Thursday, 21 May 2020

தண்டபாணித் தெய்வம்

தண்டபாணி
கருப்புச் சட்டை போட்ட எல்லோரும் தி.க.வினர் என்று சொல்வது போலக் காவி கட்டிய எல்லோரைம் பாஜக.வினர் என்று சொல்லி வருகின்றனர்.  பரவாயில்லை.   ஆனால் போகிற போக்கில், கையில் தண்டம் வைத்துள்ள தெய்வத்தை “லகுலீசர்” என்று சொல்லிவிட்டுச் செல்கின்றனர். அவர் தலைக்கு மேலே எழுதியும் வைத்து விடுகின்றனர்.  

கையில் தண்டம் வைத்திருப்பவரைத் தண்டபாணி என்றுதானே சொல்லிட வேண்டும்.  ஆனால் ஆடையணிந்து, ஆபரணங்களும் அணிந்து, சடாமகுடம் தாங்கிச் சர்வ அலங்காரத்துடன், 
 இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தரையில் ஊன்றி அமர்ந்து, இடதுகையில் தண்டம் ஏந்தி இருப்பவரைத் தண்டபாணித் தெய்வம் என்று சொல்லாமல் “லகுலீசர்” என்கின்றனர்.   


மேலேயுள்ள தெய்வம்  மதுரை அருகேயுள்ள அரிட்டாபட்டி குடைவரைக் கோயிலில் சிவலிங்கத்திற்கு வலப்பக்கம் உள்ளது.  இந்தத் தெய்வத்தின் பெயர் இலகுலீசர் என்று எழுதி வைக்கப் பெற்றுள்ளது.  சிவலிங்கத்திற்கு வலப்பக்கம் பிள்ளையார் உள்ளார்.



இந்தக் குடை வரை கோயிலானது மலையைக் குடைந்து செய்யப்பட குடைவரை கோவில் ஆகும். இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். இக்கோயில் வாயிலில் துவாரகபாலகர்களும் , குடை வரையின் வெளிமுகப்பில் விநாயகரும் , கோவிலின் உள்ளே சிவலிங்கமும், இலகுலீசர் சிலைகளும் உள்ளது. இக்கோயில் அருகில் சிறு மண்டபத்தில் ஒரு பெண் தெய்வம் உள்ளது. அம்மண்டபம் தற்போது இடைச்சி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் அருகில் நீர்ச்சுனைகள் உள்ளன. இவை தீர்த்தச்சுனை நீர் என அழைக்கபடுகிறது. (ref - ta.wikipedia.org/s/pob)
--------------------------
இலகுலீசர் - இலகுலீசர், லகுலீசர் அல்லது நகுலீசர் சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர். இவரை, ஏற்கனவே இருந்த பாசுபத சைவத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்கியவர் என்று சொல்வோரும் உண்டு. கி.மு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், குஜராத்தின் காயாவரோகண் பகுதியில், அந்தணர் குலத்தில் அவதரித்ததாகச்சொல்லப்படுகின்றார். பாசுபதம் புகழ்பெற்ற பிற்காலத்தில், சிவனின் அவதாரமாக மேனிலையாக்கப்பட்ட இவர், சிவசின்னங்களுடன் காட்சி தரும் சிற்பங்கள், தென்னகம் உட்பட, இந்தியாவெங்கணும் வடிக்கப்பெற்றன. இலகுலீசர் எனும் பெயருக்கேற்ப (இலகுடம் சங்கதம்: கோல்,மழு) அவை ஒரு கையில் தண்டாயுதம் தாங்கியவையாக அமைந்தன. (ref - ta.wikipedia.org/s/5mk1)
-----------------------------------
இலகுலீசர் = இல + குலீசர் என்று பிரித்துப் பொருள் காண வேண்டும்.
குலிசம் என்றால் எலும்பினால் செய்யப்பெற்ற வச்சிராயுதம் என்று பொருள்.  இதற்குத் தமிழில் சான்றுகள் நிறைய உள்ளன.  (குலிசத் தமரர்கோன் = இந்திரன்  - கம்பராமாயணம்).  இலக்கியச் சான்றுகள் கீழே இணைக்கப் பெற்றுள்ளன.

தண்டம் வேறு, குலிசம் வேறு.
தண்டாயுதம் வேறு, குலிச ஆயுதம் வேறு.
தண்டப்படை என்பது வேறு.  குலிசப் படை என்பது வேறு.

குலிசம் என்பது வச்சிராயுதம் ஆகும். இது முனிவரால் இந்திரனுக்கு வழங்கப் பெற்ற ஆயுதம் ஆகும். 
தண்டம் என்பது கர்லாக்கட்டை போன்ற ஆயுதம் ஆகும்.  இது முருகன் மற்றும் கருப்பணசாமி தெய்வங்களிடம் உள்ள ஆயுதம் ஆகும்.

அரிட்டாபட்டியில் குடவரைக்கோயிலில் சிவலிங்கத்திற்கு இடப்பக்கம் உள்ளவர் பிள்ளையார்.  வலப்பக்கம் உள்ளவர் தண்டபாணித் தெய்வம் ஆவர்.  இவர் பெயர் இலகுலீசர் அல்ல. குலீசர் என்பது குலிசம் (வச்சிராயுதம் ஏந்திய) இந்திரனைக் குறிக்கும்.  

---------------------------
(படத்தில் தண்டாயுதம் வழிபாடு)

(படத்தில் தண்டம் ஏந்திச் சண்டைக்குத் தயாரான நிலையில்)

(படத்தில் தண்டம் ஏந்திப் போரிடும் மகிசாசுரன்)

சங்கப்பாடல்கள், திருக்குறள் மற்றும் திருவிளையாடற் புராணத்தில் 'தண்டம்', ‘குலிசம்’ என்ற சொற்கள் உள்ள பாடல்களின் தொகுப்பு  கீழே இணைக்கப் பெற்றுள்ளது.

தண்டபாணித் தெய்வத்தை வணங்குதல் செய்வோம்.  தண்டனைகள் இல்லா வாழ்க்கை பெறுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
-----------------------------------------------------------------------------------------
திருக்குறளில் தண்டம் 
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் - குறள் 57:7

திருவிளையாடற் புராணத்தில் 
163.
மழுக்கள் வச்சிரம் கார் முகம் வாளி முக் குடுமிக்
கழுக்கள் சக்கரம் உடம் பிடிகப் பண நாஞ்சில்
எழுக்கள் நாந்தகம் பலகை தண்டி இவை முதல் படையின்
குழுக்கள் ஒடி இகல் விந்தை வாழ் கூடமும் பல ஆல்.

