Showing posts with label கீழடி. Show all posts
Showing posts with label கீழடி. Show all posts

Thursday, 21 July 2022

திருவிளையால் புராணத்தில் கண்ணகியின்கதை இல்லையே?

திருவிளையால் புராணத்தில் 

கண்ணகியின்கதை இல்லையே?

என்னிடம் கேட்டால்(ர்)!

சிவனடியார் ஒருவரைச் சந்தித்தேன்.  சிவ சிந்தனைகள் நிறைந்திருந்தன.  தேவார திருவாசகப் பாடல்களை யெல்லாம் தெளிவான உச்சரிப்பில் பொருள் விளங்கும்படி அருமையாகப் பாடினார்.  மனதிற்கு நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.  தொடர்ந்து, பேச்சின் நடுவே திருவிளையாடற் புராணம் பற்றிக் கூறினேன்.   அவ்வளதுதான் அவரது முகம் சிறிது வாட்டம் கண்டது.  திருமுறைகளே உண்மை, புராணங்கள் எல்லாம் பொய்-ஆரிய பார்ப்பனர்களின் கட்டுக்கதை என்றார்.   இது கேட்ட எனது முகமும் சிறிது வாட்டம் கண்டது.
    திருவிளையாடற் புராணத்தில் என்ன பிழை கண்டுள்ளீர்கள் ? என்று கேட்டேன்.  

        திருமுறைகள் 7ஆம் நூற்றாண்டு, திருவிளையாடற் புராணம் 13ஆம் நூற்றாண்டு என்றார்.   “கண்ணகி தமிழ்ப் பெண்” என்ற காரணத்தினால் திருவிளையாடல் புராணத்தில் கண்ணகியைப் பார்ப்பனர்கள் எழுதாமல் விட்டுவிட்டனர் என்றார்.

எனக்குத் தெரிந்த பதிலைக் கூறலாமா? என்று கேட்டுவிட்டுச் சொன்னேன்.

1) எந்தவொரு தமிழ் நூலும் எந்தக்காலத்தில் எழுதப்பட்டிருந்தால் என்ன? 
நேற்று எழுதினாலும் சரி, 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியது என்றாலும் சரி,  அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் தானே நமக்கு முக்கியம்.  அந்த நூலின் காலக் கணிப்பினால் நமக்கு (மனிதர்களுக்கு) ஆகப்போகவது ஏதுமில்லையே.  இன்னம் ஒருபடி மேலே சொல்வது என்றால்,  அந்த நூலின் ஆசிரியர் யார்? என்பது கூடத் தேவையற்றதே ஆகும்.  இவ்வாறான சிந்தனையால்தான் தமிழ்ப்புலவர் பலரும் தம் பெயரையோ காலத்தையோ எழுதிடவில்லை போலும் என்றேன்.  மேலும்

2) திருவிளையாடற் புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய பரஞ்சோதி முனிவரின் காலம் வேண்டுமானால் 13ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.   ஆனால் திருவிளையாடற் புராணத்திற்கான மூலநூல் எது?

18 புராணங்களில் ஒன்றான “காந்தத் தீச சங்கிதை” என்ற புராணம் ஆகும்.  இந்தப் புராணம் எழுதப்பெற்ற காலம் மிகவும் புராதனமானது. இன்ன காலம் என்று கணித்தல் அரிதாக உள்ளது.

எனவே திருவிளையாடற் புராணம் பிற்காலத்தில் எழுதப்பெற்றது என்பது தவறாகும்.  இது எப்படி யெனில், திருக்குறள் அச்சடிக்கப்பட்ட காலத்தைத் திருக்குறள் தோன்றிய காலம் என்பது போல் ஆகிவிடும்.

3) திருவிளையாடற் புராணத்தில் கதையாகச் சொல்லப்பட்டுள்ளன அனைத்தும் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் திருவிளையாடல் ஆகும்.   அவரை வணங்கிய அடியார்களுக்கு அவர் அருள்புரிந்த நிகழ்வுகளின் தொகுப்பு ஆகும்.
மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரைக் கண்ணகியோ கோவலனோ வழிபாட்டதாக சொல்லப்படவில்லை.   மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரை வழிபட்டுப் பலன் அடைந்தவர்களின் பட்டியலில், வழிபடாதவரை எங்ஙனம் சேர்க்க இயலும்?

இந்தக் காரணத்தினால்தான் கண்ணகி கோவலன் கதை திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறாமல் ஆகியிருக்கலாம் என்றேன்..

திருவிளையாடற் புராணம் முழுக்கமுழுக்க மதுரையின் அண்ணலான அருள்மிகு சோமசுந்தரரேசுவரரின் திருவிளையாடல்களையும், மற்றும் மதுரை வாழ் தமிழ் மக்களின் சிறப்புகளையுமே கூறுகிறது.    இப்படியிருக்கக் கண்ணகி ஓர் தமிழ்ப் பெண் என்ற காரணத்தினால் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறவில்லை என்ற கற்பனைக் கருத்தை எப்படி ஏற்க இயலும் என்றேன்.

நீண்ட நேரம் மௌனம் காத்தார் எனது நண்பர்.  எனது இந்தக் கருத்துகளை  அவர் ஒத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை, மறுத்ததாகவும் தெரியவில்லை.

