Tuesday, 17 May 2022

வைகையும் ஐகையும், தமிழரும் துருக்கியரும்

வைகையும் ஐகையும், தமிழரும் துருக்கியரும்

Aigai = Vaigai

ஐகை துருக்கியில் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ளது.

வைகை ஆற்றங்கரையில் கீழடியருகே தமிழரின் சங்ககால நகரநாகரிகம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ளது.

பாண்டியநாட்டில் வைகைக் கரையில் அமைந்துள்ள மதுரையில் நடைபெற்ற திருவிளையாடல்களைப் பதிவு செய்துள்ள திருவிளையாடல் புராணத்தில் மூன்று இடங்கயில் துருக்கியைப் பற்றிய செய்திகள் உள்ளன.

1) மாணிக்கம் விற்ற படலத்தில் (படலம் எண் 17, பாடல் வரிசை எண் 1259), துருக்கி நாட்டிலிருந்து பச்சைக் கற்களைத் துருக்கி நாட்டிலிருந்து கொண்டு வந்து விற்ற செய்தியும்,
2) மெய்க்காட்டிட்ட படலத்தில் (படலம் எண் 30, பாடல் வரிசை எண் 1677),
குலபூடணபாண்டியன் பல்வேறு நாட்டிற்கும் ஓலை அனுப்பிப் படை திரட்டிய செய்து கூறப்படுகின்றது. அதில் துருக்க நாட்டிற்கும் ஓலை அனுப்பி செய்தி பதிவு செய்யப்பெற்றுள்ளது.

3) சுந்தரப்பேர் அம்பு எய்த படலத்தில் (படலம் எண் 50, பாடல் வரிசை எண் 2373) வங்கிய சேகர பாண்டியன் மீது விக்கிரமசோழன் படையெடுத்து வரும்போது,
சோழனுடைய படையில், போர்த்துணையாகி துருக்கரும் ஒட்டியரும், ஏனையோரும் இருந்தனர் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், புராண காலத்திலிருந்தே தமிழரும் துருக்கியரும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. தமிழருக்கும் துருக்கருக்கமான தொடர்பை மேலும் வலுச் சேர்க்கும் வகையில் துருக்கியரின் தொன்மையான நாகரிகம் வாழ்ந்த இடம் ஐகை மாநகரம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ளது. துருகிக்கியரின் ஐகை, தமிழரின் வைகை என்ற பெயர் அமைப்பும் சிறப்பாக உள்ளது வியப்பளிக்கிறது.

அன்பன் காசிசீர், முனைவர், கி. காளைராசன்
--------------------------------------------------

கற்றவை 1)
தமிழரும் துருக்கரும் 
https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/08/blog-post.html

--------------------------------------------------

கற்றவை 2)

Aigai, located in the Yunusemre district, is one of the 12 Aiol cities in Western Anatolia and has a long and fascinating history of 2,800 years.

Mentioned by both Herodotus and Strabo,  it was an ancient Greek, and later Roman city and bishopric in Aeolis. Initially, the city was in a possession of the Lydian Empire and later the Achaemenid Empire when it conquered the former.

Ruins of ancient city of Aigai, Turkey. Image credit: Hurriyet Daily News

Ruins of the ancient city of Aigai, Turkey. Image credit: Hurriyet Daily News

The discovery of thousands of artifacts and ancient roads during the excavations in the ancient city of Aigai, one of the 12 Aeolian cities in the western province of Manisa, the history of which dates back to the eighth century BC is drawing the attention of visitors.

During long-lasting archaeological excavations that began in 2004, many artifacts and structures of the ancient city of Aigai have been found and analyzed.

The 2017 excavations that revealed the headteacher's sarcophagus, are continuously conducted in the ancient city of Aigai in the western province of Manisa. Archaeologists successfully reunited the sarcophagus, of which the first pieces were unearthed in 2004. and announced that it belonged to a school principal.

