Sunday 26 April 2020

இந்து என்ற வார்த்தை வெள்ளைக்காரன் சூட்டியதா?

இந்து என்ற வார்த்தை 
வெள்ளைக்காரன்  சூட்டியதா?
(ஆன்மிக மலர் (மெய் புக்) 1-15 ஜுலை 2019 )

சமீபத்தில் இந்து மதத்தின் மீதான தாக்கம் மிகப்பெரிய அளவில் தூண்டப்பட்டு வருகிறது, இதில் முக்கியமாக தமிழகத்தில் உருவான (பெரும்பாலான சிறு கட்சியின்
தலைவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், பெயரில் மட்டும் இந்து மற்றபடி மதம் மாறிய நரிக் கூட்டம்) சிறு கட்சி தலைவர்கள், பட வாய்ப்பு இல்லாமல் கரை ஒதுங்கி
நின்று சாப்பாட்டிற்கு வழி தேடியலையும் இயக்குநனர்கள், நடிகர்கள், போன்றவர்கள்  காசுக்காக இந்து மதத்தை பழித்து கூறுவது பெருகிவருகிறது.

நேற்று வரை ஓட்டான்டியாக தெருவில் வலம் வந்த இந்த கூட்டம் எவ்வளவுக்கதிகமாக இந்து மதத்தைப்பற்றி இழிவாக பேசுகிறதோ... அந்த அளவிற்கு சொகுசான வாழ்க்கை வாழ வழி கிடைப்பதால்,
வாய் புளித்ததோ.. காய் புளித்ததோ என்று, எதுவும் தெரியாமல் ஏதாவது ஒரு குழப்பத்தை இந்து மதத்தில் உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

உண்மையில் இவர்களின் கல்வியறிவு பூஜ்யமாகத்தான் இருக்கும், ஆனால் மேதாவித்தனமாக பேசுவதைப் போன்ற நினைப்பில் இந்துமதத்தைப் பற்றி பேசி மாற்று மதத்தினரை குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களின் பணியாகும்.

மதம் மாறிய வைரமுத்து, ரஞ்சித், சீமான், டேனியல் காந்தி, கௌதமன், இந்த வகையில் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த மூடர் கூட்டத்தின் சமீபத்திய டாக் "இந்து என்ற பெயரை வெள்ளைக்காரன் வந்த பின்புதான் சூட்டப்பட்டது என்பதை பிரதானமாக கூறுகின்றனர்.

இதுபோன்ற அறிவு கெட்ட வாதத்தை பெரும்பாலான இந்து மக்கள் காது கொடுத்து கேட்பதில்லை, இருந்தாலும் இதுபோன்ற சில்லரைத்தனமான வாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்குமளவு இந்து
மதம் என்பது மிகப் பழமையான பெயர் என்பதை விவரிக்கிறது பல்வேறு புராண இதிகாசங்கள் உள்ளன.

அந்த வகையில், ப்ருஹஸ்பதி சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள்
ஆகியவற்றில் ஹிந்து என்ற சொல் குறிக்கப்பட்டிருப்பதோடு, இந்து என்ற சொல்லிற்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஹிம்ஸயா தூயதே யஸ்ச ஸதாசரண
தத்பர: வேத, கோ, ப்ரதிமா
ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக
(புத்தஸ்ம்ருதி கி.மு.4&ம் நூற்றாண்டு)
பொருள்:  யார் ஹிம்ஸிக்கப் பட்டாலும், எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப் புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரஹங்கள் இவற்றை பக்தியுடன்வழிபடுகிறானோ அவனே ஹிந்து.

ஹிமாலயாத் ஸமாரப்ப யாவத் இந்து
ஸரோவரம்
தத்தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷத
(ப்ருஹஸ்பத்ய ஆகமம்
கி.மு. 4&ம் நூற்றாண்டு)
பொருள்: ஹிமாலயம் முதல் ஹிந்து மஹா ஸாக ரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என்றுஅழைக்கப்படுகிறது.

