Showing posts with label ஆலவாய். Show all posts
Showing posts with label ஆலவாய். Show all posts

Wednesday, 4 December 2019

கீழடி - புதையுண்டுள்ள நகரம் எப்போது அழிந்தது? எப்படி அழிந்தது?

கீழடி -
கூடல் என்ற மதுரை 
எப்போது உருவாகியது ? எப்போது அழிந்தது ?


கீழடியருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரமானது, கைவிடப்பட்ட பண்டைய கூடல்  என்ற மதுரை என்பது எனது கருத்து.

புதையுண்டுள்ள இந்த நகரத்தின் ஈமக்காடானது கொந்தகை அருகே சாலையின் ஓரத்தில் உள்ளது என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிடுகிறார்.  இங்கே ஏராளமான முதுமக்கள்தாழிகள் உள்ளன.  இது புதையுண்டுள்ள நகரம் உயிருடன் இருந்தபோது இங்கு வாழ்ந்த மக்களின் ஈமக்காடு ஆகும். இந்த ஈமக்காட்டில் வரும் ஆண்டில் (2020)  தொல்லியல் ஆய்வுகள் நடைபெறவுள்ளன என அறிகிறேன்.

இந்த ஈமக்காட்டில் பழந்தமிழரின் பெயர்கள் அடங்கிய முதுமக்கள் தாழிகள் நிறையக் கிடைத்திட வாய்ப்புகள் உள்ளன.   நடைபெறவுள்ள இந்த ஆய்வின் வழியாகப் பழந்தமிழரின் உணவுப் பழக்கவழங்களும், நீத்தார்வழிபாட்டு முறைகளும் அறிவியல் அடிப்படையில் தெரியவரும் என எதிர்பார்க்கிறேன்.

புதையுண்டுள்ள இந்நகரில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இந் நகரம் அழிந்திருந்தால்,  இங்கு வாழ்ந்த மக்களும் அவர்களது உடைமைகளும் ஒன்றுசேரப் புதையுண்டு போயிருக்க வேண்டும்.  ஆனால் மக்களின் எலும்புகள் ஏதும் இந்நகரில் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்நகரம் அழியும்போது இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது தெளிவாகிறது. 

இந்நகரம் மண்ணால் புதையுண்டு அழிந்திருப்பதற்கு இரண்டு காரணிகள்தான் இருக்கமுடியும். 1) கடல்கோள் அல்லது சுனாமி (இதற்குத் திருவிளையாடல் புராணத்தில் சான்றுகள் உள்ளன. 2) வைகை யாற்றுப் பெருக்கு (வைகை யாற்றுப் பெருக்கிற்கு இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.  ஆனால் ஆற்றுப் பெருக்கால் நகரம் ஏதும் அழிந்ததாகக் குறிப்புகள்  இல்லை).

இந்த நகரம் எவ்வாறு அழிந்தது? கடல்கோளாலா அல்லது ஆற்றுப் பெருக்காலா? என இதுநாள்வரை அறிவியல் அடிப்படையில் ஆராயப்படவில்லை.  முறையினா அறிவியல்  ஆய்வுகள் நடைபெற்று  முடிவுகள் தெரியவரும்போதுதான், இந்நகரம் அழிந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.  அதுவரை பண்டைய புராணக் கருத்தைப் புளுகு என்று கற்பனையாகக் கருதி ஒதுக்கிவிட இயலாது.


கடல்கோளால் இந்நகரம் அழிவைச் சந்தித்திருந்தால்,  கிழக்கிலிருந்து வந்த கடல்நீரினால் இங்கு வசித்த மக்கள் மேற்குநோக்கி அடித்துச் செல்லப்பட்டிருப்பர்.  எனவே அவர்களது உடல்கள் இந்த நகருக்கு மேற்கே புதையுண்ட கிடக்க வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்கு மேற்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

மேற்கிலிருந்து பாய்ந்து வரும் வைகை ஆற்றுப்பெருக்கினால்  இந்நகரம் அழிந்திருந்தால்,  இந்நகரில் வசித்தவர்களின் உடல்கள் கிழக்கே அடித்துச் செல்லப்பட்டு இந்த நகருக்குக் கிழக்கே புதையுண்டு கிடக்கும் வாய்ப்புகள் உள்ளன.  மேலும், இந்த நகரின்  சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்குக் கிழக்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.

