.  கண்டெடுக்கப் பெற்றுள்ள பொருட்களில் ஒன்றான வராக உருவம் பதித்த பவளம்மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இந்தப் “பன்றி உருவம் பதித்த பவளம்” பண்டைய பாண்டியமன்னனிடம் மந்திரிகளாகப் பணியாற்றிய 12 மந்திரிகளின் இலட்சினையாக இருக்கவேண்டும். இதுவே முத்தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த நகரமாக இருக்க வேண்டும்.  இங்குதான் மூன்றாம் தமிழ்ச்சங்கம் கூடித் தமிழாய்ந்து இருக்க வேண்டும் https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post.html என எழுதியுள்ளேன்.

இதை வாசித்த நண்பர் ஒருவர், 12 மந்திரிகளின் முத்திரைதான் இந்தப் பன்றி உருவம் பதித்த பவளம் என்று சொன்னால், “பாண்டிய மன்னர்கள் தொடர்பான எந்த ஆதாரமும் கீழடியில் இது வரை கிடைக்க பெறவில்லையே…..” என்று என்னிடம் கேட்டார்.


பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்
என்னிடம் கேட்டால், பாண்டிய மன்னர்கள் வசித்த அரண்மனையும், அரண்மனைக் கோட்டை வாயிலும் புதையுண்டுள்ள சிவன்கோயிலுக்குத் தென்கிழக்கே, சந்திரமூலையிலே (அஃனிமூலையிலே) உள்ளன என்றும், பாண்டியர்கள் வழிபட்ட சிவாலயமானது தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடத்திற்கு அருகே சுமார் 500மீட்டர் கிழக்கே புதையுண்டுள்ளது என்பேன்.

அகரம் தமிழரது சிகரம்
பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும்.  மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும்.  

கோட்டைக் கருப்பணசாமி  
(https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும்.

இவ்வளவு கண்டுபிடித்துள்ள நமது தொல்லியலாளர்கள் புதையுண்டுள்ள பாண்டியர்களது அரண்மனையையும் தோண்டியெடுத்து உலகு அறியச் செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்நகர் போற்றுவோம்,
திருவாலவாய் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

No comments:

Post a Comment