370.
விழுங்கிய படை எலாம் வேறறத் திரண்டு
ஒழுங்கிய தான் முதுகம் தண்டு ஒன்றியே
எழும் கதிர்க் குலிசம் ஆம் அதனை எய்து முன்
வழங்குவன் கருணை ஒர் வடிவம் ஆயினான்.      
(பொருள் -  அவ்வாறு விழுங்கப்பட்ட படைகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு,  முதுகெலும்பைப் பொருந்தி ஒழுங்குபட்டது;  அது எழுகின்ற ஒளியையுடைய வச்சிரப்படை (குலிசம்) ஆகும். நீ சென்று கேட்பதற்கு முன்னே, கருணையே ஒரு உருவமாகிய அம்முனிவன் அந்த வச்சிரப் படையை உனக்குக் கொடுப்பான்)
    
379.
அம்முனி வள்ளல் ஈந்த அடுபடை முதுகந் தண்டைத்
தெம் முனை அடுபோர் சாய்க்கும் திறல் கெழு குலிசம் செய்து
கம்மிய புலவன் ஆக்கம் கரைந்து கைகொடுப்ப வாங்கி
மைம் முகில் ஊர்தி ஏந்தி மின் விடு மழைபோல்நின்றான்.    
(பொருள்  - அந்த முனியாகிய வள்ளலால் கொடுக்கப்பட்ட கொலைத் தொழிலை யுடைய படைகள் திரண்ட முதுகெலும்பினை, பகைவர் முனைகின்ற, கொல்லுகின்ற போரைப் பின்னிடச் செய்யும் வலிபொருந்திய வச்சிரப் படையாகச் (குலிசம்) செய்து, தேவதச்சன்  ஆக்கங் கூறி இந்திரனின்  கையில் கொடுக்க, அதைப் பெற்று, கரிய மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன் கையில் ஏந்தி, மின்னலை வீசும் முகில் போல் நின்றான்.)

386.
தொக்கன கழுகு சேனம் சொரி குடர் பிடுங்கி ஈர்ப்ப
உக்கன குருதி மாந்தி ஒட்டல் வாய் நெட்டைப் பேய்கள்
நக்கன பாடல் செய்ய ஞாட்பினுட் கவந்தம் ஆடப்
புக்கன பிணத்தின் குற்றம் புதைத்த பார் சிதைத்த தண்டம்.   

609.
செருவின் மா தண்டம் தாங்கிச் செல்லும் வெம் கூற்றம் என்ன
அருவி மா மதநீர் கால வரத்த வெம் குருதி கோட்டால்
கருவி வான் வயிறுக் ஈண்டு கவிழு நீர் ஆயம் காந்து
பருகிமால் வரை போல் செல்வ பரூஉப் பெரும் தடக்கையானை.

630.
சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி
பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்
ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்
காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.

637.
துண்டம் படவே துணித்து அக்கண வீரர் தம்மைத்
தண்டம் கொடு தாக்கினள் சாய்ந்தவர் சாம்பிப் போனார்
அண்டங்கள் சரா சரம் யாவையும் தானே ஆக்கிக்
கொண்டு எங்கு நின்றாள் வலி கூற வரம்பிற்று ஆமோ.

664.
முத்தில் பாளை செய்து அவிர் மரகதத்தின் ஆன் மொய்த்த பாசிலை துப்பின்
கொத்தில் தீம் பழம் வெண் பொனால் கோழரை குயின்ற பூகம் உந்துப் பின்
தொத்தில் தூங்கு பூச் செம் பொன்னால் பழுக்குலை தூக்கிப் பொன்னால் தண்டு
வைத்துப் பாசொளி மரகத நெட்டிலை வாழையும் நிரை வித்தார்.

707.
நிருதி ஆடி கொண்டு எதிர்வர அடிக்கடி நிதி முகத்து அளகைகோன்
கருதி ஆயிரம் சிதறிடத் தண்டி நன்கு ஆம் சுகர் வினை செய்யப்
பரிதி ஆயிரம் பணாடவி உரகரும் பல்மணி விளக்கு ஏந்தச்
சுருதி நாயகன் திருவடி முடியின் மேல் சுமந்து பின் புறம் செல்ல.

1105. காய்சின மடங்கல் அன்னான் கை வளை சுழற்றி வல்லே
வீசினான் குலிசம் தன்னை வீழ்த்தது விடுத்தான் சென்னித்
தேசினன் மகுடம் தள்ளிச் சிதைத்தது சிதைத்த லோடும்
கூசினன் அஞ்சிப் போனான் குன்று இற கரிந்த வீரன்.
(பொருள் - மிக்க சினத்தையுடைய சிங்கத்தை ஒத்த உக்கிரவழுதி, கையிலுள்ள திகிரிப்படையைச் சுழற்றி விரைந்து வீசினன்; அப்படையானது வச்சிரப் (குலிசம்) படையை அழித்து, குலிசம் படையை விடுத்தவனாகிய இந்திரனது, தலையிலுள்ள ஒளி வீசும் நல்ல முடியைக் கீழே வீழ்த்தி அழித்தது;
குலிசம் உடைந்ததைக் கண்ட உடனே, மலையின் சிறைகளை அறுத்த வீரனாகிய இந்திரன் நாணமும் அச்சமும் உடையனாய் ஓடினான்.)

1171.
கண்டிகை தொடுத்து இரு கரத்தினொடு வாகு
தண்டின் இடு மாலை விட வாள் அரவு தள்ள
வெண் துகிலின் ஆன விரி கோவண மருங்கில்
தண்டரிய பட்டிகை வளைந்து ஒளி தழைப்ப.

1222.
மாதண்ட அவுணன் மாற்றம் மகபதி கேட்டு வந்து
கோதண்ட மேருக் கோட்டிக் கொடும் புரம் பொடித்தான் வெள்ளி
வேதண்டம் எய்தி ஆங்கு ஓர் வேள்வி யான் புரிவன் நீ அப்போது
அண்டர்க் கூட்ட வா வாய்ப் போது வாய் வல்லை என்றான்.

1415.
இங்கித நெடும் கோதண்டம் இடம் கையில் எடுத்து நார
சிங்க வெம் கணை தொட்டு ஆகம் திருக முன் இடத்தாள் செல்ல
அங்குலி இரண்டால் ஐயன் செவி உற வலித்து விட்டான்
மங்குலின் முழங்கும் வேழ மத்தகம் கிழிந்தது அன்றே.

1416.
கொண்டலின் அலறிச் சீறி வீழ்ந்தது கொடிய வேழம்
பிண்டது பாரும் சேடன் சென்னியும் பிளந்த தண்டம்
விண்டது போலும் என்னத் துண் என வெருவிப் போன
பண்டைய தருக்கும் வீறும் படைத்தன திசை மால் யானை.

1422.
எடுத்தனர் கையில் தண்டம் எறிந்தனர் மறிந்து சூழ் போய்த்
தடுத்தனர் கரகம் தூள் ஆத் தகர்த்தனர் பீலி யோடும்
தொடுத்தனர் உடுத்த பாயை துணி படக் கிழித்துக் கால்வாய்
விடுத்தனர் மானம் போக்கி விட்டனர் சில்லோர் தம்மை.

1516.
ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான்
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த
கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான் கொலை செய்வான்.

1532.
தெளியாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என
விளி ஆவின் அருள் சுரந்து வேண்டுவன நனி நல்கி
அளி ஆனாம் மனத்து அரசன் அவனை அவன் இடைச் செலுத்திக்
கனி யானை விழ எய்த கௌரியனைப் போய்ப் பணிவான்.

1575.
வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த
போதகன் மனைக்குத் தீங்கு புந்தி முன்னாகச் செய்த
சாதகன் தனைப் போர் ஆற்றித் தண்டித்த தண்டம்                                                      சொல்வாம்.