அப்படி எந்தவொரு தடயமும் இதுநாள் ஆராயப்படவில்லை. இங்கு படிந்துள்ள மண் அல்லது மணற் திட்டுக்கள் கிழக்கிலிருந்து மேற்காகப் படிந்துள்ளனவா? அல்லது மேற்கிலிருந்து கிழக்காகப் படிந்துள்ளனவா? எனக் கண்டறியப்பட வில்லை. 

மேலும், இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில், வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களோ மிருகங்களோ இறந்துபோன தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை.  அதாவது வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் எலும்போ அல்லது கால்நடைகளின் எலும்போ கண்டறியப்பட வில்லை..
எனவே, திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி,  இந்நகரில் வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னரே, இந்நகரம் அழிந்துள்ளது என்பது உறுதி.


நகரின் காலக்கணிப்பு
பண்டைய ஆலவாய் என்ற மதுரை நகரம் அழிந்ததை ஊழிக்காலம் என்று புராணமும் பரிபாடலும் கூறிப்பிடுகிறன.   ஊழிக்குப் பின்னர் கலிகாலம் தோன்றி 5112 ஆண்டுகள் ஆகின்றன என்று பஞ்சாங்கக் கணிப்பு உள்ளது.  ஊழிக் காலத்திற்குப் பின்னர் மீண்டும் பாண்டியர்கள் கூடல் என்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
எனவே, இவற்றின் அடிப்படையில் கீழடி யருகே புதையுண்டுள்ள இந்நகரம் (கூடல் என்ற மதுரை) தோன்றி 5112 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. 

குலசேகர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில், ஆலவாய் என்ற மதுரை இருந்த இடம் கண்டறியப்படுகிறது.  அந்தத் தொன்மையான ஆலவாய் என்ற மதுரை இருந்த இடத்தில் புதிதாக மதுரை நகர் உருவாக்கப்படுகிறது. 
கூடல் என்ற மதுரையில் இருந்த மக்கள் அனைவரும் புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரைக்கு சென்று குடியேறுகின்றனர்.  அதனால் இந்தக் கூடல் என்ற மதுரை நகரம் கைவிடப்பட்ட நகரமாக மாறிவிடுகிறது.

பின்னாளில்,  மற்றொரு கடல்கோள் (சுனாமி) உண்டாகியுள்ளது.  இந்தக் கடல்கோளில்  இப்போதிருக்கும் மதுரையின் எழுகடல்தெருவில் உள்ள வாவி (குளம்) வரை கடல்நீர் வந்து சேர்ந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.  எழுகடல்தெருவரை மட்டுமே வந்து திரும்பிய இந்தக் கடல்வெள்ளத்தால்  இன்றிருக்கும் மதுரை அழியவில்லை.  ஆனால் மதுரைக்குக் கிழக்கே யிருந்தன எல்லாமும் கடல்வெள்ளத்தில் சிதைந்து அழிந்து போயுள்ளன.

இந்தக் கடல்கோளால்தான் (சுனாமியினால்தான்) கீழடியருகே கைவிடப்பட்ட கூடல் என்ற  மதுரைநகரும் அழிந்து புதைந்துள்ளது.  புதையுண்டுள்ள நகரம் (கூடல் என்ற மதுரை) அழிந்த காலம் இன்னதென்று  தெரியவில்லை.  தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தால்தான் உண்டு.

ஆலவாய் என்ற மதுரை போற்றுவோம்.
கூடல் என்ற மதுரை போன்றுவோம்,
மதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Saturday, 12 October 2019

தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல்

தமிழரின் 
தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் 
இவற்றின் இருப்பிடங்கள் பற்றிய ஒரு சிறு விளக்கம்.