எனது கருத்துகள் சரியானவையா?  உங்களுக்கு ஏற்புடையதாக உள்ளனவா?

அன்பன்

காசிசீர், முனைவர், நா. ரா. கி. காளைராசன்

ஆடி 5 (21.07.2022) வியாழக்கிழமை. 

--------------------------------------------------------
கண்ணகி எரித்த கூடலும் - இன்றைய மதுரை மாநகரமும்

கண்ணகி எரித்த கூடல் மதுரை மாநகர் அழிந்துபட்டது.   இன்றிருக்கும் மதுரை மாநகரமானது குலசேகரபாண்டியனால் புதிதாகத் தோற்றுவிக்கப் பெற்றதாகும்..  கூடலில் வாழ்ந்த மக்கள் எல்லாம் குடிபெயர்ந்து இன்றைய மதுரைக்கு வந்து விட்டனர்.  எனவே கூடல் என்ற நகரம் வைவிடப்பட்ட நகரமானது,  கடல்கோளால் புதையுண்டு போனது.  அந்த க் கூடல் மாநகரத்தைத்தான் இன்றைய நாளில் தொல்லியலாளர்கள் கீழடி அருகே தோண்டிக் கண்டறிந்துள்ளனர் என்று கருதி அதற்கான சான்றுகளை யெல்லாம் தொகுத்து எழுதியுள்ளேன்.

நேரம் கிடைக்கும்போது அன்பர்கள் கீழடி தொடர்பான அந்தக் கட்டுரைகளையும் கண்ணுற்றுக் கருத்துக் கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

--------------------------------------------------------

Sunday, 10 July 2022

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

சிலப்பதிகாரத்தில் மதுரை நீலி

 

கம்பராமாயணத்தில்  54 பாடல்வரிகளில் நீலன் 

சிலப்பதிகாரத்தில் 2 இடங்களில் நீலன், 3 இடங்களில் நீலி

நீலன் (2)

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் - வஞ்சி:28/80

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற - வஞ்சி:28/109

 

நீலி (3)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை - மது:12/68

சங்கரி அந்தரி நீலி சடாமுடி - மது:12/154

நிலைக்களம் காணாள் நீலி என்போள் - மது:23/159

------------------------------------------------------------

 நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்        80

மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி

வாயிலாளரின் மன்னவற்கு இசைத்த பின்

கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது

தும்பை வெம்போர் சூழ் கழல் வேந்தே

செம்பியன் மூதூர் சென்று புக்கு ஆங்கு        85

வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய

சித்திர மண்டபத்து இருக்க வேந்தன்

அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு

தமரின் சென்று தகை அடி வணங்க

 

சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு        100

கயம் தலை யானையின் கவிகையின் காட்டி

இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து

உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி

அமர்க்களம் அரசனது ஆக துறந்து

தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல்        105

கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்

புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று

ஏனை மன்னர் இருவரும் கூறிய

நீள்_மொழி எல்லாம் நீலன் கூற

------------------------------------------------------------

 

வளை உடை கையில் சூலம் ஏந்தி        60

கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை_ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை

இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன்        65

தலை மிசை நின்ற தையல் பலர் தொழும்

அமரி குமரி கவுரி சமரி

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை

ஐயை செய்யவள் வெய்ய வாள் தடக்கை

 

அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு        150

படு கடன் இது உகு பலி முக மடையே

வம்பலர் பல்கி வழியும் வளம் பட

அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்

சங்கரி அந்தரி நீலி சடாமுடி

செம் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்        155

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு

கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்

விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்

 

அங்காடி பட்டு அரும்_கலன் பகரும்        150

சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை

முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன்

வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன்

பரதன் என்னும் பெயரன் கோவலன்

விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்        155

ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு

வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி

கொலை_கள பட்ட சங்கமன் மனைவி

நிலைக்களம் காணாள் நீலி என்போள்

 