1593.
குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்து உரை நாவைத் தொட்ட
சரத்தினைப் பார்த்த கண்ணைக் காத்தனை கோடி என்று என்று
உரைத்து உரை தவற்றுக்கு எல்லாம் உறும் முறை தண்டம் செய்து
சிரத்தினைத் தடிந்து வீட்டித் திரு உரு மறைந்து நின்றான்.

1641.
பணி நா அசைக்கும் படி என்னக் கழுத்தில் வீர
மணி நா அசைப்ப நகைமுத்தின் வகுத்த தண்டை
பிணி நாண் சிறு கிண் கிணி பிப்பல மாலைத் தொங்கல்
அணி நாண் அலம்பச் சிலம்பு ஆர்ப்ப வடிகண் நான்கும்.              

2236.
மண்ணில் குதித்து வலிக்கண்டு வராக வேந்தை
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால்
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால்.
(பொருள் - நிலத்திலே குதித்து, வலியினைக் கண்டு பன்றியரசனை மதித்து, கையிலுள்ள இருப்பு  உலக்கையாலே தலையில் அடித்தான்; அந்தப் புண்ணினின்று பொழியும் குருதியாறு புவியை மூட,  சூரிய மண்டலத்தைக் கிழித்து விமான மீதேறி விண்ணுலகடைந்தனன். )

2241.
இரும்பு செய் தண்டினை இம் என ஓங்கிப்
பொரும் படை சென்னி புடைத்து விளிந்தான்
விருந்தினர் ஆய் இருவோரும் விமானத்து
அரும் திறல் வானம் அடைந்தனர் அன்றே.
(பொருள் - இரும்பாற் செய்த தண்டத்தை, விரைந்து ஓங்கி,  போர் புரியும் பெண் பன்றியின் தலையில் அடித்து இறந்தனன்; அவ்விருவரும், விமானத்திலேறி, வீரசுவர்க்கத்துக்கு விருந்தினராகச் சென்றனர்.)

3191.
முண்டிதம் செய்த தலையராய் முறுக்கு உறி தூங்கும்
குண்டிகை கைத் தடம் கையராய்க் கோவணம் பிணித்த
தண்டு தாங்கிய சுவலராய்ச் சடையன் பேர் நாவில்
கொண்டு அசைத்தனராய் எங்கும் குலாவவும் கண்டேம்.
(பொருள் - முண்டிதம் செய்த தலையினை உடையராய்,  முறுக்கிய உறியில் தொங்கும் கமண்டலத்தை உடைய பெரிய கையினை உடையராய்,  கோவணங்கட்டிய கோலினைத் தாங்கிய பிடரினை உடையராய், சிவன் பெயரை நாவிற்கொண்டு கூறுபவராய்ப் பலர்,  எங்கும் உலாவுதலைப் பார்த்தேம்.)

நன்றி = பாடல் தொகுப்பு உதவி  http://www.tamilvu.org/ta/library
---------------------------------------------------
சங்கப்பாடல்களில் 'தண்டம்', என்ற சொல் உள்ள பாடல்வரிகளின் தொகுப்பு  - (குறிப்பு - ‘குலிசம்’ என்ற சொல் சங்கப்பாடல்களில் கண்டறியப் பெறவில்லை)
தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை - பரி 10/60
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் - பரி 20/64
 
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை - பெரும் 170
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது - நற் 260/3
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் - குறு 146/3
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு - பதி 41/12
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் - அகம் 274/8
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்று - புறம் 243/12
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் - அகம் 392/9
தண்டுவென் ஞாயர் மாட்டை பால் - கலி 85/36
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து - குறு 156/3
நன்றி = பாடல் தொகுப்பு உதவி  http://tamilconcordance.in
---------------------------------------------------

Tuesday, 28 April 2020

திருவிளையாடல் புராணத்தில் வேதியர்

திருவிளையாடல் புராணத்தில்  
'வேதியர்' 
என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

100.
சீத வேரி உண்டு அளி முரல் கமலம்மேல் செருந்தி
போத வேரியும் மலர்களும் சொரிவன புத்தேள்
வேத வேதியர் செம் கரம் விரித்து வாய் மனுக்கள்
ஓத வேமமும் அதகமும் உதவுவார் அனைய.
828.
கன்னியர்க்கு அரசு ஆயினாள் கடிமனை புகுந்த
மின் இயல் கடை மாதவர் வேதியர் ஏனோர்
எந் நிலத்து உள மன்னவர் யாவர்க்கும் முறையே
பொன் இயல் கலத்து அறு சுவைப் போனகம் அருத்தா.
908.
துங்கக் கலை வேதியர் தொல் மறை நூல்
சங்கற்ப விதிப்படி தன் துணைக்கை
அம் கைத் தளிர் பற்றி அகத்து உவகை
பொங்கப் புணரிப் புனல் ஆடினளே.
1073.
ஆதி இவ் இலிங்கம் தீண்டல் அருகர் அல்லாத வேத
வேதியர் முதலோர் இட்ட இலிங்கத்து இவ்விதியால் அர்ச்சித்து
ஓதிய விரதம் நோற்க அர்ச்சனைக்கு உரியர் அல்லாச்
சாதியர் பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை  செய்தல்.
1078.
புலர்ந்த பின் நித்த வினை முடித்து அரம்பை பொதுளும் பாசிலை பதின் மூன்றின்
நலம் தரு தூ வெள்ளரிசி பெய்து இனிய நறிய காய் கறியொடு பரப்பி
அலந்தர வான் பால் நிறை குடம் பதின் மூன்று அரிசி மேல் வைத்தான் அடியில்
கலந்த அன்பினராய்ச் சிவாஅர்ச் சனைக்கு உரிய கடவுள் வேதியர் களை வரித்து.
1157.
வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வர எதிர்ந்து  இறைஞ்சி வேறு இருக்கை
தந்த வேலையில் அம் மறையவன் முனிவர் தமை முகம்  நோக்கி ஈது உரைப்பான்
பந்த வேதனை சாலவா வெறுப்பு இகந்த பண்பினன் ஆயினிர் நீவிர்
சிந்தை வேறு ஆகி முகம் புலர்ந்து இருக்கும் செய்தி யாது என அவர் சொல்வார்.
1353.
சித்த யோகிகள் செய்கின்ற ஆடல் மேல் செலுத்தி
வைத்த கண்களும் சிந்தையும் வாங்கலர் திகைத்துத்
தந்த மாள் வினைத் தொழில் மறந்து இருந்தனர் தகைசால்
முத்த வேதியர் ஆதிய முதுநகர் மாக்கள்.
1449.
இல் பூட்டிப் போயினர் எமரங்கள் எனக் கௌரி  இயம்ப மேரு
வில் பூட்டிப் புரம் பொடித்த வேதியர் நின் கை  தொட்டு விடு முன் யாத்த
கொல் பூட்டு விடும் திறந்து கடிது அடிசில் சமைத்து இடுதி எனக் குமரி தாளில்
அல் பூட்டு மடவாலும் அவ்வாறே அட்டில் புகுந்து அடிசில் ஆக்கி.
2005.
முக்கண் நாயகன் பொருட்டு என வேள்விகள் முடித்துத்
தொக்க வேதியர் இவர் புனல் சாலை இத் தொடக்கத்
தக்க பேர் அறம் புகழ் பயன் தமை நன்கு மதிக்கும்
பொக்க மாறிய நிராசையால் புரிந்தவர் இவர் காண்.
2757.
அண்ணல் வேதியர் ஒழுக்கமும் அன்பும் கண்டு யாக்கை
உள் நிலா உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து உள்ளக்
கண் இலான் மலம் கழீஇப் பத கமலமும் சூட்டி
வண்ண மாமலர்ச் செம்கரம் சென்னி மேல் வையா.
2861.
ஒல்லையில் அது மன்னற்கு உரையுமின் என மேரு
வில்லவன் அருள் பெற்ற வேதியர் பெருமான் போய்ச்
செல்லது தளை இட்ட திரு மகன் அருகு எய்தி
மல் அணி திணி தோளாய் வருவன பரி என்றார்.
2927.
நெருங்கு தூரிய முழக்கமும் தானையும் நிமிர
மருங்கு இலாதவர் வந்து எதிர் மங்கலம் ஏந்த
அரம் கொல் வேலினான் அருளிய வரிசை யோடு அணைந்து
புரம் கொல் வேதியர்க்கு அன்பர் தம் திரு மனை புகுந்தார்.
2970.
கண்ணும் இடும் கவசமும் போல் காரியம் செய்து   ஒழுகியதும் காலம் பார்த்து எம்
எண்ணரிய நிதி ஈட்டம் கவர்வதற்கோ நின் அமைச்சின் இயற்கை நன்று ஆல்
புண்ணிய வேதியர் மரபில் பிறந்தன என்று ஒரு பெருமை பூண்டாயே நீ
பண்ணிய காரியம் பழுது பிறரால் தண்டிக்கப் படுவர் என்றான்.
2976.
என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும் துதி செவியில்
சென்று ஏறலும் விடை ஏறு சுந்தரன் மற்று இவர் செயலை
மன்று ஏறவும் முடிமேல் நதி மண் ஏறவும் முதியாள்
அன்று ஏறிய தேரோடும் விண் அடைந்து ஏறவும் நினைந்தான்.
3243.
இன்னமும் பல் நாள் எம்மை இடம் தொறும் பாடி எஞ்சும்
புன் நெறி ஒழுகுவாரை வென்று நம் புனித வீடு
பின்னர் நீ பெறுதி என்னா ஏடு தந்து ஆசி பேசி
மின் என மறைந்து நின்றார் வேதியர் ஆய வேடர்.
3255.
ஆதி ஆலயத்து அடலை கொண்டு ஆழி சூழ் காழிச்
சோதி வேதியர் பாண்டியன் சுரம் தணித்து உடலில்
பேதியாத கூன் நிமிர்த்தலால் பிறங்கு கற்பாதிப்
பூதி யாவினும் சிறந்தது அவ் வட்டில் வாய்ப் பூதி.