 தென் மதுரை  
பாண்டியர்களின் தலைநகரம் மதுரை.  முதலாம் ஊழிக்காலத்தில் உண்டான கடல்கோளால் இந்நகரம் அழிந்துவிட்டது. மிகமிகமிகத் தொன்மையான இந்த மதுரையை இன்றைய மதுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் தென்மதுரை என்று அழைத்துள்ளனர்.
தென்மதுரை (1) = கவாடபரம் அல்லது கபாடபுரம்.  இதன் இருப்பிடம் இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு, அல்லது இரண்டும்.   ஆப்பிரிக்காவில் மடகாசுக்கர் தீவிற்கு அருகில் உள்ள இந்தத் தென்மதுரையே (மொரிசியசு தீவு) ஆதிமனிதன் தோன்றிய இடமாக இருக்க வேண்டும்.  முதலாம் கடல்கோளால் அழிந்துபோன இந்தத் தென்மதுரை பற்றிய தெளிவான இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.



 மதுரை 
கடல்கொண்ட தென்மதுரையிலிருந்த தமிழர் புலம்பெயர்ந்து இன்றைய மதுரை இருக்கும் இடத்தில் குடியேறி உள்ளனர்.   இதுவே பழைமையான  மதுரை ஆகும்.  
1) இன்றை மதுரை இருக்கும் இடத்தில் இந்தப் பழைமையான மதுரை(1) இருந்தது.  இந்த மதுரை (1) மிகவும் தொன்மையானது.   இது கடல்கோளால் அழிந்தது.  இரண்டாம் கடல்கோளால் அழிந்துபோன மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் உண்டானது.
  மதுரை(1) = ஆலவாய்.


2) கடல்கோளுக்குப் பின்னர் புதிதாக மதுரை(2) நகரைப் பாண்டியர்கள் உண்டாக்கி அரசாளுகின்றனர்.  இதன் பெயர் கூடல். இந்தக் கூடல் மாநகரைத்தான் கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  
 மதுரை(2) = கூடல் 

(குறிப்பு - கீழடி வேறு, கீழடி யருகே புதையுண்டுள்ள கூடல் நகரம் வேறு. கீழடி அருகே உள்ள மணலூர் வேறு.  மணலூரின் தொன்மையான பெயர் மணவூர்.  மணலூரும் மணவூரும் ஒன்றுதான். மணவூர் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ளன.)

3) கூடலை ஆளும்போது பண்டைய மதுரை (1) இருந்த இடம் கண்டறியப்படுகிறது. உடனே அந்த இடத்தில்  புதிதாக நகரை உண்டாக்கிக் கூடலில் வாழ்ந்த மக்கள் குடியேறுகின்றனர்.  இந்த நகரமே இன்றைய மதுரை ஆகும். மதுரை (1) இருந்த இடத்தில் மதுரை (3) உருவாக்கப்படுகிறது. 
  மதுரை(3) = இன்றைய மதுரை.

4) மதுரை(3)வரை மீண்டும் ஒரு கடல்கோள்.  இந்த மூன்றாவது  கடல்கோளால் கைவிடப்பெற்ற கூடல்நகரம் (மதுரை 2) அழிந்து போகிறது.  திருஞானசம்பந்தர் கடல்கோளால் அழிந்த மதுரை(1) மற்றும் கூடல் என்ற மதுரை(2) என்ற இரண்டு நகரங்களையும் இணைத்துக்  ”கூடல் ஆலவாய்” என்று பாடியுள்ளார்.
  மதுரை(1)யும், கூடல் என்ற மதுரை(2)யும் = கூடல் ஆலவாய்.
கூடலை அழிந்த மூன்றாவது கடல்கோளால் மதுரை (3) அழியாமல் அப்படியே இன்றும் இருக்கிறது.



5) இந்நாளில், கடல்கொண்ட கூடல் என்ற மதுரை(2)யை தொல்லியலாளர்கள் கீழடி அருகே கண்டறிந்து ஆய்வுகள் செய்துவருகின்றனர்.

6) மதுரை(3)யின் அடியிலே  மதுரை(1) புதையுண்டுள்ளது.