Only a few months later, the archaeologist discovered a 2000-years old road located in Manisa Province, Turkey. It served as a war route at first and was then used by caravans.

In 2018, diggings in the area of Aigai exposed ancient meat and fish market, and two years ago, the team led by Yusuf Sezgin, an associate professor at Manisa Celal Bayar University’s (MCBU) Archaeology Department, found 2500-year-old objects made from goat bones.

Naturally, we must not forget an important discovery made in 2016, when archaeologists discovered a mosaic depicting the god Poseidon. The mosaic was found in the frigidarium part (a large cold pool at the Roman baths).

Mosaic depicting the Greek god Poseidon from the ancient Greek city of Aigai [Credit: AA]

Mosaic depicting the Greek god Poseidon from the ancient Greek city of Aigai. Image credit: Anadolu Agency

The bottom part of the mosaic has a partly ruined inscription in Greek: "Greetings to all of you bathing." Archaeologists believe that it dates back to the 3rd or 4th century BC.

Sezgin said that when excavations started in 2004, the number of visitors to the city, which was 1,000 on average, increased day by day and approached 15,000 over the last year.

“We have had a pandemic for a long time. We were all very bored in our homes. As a result, we have seen a great increase in the number of visitors since last year," stated the archaeologist.

"The 2022 excavation works will start as of May, Sezgin said: Due to its geography and nature, it is a very green area. Streams flow on both sides. In this respect, it is a pleasant place to visit. For this reason, we see that the number of visitors increased drastically, especially in the spring months. Excavations began in 2004 and are continuing.”

Sezgin stated they have two basic visions, one is archaeological excavations and the other is to help visitors easily visit the ancient city.

“We have seen that our efforts to uncover ancient roads, which we have been working on since 2004, had an impact on the number of visitors. When visitors come to the city, they walk the 2,000-year-old roads, and we see that they really enjoy it,” he added.

Sezgin stated that the artifacts unearthed from the ancient city would be exhibited at the Manisa Archaeology Museum, which is under construction and is planned to open soon.

“We have many artifacts because we have been working there for long years. Most of them are in the Manisa Archaeology Museum. The new museum, which is under construction, will serve in accordance with the modern age. It will open soon. There will be two specially designed halls for Aigai in the museum. One will display Aigai parliament sculptures, and the second hall will display other works.”

Written by Conny Waters - AncientPages.com Staff Writer

https://www.ancientpages.com/2022/05/16/countless-artifacts-structures-and-roads-discovered-in-ancient-city-of-aigai-turkey/?fbclid=IwAR3b9btlT4-RzaT6wTjsxgupPiipQTA72sxRoqSIoKF332h6bigTZRWqaJE

------------------------------------------------

Friday, 6 May 2022

கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில், சுடுமண் பானைகளால் கட்டப்பட்ட நீளமான சுவர்

கீழடி 
எட்டாம் கட்ட அகழாய்வு
, சுடுமண் பானைகளால் கட்டப்பட்ட நீளமான சுவர் 

தினமலர் பத்திரிக்கைச் செய்தி -  திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் எட்டாம் கட்ட அகழாய்வில், சுடுமண் பானைகளால் கட்டப்பட்ட நீளமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் அகழாய்வு பணிகள் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு நடந்து வருகிறது. தொல்லியல் துறை இயக்குனர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் அலுவலர்கள் ரமேஷ், அஜய், சுரேஷ், காவ்யா உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு புதிதாக தோண்டப்பட்ட குழியில் சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அருகில் செவ்வக வடிவில் சுடுமண் கற்களாலான நீளமான சுவர் வெளிப்பட்டது.இந்த சுவரின் கீழ்ப்பகுதியில் வரிசையாக மூன்று பானைகள் உள்ளன. பண்டைய காலத்தில் சுவர்களை தாங்க துாணிற்கு பதில் உறுதியான சுடுமண் பானைகள் பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்படுகிறது.