பாடல் தொகுப்பு உதவி - http://tamilconcordance.in/

Thursday, 23 June 2022

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு

 தினமலர் செய்தி - கீழடியில் 8ம் கட்ட அகழாய்வுமணலுாரை புறக்கணித்த தொல்லியல் துறை

திருப்புவனம்--தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் 8ம் கட்ட அகழாய்வில் மணலுாரை தொல்லியல் துறை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையினர் பண்டைய மக்களின் வாழ்வியல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மாநில தொல்லியல் துறை கீழடியுடன் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வை மேற்கொண்டது. ஆனால் 8ம் கட்ட அகழாய்வு பிப்ரவரி 13ல் தொடங்கப்பட்ட போது அகரம், கொந்தகை, கீழடியில் மட்டும் பணிகள் ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது. மணலூரில் பணிகள் தொடங்கப்படவில்லை.மணலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் முத்துச்சாமி கூறுகையில், பண்டைய காலத்தில் மணலூரை மையப்படுத்தி மதுரை நகரம் இயங்கி வந்தது. இன்றளவும் கழுகேர்கடை, அகரம், கொந்தகை, கீழடி உள்ளிட்ட கிராமங்களில் திருவிழாக்கள் என்றால் மணலூர் கண்மாயில் இருந்து தீர்த்தம் எடுத்து தான் தொடங்குவார்கள், என்றார்.பேராசிரியர் காளைராசன் கூறுகையில், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலானகுழு ஓர் ஆண்டிற்கும் மேலாக மணலூரில் ஆய்வு செய்த பின் தான் கீழடியில் அகழாய்வை தொடங்கினர். முதன் முதலில் அகழாய்வு தொடங்கிய இடம் மணலூர் கண்மாயை ஒட்டிய பகுதி தான், பண்டைய காலத்தில் அதுவும் மணலூராகத்தான் இருந்திருக்கும், என்றார்.மணலூர் அருண் கூறுகையில், பண்டைய இதிகாசங்களில் மணவூர் என குறிப்பிட்டுள்ளது. தற்போதைய மணலூரைத்தான், அகழாய்வில் முதன் முதலில் மணலுாரில் தான் இரும்பை உருக்க பயன்படுத்தும் உலைகலன் கிடைத்தது. அகழாய்வு முதன் முதலில் மணலுாரில் இருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும், இரு முறை அகழாய்வு செய்தும் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தொல்லியல் துறையினர் 8ம் கட்ட அகழாய்வை நடத்தவில்லை.மணலுார் அம்மன் கோயிலை ஒட்டிய கண்மாய் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும், ஏற்கனவே இந்த இடத்தில் மணல் அள்ளிய போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது எனவே மணலுாரில் அகழாய்வை தொடங்க வேண்டும், என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3059803

Saturday, 18 June 2022

கீழடி – மணலூர் கல்வெட்டு

கீழடி – மணலூர் குறிப்புகள் 

திருவிளையாடற் புராணம் உக்கிரபாண்டியனுக்கு மணவூர் காந்திமதியைத் திருமணம் செய்துவைத்ததாக உள்ளது.

தீந்தண் புனல்சூழ் வடபுலத்து மணவூ ரென்னுந் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திருமரபின் விளங்குஞ் சோம சேகரனென்
றாய்ந்த கேள்வி யவனிடத்துத் திருமா தென்ன வவதரித்த
காந்தி மதியை மணம்பேச விருந்தா ரற்றைக் கனையிருள்வாய்.


மணலூர் மணவூர் "சீர்க்கிரி" (?)என்று மகாபாரதத்தில் உள்ளது.

ஸிகதா என்றால் மணல், வடமொழியில். எனவே, ஸிக்கதாபுரி < மணலூர் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

சோமசுந்தர பாண்டியனும் தடாதகைப் பிராட்டியும் இன்புற்றுப் பிறந்தவன் உக்கிரபாண்டியன்.  இவனுக்கு மணவூர் சோமசேகரனின் புதல்வியான காந்திமதியைத் திருமணம் செய்து வைத்தனர்.
உக்கிரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு கடல் (சுனாமி) கரைகடந்து மதுரை வரை வந்துள்ளது.  இதனால் காந்திமதி பிறந்து வளர்ந்த மணவூர் மண்ணுள் புதையுண்டு போனது.
மணவூரின் மேற்கே தற்போது (கீழடி அருகே) தொல்லியல்துறையினரின் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
மணவூர்  புதையுண்டுள்ள இடத்தில் பண்டைக் காலத்திய காந்திமதி வாழ்ந்த வரலாற்றுத் தடையங்களைத் தேடித் திரிந்த போது,  அன்னை மீனாட்சியின் பெயரையும் காந்திமதி என்ற பெயரையும் தாங்கிய  இக்காலத்திய கல்வெட்டு ஒன்றை என்னால்  காண முடிந்தது.






dorai sundaram  22/10/2016

கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு:
1 சாலிகவாகன
2 சகாப்த்தம்  1.. ( த்த- கூட்டாக ஒரே எழுத்து)
3 5 ற்மேல்ச் செ
4 ல்லாய்நின்ற பிரமா
5 தீட்ச வரு. சித்திரை (மீ)
6 30 உ சங்கிலி சேரு
7 வை காறரவர்கள்  ப
8 பட்டையமாவது மது
9 ரையில் மீனாட்சி சுந்த
10 ரறைக்கட்டளைக்(கி)
11  காந்திமதி மகள் தா
12 யம்மாளுக்கு நம்மிட (க்கு- கூட்டாக ஒரே எழுத்து)
13 பேற் குடுத்து மண (த்து- கூட்டாக ஒரே எழுத்து)
14 லூரில் கோரஞ்
15 செய்தடி 3(1) உ
16 (உம்பள) .. கல்
17 லுங் காவே(ரி) வரை(க்)
18 கும்

குறிப்பு:   கல்வெட்டில் சாலிவாகன் சகாப்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும்
தெளிவின்மை காரணமாகக் கல்வெட்டின் காலத்தைத் துல்லியமாகக்  கணிக்க இயலவில்லை. தமிழாண்டின் பெயர் பிரமாதீட்ச  என்னும் குறிப்பு கி.பி. 1853, 1913 ஆகிய இரு ஆண்டுகளையும் குறிக்கும். 
சங்கிலி சேர்வைக்காரர் என்பவர் பட்டையம் அளித்துள்ளார். மீனாட்சிசுந்தரர்
அறக்கட்டளை என்பதாக் இறைவர்க்கு ஒரு கொடை அளிக்கப்படுகிறது. 
காந்திமதி மகள் தாயம்மாள் குறிக்கப்படுகிறார். பட்டயம் அவருக்கு  அளிக்கப்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
“நம்மிட பேர் குடுத்து மணலூரில் கோரஞ்செய்தபடி”  என்பதன்  பொருளும் புலப்படவில்லை.  கொடை, கல்லும் காவேரியும் உள்ளவரை
நடக்கவேண்டும் என்னும் குறிப்புள்ளது.