மேற்கண்ட விளக்கமானது, தமிழ்ச்சங்கப்பாடல்கள் மற்றும் திருவிளையாடற்புராணம் பாடல்களின் அடிப்படையிலானது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 26 (13.10.2019) ஞாயிறு கிழமை.

Wednesday, 25 September 2019

சங்ககாலப் பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்


சங்ககாலப் பாண்டியரின் 
அரண்மனையும் கோட்டைவாயிலும் 
எங்கே உள்ளன ?

கீழடி அருகே, தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடமானது ஒரு தொழிற்கூடம் என்கின்றனர். அப்படியானால் இந்த நகரை ஆண்ட பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும் எங்கே உள்ளன ? 
என்ற கேள்வி எழுகிறது.

பண்டைத் தமிழரின்  தொன்மையான நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  இன்றைய கீழடி அன்றைய மதுரையாக இருந்துள்ளது.  இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்த “கூடல் என்ற ஆலவாய்நகரம்” என்கிறது திருவிளையாடல் புராணம்.  தொல்லியலாளர் தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

பன்றி முத்திரையும் பாண்டியனின் மந்திரிகளும்
தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டெடுத்துள்ள ஆயிரக்கணக்கான பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் சிறப்பு வாய்ந்தனவாக உள்ளன.  இவையனைத்தும் பண்டைத் தமிழரின் நாகரிகத்தின் நகர நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன.  கண்டெடுக்கப் பெற்றுள்ள பொருட்களில் ஒன்றான வராக உருவம் பதித்த பவளம்மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இந்தப் “பன்றி உருவம் பதித்த பவளம்” பண்டைய பாண்டியமன்னனிடம் மந்திரிகளாகப் பணியாற்றிய 12 மந்திரிகளின் இலட்சினையாக இருக்கவேண்டும். இதுவே முத்தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த நகரமாக இருக்க வேண்டும்.  இங்குதான் மூன்றாம் தமிழ்ச்சங்கம் கூடித் தமிழாய்ந்து இருக்க வேண்டும் https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post.html என எழுதியுள்ளேன்.

இதை வாசித்த நண்பர் ஒருவர், 12 மந்திரிகளின் முத்திரைதான் இந்தப் பன்றி உருவம் பதித்த பவளம் என்று சொன்னால், “பாண்டிய மன்னர்கள் தொடர்பான எந்த ஆதாரமும் கீழடியில் இது வரை கிடைக்க பெறவில்லையே…..” என்று என்னிடம் கேட்டார்.


பாண்டியரின் அரண்மனையும் கோட்டைவாயிலும்
என்னிடம் கேட்டால், பாண்டிய மன்னர்கள் வசித்த அரண்மனையும், அரண்மனைக் கோட்டை வாயிலும் புதையுண்டுள்ள சிவன்கோயிலுக்குத் தென்கிழக்கே, சந்திரமூலையிலே (அஃனிமூலையிலே) உள்ளன என்றும், பாண்டியர்கள் வழிபட்ட சிவாலயமானது தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ள இடத்திற்கு அருகே சுமார் 500மீட்டர் கிழக்கே புதையுண்டுள்ளது என்பேன்.

அகரம் தமிழரது சிகரம்
பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும்.  மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும்.  

கோட்டைக் கருப்பணசாமி  
(https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும்.

இவ்வளவு கண்டுபிடித்துள்ள நமது தொல்லியலாளர்கள் புதையுண்டுள்ள பாண்டியர்களது அரண்மனையையும் தோண்டியெடுத்து உலகு அறியச் செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்நகர் போற்றுவோம்,
திருவாலவாய் போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Sunday, 1 September 2019

இது ஆலவாய் என்ற பண்டைய மதுரையின் வராக முத்திரையா?

வராக முத்திரை 

கீழடி அருகே அகழ்வராய்ச்சியில் கிடைத்துள்ள வராகமுத்திரையானது ஆலவாயை ஆண்ட வராகர்களின் முத்திரையா?

இன்றைய கீழடி அருகே அன்றைய மதுரை இருந்தது. இந்தத் தொன்மையான மதுரை நகரம் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) அழிந்தது என்கிறது திருவிளையாடல் புராணம்.