மூன்று பானைகளும் சம அளவில் உள்ளதால், சுவர்களை தாங்குவதற்கு இந்த பானைகள் பயன்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.சுவர் முழுமையாக வெளிப்பட்டால் மட்டுமே பானைகளின் முழு பயன்பாடு தெரியவரும்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3023216

Tuesday, 3 May 2022

தோடுடைய செவியன், தோடுடைய காதுடையன்


பத்திரிக்கைச் செய்தி - 


 

சென்னை: கீழடியில் கிடைத்த சுடும் சிற்பத்தின் அழகை விவரிக்கும் விதமாக "அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்று மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு 3 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதனைத் தொடந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 ஆம் கட்ட அகழாய்வு முதல் 7வது கட்ட அகழ்வாய்வுகளில் இது வரை 18,000-க்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கீழடியில் தொடர்ந்து அகழாய்வுப் பணி நடத்தத் தொல்லியல் துறை நடைவடிக்கை மேற்கொண்டுள்ளது.


“மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?

அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?”

கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது வெளிப்பட்டிருக்கும் அழகிய சுடுமண் சிற்பம். pic.twitter.com/6Oh8wploiU

— Thangam Thenarasu (@TThenarasu) May 2, 2022


இந்த நிலையில் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில் இந்த அகழ்வாய்வுப் பணியின் போது சுடுமணல் சிற்பம் கிடைத்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு"மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன? அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்று பதிவு செய்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/794744-is-the-beautiful-mountain-beautiful-is-this-statue-beautiful-thangam-thenarasu.html

Friday, 29 April 2022

ஓங்கல் - புராணத்தில் புவியறிவியல்


புராணம் கூறும்  புவி அறிவியல்

1954 இல் ஒரு இந்திய ஆய்வு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீ (29,029 அடி) என நிர்ணயித்தது, இது நேபாள அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், 2020 ஆம் ஆண்டில், சீனா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த குழுக்கள் கூட்டாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய உயரத்திற்கு ஒப்புக்கொண்டன, இது சர்வே ஆஃப் இந்தியாவின் அசல் கணக்கீட்டை விட 0.86 மீ (2.8 அடி) அதிகமாகும்.  (பார்வை https://www.bbc.com/future/article/20220407-how-tall-will-mount-everest-get-before-it-stops-growing).  நடைபெற்றுள்ள ஆய்வுகளின்படி பூகம்பங்களின்ல் எவரெஸ்ட் சிகரமானது வளர்ந்து வருகின்றது என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.    

ஆச்சரியம் என்னவென்றால், இதே கருத்தைத் திருவிளையாடல்  புராணமும் கூறுகிறது. ஒவ்வொரு ஊழிக் (இயற்கைப் பேரழிவுக்) காலத்திலும் இமயமலை யானது உயர்ந்து ஓங்கி வளர்ந்து வருகின்றது என்கிறது திருவிளையாடற் புராணம்.

பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடற் புராணத்தில், இமயமலையானது ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் ஓங்கி வளர்கிறது என்றொரு புவியியல் அறிவியல் கருத்து பதிவு செய்யப்ட்டுள்ளது.  திருவிளையாடற் புராணம் 2 பாடல்களில் இமயமலையை “ஓங்கல்” என்ற பெயர்ச் சொல்லால் குறிக்கிறது.  ‘செங்கல்’ அனைருக்கும் தெரியும்.  இமயமலையானது ஓங்கி வளரும் கல்லாம்.  அதனால் இமயமலையயை “ஓங்கல்” என்ற பெயரால் புராணம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் அளந்து சொல்லும் அதே கருத்தைத் திருவிளையாடற் புராணமும் பதிவு செய்துள்ளது வியப்பிலும் வியப்பாக உள்ளது அல்லவா?


திருவிளையாடற் புராணம் பாடல் எண் 202.

புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்
பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்
உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.