சுந்தரம்.


 ஸ்ரீ சங்கலிச்சேர்வை வாரிசான திருமதி. காந்திமதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தேவாரம் பாடியவர்க்கு மானியமாக மணலூரில் உள்ள மூன்று தடி நிலத்தை உபயமாக வழங்கியுள்ளார் 

 எவனொருவன் அக்கல்வெட்டையோ  அல்லது அந்த உபயம் அளித்த நிலத்தையோ அழிக்கவோ அல்லது தான் அதை அடைய முற்பட்டாலோ காவிரிக் கரை துவங்கி குமரிக்கரை வரை உள்ள மக்கள் செய்யும் எல்லாப் பாவங்களும் அவனைச் சேரும் .

15 செய்தடி 3(1) உ
16 (உம்பள) .. கல்
17 லுங் காவே(ரி) வரை(க்)
18 கும்

சம்பளம் உம்பளம்

இது “உம்பள” என்னும் சொல். தானமாகக் கொடுத்த நிலம் எனப் பொருள். உம்பளம்¹ umpaḷam
, n. [T. umbaḷamu, K. umbaḷi.] Land granted rent-free for the performance of services; மானியநிலம். Loc.
உம்பளித்தல், உம்பளம் = தானமாக பரம்பரையாக அனுபவித்துக்கொள்ள தரும் முற்றூட்டு, கொடைநிலம்.

தானமாகக் கொடுப்பதை “உம்பளிக்கை” எனச் சொல்கிறோம்.

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=759
”இதே போல் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டுகள் மூன்றில் குறிக்கப்பட்டிருந்த மைத்துனர் அழகப் பெருமாள், அண்ட நாட்டுப் பெருமணலூர் மந்திரி பல்லவராஜன், திருமல்லி நாட்டுத் தடங்கண்ணிச் சிற்றூருடையான் சோறந் உய்யநின்றாடுவானான குருகுலராயன் ஆகிய அரசு அலுவர்களின் பெயர்கள் அவை மாறவர்மன் சுந்தரபாண்டியரின் கல்வெட்டுகள் என்பதை உறுதிசெய்ய உதவின. ”

http://www.thehindu.com/features/metroplus/society/keezhadi-archaeological-excavation/article7557728.ece
The second locality has more of graffiti on pottery, bone tools and iron weapons. “We have got the fish symbol, both as an art and as a ‘sign representing a clan,” says Vadivel. Red-and-black pottery, groove tiles used for laying roofs and the typical flat brick measuring 38 centimetres are the other indications that the city unearthed belongs to the Sangam Age. “Keezhadi could as well be the ‘Peru Manalur’, the city of Sangam Pandiyas mentioned in literature,” suggests Amarnath. 

பழைய திருவிளையாடற் புராணத்தில் மணலூர்புரம் என்றுள்ளது. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலில் மணவூர் என்றுள்ளது. மஹாபாரதத்தின் வடமொழிச் சுவடிகளில் - பஞ்ச த்ராவிட தேசத்துச் சுவடிகளில் - மணலூர்புரம் என்றுள்ளது. 
நா. கணேசன்




-----------------------------------------------------------

தினமணி செய்தி -  மணலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் தனது வயலில் கண்டெடுத்த பழங்கால கல்வெட்டு குறித்து கொடுத்த தகலின் பேரில் கி.பி 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டினை சொ. சாந்தலிங்கம்  உதவி செயலர் பா. ஆத்மநாதன் ஆகியோர் கல்வெட்டை படியெடுத்தனர். 

https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2014/aug/06/திருப்புவனம்-அருகே-பழங்கால--952340.html

-----------------------------------------------------------



Monday, 30 May 2022

அகரத்தில் சுடுமண் உறைகிணறு


31.05.2022 

தினத்தந்தி செய்தி -

அகரத்தில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை திருப்புவனம், திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது அகரம் கிராமம். இங்கு கடந்த வருடம் நடைபெற்ற 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின்போது சிறிய, பெரிய பானைகள், ஓடுகள், சுடு மண்ணால் ஆன உறைகிணறுகள், சுடுமண்ணால் ஆன பொம்மைகள், பழங்கால செங்கல் சுவர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இங்கு 8-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு தோண்டப்பட்ட முதல் குழியில் மண்பாண்ட ஓடுகள், சிறிய பானைகள், சிறுவர்கள்-பெண்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், பழங்கால விலங்குகளின் எலும்புகள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன. 2-வது குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டபோது சுடுமண் பாசிமணிகள், சிவப்பு நிற சிறிய மண் பானை போன்ற குடுவை கிடைத்து உள்ளது. தற்போது 3-வது குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது 2 அடுக்குகள் உடைய சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முதல் அடுக்கின் மேல்புறம் வட்ட வடிவில் அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது. இதன் மூலம் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பண்டைய தமிழர்கள் சிந்தனை செய்து, சுடுமண் உறைகிணறு உள்ளிட்ட நீர்நிலைகளை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது இன்னும் கூடுதலாக சுடுமண் உறை அடுக்குகள் கிடைக்கலாம் என தெரிய வருகிறது.