நன்றி - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

பாடல் தொகுப்பு
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்

திருவிளையாடல் புராணத்தில் வேதியன்

'வேதியன்' என்ற சொல் உள்ள திருவிளையாடற் புராணம் பாடல்களின் தொகுப்பு

270.
விண்ணவர் தம்மின் மேலாம் வேதியன் ஆகி நின்ற
பண்ணவன் தான் அந்நீரில் படிந்து தன்ன உச்சையாலே
அண்ணல் அம் கணத்தி நோரை மூழ்கு வித்து அனாதி ஆய
புண்ணிய விலிங்கம் தன்னுள் புகுந்து இனிது இருந்தான் மன்னோ.
776.
விண் தலத்து அவருள் ஆதி வேதியன் பாத தீர்த்தம்
முண்டகத் அவனும் மாலும் முனிவரும் புரந்தர் ஆதி
அண்டரும் நந்திதேவு அடுகணத்தவரும் ஏனைத்
தொண்டரும் புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி செய்தார்.
856.
அனையன் ஆகியும் நீர் நசை ஆற்றலன் வருந்தும்
வினையன் ஆகி வானதிச் சடை வேதியன் பாதத்து
இனைய நாதனும் தன் திரு முடியின் மீது இருக்கும்
நனைய நாள் மலர் ஓதியைப் பார்த்து ஒன்று நவில் வான்.
1156.
பிரணவம் உதித்தது அதன் இடை வேதம் பிறந்தன நைமி சாரணியத்து
அருள் நிறை முனிவர் கண்ணுவர் கருக்கர் ஆதியோர் அதிகரித்து அவற்றின்
பொருள் நிலை தெரியாது உள்ளமும் முகமும் புலர்ந்தனர் இருப்பவர் போதத்
இருள் மல வலி வென்றவன் அரபத்தன் என்று ஒரு வேதியன் வந்தான்.
1424.
மாதங்கம் தடிந்து தட்டாலை மண்டபத்து இருந்த வீரன்
பாதங்கள் கையால் பற்ரிப் பாண்டியன் இரந்து வேண்டிப்
போதங்கள் கடந்தாய் என்றும் பொலிய இங்கு இருத்தி என்ன
வேதங்கள் அருத்தம் சொன்ன வேதியன் அதற்கு நேர்ந்தான்.
1435.
பிச்சை வேண்டினான் அவற்குத் தன் பெண்ணினைக் கொடுப்பான்
இச்சை கூர்ந்து அரும் தவத்தினால் வருந்தி ஈன்று எடுத்த
விச்சை வேதியன் மனையொடு சுற்றமும் வினவாது
அச்சம் இன்றி நீர் எடுத்து அவன் அங்கையில் பெய்தான்.
1462.
வேந்தன் மீன வண் கொடியவன் ஆகிய விக்கிரமன் தன் தோள்
வந்து மண் பொறை இராச சேகரன் புயத்து இறக்கி ஐந்தரு நாடன்
பூம் தண் மா மலர் வேதியன் மாதவன் புரத்தின் மேல் பொலிந்து ஓங்கும்
சாந்த நீறு எனக் கண்ணித்த புண்ணியத் தனி முதல் நகர் சார்ந்தான்.
1508.
வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு அவிந்தாளைத்
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன் என்றார்.
1510.
வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவு உற்றான்
சாதியின் மிக்காய் வந்தது உனக்கு என் தளர் கின்றாய்
ஓதுதி என்னக் காவலனைப் பார்த்து உரை சான்ற
நீதி உளாய் கேள் என்று உரை செய்வான் நிகழ் செய்தி.
1536.
வெருவும் காய் சின மாறிய வேதியன்
மருவும் காதல் மனை எனும் பேரினாள்
திருவும் காமன் நல் தேவியும் மண் புனை
உருவும் காமுறு ஒப்புஇல் வனப்பினாள்.
1574.
அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்.
1575.
வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த
போதகன் மனைக்குத் தீங்கு புந்தி முன்னாகச் செய்த
சாதகன் தனைப் போர் ஆற்றித் தண்டித்த தண்டம் சொல்வாம்.
1975.
விழி ஆயிரத் தோன் பழி தீர்த்தனை வேதியன் தன்
கழியாத மாபாதகம் தீர்த்தனை கௌவைக் கங்கைச்
சுழி ஆறு அலைக்கும் சடையாய் எனைத் தொட்டு அலைக்கும்
பழியான் அதுந் தீர்த்து அருள் என்று பணிந்து வீழ்ந்தான்.
2333.
வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும் தந்தான்.
2524.
உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.
2649.
மின் திரித்து அன்ன வேணி வேதியன் இடைக்காடன் பின்
சென்று மீண்டனை யான் கொண்ட பிணக்கினைத் தீர்த்த வண்ணம்
இன்று உரை செய்து முந்நீர் எறிவலை வீசி ஞாழன்
மன்றல் அம் குழலினாளை மணந்து மீள் வண்ணம் சொல்வாம்.
3121.
வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில்
பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல்
ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும்
நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா.