திருவிளையாடற் புராணம் பாடல் எண் 625.

சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி
கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்
வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே
ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

---------------------------------------

கற்றவை 

திருவிளையாடற் புராணத்தின் பாடல்கள் மூலமும் உரையும்

புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்.

     (இ - ள்.) புரந்த ஆதி வானவர் பதம் - இந்திரன் முதலிய இமையவர் உலகும், போது உறை புத்தேள் - தாமரை மலரில் உறையும் அயனுடைய, பரந்த வான்பதம் - அகன்ற உயர்ந்த சத்தியலோகமும், சக்கரப்படை உடைப்பகவன் -  திகிரிப்படையினையுடைய திருமாலின், வரம் தவாது வாழ் பதம் - மேன்மை கெடாது வாழ்கின்ற பரம பதமும், எலாம் - ஆகிய எல்லாமும், நிலைகெட வரும் ஊழி நாள் தோறும் - அழிய வருகின்ற ஊழிக்காலந்தோறும், அ ஓங்கல் - அத்திருக்கைலாய மலையானது, உரம் தவாது நின்று ஓங்கும் - வலி கெடாது நிலைபெற்று வளரும் 

புரந்தராதி : வடமொழித் தீர்க்க சந்தி. பகவன் ஆறு
குணங்களையுடையவன்; சிவன், திருமால் முதலிய பல கடவுளர்க்கும் இப்பெயர் உரித்து. வரும் ஊழி நாள் எனச் சொற்கள் மாற்றப்பட்டன; வருநாள் நின்று அவ்வூழிதோறும் என வுரைத்தலுமாம்;  உம்மை தொக்கது. 'கைலை மூவுலகும் ஒடுங்கு கின்றநா ளோங்கிய வோக்கம்' என முன்னுங் கூறினார்; ஆண்டுக் காட்டிய  'ஊழிதோ றூழி முற்று முயர்பொன் னொடித்தான் மலைய'  என்பதனை ஈண்டுங் கொள்க. ஓங்கல் என்பது மலைக்குத் தொழிலாகுபெயர்; அல் : பெயர் விகுதி யென்னலுமாம். (2)

------------

சலிக்கம் புரவித் தடந்தேருடைத் தம்பி ராட்டி
கலிக்கும் பலதூ ரியங்கைவரை தெய்வத் திண்டேர்
வலிக்கும் பரிமள் ளர்வழங்கொலி வாங்கி நேரே
ஒலிக்கும் படிகிட் டினளூழிதோ றோங்கு மோங்கல்.

(இ - ள்.) சலிக்கும் புரவுத் தடம் தேர் உடைத் தம்பிராட்டி - செல்லுகின்ற குதிரைகள் பூட்டிய பெரிய தேரினையுடைய தடாதகைப் பிராட்டியார், கலிக்கும் பல தூரியம் - ஒலிக்கின்ற பல இயங்களின் ஒலியையும், கைவரை - யானைகளும், தெய்வத் திண்தேர் - தெய்வத் தன்மையையுடைய வலிய தேர்களும், வலிக்கும் பரி - கருத்தறிந்து செல்லும் குதிரைகளும், மள்ளர் - வீரர்களும், வழங்கு ஒலி - செல்கின்ற ஒலியையும் வாங்கி நேரே ஒலிக்கும்படி - ஏற்றுக் கொண்டு எதிரொலி செய்யுமாறு, ஊழி தோறு ஓங்கும் ஓங்கல் கிட்டினள் - ஊழிக்காலந் தோறும் வளர்கின்ற கயிலை மலையை அடைந்தார் எ - று.