இந்தத் தொன்மையான ஆலவாய் நகரத்தைத் தொல்லியல் அறிஞர்கள் தோண்டிக் கண்டுபிடித்துள்ளனர்.  தினந்தோறும் தோண்டத் தோண்ட அரியபல தடயங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.  அதில் செங்கல் கட்டுமானம், இரட்டை சுவர், சுடுமண் குழாய், கட்டைவிரல் அளவுள்ள சுடுமண் பானை, வராக உருவத்துடன் கூடிய சூதுபவளம், உயர் வகுப்பு பெண்கள் கழுத்தில் அணியும் கழுத்து மாலை பதக்கம் எனப் பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.  இதில் “வராக உருவம் பதித்த பவளம்” மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


கீழடி அருகே புதையுண்டுள்ள இந்தப் பண்டைய ஆலவாய் நகரம் கடல்கோளால் அழிவதற்கு முன்னர், இந்த ஆலவாய் நகரை இராசராச பாண்டியன் ஆட்சி செய்து வந்தான்.   அவனது ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள பன்றிமலையில் பன்றியின் அம்சமாகத் தோன்றிய 12 சகோதர்கள் இருந்தனர். இந்தப் 12 பேர்களையும் தனது அமைச்சர்களாக ஆக்கி இராசராசன் சிறப்புடன் தேசம் ஆண்டு வந்தான்.  

இராசராச பாண்டியனது ஆட்சிக்காலத்திற்குப் பின்னாள் , ஆதுலகீர்த்தி பாண்டியனின் மைந்தனாகிய கீர்த்தி வீடணன் காலத்தில் பிரளயத்தினால் கடல்வெள்ளம் (சுனாமி) தோன்றியது.   அந்தக் கடல்கோளால் ஆலவாய் என்ற இந்தத் தொன்மையான மதுரையானது முற்றிலும் அழிந்து போனது.  எல்லாமும் மண்ணுள் புதைந்து போயின.  பன்றிகளின் அம்சமாகத் தோன்றி அமைச்சர்களாக விளங்கி நல்லாட்சி செய்த 12 மந்திரிகளின் இலட்சினைகளும் புதைந்து போயின.
இந்தக் கடல்கோளில் சோமசுந்தரப் பெருமான் விமானமும், மீனாட்சி அம்மை ஆலயமும், இடபமலையும், யானை மலையும், நாக மலையும், பசுமலையும், பன்றி மலையும் மட்டும் அழியாமல் இருந்தன.

கடல்வெள்ளம் வற்றிய பிறகு உலகம் மீண்டும் சிவபெருமானால் படைக்கப்பட்டது.  தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன் சூரியன் அக்கினி என்னும் மூவர் குலத்தினின்றும் இறைவனால் படைக்கப்பட்டனர்.
சந்திர குலத்தில் தோன்றிய  ‘வங்கிய சேகர பாண்டியன்’ என்பவன் சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலைச் சுற்றி ஒரு சிறு நகரத்தை அமைத்து நீதி வழுவாமல் அரசாண்டான்.  இந்த நகரமே இன்றைய மதுரை நகரமாகும்.

பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு, நாயக்கர் ஆட்சி, வெள்ளையன் ஆட்சி முடிந்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், பண்டைய ஆலவாய் நகரைக் கண்டறிந்து தொல்லியல் துறையில் அகழாய்வுகள் செய்துவருகின்றனர்.
இந்த அகழாய்வில்தான் பண்டைய வராக முத்திரை உடைய சூதுபவளம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழரின் தொன்மை போற்றுவோம்.
மாமதுரை போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆவணி 15 (01.09.2019) ஞாயிற்றுக் கிழமை


நன்றி - படம், தினமலர்.
பார்வை -
1) தினமலர் செய்தி https://www.dinamalar.com/news_detail.asp?id=2356972&fbclid=IwAR1VISgDBzbFai7nhiBsT-wC4vC2VjPJyFe3Ct0Wvp2X2aARnW60W7deRXY
2) திருவிளையாடல் புராணம்  45ஆவது படலம் - பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்,
3) திருவிளையாடல் புராணம் 46ஆவது படலம் - பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

வராகம் கேழல் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு
2219.
பல் வகைக் சாதி உள்ள பன்றியில் கணங்கள் எல்லாம்
வெல் படைத் தறுங்கண் சேனை வீரராய் முன்பு செல்லச்
செல் எனத் தெழித்துச் செம் கண் தீயுக மானம் என்னும்
மல்லர் வாம் புரவி மேல் கொண்டு எழுந்தனன் வராகவீரன்.