https://www.dailythanthi.com/News/State/well-711446

Sunday, 22 May 2022

கீழடியில் கிடைத்த இரும்பு

கீழடியில் கிடைத்த இரும்பு 



தினமலர் செய்தி --
திருப்புவனம் :கீழடியில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புஉள்ளது என தொல்லியல்ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.கீழடியில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகின்றன. தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் இப்பணியில் சிவப்பு நிற பானைகள் கடந்த வாரம் கண்டறியப்பட்டன. இரண்டு பானைகளையும் நீண்ட சுவர் இணைக்கும் வகையில் அமைந்துஉள்ளது. சுவரின் அருகில் இரும்பு பொருட்களும், இரும்பை உருக்கும் போது வெளியாகும் கழிவுகளும் கிடைத்துள்ளன. நுண்துகள் மணற்பரப்பும் காணப்படுவதால் உலைகலனாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே மணலுார், கீழடியில் உலைகலன் கண்டறியப்பட்ட நிலையில் இதுவும் உலைகலனாக இருக்க வாய்ப்புஉள்ளது. எனவே கீழடியில் நெசவு மட்டுமல்லாது இரும்பு தொழிற்சாலையும் செயல்பட்டு வந்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3035098

உறைகிணறு (மெசபடோமியா)


20 மே,2022  பிற்பகல் 6:41
4000 BC க்கு முன்னர் வரலாற்றில் முதல் நீர் வடிகால் அமைப்பாகக் கருதப்படும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வலையமைப்பாகப் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டக் குழாய்களை  பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லியானார்ட் வூலி மற்றும் அவரது மனைவி கேத்தரின் 1930 இல் கண்டுபிடித்துள்ளனர்..
ஊர் (மெசபடோமியா) 

British archaeologist Leonard Woolley and his wife Catherine at the moment of the discovery of pottery pipes that were used as a sewage and rainwater network in what is considered the first water drainage system in history before about 4000 BC. Ur (Mesopotamia) in 1930
youtube:https://www.youtube.com/channel/UC1P0Ba0F_DwYTom947IvB8w

Friday, 6 May 2022

கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில், சுடுமண் பானைகளால் கட்டப்பட்ட நீளமான சுவர்

கீழடி 
எட்டாம் கட்ட அகழாய்வு
, சுடுமண் பானைகளால் கட்டப்பட்ட நீளமான சுவர் 

தினமலர் பத்திரிக்கைச் செய்தி -  திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் எட்டாம் கட்ட அகழாய்வில், சுடுமண் பானைகளால் கட்டப்பட்ட நீளமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் அகழாய்வு பணிகள் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு நடந்து வருகிறது. தொல்லியல் துறை இயக்குனர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் அலுவலர்கள் ரமேஷ், அஜய், சுரேஷ், காவ்யா உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு புதிதாக தோண்டப்பட்ட குழியில் சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அருகில் செவ்வக வடிவில் சுடுமண் கற்களாலான நீளமான சுவர் வெளிப்பட்டது.இந்த சுவரின் கீழ்ப்பகுதியில் வரிசையாக மூன்று பானைகள் உள்ளன. பண்டைய காலத்தில் சுவர்களை தாங்க துாணிற்கு பதில் உறுதியான சுடுமண் பானைகள் பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்படுகிறது.

மூன்று பானைகளும் சம அளவில் உள்ளதால், சுவர்களை தாங்குவதற்கு இந்த பானைகள் பயன்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.சுவர் முழுமையாக வெளிப்பட்டால் மட்டுமே பானைகளின் முழு பயன்பாடு தெரியவரும்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3023216

Tuesday, 3 May 2022

தோடுடைய செவியன், தோடுடைய காதுடையன்


பத்திரிக்கைச் செய்தி - 


 

சென்னை: கீழடியில் கிடைத்த சுடும் சிற்பத்தின் அழகை விவரிக்கும் விதமாக "அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்று மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு 3 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதனைத் தொடந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 ஆம் கட்ட அகழாய்வு முதல் 7வது கட்ட அகழ்வாய்வுகளில் இது வரை 18,000-க்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கீழடியில் தொடர்ந்து அகழாய்வுப் பணி நடத்தத் தொல்லியல் துறை நடைவடிக்கை மேற்கொண்டுள்ளது.


“மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?

அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?”

கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது வெளிப்பட்டிருக்கும் அழகிய சுடுமண் சிற்பம். pic.twitter.com/6Oh8wploiU

— Thangam Thenarasu (@TThenarasu) May 2, 2022


இந்த நிலையில் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில் இந்த அகழ்வாய்வுப் பணியின் போது சுடுமணல் சிற்பம் கிடைத்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு"மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன? அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்று பதிவு செய்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/794744-is-the-beautiful-mountain-beautiful-is-this-statue-beautiful-thangam-thenarasu.html

Saturday, 23 April 2022

மணலூர் கூடல் முடத்திருமாறன் பற்றிய தகவல்

(கீழடி) மணலூர், கூடல், முடத்திருமாறன் பற்றிய தகவல்


செந்தமிழ்  பக்கம் 246

ஆகவே ஒவ்வொரு மன்னனது ‘சராசரி’ ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டு ஆண்டுகளாகும்.  கடைச் சங்க காலத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் சிலரது பெயர்களே நற்றினை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களால் அறியப்படுகின்றன.  அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிகப் பழமை வாய்ந்தவன் என்பது களவியலுரையால் பெறப்படுகின்றது.  எனவே அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம்.