ஜானுஸ்தானே ஜைன ஸப்த ஸப்த
சிந்துஸ் ததைவ ச;
ஹப்த ஹிந்துர்யாவனிய புனர்ஞேயா
குருண்டிகா:
(பலிஷ்ய புராணம் 4&ம் நூற்றாண்டு)
பொருள்: ‘ஸ’ என்ற எழுத்து யவனர்களின் (கிரேக்கர் முதலான தேசத்தவர்கள்) பாஷையில் ‘ஹ’ என்று திரிகிறது.
எனவேதான், ‘ஸப்த ஸிந்து’ என்ற வாக்கியம் ‘ஹப்த’ ஹிந்து என்பதாக மாறியது.

கலினா பலினா கலிதகலௌ
நூம்தர்மா
யவனையோ ரதரமாக்ராஜதா
ஹிந்தவோ விந்த்ய மாவிஹன!!
(காலிகா புராணம் கி.பி. 5ம் நூற்றாண்டு)
பொருள்:  அதர்ம ஆகிரமிப்பாளர்களின்படை யெடுப்புகளினால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து ஹிந்துக்கள் தப்பிக்க விந்தியமலையை பயன் படுத்தினர்.

சமஸகிருதம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் இதிகாச புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த வகையில்,
"இந்து வார்சடை எம்மிறையே"-  திருஞான சம்மந்தர்.
"வந்து மேருவினை நாள்தொறும் வலம் செய்து உழல்வோர்;
இந்து சூரியனை ஒத்து இருவரும் பொலியவே"-  கம்பராமாயணம்.
"செக்கர்அத் தீயவன் வாயில் தீர்ந்து; வேறு உக்கவான் தனிஎயிறு ஒத்த இந்து"- மூவருலா
"பொன்துவரை இந்துமரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த"-  மூவருலா.

இதுபோன்று தமிழில் எழுதப்பட்ட புராணங்களில் இந்து மதம் பற்றி பல் வேறு தகவல்களை கூறியுள்ளது. நாம் ஒருசிலவற்றை மட்டும் கொடுத்துள்ளோம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த இந்து மதத்தை ஒருசில நரிக்கூட்டம் திட்டமிட்டே அழிக்க முற்படுகிறது.

அக்காலத்தில் இந்து மதத் தெய்வத்தை அழிக்க அரக்கர்கள் கூட்டம் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் தெய்வ சக்தி அந்த அரக்கர்கள் கூட்டத்தை அடியோடு அழித்து பண்பாடு மிகுந்த இந்து சமய மக்களை காப்பாற்றி வந்துள்ளதையும் புராணங்கள் வாயிலாக படித்திருப்போம்.
அதைப்போன்றுதான் இன்று இந்து மதத்தை அழிக்க அரக்கர்கூட்டங்களாக மாற்று மதத்தினரும், கையேந்திக் கூட்டங்களும் தேவையற்ற கருத் துக்களை, துவேஷ பேச்சுக்களை
இந்து மதத்தின் மீது பிரயோகித்து நவீன வகையிலான அரக்க யுத்தம் நடத்தி வருகின்றனர், ஒருபக்கம் இவர்கள் மதம் மாற்றுவது குறித்து பிரசாரமும் செய்து வருகின்றனர்.
ஆனால் நாட்டைச் சுரண்டிய முகலாயர், கிறிஸ்தவர்கள் போன் றோரின் படையெடுப்புகள், போர்கள், கட்டாய மத மாற்றங்கள் போன்ற கொடுர செயல்களால் அழியாத இந்து மதம் இந்த நவீன
வீணர்கனின் பேச்சால் அழியாது என்பது ஒவ்வொரு இந்துக்களின் நம்பிக்கை.
இனியாவது இதுபோன்ற மாற்று மதத்தவர்களின் கருத் துக்களை முறியடிக்க இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள் முழுவதும் அறிந்து

http://aanmeegamalar.com/ebooks/Aanmeegamalar-1-15%20July%202019.pdf

No comments:

Post a Comment