2236.
மண்ணில் குறித்து வலிக்கண்டு வராக வேந்தை 
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால்
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால்.

2266.
வந்து இறைஞ்சிய வராக மா மைந்தரை நேர் கண்டு
அந்தம் இல் களிப்பு அடைந்து வேந்து அமைச்சியல் கிழமை
தந்து வேறு பல் வரிசையும் தக்க வா நல்கிக்
கந்து சீறிய கடகரிக் கைதவன் பின்னர்.

2332.
தேன் இழி குதலைத் தீம் சொல் சேல் நெடும் கண்ணி கோயில்
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த
கான் இழி இடபக் குன்றம் கரிவரை நாகக் குன்றம்
ஆன் இழி வரை வராக வரை முதல் அழிவு இலாத.

கேழல் என்ற சொல் உள்ள பாடல்
2227.
தூங்கு இருள் வறுவாய்ச் சிங்கம் இரண்டு உறை துறையின் மாடோர்
ஆங்கு இரு மருப்புக் கேழல் வந்து நீர் பருகி மீளும்
வீங்கு இருள் உடல் கார் எனும் ஒன்று உறை துறையில் வீரத்து
ஆங்கு இரு மடங்கல் நீர்க்குத் தலைப்பட அஞ்சும் அன்றே.


Thursday, 29 August 2019

கீழடி (ஆலவாய் என்ற மதுரை) அழிந்தது எவ்வாறு?

கீழடி (குலசேகரபாண்டியன் ஆண்ட 
ஆலவாய் என்ற மதுரை) 
அழிந்தது எவ்வாறு?

கழிவு நீர் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும்.



கீழடி அருகே தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் இந்த ஊரின் பெயர் மதுரை என்றும்,  இப்போதுள்ள மதுரை நகரம் உருவாக்கப்பெற்ற பின்னர்  இந்த நகரில் இருந்தோர் அனைவரும் இந்த ஊரைக் காலிசெய்துவிட்டுப் புதிதாக நிருமானிக்கப் பெற்ற இன்றைய மதுரைநகருக்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

“வங்கக் கடல்வெள்ளத்தால், அதாவது கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) இந்த மதுரை மாநகரம் அழிந்தது” என்கிறது திருவிளையாடற் புராணம்.   ஆனால் இந்த நகரத்திற்குக் கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் வங்கக் கடல் உள்ளது.  எனவே “இவ்வளவு பெருந்தொலைவு கடலானது தரையைக் கடந்து வந்து இந்த நகரை அழித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.
சில அறிஞர்கள் வைகை ஆற்றுப் பெருக்கால் அழிந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பண்டைய மதுரை மாநகரம் எவ்வாறு அழிந்தது? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
புராணம் கூறுவது உண்மையா? அறிஞர்களின் கருத்து உண்மையா?
உண்மையில் நடந்தது என்ன எனக் கண்டறிய ஏதேனும் வழிவகை உள்ளதா?
உள்ளது.

புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவுநீர்க் குழாயின் சிதைந்த  பாகங்கள் எந்தத் திசையில் கிடக்கின்றன என்பதைக் கொண்டு, இந்த நகரம் கடல்கோளால் அழிந்ததா? அல்லது வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்ததா? என்று எளிதில் கண்டறிந்து விடலாம்.
புதைந்துள்ள நகருக்குக் கிழக்கே வங்கக்கடல் உள்ளது. வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது. 

