Sunday, 1 September 2019

திருவிளையாடல் புராணம் 'கேழ்' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

திருவிளையாடல் புராணம்
'கேழ்' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

கேழ் = ஒளி, நிறம், ஒப்பு
கேழ்த்த = adj. bright, abundant., நிறங்கொண்ட. கேழ்த்த வடித்தாமரை (திவ். இயற். 3, 96)
மிகுந்த. கேழ்த்த சீரன் (திவ். திருவாய், 3, 1, 7)
கேழ்பவர் = நன்மையுடையார் the blessed.
கேழ்பு = நன்மை blessing.
கேழல் = நிறம், பன்றி, குளநெல்
கேழ்வரகு = ஒருவகைத் தவசம், கேப்பை
கேழற்பன்றி = ஆண்பன்றி

50.
பல நிற மணி கோத்த என்ன பல் நிற ஏறு பூட்டி
அலமுக இரும்பு தேய வாள் வினைக் கரும் கால் மள்ளர்
நில மகள் உடலம் கீண்ட சால் வழி நிமிர்ந்த சோரிச்
சலம் என நிவந்த செம் கேழ்த் அழல் மணி இமைக்கும் மன்னோ.

170.
தம் உயிர்க்கு இரங்கார் ஆகித் தருக்கொடு மானம் ஈர்ப்ப
தெம் முனை எதிர்ந்தார் ஆற்றும் செரு எனக் குருதிச் செம்கேழ்க் 
கொய்ம் மலர்க் குடுமிச் சேவல் கோழிளம் தகர் யோர் முட்டி
வெம் முனை நோக்கி நிற்பார் வேறு அவற்று ஊறு நோக்கார்.

352.
அழல் அவிர்ந்து அனைய செம் கேழ் அடுக்கிதழ் முளரிவாழ்க்கைத்
தொழுதகு செம்மல் தன்னைத் தொழுது மீண்டு  அகன்று நீங்கா
விழை தகு காதல் கூர விச்சுவ உருவன் தன்னை
வழிபடு குருவாக் கொண்டான் மலர் மகன் சூழ்ச்சி தேறான்.

756.
கொங்கையின் முகட்டில் சாந்தம் குளிர் பனிநீர் தோய்த்து அட்டிப்
பங்கய மலர் மேல் அன்னம் பவளச் செவ்வாய் விட்டு ஆர்ப்பத்
தங்கிய என்ன வார நூபுரம் ததும்பச் செங்கேழ் 
அங்கதிர்ப் பாதசாலம் கிண் கிணி அலம்பப் பெய்து.

773.
பண்ணுமின் இசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில்
நண்ணும் இன் சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அம் கேழ் 
வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால் ஒத்த
அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது அம்மா.

1696.
கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண்
மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி
நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர்
ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான்.

2344.
கீழ்த் திசைத் தலைச் சென்று தன் கேழ் கிளர் வாலை
நீட்டி மா நகர் வலம் பட நிலம் படிந்து உடலைக்
கோட்டி வாலை வாய் வைத்து வேல் கொற்றவற்கு எல்லை
காட்டி மீண்டு அரன் கங்கணம் ஆனது கரத்தில்.

Thursday, 29 August 2019

கீழடி (ஆலவாய் என்ற மதுரை) அழிந்தது எவ்வாறு?

கீழடி (குலசேகரபாண்டியன் ஆண்ட 
ஆலவாய் என்ற மதுரை) 
அழிந்தது எவ்வாறு?

கழிவு நீர் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும்.