நன்றி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

பாடல் தொகுப்பு
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்,
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்

Sunday, 26 April 2020

இந்து என்ற வார்த்தை வெள்ளைக்காரன் சூட்டியதா?

இந்து என்ற வார்த்தை 
வெள்ளைக்காரன்  சூட்டியதா?
(ஆன்மிக மலர் (மெய் புக்) 1-15 ஜுலை 2019 )

சமீபத்தில் இந்து மதத்தின் மீதான தாக்கம் மிகப்பெரிய அளவில் தூண்டப்பட்டு வருகிறது, இதில் முக்கியமாக தமிழகத்தில் உருவான (பெரும்பாலான சிறு கட்சியின்
தலைவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், பெயரில் மட்டும் இந்து மற்றபடி மதம் மாறிய நரிக் கூட்டம்) சிறு கட்சி தலைவர்கள், பட வாய்ப்பு இல்லாமல் கரை ஒதுங்கி
நின்று சாப்பாட்டிற்கு வழி தேடியலையும் இயக்குநனர்கள், நடிகர்கள், போன்றவர்கள்  காசுக்காக இந்து மதத்தை பழித்து கூறுவது பெருகிவருகிறது.

நேற்று வரை ஓட்டான்டியாக தெருவில் வலம் வந்த இந்த கூட்டம் எவ்வளவுக்கதிகமாக இந்து மதத்தைப்பற்றி இழிவாக பேசுகிறதோ... அந்த அளவிற்கு சொகுசான வாழ்க்கை வாழ வழி கிடைப்பதால்,
வாய் புளித்ததோ.. காய் புளித்ததோ என்று, எதுவும் தெரியாமல் ஏதாவது ஒரு குழப்பத்தை இந்து மதத்தில் உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

உண்மையில் இவர்களின் கல்வியறிவு பூஜ்யமாகத்தான் இருக்கும், ஆனால் மேதாவித்தனமாக பேசுவதைப் போன்ற நினைப்பில் இந்துமதத்தைப் பற்றி பேசி மாற்று மதத்தினரை குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களின் பணியாகும்.

மதம் மாறிய வைரமுத்து, ரஞ்சித், சீமான், டேனியல் காந்தி, கௌதமன், இந்த வகையில் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த மூடர் கூட்டத்தின் சமீபத்திய டாக் "இந்து என்ற பெயரை வெள்ளைக்காரன் வந்த பின்புதான் சூட்டப்பட்டது என்பதை பிரதானமாக கூறுகின்றனர்.

இதுபோன்ற அறிவு கெட்ட வாதத்தை பெரும்பாலான இந்து மக்கள் காது கொடுத்து கேட்பதில்லை, இருந்தாலும் இதுபோன்ற சில்லரைத்தனமான வாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்குமளவு இந்து
மதம் என்பது மிகப் பழமையான பெயர் என்பதை விவரிக்கிறது பல்வேறு புராண இதிகாசங்கள் உள்ளன.

அந்த வகையில், ப்ருஹஸ்பதி சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள்
ஆகியவற்றில் ஹிந்து என்ற சொல் குறிக்கப்பட்டிருப்பதோடு, இந்து என்ற சொல்லிற்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஹிம்ஸயா தூயதே யஸ்ச ஸதாசரண
தத்பர: வேத, கோ, ப்ரதிமா
ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக
(புத்தஸ்ம்ருதி கி.மு.4&ம் நூற்றாண்டு)
பொருள்:  யார் ஹிம்ஸிக்கப் பட்டாலும், எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப் புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரஹங்கள் இவற்றை பக்தியுடன்வழிபடுகிறானோ அவனே ஹிந்து.

ஹிமாலயாத் ஸமாரப்ப யாவத் இந்து
ஸரோவரம்
தத்தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷத
(ப்ருஹஸ்பத்ய ஆகமம்
கி.மு. 4&ம் நூற்றாண்டு)
பொருள்: ஹிமாலயம் முதல் ஹிந்து மஹா ஸாக ரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என்றுஅழைக்கப்படுகிறது.

ஜானுஸ்தானே ஜைன ஸப்த ஸப்த
சிந்துஸ் ததைவ ச;
ஹப்த ஹிந்துர்யாவனிய புனர்ஞேயா
குருண்டிகா:
(பலிஷ்ய புராணம் 4&ம் நூற்றாண்டு)
பொருள்: ‘ஸ’ என்ற எழுத்து யவனர்களின் (கிரேக்கர் முதலான தேசத்தவர்கள்) பாஷையில் ‘ஹ’ என்று திரிகிறது.
எனவேதான், ‘ஸப்த ஸிந்து’ என்ற வாக்கியம் ‘ஹப்த’ ஹிந்து என்பதாக மாறியது.

கலினா பலினா கலிதகலௌ
நூம்தர்மா
யவனையோ ரதரமாக்ராஜதா
ஹிந்தவோ விந்த்ய மாவிஹன!!
(காலிகா புராணம் கி.பி. 5ம் நூற்றாண்டு)
பொருள்:  அதர்ம ஆகிரமிப்பாளர்களின்படை யெடுப்புகளினால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து ஹிந்துக்கள் தப்பிக்க விந்தியமலையை பயன் படுத்தினர்.

சமஸகிருதம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் இதிகாச புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த வகையில்,
"இந்து வார்சடை எம்மிறையே"-  திருஞான சம்மந்தர்.
"வந்து மேருவினை நாள்தொறும் வலம் செய்து உழல்வோர்;
இந்து சூரியனை ஒத்து இருவரும் பொலியவே"-  கம்பராமாயணம்.
"செக்கர்அத் தீயவன் வாயில் தீர்ந்து; வேறு உக்கவான் தனிஎயிறு ஒத்த இந்து"- மூவருலா
"பொன்துவரை இந்துமரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த"-  மூவருலா.

இதுபோன்று தமிழில் எழுதப்பட்ட புராணங்களில் இந்து மதம் பற்றி பல் வேறு தகவல்களை கூறியுள்ளது. நாம் ஒருசிலவற்றை மட்டும் கொடுத்துள்ளோம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த இந்து மதத்தை ஒருசில நரிக்கூட்டம் திட்டமிட்டே அழிக்க முற்படுகிறது.

