Showing posts with label கான்பாளையம். Show all posts
Showing posts with label கான்பாளையம். Show all posts

Monday, 26 January 2026

மதுரை கோட்டை, கான்பாளையம், கான்சாமேடு

 


kanmani tamil

7 Nov 2017, 23:34:03
to mintamil
  1751ம் ஆண்டு ஆலம்கான் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான் .(அவன் பாடியமைத்துத் தங்கிய இடம் )
    1755ல் முஹம்மது யூசுப் கான்என்ற கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலர் 2000சிப்பாய்களுடன் மதுரைக்கோட்டையைக் கைப்பற்றினான். 
    இவன் மதுரை மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவன். பிறப்பால் திருநெல்வேலி சைவப்பிள்ளை. குழந்தையாக இருந்தபோதே பெற்றோரை 
இழந்த  இவனை ஒரு இஸ்லாமியன் யூசுப் கான்  என்று பெயரிட்டு வளர்த்தான்.  வாலிபனானவுடன் கிழக்கிந்தியக் கம்பெனியில் சிப்பாயாகச் சேர்ந்தான்.     ஒரு பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். 1756ல் கோட்டையைச் செப்பனிட்டான். ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பி விட்டான்.
    1757ல் கெயலார்ட் என்னும் தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் கோட்டையை இருமுறை முற்றுகை இட்டனர்.  பயனில்லை.
  யூசுப் கான் கோட்டையை மீண்டும் செப்பனிட்டான்.
    1757ன் இறுதியில் ஹைதர் அலி பல நாட்கள் மதுரைக்கோட்டையை முற்றுகையிட்டான். அதன் பலத்தைப் பார்த்து பின்வாங்கினான்.
     1763ல் தளபதி பிரெஸ்டன் தலைமையில் பெரும்படை மதுரையைத் தாக்கியது. யூசுப் கான் வெடிமருந்தை சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டிப் பற்ற   வைத்து கோட்டையின் மேலிருந்து எதிரிகளின் மேல் வீசி எறிய வைத்தான். பகைவர்  தோற்று ஓடினர். 
அதே ஆண்டில் செப்டெம்பர் 2ம் நாள் தளபதி மான்சன் தலைமையில் ஒரு தாக்குதல் நடந்தது.  கோட்டையை கைப்பற்ற இயலவில்லை .
அதே மாதத்தில் 24ம் நாள்  ஆங்கிலப்படையும் வாலாஜாப் படையும் சேர்ந்து வந்து தாக்கியும் மதுரைக்கோட்டையையும் யூசுப் கானையும் வெல்ல இயலவில்லை.
    1764ல் மேஜர் டொனால்டு காம்பெல் தன் படையுடன் வந்து தாக்கி தோற்றுப் போனார் .

கான் சாகிபு என்று மக்கள் அழைத்த யூசுப் கானை அவனுக்கடியில் இருந்த பிரெஞ்சு தளபதி ஒருவன் வஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் மதுரைக்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. (இவ்வரலாற்றைத் தான் கமலஹாசன் திரைப்படமாக எடுக்க முனைந்து அது பாதியில் நின்று விட்டது. )

சிறு திருத்தம்  
ஆலம்கான் பாடியமைத்துத் தங்கிய இடமே கான்பாளையம் .
யூசுப்கான் நினைவாக இன்றும் மதுரையில் உள்ள இடம் கான்சாமேடு ஆகும்.

கண்மணி