கீழடி அருகே தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் இந்த ஊரின் பெயர் மதுரை என்றும்,  இப்போதுள்ள மதுரை நகரம் உருவாக்கப்பெற்ற பின்னர்  இந்த நகரில் இருந்தோர் அனைவரும் இந்த ஊரைக் காலிசெய்துவிட்டுப் புதிதாக நிருமானிக்கப் பெற்ற இன்றைய மதுரைநகருக்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

“வங்கக் கடல்வெள்ளத்தால், அதாவது கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) இந்த மதுரை மாநகரம் அழிந்தது” என்கிறது திருவிளையாடற் புராணம்.   ஆனால் இந்த நகரத்திற்குக் கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் வங்கக் கடல் உள்ளது.  எனவே “இவ்வளவு பெருந்தொலைவு கடலானது தரையைக் கடந்து வந்து இந்த நகரை அழித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.
சில அறிஞர்கள் வைகை ஆற்றுப் பெருக்கால் அழிந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பண்டைய மதுரை மாநகரம் எவ்வாறு அழிந்தது? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
புராணம் கூறுவது உண்மையா? அறிஞர்களின் கருத்து உண்மையா?
உண்மையில் நடந்தது என்ன எனக் கண்டறிய ஏதேனும் வழிவகை உள்ளதா?
உள்ளது.

புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவுநீர்க் குழாயின் சிதைந்த  பாகங்கள் எந்தத் திசையில் கிடக்கின்றன என்பதைக் கொண்டு, இந்த நகரம் கடல்கோளால் அழிந்ததா? அல்லது வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்ததா? என்று எளிதில் கண்டறிந்து விடலாம்.
புதைந்துள்ள நகருக்குக் கிழக்கே வங்கக்கடல் உள்ளது. வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது. 

எனவே கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவூநீர்க்குழாய் அதனுடைய இருப்பிடத்திற்கு மேற்குத்திசையில் கண்டறியப்பட்டிருந்தால்,  இந்த நகரம் கிழக்கே யிருந்து வந்த கடல்வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மேற்கே கிடக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
மாறாக, இந்தக் கழிவுநீர்க் குழாயானது அதனுடைய இருப்பிடத்திற்குக்  கிழக்குத் திசையில் கண்டறியப்பட்டால்,  இந்த நகரமானது மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வந்த வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.

“புதையுண்டுள்ள இந் நகரம் எவ்வாறு அழிந்தது?” என்று இந்தக் கழிவூநீர்க் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும் இந்தத் தொன்மையான ஆலவாய் நகரம் எப்படி அழிந்தது என்று !

அன்பன்
காசீசீர், முனைவர், நா.ரா.கி.காளைராசன்
ஆவணி 12 (29.08.2019) விழாயன் கிழமை

பார்வை  - திஇந்து நாளிதழ் செய்தி.
திருப்புவனம்  - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.  கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.  இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன.  2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது.
https://static.hindutamil.in/hindu/uploads/news/2019/08/29/large/513341.jpg
இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
https://www.hindutamil.in/news/tamilnadu/513341-discovery-of-underground-hot-tub-1.html

Tuesday, 6 August 2019

தமிழரும் துருக்கரும்

திருவிளையாடல் புராணத்தில் 
‘துருக்கர் (துலுக்கர்)’என்ற சொல் 
உள்ள பாடல்கள்

திருவிளையாடற் புராணத்தில் மூன்று பாடல்களில் துருக்கர் (துலுக்கர்) பற்றிய செய்திகள் உள்ளன.



1) மாணிக்கம் விற்ற படலத்தில் (படலம் எண் 17), சிவபெருமான் விற்கக் கொண்டு வந்த பல்வேறுவிதமான உயர்ரகக் கற்கள் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன.  முட்கள் பொருந்திய நாளத்தினையுடைய தாமரையின் மலர்போலும் கண்களையுடைய திருமால், மோகினிப் பெண் வடிவாகி ஓட,  அழகிய பாதி மதியினைச் சடையிற் சூடிய சிவபெருமான், ஒரு திருவிளையாட்டாக, மந்தரமலையின் எல்லை அளவாக, துள் அரி ஏறு போலத் தொடர்ந்து சென்று, பழிப்பில்லாத சிவந்த தீயாகிய இந்திரியத்தைச் சிந்தினான்.  அப்போது,  தூய அவ்விந்தில் ஐயன் (ஐயனார்) என்பான், காட்டிலுறையும் பரிவார தெய்வங்களோடும் வந்தனன்; அந்த விந்தினை, வலமிக்க கருடன் கௌவி, கடலிலும் துருக்க நாட்டிலும் பரவ விடுத்தது,  அதனால், கலுழப் பச்சை கற்கள் தோன்றின என்கிறது திருவிளையாடற் புராணம்.