அக்காலத்தில் இந்து மதத் தெய்வத்தை அழிக்க அரக்கர்கள் கூட்டம் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் தெய்வ சக்தி அந்த அரக்கர்கள் கூட்டத்தை அடியோடு அழித்து பண்பாடு மிகுந்த இந்து சமய மக்களை காப்பாற்றி வந்துள்ளதையும் புராணங்கள் வாயிலாக படித்திருப்போம்.
அதைப்போன்றுதான் இன்று இந்து மதத்தை அழிக்க அரக்கர்கூட்டங்களாக மாற்று மதத்தினரும், கையேந்திக் கூட்டங்களும் தேவையற்ற கருத் துக்களை, துவேஷ பேச்சுக்களை
இந்து மதத்தின் மீது பிரயோகித்து நவீன வகையிலான அரக்க யுத்தம் நடத்தி வருகின்றனர், ஒருபக்கம் இவர்கள் மதம் மாற்றுவது குறித்து பிரசாரமும் செய்து வருகின்றனர்.
ஆனால் நாட்டைச் சுரண்டிய முகலாயர், கிறிஸ்தவர்கள் போன் றோரின் படையெடுப்புகள், போர்கள், கட்டாய மத மாற்றங்கள் போன்ற கொடுர செயல்களால் அழியாத இந்து மதம் இந்த நவீன
வீணர்கனின் பேச்சால் அழியாது என்பது ஒவ்வொரு இந்துக்களின் நம்பிக்கை.
இனியாவது இதுபோன்ற மாற்று மதத்தவர்களின் கருத் துக்களை முறியடிக்க இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள் முழுவதும் அறிந்து

http://aanmeegamalar.com/ebooks/Aanmeegamalar-1-15%20July%202019.pdf

Wednesday, 11 March 2020

அகரம் தமிழரின் சிகரம்

அகரம் தமிழரின் சிகரம் 

தினகரன் செய்தி - கீழடி அருகேயுள்ள அகரத்தில் அகழாய்வு பணிகள் இன்று (12.03.2020)  துவக்கம்.


திருப்புவனம்: கீழடி அருகே அகரம் கிராமத்தில் அகழாய்வு பணிகள் இன்று துவங்க உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி ஜன. 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. கீழடியை தொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வு நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொந்தகையில் தற்போது மயானத்திற்கு அருகே அகழாய்வுப்பணிகள் நடந்து வருகிறது. மணலூர் அருகே கழுகேர்கடை ஊராட்சியை சேர்ந்த அகரம் கிராமத்தில் அகழாய்வுக்கான இடத்தை தொல்லியல் அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர்.
அகரம் துவக்கப்பள்ளி அருகே உள்ள ஊருணிக்கு எதிரே அக்ரஹாரம் என்றும், கோட்டை மேடு என்றும் கிராமத்தினரால் அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஆய்வு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் நேற்று கிராமத்தினர் கழுகேர்கடை ஊராட்சி தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் பூமி பூஜை நடத்தி ஆயத்தப்பணிகளை துவக்கினர். இன்று முதல் அகழாய்வுப்பணிகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=570636
---------------------------------------------------


அகரம் தமிழரது சிகரம் - பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும்.  மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும். 

கோட்டைக் கருப்பணசாமி   (https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும். 

கூடல் மாநகரில் பாண்டியரின் அரண்மனை இருந்த இடமே அகரம் என்பது எனது கருத்தும் நம்பிக்கையும் ஆகும்.  தொல்லியல் ஆய்வுகள் சிறக்கட்டும்.
https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post_25.html

தொல்தமிழர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்மாநகர் போற்றவோம்,
அகரம் போற்றுவோம்.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Monday, 9 March 2020

சேல் என்ற சொல் இடம் பெற்ற பாடல்களின் தொகுப்பு

சங்க இலக்கியங்களில் சேல் என்ற சொல் இடம் பெற்றதாக அறியப்படவில்லை.
பக்தி இலக்கியங்களில் சேல் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு இது.
--------------------------------------
திருஞானசம்பந்தர் தேவாரம்  சேல் (16)
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் - தேவா-சம்:57/3
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே - தேவா-சம்:515/4
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் - தேவா-சம்:887/3
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே - தேவா-சம்:1265/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே - தேவா-சம்:1402/4
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர் - தேவா-சம்:1499/2
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா - தேவா-சம்:1868/2
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை - தேவா-சம்:1926/3
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் - தேவா-சம்:2020/2
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு - தேவா-சம்:2041/1
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று - தேவா-சம்:2265/3
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் - தேவா-சம்:2358/3
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் - தேவா-சம்:2367/2
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் - தேவா-சம்:2822/1
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே - தேவா-சம்:3608/4
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் - தேவா-சம்:4092/1
------------------------------------------------------------------
அப்பர் தேவாரம் சேல் (4)
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு - தேவா-அப்:199/3
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:651/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:657/4
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற - தேவா-அப்:2422/3
சேல்கள் (1)
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி - தேவா-அப்:534/1
சேலின் (1)
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் - தேவா-அப்:312/1
சேலை (1)
சேலை ஆடிய கண் உமை பங்கனார் - தேவா-அப்:1567/2
சேலொடும் (1)
சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை - தேவா-அப்:1415/3
------------------------------------
சுந்தரர் தேவாரத்தில் சேல் (3)
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் - தேவா-சுந்:87/3
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு - தேவா-சுந்:884/1
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் - தேவா-சுந்:947/3
சேலொடு (2)
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:599/4
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே - தேவா-சுந்:1008/4
----------------------------------------
திருவாசகத்தில்   சேல் (3)
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ - திருவா:11 14/4
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு - திருவா:25 10/1
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே - திருவா:49 3/6
சேலும் (1)
சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருவா:23 9/4
----------------------------------
திருக்கோவையில்    சேல் (1)
சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் - திருக்கோ:390/1
-------------------------------
பெரியபுராணத்தில் சேல் (6)
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் - 4.மும்மை:1 5/4
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து - 4.மும்மை:5 25/3
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை - 4.மும்மை:5 42/1
சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று - 5.திருநின்ற:1 213/3
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச - 6.வம்பறா:1 151/2
செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா - 6.வம்பறா:1 310/2
சேலும் (1)
தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் - 10.கடல்:3 1/3
-------------------------------------
கம்பராமாயணத்தில் சேல் (8)
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் - பால:2 13/1
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் - அயோ:7 8/3
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து - அயோ:7 24/2
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட - அயோ:8 33/2
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய - அயோ:11 36/3
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற - அயோ:13 53/2
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் - யுத்2:18 98/2
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் - யுத்3:29 21/1
-----------------------------------------
நளவெண்பாவில் சேல் (3)
சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் - நள 154/3
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை - நள 204/3
சேல் உற்ற வாவி திருநாடு பின் ஒழிய - நள 257/1
-------------------------------------
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில்  சேல் (15)
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய் - நாலாயி:457/4
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:654/3
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1179/4
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் - நாலாயி:1232/3
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து - நாலாயி:1236/3
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் - நாலாயி:1243/3
சேல் உகளும் வயல் நாங்கை திருத்தேவனார்தொகையே - நாலாயி:1253/4
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் - நாலாயி:1314/3
சேல் உகளும் வயல் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி - நாலாயி:1323/3
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த - நாலாயி:1397/1
சேல் உகள் வயல் திருப்பேர் செங்கண்மாலோடும் வாழ்வார் - நாலாயி:1436/3
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன - நாலாயி:2074/2
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் - நாலாயி:3348/3
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே - நாலாயி:3557/3
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் - நாலாயி:3578/3
சேல்கள் (2)
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே - நாலாயி:1156/4
சேல்கள் பாய் கழனி திருக்கோட்டியூரானை - நாலாயி:1847/2
--------------------
திருப்புகழில்  சேல் (22)
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் - திருப்:66/7
வெம் காளம் பாணம் சேல் கண் பால் மென் பாகு அம் சொல் குயில் மாலை - திருப்:102/1
பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி - திருப்:108/15
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே - திருப்:121/7
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார் காது வாவிட - திருப்:197/3
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே - திருப்:358/6
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட - திருப்:377/1
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ - திருப்:436/4
சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார் - திருப்:482/3
வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் - திருப்:529/1
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி - திருப்:591/13
செ சாலி சாலத்து ஏறி சேல் உற்று ஆணித்து பொழில் ஏறும் - திருப்:595/5
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி - திருப்:667/1
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி - திருப்:712/2
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே - திருப்:743/7
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி - திருப்:746/1
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் - திருப்:834/13
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும் - திருப்:884/1
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர - திருப்:980/15
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா - திருப்:1034/7
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக - திருப்:1090/5
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் - திருப்:1228/1
 சேல்கள் (3)
ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே - திருப்:361/7
ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா - திருப்:561/6
வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலை பீறா - திருப்:790/5
---------------------------------------------------------
நன்றி -  மேற்கண்ட பாடல்வரிகள் http://tamilconcordance.in/ என்ற இணையதளத்தின் உதவியுடன் தொகுக்கப்பெற்றன.