பாண்டியன் முடித்திருமாறன் -

குமரிநாடு கடல்கோளால் அழிந்த பின்னர், குமரியாற்றிற்கும் தாம்பிரபருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத் தலைநகராயிருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவன்.  ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும்.

இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோளால் பாண்டியநாட்டின் பெரும்பகுதியும் அதன் தலைநகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன.(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5) 

இக்கடல்கோளினால் எண்ணிறந்த தமிழ்நூல்கள் இறந்தன.   இச்செய்தியை,

“ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”

என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க.  தமிழ்மக்கள் செய்த தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும்.  இக் கடல்கோளுக்குத் தப்பியுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள்.   இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர், மதுரை என்று தற்காலத்து வழங்கும் கூடன்மா நகரையடைந்தனர்.  இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக் கொண்டு கடைச் சங்கத்தை அங்கு நிறுவினான்(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5)

பல நல்லிசைப் புலவர்கள் தமிழாராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவாராயினர்.  இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச் சங்கத்தை ........

-----------------------------------------------

நன்றி - இத் தகவலை வழங்கியவர்
சிந்துவெளி முத்திரைகள் தமிழ் எழுத்துக்களே என நிறுவி வரும்,
திருச்சிராப்பள்ளி ஐயா “போஸ்”  அவர்கள்

Thursday, 2 September 2021

சூழியம் விழுங்குசிறு கொண்டை

 கீழடியில் கிடைத்த கொண்டை

சூழியம் விழுங்குசிறு கொண்டை


மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்கள் கீழடி தொல்லியல் அகழாய்வில் அகரத்தில் கிடைத்த சிறு கொண்டயுடைய பெண் உருவச் சுடுமண் பொம்மையின் படத்தை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.  16 ஜுலை 2021 அன்று தினமலர்[1] நாளிதல் இச்செய்தியை வெளியிட்டுத் தமிழரின் தொன்மையை உலகறியச் செய்துள்ளது.  கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் ஏழு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மூன்றாவதாக தோண்டப்பட்ட குழியில் 65 செ.மீ., ஆழத்தில் இந்தச் சுடுமண் உருவத்தைத் தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.

            பெருத்த கண்கள், மூக்கு, உதடு எனப் பேரழகியாகத் தோன்றும் இந்தப் பெண் தன்னுடைய தலைமுடியை இடதுபுறம் அள்ளிச் சுருட்டி முடிந்து பெரிதாக கொண்டை போட்டுக் கொண்டுள்ளாள்.  முகத்திற்கு மேலும் அழகூட்ட முகத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறச் சாயம் பூசியுள்ளாள்.  இரண்டு காதுகளிலும் கலைநயத்துடன்கூடிய பெரிய காதணிகளை அணிந்துள்ளாள்.  நெற்றியின்  நடுவில் பதக்கத்துடன் இரண்டு பக்கங்களிலும் பூக்களால் தொடுக்கப்பட்ட ஆபரணத்தால் நெற்றியையும் தலைமுடியையும் சுற்றிக் கட்டிக் கொண்டுள்ளாள். 

            நெற்றிச் சுட்டியும், சூழியமும் -  தலைமுடியில் நேர்வகிடு எடுத்து நடு நெற்றியில் ஒரு பதக்கத்தைத் தொங்கவிட்டிருப்பர்.  இந்த ஆபரணத்திற்கு “நெற்றிச் சுட்டி, நெற்றிச் சூடி, நெற்றிச் சுற்றி” என்று பெயர்.  நெற்றியின் நடுவே பதக்கம் வைத்து, இரண்டு பக்கத்திலும் மலர்களை மாலைபோல் தொடுத்து, நெற்றியையும் தலைமுடியையும் சூழ்ந்து கட்டப்பட்டுள்ள இந்த ஆபரணத்திற்குச் “சூழியம்” என்று பெயர். 

            பூமாலையால் சுற்றிக் கட்டப்பெற்ற கொண்டையைச் சங்கப்பாடலான பரிபாடல் பூ மாலை கொண்டைஎன்று குறிப்பிடுகிறது. (பரிபாடல் 24).