மாணிக்கம் விற்ற படலம் (பாடல் எண் 1259)
அப் பொழுது அமலன் வித்தில் அரிகரகுமரன் கான 
வைப்புரை தெய்வத் தோடும் வந்தனன் அந்த விந்து 
துப்புரு கருடன் கௌவிக் கடலினும் துருக்க நாட்டும் 
பப்புற விடுத்தவாறே பட்டது கலுழப் பச்சை”.
-------------------------------------------------------------------

2) மெய்க் காட்டிட்ட படலத்தில் (படலம் எண் 30) குலபூடணபாண்டியனுக்குச் சுந்தரசாமந்தன் என்னும் பல்வேறு நாட்டிற்கும் ஓலை அனுப்பிப் படை திரட்டிய செய்து கூறப்படுகின்றது.  அதில் துருக்க நாட்டிற்கும் ஓலை அனுப்பி செய்தி பதிவு செய்யப்பெற்றுள்ளது.

மெய்க் காட்டிட்ட படலம் ( பாடல் எண் 1677)
எழுதுக தெலுங்கர்க்கு ஓலை எழுதுக கலிங்கர்க்கு ஓலை 
எழுதுக விராடர்க்கு ஓலை எழுதுக மராடர்க்கு ஓலை 
எழுதுக கொங்கர்க்கு ஓலை எழுதுக வங்கர்க்கு ஓலை 
எழுதுக துருக்கர்க்கு ஓலை என்று பொய் ஓலை விட்டான்”.
-------------------------------------------------------------------


3)  சுந்தரப்பேர் அம்பு எய்த படலத்தில் (படலம் எண் 50)  வங்கிய சேகர பாண்டியன் மீது விக்கிரமசோழன் படையெடுத்து வந்தான்.  விக்கிரமசோழனுடைய படையில், போர்த்துணையாகி வந்த, வடக்கே உள்ள நாட்டிலுள்ளாராகிய துருக்கரும் ஒட்டியரும், இவரொழிந்த ஏனையோரும் இருந்துள்ளனர். அவர்கள் சோழனைச் சூழ்ந்து நின்று,  “நிற்பாயாக என்று கூறிச் சினந்து வைது,  நீ போருக்குத் தோற்றுப் போகின்றாய்;  இது உனது கருத்தானால், ஆண் தன்மை யாரிடத்தது; உனது பெருமை என்னாகும்” என்று சோழனைப் பழித்த செய்தி பதிவு செய்யப் பெற்றுள்ளது.

சுந்தரப்பேர் அம்பு எய்த படலம் 2373.
செருத்துணை ஆகி வந்த உத்தர தேயத்து உள்ளார் 
துருக்கர் ஒட்டியர் வேறு உள்ளார் யாவரும் சூழ்ந்து நில் என்று 
உருத்தனர் வைது நீ போர்க்கு உடைந்தனை போதி ஈது உன் 
கருத்து எனின் ஆண்மை யாவர் கண்ணது உன் மானம் என்னாம்”.
-------------------------------------------------------------------

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆடி 21 (06.08.2019) செவ்வாய் கிழமை.


Saturday, 27 July 2019

கீழடி அழிந்தது எவ்வாறு?

கீழடி அருகே புதையுண்டுள்ள நகரம் அழிந்தது எவ்வாறு?
இரட்டைச் சுவரிடம் கேளுங்கள், அது சொல்லும்.