Tuesday, 3 March 2020

‘சுர்’ என்று வற்றிய சுனாமி (கடல்கோள்)

‘சுர்’ என்று வற்றிய சுனாமி


2004ஆம் வருடம் கடல் கரையைக் கடந்து, கடற்கரை ஓரம் வசித்த இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.  இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சுனாமி (கடல்கோள்) குறித்து அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. 
ஆனால் கடல்கோள் (சுனாமி) பற்றித் திருவிளையாடற் புராணம் வெகுவாக விவரித்துக் கூறுகிறது.  இதுபோன்றதொரு கடல்கோள் (சுனாமி) வர்ணனை  வேறுபிற இலக்கியங்களில் இல்லை.  இணையத்தில் பதிவுகள் ஏதும் பார்க்கக் கிடைக்கவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கரையைக் கடந்து நிலத்திற்குள் புகுவதைச் “சுனாமி (Tsunami)” என்ற சப்பானியச் சொல்லாலும், “கடல்கோள், ஆழிப்பேரலை” என்ற தமிழ்ச் சொற்களாலும் குறிப்பிடுகின்றனர். 
திருவிளையாடற் புராணத்தில், சலதி பௌவம் முந்நீர் உததி என்ற சொற்களால் கடல் குறிப்பிடப்படுகிறது.  கடல்கோளை அல்லது கடல்வெள்ளத்தைச் (சுனாமியைச்) “சலதிவெள்ளம்” என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.   பரஞ்சோதி முனிவர் ‘சங்கரசங்கிதை‘ என்ற வடமொழி நூலை மொழிபெயர்த்துத் தமிழிலில் திருவிளையாடல் புராணம் பாடியுள்ளார்.   திருவிளையாடற் புராணத்தில், சலதி என்ற சொல் 13 பாடல்களின் இடம் பெற்றுள்ளது . ஊழிக் காலத்தில் ஏழுகடல்களும் பொங்கி, ஏழு கண்டங்களும் கடலில் மூழ்கின என்று திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது . 

மதுரையை அழித்திடு - 
கடலுக்கு அரசன் வருணன். வருணனுக்குத் தலைவன் இந்திரன்.  இந்திரன் வருணனை அழைத்து, நீ விரைந்து சென்று, பெரிய கடல் சூழ்ந்த ஏழு தீவுகளையும், சினந்து வளைந்து, அரிய காவலையுடைய “மதுரையை அழிப்பாயாக” என்று கூறி ஏவினான் (பாடல் எண் 1037).  கடலுக்கு அரசனாகிய வருணனும்,  பேயும் கண்ணுறங்கும் நடு இரவில், குருட்டிருளில் நேரத்தில், வளம் பொருந்திய கழனி சூழ்ந்த மதுரைப் பதியைச் சூழ்ந்து, விரைவாக அழிக்கக்  கருதினான்.

கொதித்துப் பொங்கி எழுந்த கடல் -
கடலானது,  கொதித்து பொங்கி, அலையாகிய கைகள், அண்டகூட முழுதும் ஊடுருவிச் சென்று, நடுக்க முண்டாக்கி வருத்த, ஊழிக்காலத்தில் ஆரவாரித்து அழிக்கும் வெள்ளமாய், சந்திர மண்டலத்தை எட்டிப் பொருந்தி, வருகின்ற ஒரு கரிய மலை தோன்னாற்போல, மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு வந்தது(பாடல் எண் 1039). 


கப்பல்கள் செல்லும் கடல்நீரானது மதுரை மாளிகைகள் மீது செல்லுதல் -
மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது, மாடங்களையுடைய மதுரைப்பதியின் மீது வருகின்ற தன்மை, இரவினிடத்ததாகிய சந்திரன்மேல், நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராசு என்னும் பாம்பானது, அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப் போலும்(பாடல் எண் 1040);  இது மேகங்கள், மதுரையை மறைத்தற்கு வருதலைப் போன்று இருந்தது.  இப்படியில்லாமல் இதை வேறு எப்படிக் கூறுவது?

பாண்டியனுடன் போருக்கு வந்த கடல் -
மேலும், வட்டமாகிய ஆமைகள் கேடகங்களாக,  வாள்கள் எறிகின்ற வாளை மீன்கள் வாட் படைகளாக, சுறா மீன்கள் நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளாக,  பரந்த அலைக்கூட்டங்கள் தாவுகின்ற குதிரைக் கூட்டங்களாக, ஓடவிட்ட தோணிகள் தேர்களாக, இத் தன்மையன விரவிய சேனையோடு, கடலானது  எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று இருந்தது.

(Seaturtle.org - MTN 130:22-24 Marine Turtles Stranded by the Samoa Tsunami)

இங்ஙனம் எழுந்த கடலானது மதுரையை நெருங்கும் போது, முகில் உறங்கப் பெறும் மதில் சூழ்ந்த நல்ல அம்மதுரைப்பதியின், கிழக்குத் திக்கில் வந்து நெருங்கு மளவில், நடு இரவில், பாண்டி மன்னன் கனவில் கண், வெள்ளியம்பலவாணர்,ஒரு சித்த மூர்த்தியாய், முன்னே தோன்றி, அரும்புகின்ற புன்னகை தோன்ற மொழிகின்றார்.