 


நெற்றிச் சுட்டி அணிந்துள்ளார்

சூழியம் அணிந்துள்ளார்

“சூழியம் விழுங்கு சிறு கொண்டை” மலையத்துவச பாண்டியனின் மகளாகத் தடாதகைப் பிராட்டியாக அன்னை மீனாட்சி அவதரித்தபோது, அவளது சிறு கொண்டையில் “சூழியம்” அணிந்து தோன்றினாள் என்கிறது திருவிளையாடற் புராணம்.   தென்னவன் பாண்டியன் மலையத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் குழந்தைப்பேறு வேண்டி மாபெரும் யாகம் செய்கின்றனர்.  அந்த யாக குண்டத்தில், ஒளிபொருந்திய முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட சிறிய கொண்டையுடன்,  மார்பில் முத்துமாலை சந்திரனைப் போன்று ஒளிவிடவும், ஒளிமிக்க உதயசூரியனைப் போன்று ஒளிவிடுகின்ற கடலிற்றோன்றிய பவளத்தின் மாலையானது ஒளி வீசவும்தெளிந்த அமுதம் போன்ற, மெல்லிய மழலைுச் சொற்கள் தோன்றவும், புன்னகை பூக்கும் கூரிய பற்கள் வெளிப்படவும், இகழ்தல் இல்லாத பல உயிர்களையும் எல்லா உலகங்களையும் பெற்றவளாகிய உமையவள், மூன்று முலைகளை உடைய  ஒருபெண் மகவாக, மூன்று வயதுடன் தோன்றி நின்றாள் என்கிறது திருவிளையாடற் புராணம்.

            சூழியம் விழுங்கு சிறு கொண்டை” உடையவளாக மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் இன்றும் அடியார்களுக்குக் காட்சி அருளி, உலக உயிர்களை யெல்லாம் காத்து அருளி வருகிறாள். 

 சாய்ந்த கொண்டைச் சடையோன் -

            அன்னை மீனாட்சியின் கொண்டையானது அவளது இடதுபுறமாகச் சாய்ந்திருக்கும்.  மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவர் கொண்டையானது எப்போதும் நேராக நிமிர்ந்து இருக்கும். ஆனால் சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி மதுரைக்கு ஓட்டிக் கொண்டு வந்து, பாண்டியனிடம் குதிரைகளை ஒப்படைத்த போது, சிவபெருமானின் கொண்டையானது சாய்ந்து இருந்தது என்கிறது திருவிளையாடற் புராணம்.

            “ஒரு புறஞ்சாய்ந்த கொண்டையும்,  திருமுடிச்சாத்தும், திருமுடிப்பாகையும், ஒளி பொருந்திய வைரம் பதித்த கண்டிகைகளும், வீரவளைகளும்  குண்டலங்களும், திருநீற்றினை மூன்று கீற்றாக அணிந்த திருநுதலும், வெள்ளிய ஆடையும் கவசமும் அணிந்துகொண்டு, தொண்டர்களின் மனத்தினின்றும் நீங்காத சிவபெருமான் ஆவணிமூல நாளில் குதிரைகளை ஓட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தார்” என்கிறது திருவிளையாடற் புராணம். 

(பாடல் வரிசை எண் 2836).  இத் திருவிளையாடலையெல்லாம் சோமசுந்தரர் மீனாட்சியிடம் கூறித் தமது திருக்கோயிலில் வீற்றிருந்தார் என்கிறது புராணம்.   


கீழடியல்ல இது கூடல் என்ற மதுரை -

            கீழடியருகே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ள இந்தத் தொல்லியல் மேடு சுமார் 5 கி.மீ. சுற்றளவு உடையது. இது இன்றைய மதுரையின் நான்கு வெளிவீதிகளின் சுற்றளவுக்குச் சமமாகும். அதாவது இன்றைய மதுரையின் சுற்றளவும்,  கீழடி தொல்லியல் மேடும் ஒரே பரப்பளவு உடையன.  கூடல்  என்ற மதுரை மாநகருக்கு மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளதாம்.  இதை  ''மாடமலி மறுகிற் கூடற் குடவயின் ....'' என்று முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார்.  “திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே கூடல் மாநகர் இருந்துள்ளது” என்பதை இந்தப் பாடல்வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.   இதை உறுதி செய்யும் வகையில், “செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது“ என்று எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149) என்ற சங்கப் புலவரும் பாடியுள்ளார்.  இவ்வாறாகத் தமிழ் இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும்,  தொல்லியல் மேட்டின் பரப்பளவின் அடிப்படையிலும் கீழடியருகே புதைந்துள்ள நகரத்தின் பெயர் “கூடல் என்ற மதுரை” என்பது தெளிவாகிறது.

            இந்தக் கருத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அகரத்தில் கிடைக்கப் பெற்றுள்ள சுடுமண்ணால் செய்யப்பெற்றுள்ள பெண்ணின் முக அமைப்பும் அலங்காரமும், அன்னை மீனாட்சியின் முகச்சாயலையும் அலக்காரத்தையும் ஒத்துள்ளது.  இன்றைய மதுரை மாநகரின் வாஸ்து இலக்கணத்தைக் கருத்திற் கொண்டால், இந்தச் சுடுமண் பொம்மை உருவம் கிடைக்கப் பெற்றுள்ள அகரத்திற்குக் கீழே கூடல்நகரின் அரண்மனை புதையுண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

            சூழியம் விழுங்கு சிறு கொண்டையுடன் அன்னை தடாதகைப்பிராட்டி மலையத்துவச பாண்டியனின் வேள்விக்குண்டத்தில் தோன்றி இந்தப் பாரததேசம் முழுமையும் வென்று ஆண்டாள்.  அன்னை மீனாட்சியின் முக அமைப்பை ஒத்துள்ள, சூழியம் விழுங்கு சிறுகொண்டையுடைய சுடுமண் உருவம் அகரத்தில் அகழாய்வுக் குழியிலிருந்து தோன்றியுள்ளது.  இதனால், அன்னை மீனாட்சியின் அம்சமாக மதுரையில் தோன்றும் பெண் ஒருத்தி அகண்டபாரதத்தை ஆளப்போவது உறுதி என்றாகிறது. இது மதுரை மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழருக்கும் கிடைத்த பெரும் பேறு ஆகும். 