மதுரைக்குக் கிழக்கேயுள்ள கீழடி அருகே தொல்லியல்துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.   இங்கே நான்குகட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்து விட்டன.  கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்பெற்று நடைபெற்று வருகிறது.   இந்த 5 ஆம் கட்ட அகழாய்வில் இரட்டைச் சுவர் இருப்பது கண்டறியப் பெற்றுள்ளது.  ஆனால் இது அரண்மனைச் சுவரா அல்லது கோட்டைச் சுவரா என்று கண்டறியமுடியவில்லை என்றும், சுவரின் தொடர்ச்சியயையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவ்வப்போது ஜி.பி.ஆர். எனப்படும் புவி ஊடுருவும் கருவி மூலம் பூமிக்கடியில் இருப்பவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன(பார்வை 1).

கீழடி அருகே தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் இந்த ஊரின் பெயர் மதுரை என்றும்,  இப்போதுள்ள மதுரை நகரம் உருவாக்கப்பெற்ற பின்னர்  இந்த நகரில் இருந்தோர் அனைவரும் இந்த ஊரைக் காலிசெய்துவிட்டுப் புதிதாக நிருமானிக்கப் பெற்ற இன்றைய மதுரைநகருக்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பண்டைய மதுரை மாநகரம் எவ்வாறு அழிந்தது? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.

“வங்கக் கடல்வெள்ளத்தால், அதாவது கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) இந்த மதுரை மாநகரம் அழிந்தது” என்கிறது திருவிளையாடற் புராணம்.   ஆனால் இந்த நகரத்திற்குக் கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் வங்கக் கடல் உள்ளது.  எனவே “இவ்வளவு பெருந்தொலைவு கடலானது தரையைக் கடந்து வந்து இந்த நகரை அழித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.

புராணம் கூறுவது உண்மையா? அறிஞர்களின் கருத்து உண்மையா?
உண்மையில் நடந்தது என்ன எனக் கண்டறிய ஏதேனும் வழிவகை உள்ளதா?

உள்ளது.
தொல்லியல் அறிஞர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப்பெற்றுள்ள இந்த நகரம் கடல்கோளால் அழிந்ததா, அல்லது வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்ததா என்று எளிதில் கண்டறிந்து விடலாம். புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள இரட்டைச் சுவரின் சிதைந்த  பாகங்கள் எந்தத் திசையில் கிடக்கின்றன என்பதைக்கொண்டு கண்டறிந்து விடலாம்.

புதைந்துள்ள நகருக்குக் கிழக்கே வங்கக்கடல் உள்ளது, வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது.  எனவே புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள இரட்டைச் சுவரின் சிதைந்த  பாகங்கள் இந்தச் சுவற்றிற்கு மேற்குத்திசையில் கண்டறியப்பட்டால், இது கிழக்கே யிருந்து வந்த கடல்வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.  மாறாக, இரட்டைச் சுவரின் சிதைந்த பாகங்கள் சுவற்றிற்கு கிழக்குத் திசையில் கண்டறியப்பட்டால்,  இது மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வந்த வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.

“புதையுண்டுள்ள இந் நகரம் எவ்வாறு அழிந்தது?” என்று இரட்டைச் சுவரிடம் கேளுங்கள், அது சொல்லும்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

நன்றி.
பார்வை (1) – 
https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jul/25/அகழாய்வுப்-பணிகள்-தீவிரம்-கீழடியில்-தங்கும்-தொல்லியல்-ஆய்வாளர்கள்-3199474.html
படங்கள் - செய்தித்தாள்களில் வந்தவை.