உக்கிரப் பெரு வழுதிப் பாண்டியனே, உனது நகரத்தை அழிக்கும் பொருட்டு, கடலானது வருகின்றது (ஆதலால்), நீ விரைந்து எழுந்து, போய், வெற்றி பொருந்திய வேற்படையை விடுத்து வென்றி பெறுவாயாக என்று கூற, உலகினைப் பாதுகாத்தலை யுடைய உக்கிர வழுதி, கூப்பிய சிவந்த கைகளை யுடையனாய், துதிக்கின்ற நாவினை யுடையவான், எழுந்து, பேயும் உறங்குகின்ற நள்ளிரவில் தான் கண்ட கண வினை யுணர்ந்து,

கனவிலே தோன்றிய சித்தமூர்த்தி, நனவிலும் எழுந்தருளி வந்து, மன்னனது எண்ணத்தை உணர்ந்து, அப்பனே நீ காலந்தாழ்க்க நிற்பது என்னை, சினந்து கடல் வடிவாக வந்த பகைமை, அதனது மிக்க வலிகெட, கூரிய வேற்படையை எறிந்து (வென்று), உலகிற்கு வரும் அழிவை நீக்குவாய் என்று கூறினார்.

சுர் என வற்றிய சுனாமி - (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மிக்க வலியானது அழிய, நெருங்கி, மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று.

எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மிக்க வலியானது அழிய, நெருங்கி, மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று,

பண் அமைந்த வேதத்திற் கூறிய வேள்வியைத் தடுப்பதல்லாமல், உலகனைத்தும் அழியுமாறு பிறிது சூழ்ச்சி செய்த, தேவேந்திரனின் ஏவலினால், பெருகிவந்த கடலானது வலி யழிந்தது; வஞ்சனையுடைய தீயோர்க்கு உதவி செய்து அதனால் இந்தக் கடலானது தன் வலிமையை இழப்பது எக்காலத்தும் உள்ள தொரு செயலே போலும்,

பகைவருடலில் நுழைந்த வேலினால், கடலைப் புறங்கொடுக்கச் செய்த உக்கிர பாண்டியன் முன்னர், நிலத்தின்கண் நின்றருளிய சித்தமூர்த்தி, விசும்பிலே மறைந்து (பின்), ஞானக்கண்ணிலே நிறைந்து தோன்றும் தனது திருவருளினால்,  திருவுருவந் தாங்கி, உமை யம்மையாரொடும், வானின்கண், இடப ஊர்தியில் வெளிப்பட்டு நின்றருளினார் 

மூன்று கண்களையும் நான்கு திருத்தோள்களையும், குழவித் திங்களைக் கண்ணியாக அணிந்த சிவந்த அழகிய சடையையும், நீலகண்டத்தையும், பாண்டியன் தரிசித்து, அப்பக்கத்தையே நோக்கி வணங்கி எழுந்து, விரிந்த பெரிய அன்பும் தானுமாக, விதிப்படி அஞ்சலி செய்து துதித்து, புவியின்மேல் நடந்து செல்கின்றான்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திருவிளையாடற் புராணம் ஆராய்ச்சியாளர்,
திருப்பூவணப் புராணம் ஆராய்ச்சியாளர்,
காளையார்கோயில் புராணம் ஆராய்ச்சியாளர்.
----------------------------------------------------------------------------

கடல்கோள் குறித்த திருவிளையாடற் பாடல்கள் -

பொருங்கடல் வேந்தனைக் கூவிப் பொள்ளென
இருங்கட லுடுத்தபா ரேமு மூழிநாள்
ஒருங்கடுவெள்ளமொத் துருத்துப் போய்வளைந்
தருங்கடி மதுரையை யழித்தியா லென்றான்.(1037)

விளைவது தெரிகிலேன் வேலை வேந்தனும்
வளவயன் மதுரையை வளைந்திட் டிம்மெனக்
களைவது கருதினான் பேயுங் கண்படை
கொளவரு நனந்தலைக் குருட்டுக் கங்குல்வாய்.(1038)

கொதித்த லைக்க ரங்க ளண்ட கூட மெங்கு மூடுபோய்
அதிர்த்த லைக்க வூழி நாளி லார்த்த லைக்கு நீத்தமாய்
மதித்த லத்தை யெட்டி முட்டி வருமொ ரஞ்ச னப்பொருப்
புதித்த தொத்து மண்ணும் விண்ணு முட்க வந்த துததியே.(1039)

வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.(1040)

வட்ட யாமை பலகை வீசு வாளை வாள்கள் மகரமே
பட்ட யானை பாய்தி ரைப்ப ரப்பு வாம்ப ரித்திரள்
விட்ட தோணி யிரத மின்ன விரவு தானை யொடுகடல்
அட்ட மாக வழுதி மேல மர்க்கெ ழுந்த தொக்குமே.(1041)

இன்ன வாறெ ழுந்த வேலை மஞ்சு றங்கு மிஞ்சிசூழ்
நன்ன கர்க்கு ணக்கின் வந்து நணுகு மெல்லை யரையிரா
மன்ன வன்க னாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
முன்னர் வந்தி ருந்த ரும்பு முறுவ றோன்ற மொழிகுவார்.(1042)

வழுதி யுன்ற னகர ழிக்க வருவ தாழி வல்லைணீ
எழுதி போதி வென்றி வேலெ றிந்து வாகை பெறுகெனத்
தொழுத செங்க ரத்தி னான்று திக்கு நாவி னானெழீஇக்
கழுது றங்கு கங்கு லிற்க னாவு ணர்ந்து காவலான்.(1043)

கனவில் வந்த வேடர் நனவில் வந்து காவலோன்
நினைவு கண்டு பொழுது தாழ நிற்ப தென்கொ லப்பனே
சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட
முனைய வேலெ றிந்து ஞால முடிவு தீர்த்தி யாலென.(1044)

எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1045)

எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1046)

சந்த வேத வேள்வி யைத்த டுப்ப தன்றி யுலகெலாஞ்
சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவி னேவலால்
வந்த வேலை வலிய ழிந்த வஞ்ச கர்க்கு நன்றிசெய்
திந்த வேலை வலியி ழப்ப தென்று முள்ள தேகொலாம்.(1047)

புண்ணிடை நுழைந்த வேலாற் புணரியைப் புறங்கண் டோன்பால்
மண்ணிடை நின்ற சித்தர் வானிடை மறைந்து* ஞானக்
கண்ணிடை நிறைந்து தோன்றுங் கருணையால் வடிவங் கொண்டு
விண்ணிடை யணங்கி னோடு விடையிடை விளங்கி நின்றார்.(1048)

முக்கணும் புயங்க ணான்கு முளைமதிக் கண்ணி வேய்ந்த
செக்கரஞ் சடையுங் காள கண்டமுந் தெரிந்து தென்னன்
பக்கமே பணிந்தெ ழுந்து பரந்தபே ரன்புந் தானுந்
தக்கவஞ் சலிசெய் தேத்தித் தரைமிசை நடந்து செல்வான்.(1049)
----------------------------------------------