எனவே கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவூநீர்க்குழாய் அதனுடைய இருப்பிடத்திற்கு மேற்குத்திசையில் கண்டறியப்பட்டிருந்தால்,  இந்த நகரம் கிழக்கே யிருந்து வந்த கடல்வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மேற்கே கிடக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
மாறாக, இந்தக் கழிவுநீர்க் குழாயானது அதனுடைய இருப்பிடத்திற்குக்  கிழக்குத் திசையில் கண்டறியப்பட்டால்,  இந்த நகரமானது மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வந்த வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.

“புதையுண்டுள்ள இந் நகரம் எவ்வாறு அழிந்தது?” என்று இந்தக் கழிவூநீர்க் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும் இந்தத் தொன்மையான ஆலவாய் நகரம் எப்படி அழிந்தது என்று !

அன்பன்
காசீசீர், முனைவர், நா.ரா.கி.காளைராசன்
ஆவணி 12 (29.08.2019) விழாயன் கிழமை

பார்வை  - திஇந்து நாளிதழ் செய்தி.
திருப்புவனம்  - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.  கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.  இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.  2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது.
https://static.hindutamil.in/hindu/uploads/news/2019/08/29/large/513341.jpg
இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
https://www.hindutamil.in/news/tamilnadu/513341-discovery-of-underground-hot-tub-1.html

Tuesday, 18 December 2018

மதுரையைச் சூழ்ந்துள்ள கோயில்கள்

மதுரையைச் சூழ்ந்துள்ள  கோயில்கள்

மதுரையைச் சூழ்ந்துள்ள கோயில்களைக் கல்லாடம் பட்டியிலிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஐயா நூ த லோ சு அவர்களுக்கும்,
நண்பர் திருமதி.தேமொழி அவர்களுக்கும் எனது நன்றி.

---------------------------------------------------------------------
நூ த லோ சு 
மயிலை 
N D Logasundaram <selvindls61@gmail.com>8 April 2015 at 00:40

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil <mintamil@googlegroups.com>
கல் லாடம் 61  
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - - 
வடதிருஆலவாய் திருநடுவூர்                                  22
வெள்ளியம்பலம் நள்ளாறு இந்திரை                    23  
பஞ்சவனீச்சரம் அஞ்செழுத்து அமைத்த                 24
சென்னிமாபுரம் சேரன் திருத்தளி                              25
கன்னி செங்கோட்டம் கரியோன் திருவுறை          26
விண் உ டைத்து (உ)ண்ணும் கண்ணிலி ஒருத்தன் 27
மறிதிரைக் கடலுள் மா வெனக் கவிழ்ந்த                  28 
களவுடற் பிளந்த ஒளிகெழு திருவேல்                       29
பணிப் பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன்            30
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த                31
அருவி அம்சாரல் ஒரு பரங்குன்றம்            32
சூழ்கொள இருந்த கூடலம்பெருமான்                        33
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -

என 11 கோயில்கள் ஆலவாய் அண்ணல் கோயிலைச் சூழ்ந்துள்ள 
மற்ற கோயிஉல்களாக காட்டப்படுகின்றன 

இந்தப்ப் பாடல் வரிகளில் கூடலம் பெருமானைச் சூழ்ந்து நின்ற கோயில்கள் பட்டிலி டப்பட்டுள்ளன. 
இவற்றில் பரன்குன்றத் துடன் நிற்காது கரியோன் திவுறை என கள்ளழகர் கோயிலும் குறிக்கப்படுகின்றது.
இம்மையே நன்மை தருவர் கோயில் காஞ்சமலைக் கோயில் திருவேடகம் ஆப்பனூர் திருப்பூவணம் போன்றவை மற்றவையில் அடங்கும் எனலாம்  வெள்ளியம்பலம் (எது?) இன்றும் உள்ளது.

நூ த லோ சு 
மயிலை


--------------------------------------------------------------------------------------

தேமொழி <jsthemozhi@gmail.com>
8 Apr 2015, 06:49
to   mintamil <mintamil@googlegroups.com>

சங்கப் பாடல்களிலேயே  "நான்மாடக்கூடல்" என்பது வழக்கில் இருந்தது தெரிகிறது .....