Monday, 22 July 2019

கூலிப்படை

பாண்டிய மன்னனின் கூலிப்படை

இந்நாளில், கூலிப்படை (mercenary) என்பவர்கள் பணத்துக்காகப் போர் செய்பவர்கள், கொலை செய்பவர்கள்.  இவர்களுக்கும் கொலை செய்யப்படுபவருக்கும் எந்தவொரு விரோதமும் இருக்காது.  இருந்தாலும் பணத்திற்காகச் சண்டை செய்வார்கள், கொலையும் செய்வார்கள்.
கூலிக்காகச் சண்டை செய்வதோ, போர் செய்வதோ இந்நாளில் ஏற்பட்டதல்ல.

அனந்தகுண பாண்டியனின் மகனான குலபூடண பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் சேதிராயன் என்றொரு வேடன் மன்னனுடன் போரிடத் துணிந்துள்ளான்.  இந்த வேடனைத் தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொலை செய்ய அதிகமான படைவீரர்கள் பாண்டிய மன்னனுக்குத் தேவைப் பட்டுள்ளனர்.  அதனால் அவன் அவனது கருவூலத்தைத் (கஜானாவைத்) திறந்துவைத்து அதிலிருந்த பொன்னைக் (தங்கத்தைக்) கூலியாகத் கொடுத்து அண்டை நாட்டுப் படைகளைத் திரட்டியுள்ளான் என்கிறது திருவிளையாடற் புராணம்.

குலபூடணனுக்குச் சுந்தரசாமந்தன் என்னும் சேனாதிபதி இருந்தான்.
ஒருசமயம் சேதிராயன் என்னும் வேடர் தலைவன் பாண்டியன் மேல் படையெடுக்கக் கருதினான்.  அதனை யுணர்ந்த பாண்டியன் சேனாதிபதி சுந்தரசாமந்தனை அழைத்துப் பொன்னறை (பொன் நிறைந்த கருவூலம்) முழுவதும் திறந்து வைத்து, வேண்டிய பொன்னை எடுத்துச் செலவு செய்து மேலும் பல சேனைகளைத் திரட்டுமாறு கூறினான்.  ஆனால் சாமந்தன் பொன்னை யெல்லாம் சிவப்பணிகளுக்குச் செலவு செய்துவிட்டு, எல்லா தேசத்தினருக்கும் ஓலை அனுப்பியது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.   ஒருநாள் பாண்டியன் சேனாதிபயை அழைத்து ஓலை எழுதப்பெற்ற நாடுகளில் இருந்து சேனைகள் ஏதும் வராதது கண்டு, நாளை சூரியன் மறைவதற்கும்ள சேனைகள் அனைத்தும் வரவேண்டும் எனக் கட்டளை யிட்டான்.  சுந்தரசாமந்தன் செய்வதறியாமல் திகைத்து, மதுரை அருள்மிகு சோமசுந்தரரை வேண்டினான்.   சோமசுந்தரின் திருவருளால் சிவகணங்கள் யாவும் பலவகைப் படைகளாக உருமாறி மதுரையில் திரண்டு நின்றனர்.  திரண்டு வந்திருந்த சேனைகளைச் சாமந்தன் குலபூடணபாண்டியனுக்கு இவர்கள் என்னென்ன தேசத்தவர்கள் என மெய்காட்டி அறிவித்தான்.

கொங்கர்,குரு நாடர், கங்கர், கருநாடர், அங்கர், ஆரியர்கள், வங்கர், மாளவர்கள், குலிங்கர், கொங்கணர்கள், தெலுங்கர், சிங்களர்கள், கலிங்கர், கவுடத்தர் முதலான அண்டை நாட்டினர் அணிவகுந்து நின்றனர்.  இவர்கள் தமிழரல்லாத அண்டை நாட்டினர் என மெய்காட்டிச் சாமந்தன் பாண்டியனுக்கு அறிவித்தான்.

மேலும், காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலானோர் அணிவகுத்து நின்றனர்.  இவர்கள் காஞ்சி நாகரிகத்தை மேற்கொண்டவர்கள், ஆதலால் இவர்கள் “நம்முடைய (பாண்டிய) நாட்டோர்” ஆவர் எனவும் மெய்க் காட்டிச்  சாமந்தன் குலபூடண பாண்டியனுக்கு அறிவித்தான்.

கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலான நாட்டவர்கள் காஞ்சிபுர நாகரிகத்தைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.  மேலும் இவர்களை “நம்முடைய (பாண்டிய) நாட்டோர்” என்றே பாண்டியநாட்டின் சேனாதிபதி அடையாளம் காட்டுகிறார்.

இதனால் அனந்தகுணபாண்டியனின் மகனாகிய குலபூடணபாண்டியன் காலத்திலேயே  கூலிக்குப் படையமர்த்திக் கொள்ளும் முறை, கூலிப்படை முறை இருந்துள்ளது என அறிய முடிகிறது.

மேலும், அந்தக் காலத்திலேயே பாண்டியருக்குக் கூலிப்படையாகக் கொங்கர்,குரு நாடர், கங்கர், கருநாடர், அங்கர், ஆரியர்கள், வங்கர், மாளவர்கள், குலிங்கர், கொங்கணர்கள், தெலுங்கர், சிங்களர்கள், கலிங்கர், கவுடத்தர் முதலான அண்டை நாட்டினர்  இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

பார்வை - பரஞ்சோதிமுனிவர் மொழிபெயர்த்துப் பாடிய திருவிளையாடல் புராணம் (30) மெய்க் காட்டிட்ட படலம், பாடல் எண் 1664 முதல் 1704 முடிய.

----------------------------
திருவிளையாடற் புராணம் பாடல்கள்
1692.
தெவ் அடு மகிழ்ச்சி பொங்கச் சேனையின் செல்வ நோக்கி
எவ் எவ் தேயத்து உள்ளோர் இவர் என எதிரே நின்று
கௌவையின் மனச் சாமந்தன் கையில் பொன் பிரம்பு நீட்டி
அவ் அவர் தொகுதி எல்லாம் மணி அணி நிறுவிக் கூறும்.
1693.
கொங்கர் இவர் ஐய குரு நாடர் இவர் ஐய
கங்கர் இவர் ஐய கருநாடர் இவர் ஐய
அங்கர் இவர் ஐய இவர் ஆரியர்கள் ஐய
வங்கர் இவர் ஐய இவர் மாளவர்கள் ஐய.
1694.
குலிங்கர் இவர் ஐய இவர் கொங்கணர்கள் ஐய
தெலுங்கர் இவர் ஐய இவர் சிங்களர்கள் ஐய
கலிங்கர் இவர் ஐய கவுடத்தர் இவர் ஐய
உலங்கெழு புயத்து இவர்கள் ஒட்டியர்கள் ஐய.
1695.
கொல்லர் இவர் ஐய இவர் கூர்ச்சர்கள் ஐய
பல்லவர் இவர் ஐய இவர் பப்பரர்கள் ஐய
வில்லர் இவர் ஐய இவர் விதேகர் இவர் ஐய
கல் ஒலி கழல் புனை கடாரர் இவர் ஐய.
1696.
கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண்
மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி
நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர்
ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான்.
1697.
இத்தகைய சேட் புலன் உளாரை இவண் உய்த்த
இத்தகைமை என் என வினாவி அருள் செய்யேல்
அத்த நின்னரும் பொருள் அனைத்தும் வரையாதே
உய்த்தலின் அடைந்தனர்கள் என உரைத்தான்.
1698.
அந் நெடும் சேனை தன்னுள் சேண் இடை அடல் மா ஊர்ந்து
பின் உற நிற்கும் ஒற்றைச் சேவகப் பிரானை நோக்கி
மன்னவன் அவர் யார் என்னச் சாமந்தன் வணங்கி ஐய
இன்னவர் சேனை வெள்ளத்து யாரை என் அறிவது என்றான்.
1699.
அவரை இங்கு அழைத்தி என்றான் அரசன்தன் வழிச் செல்வார் போல்
கவயம் இட்டவரும் போந்தார் காவலன் களி கூர்ந்து அம் பொன்
நவமணிக் கலன் பொன் ஆடை நல்கினான் உள்ளத்து அன்பு
தவறிலான் பொருட்டு வாங்கித் தரித்து தன் தமர்க்கும் ஈந்தார்.