தூரியம் அதன் ஒலிக்காயிற்று; தூரியமும் நால்வகைச் சேனையும் ஒலிக்கின்ற வொலி யென்னலுமாம். வலித்தல் - கருதுதல். ஓங்கல்வாங்கி எதிரொலி செய்ய. ஊழி தோறும் ஓங்குதலை.
"ஊழிதோ றூழிமுற்று முயர்பொன் னொடித்தான் மலையே"
என்னும் ஆளுடைய நம்பிகள் தேவாரத்தா னறிக; முன்னரும் உரைக்கப் பெற்றது. (26)

------------------------------------------------------------------------------------

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னோர் தனியாழி வெங்கதிரொன் றேனையது 
தன்னே ரிலாத தமிழ் - பழம் பாடல்

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் - ஆங்கு அவற்றுள்
மின்னோர் தனியாழி வெங்கதிர் ஒன்றேனை அது
தன் நேர் இலாத தமிழ் - பழம் பாடல்

ஓங்கல் = ஓங்கிய மலை, இமயமலை
இடை வந்து = இமயமலையின் இடையே உள்ள திருக்கயிலாயம்
உயர்ந்தோர் தொழ விளங்கி = உயர்வானவர்கள் தொழும்படியாக விளங்கி,
ஏங்கு ஒலி நீர் = அலைகளை வந்து வந்து திரும்பிச் செல்லும் ஒலியை உடைய கடல்நீர்
ஞாலத்து = உலகத்தின்
இருள் அகற்றும் = இருளை அகற்றும்
இப்பாவில் சூரியனுக்கும். தமிழுக்கும் உள்ள இரு ளகற்றுவதாகிய ஒப்புமை கூறி, பின் அவற்றுக்கிடையே யுள்ள வேற்றுமையைக் கூறுகின்றார். (இவ்வாறு கூறுவது வேற்றுமையணி இலக்கணம்)

------------------------------------------

நன்றி =  பாடல் தொகுப்பு உதவி -  தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

Saturday, 23 April 2022

மச்சவதாரம் கிருதமால் வையை மதுரை கூடல் பாண்டியன்

 மச்சவதாரம் கிருதமால் வையை மதுரை கூடல் பாண்டியன் 




மணலூர் கூடல் முடத்திருமாறன் பற்றிய தகவல்

(கீழடி) மணலூர், கூடல், முடத்திருமாறன் பற்றிய தகவல்


செந்தமிழ்  பக்கம் 246

ஆகவே ஒவ்வொரு மன்னனது ‘சராசரி’ ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டு ஆண்டுகளாகும்.  கடைச் சங்க காலத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் சிலரது பெயர்களே நற்றினை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களால் அறியப்படுகின்றன.  அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிகப் பழமை வாய்ந்தவன் என்பது களவியலுரையால் பெறப்படுகின்றது.  எனவே அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம்.

பாண்டியன் முடித்திருமாறன் -

குமரிநாடு கடல்கோளால் அழிந்த பின்னர், குமரியாற்றிற்கும் தாம்பிரபருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத் தலைநகராயிருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவன்.  ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும்.

இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோளால் பாண்டியநாட்டின் பெரும்பகுதியும் அதன் தலைநகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன.(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5) 

இக்கடல்கோளினால் எண்ணிறந்த தமிழ்நூல்கள் இறந்தன.   இச்செய்தியை,

“ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”

என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க.  தமிழ்மக்கள் செய்த தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும்.  இக் கடல்கோளுக்குத் தப்பியுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள்.   இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர், மதுரை என்று தற்காலத்து வழங்கும் கூடன்மா நகரையடைந்தனர்.  இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக் கொண்டு கடைச் சங்கத்தை அங்கு நிறுவினான்(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5)

பல நல்லிசைப் புலவர்கள் தமிழாராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவாராயினர்.  இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச் சங்கத்தை ........

-----------------------------------------------

நன்றி - இத் தகவலை வழங்கியவர்
சிந்துவெளி முத்திரைகள் தமிழ் எழுத்துக்களே என நிறுவி வரும்,
திருச்சிராப்பள்ளி ஐயா “போஸ்”  அவர்கள்