நான் தேடியதில் கிடைத்த தகவல்கள் கீழே காண்க:

நான்மாடக்கூடல் என்பதற்கு வேறுவகையிலும் பொருள் கொள்ளப்பட்டிருப்பதும் காட்டப்பட்டுள்ளது...

கூடனெடுங்கொடி யெழவே (கலித். 31)
நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92, 65).
குன்றத்தாற் கூடல் வரவு (பரிபா. 8, 28)
_____________________________________________________
பத்துப்பாட்டு மூலமும்
நச்சினார்க்கினியருரையும்


 [மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் :] பிறங்கிய மாடம் மலிபுகழ் கூடல்-பெரிய நான்மாடத்தாலே மலிந்தபுகழைக் கூடுதலையுடைய மதுரை (699) என மேலேகூட்டுக.
 "நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92:65) என்பதும், ‘நான்குமாடம் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று;
______________________________________________________


நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின்
--21. வஞ்சின மாலை
சிலப்பதிகாரம் - 2. மதுரைக் காண்டம்
_______________________________________________________


“மாடமலி மறுகிற் கூடல்” (முருகு.71); 
“மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்” (மதுரைக்.429); 
“மாடக் கூடல்” (பரி.20 : 106); 
“மாட மதுரை”, “மாட மதுரையும்” (சிலப்.பதி. 203, 8 : 3, 9: 76, 15 : 112); “நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும்” (கலித். 92) என்பதும், 

‘நான்கு மாடங் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று; அவை 
திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்; 

இனி, கன்னி, கரியமால், காளி, ஆலவாயென்றுமாம்’ என்னும் அதன் விசேடவுரையும், “அம்புத நால்களா னீடு கூடல்” (திருநள்ளாறும் திருவாலவாயும்; தே.) என்னும் திருவாக்கும், 
“மதிமலி புரிசை மாடக் கூடல்” (திருமுருகப் பாசுரம்) என்பதும், “ஈசனார் மகிழ்ந்த தானம்” (திருவால.நகர. 12) என்பது முதலிய திருவிருத்தங்கள் நான்கும், 
“கன்னிதிருமால்காளி யீசன் காக்குங் கடிமதில்சூழ் மாமதுரை” (திருவால.பயன் முதலியன. 5) என்பதும் இங்கே கவனிக்கத்தக்கவை.
__________________________________


சங்ககாலத்தில் கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். அவை பல மாடங்களைக் கொண்டிருந்தன. மாடங்கள் மிகுந்தும் சிறந்தும் விளங்கிய மதுரை பற்றிப் புறநானூறு, மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, கலித்தொகை போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
 

மாட மதுரை (புறம். 32)
மாடமலி மறுகிற்கூடல்  (திருமுருகு. 71)
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி, 429)
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் (கலித்தொகை, 92)
+
"மதிமலி புரிசை மாடக் கூடல்" (திருமுகப் பரசுரம்). 
___________________________________________________


நான்மாடக் கூடல் என்னும் என்னும் பெயர் மதுரையைக் குறிக்கிறது. எனினும் அது 'நான்கு மாடக் கூடல்' என்பதன் குறுக்கம்.

திருவாலவாய் (மதுரை)
திருநள்ளாறு
திருமுடங்கை
திருநடுவூர்
ஆகியவை அக்கால நான்கு மாடக் கூடல்கள்.

நச்சினார்க்கினியர் விளக்கம்
கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என இவற்றை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். [1]
கூடல் என்பது கோபுரத்தைக் குறிக்கும்.

அடிக்குறிப்பு[தொகு]
கலித்தொகை பாடல் எண் 92, அடி 65-ல் வரும் 'நான்மாடக் கூடல்' என்னும் தொடருக்கு நச்சினார்கினியர் தரும் உரை
_________________________________________________________


திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை

66

...............  நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

நிலவொளி வெளிப்படுமாறு வெண்மையான சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.



74

இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

 அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக் கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
___________________________ 


வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் .. . .5
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.

பரிபாடல் திரட்டு
முதற் பாடல்

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே- தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.

பரிபாடல் திரட்டு
ஏழாம் பாடல்

..... தேமொழி