கீழடியில் கிடைப்பனவும் கிடைக்காதனவும்    

            கீழடியருகே “மணலூர்” உள்ளது.  இந்த ஊரின் பண்டைய பெயர் “மணவூர்” ஆகும். இந்த மணவூரைத் தலைநகராகக் கொண்டு “குலசேகரபாண்டியன்” ஆண்டு வந்துள்ளான்.  அவன் மணவூருக்கு மேற்கே இருந்த கடம்பவனத்தை அழித்து தற்போதுள்ள மதுரையை மீட்டுருவாக்கம் செய்து, மணவூரில் வாழ்ந்த மக்களையெல்லாம் மதுரையில் குடியமர்த்தினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.  கீழடியருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரமானது குலசேகரபாண்டியனால் “கைவிடப்பட்ட தலைநகரமாகும்”.  இங்கிருந்த மக்கள் அனைவரும் இப்போதுள்ள மதுரைக்குக் குடிபெயர்ந்து செல்லும்போது,  அவர்களது வழிபாட்டுப் பொருட்களையும், புழங்கு பொருட்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்று விட்டனர்.  இதனால், கீழடி அகழாய்வில் பண்டைய மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த,  உபயோகித்துக் கொண்டிருந்த எந்தவொரு பொருளும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.  மாறாக, தொலைந்துபோன, உடைந்து போன அல்லது கைவிடப்பட்ட பொருட்கள் மட்டுமே  அகழாய்வில் கிடைக்கும்.  

அன்பன்

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்,

ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்.

மேனாள் துணைப்பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

28 அ, குருநாதர் கோயில் தெரு, கோட்டையூர் 630106, சிவகங்கை மாவட்டம்.

அலைபேசி 834 826 6418, பகிரி +91 94435 01912

மின்னஞ்சல் - kalairajan26@gmail.com


 

கற்றவை -

 1)  https://www.dinamalar.com/news_detail.asp?id=2803206 

 ஜூலை 16, 2021  01:29

------------------------------------------------------------------

 2) திருவிளையாடற் புராணம்  

பாடல் வரிசை எண் 533

நொய்தழ லெரிக்கடவு ணோற்றபய னெய்தக்

கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்

தைதவிழிதழ்க்கமல மப்பொழு தலர்ந்தோர்

மொய்தளிர் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன.

பாடல் வரிசை எண்  534.

விட்டு இலகு சூழியம் விழுங்கு சிறு கொண்டை

வட்ட மதி வாய்க்குறு முயல் கறையை மானக்

கட்டி அதி நாற்றிய கதிர்த் தரள மாலை

சுட்டி அதில் விட்டு ஒழுகு சூழ் கிரணம் ஒப்ப.         

பாடல் வரிசை எண்  535.

தீங்கு தலை இன் அமுதம் மார்பின் வழி சிந்தி

ஆங்கு இள நிலா ஒழுகும் ஆர வடம் மின்ன

வீங்கு உடல் இளம் பரிதி வெம் சுடர் விழுங்கி

வாங்கு கடல் வித்து உரும மாலை ஒளி கால.

பாடல் வரிசை எண்  536.

சிற்றிடை வளைந்த சிறு மென் துகில் புறம் சூழ்

பொன் திரு மணிச் சிறிய மேகலை புலம்ப

வில் திரு மணிக் குழை விழுங்கிய குதம்பை

சுற்று இருள் கடிந்து சிறு தோள் வருடி ஆட.

பாடல் வரிசை எண்  537.

தெள் அமுத மென் மழலை சிந்து இள மூரல்

முள் எயிறு அரும்ப முலை மூன்று உடையது ஓர் பெண்

பிள்ளை என மூ ஒரு பிராய மொடு நின்றள்

எள் அரிய பல் உயிரும் எவ் உலகும் ஈன்றாள்.

----------------------------

பாடல் வரிசை எண் 2836.

சாய்ந்த கொண்டையும் திரு முடிச் சாத்தும் வாள் வயிரம்

வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்

காய்ந்த புண்டர நுதலும் வெண் கலிங்கமும் காப்பும்

ஆய்ந்த தொண்டர் தம் அகம் பிரியாது அழகு எறிப்ப.

---------------------------

கொண்டை  என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல் வரிகள் -

1) செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே - பரி 9/43

2) புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை/எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட - பரி  24/51,52

3) கொண்டை கூழை தண் தழை கடைசியர் - புறம் 61/1

(நன்றி - http://tamilconcordance.in/SANG-18A.html)


 

சூழியம் விழுங்கு சிறு கொண்டை யுடைய சுடுமண் உருவ பொம்மை.  கூடல் மாநகரின் அரண்மனை இருந்திருக்கலாம் என்று கருதப்படும் இடத்தில் கிடைத்துள்ளது.


சூழியம் விழுங்கு கொண்டையுடன் அருள்மிகு மதுரை மீனாட்சியம்மன்  அருளாட்சி செய்யும் அற்புதக் காட்சி.