பாடல்கள் - நன்றி  http://www.tamilvu.org/library

Sunday, 21 July 2019

சோமாலியா பெயர்க்காரணம்

சோமாலியர்கள் தமிழர்களா?
கம்பராமாயணத்திலும் திருவிளையாடல் புராணத்திலும் “பப்பரர்கள்” என்ற நாட்டினர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

யார் இந்தப் பப்பரர்கள்?
இவர்களது நாடு எது?

ரோம் நாட்டினராகவோ அல்லது சோமாலியா நாட்டினராகவோ இருக்க வாய்ப்புகள் உள்ளன.

சோமாலியா என்ற சொல்லுக்குப் பொருள் ஏதும் கிடைக்கவில்லை.
ஆனால் சோமாலியா என்ற சொல்லைத் தமிழ்ச் சொல்லாக்கினால் பொருள் கிடைக்கிறது.
சோமாலியா = சோமாளியா = சோம ஆள்யா,
சோம = சந்திர
ஆள் = ஆட்கள்.
சோமாலியா = சந்திர வம்சத்தவர் (பாண்டியர்) எனப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. 

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


Saturday, 20 July 2019

ரோமானியப் பேரரசை ஆண்ட பப்பரராஜா (Barbarossa)தமிழரா ?

ரோமானியப் பேரரசை  ஆண்ட 
“பப்பர ராசா ” (பப்பரராஜா - Barbarossa)
தமிழனா?


அனந்தகுண பாண்டியனின் மகன் குலபூடண பாண்டியன்.
குலபூடணனுக்குச் சுந்தரசாமந்தன் என்னும் சேனாதிபதி இருந்தான்.  
ஒருசமயம் சேதிராயன் என்னும் வேடர் தலைவன் பாண்டியன் மேல் படையெடுக்கக் கருதினான்.     அதனை யுணர்ந்த பாண்டியன் சேனாதிபதி சுந்தரசாமந்தனை அழைத்துப் பொன்னறை (பொன் நிறைந்த கருவூலம்) முழுவதும் திறந்து வைத்து, வேண்டிய பொன்னை எடுத்துச் செலவு செய்து மேலும் பல சேனைகளைத் திரட்டுமாறு கூறினான். ஆனால் சாமந்தன் பொன்னை யெல்லாம் சிவப்பணிகளுக்குச் செலவு செய்துவிட்டு, எல்லா தேசத்தினருக்கும் ஓலை அனுப்பியது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தான்.  ஒருநாள் பாண்டியன் சேனாதிபயை அழைத்து ஓலை எழுதப்பெற்ற நாடுகளில் இருந்து சேனைகள் ஏதும் வராதது கண்டு, நாளை சூரியன் மறைவதற்கும்ள சேனைகள் அனைத்தும் வரவேண்டும் எனக் கட்டளை யிட்டான்.  சுந்தரசாமந்தன் செய்வதறியாமல் திகைத்து, மதுரை அருள்மிகு சோமசுந்தரரை வேண்டினான்.  சோமசுந்தரின் திருவருளால் சிவகணங்கள் யாவும் பலவகைப் படைகளாக உருமாறி மதுரையில் திரண்டு நின்றனர்.  திரண்டு வந்திருந்த சேனைகளைச் சாமந்தன் குலபூடணபாண்டியனுக்கு இவர்கள் என்னென்ன தேசத்தவர்கள் என மெய்காட்டி அறிவித்தான்.

கொங்கர்,குரு நாடர், கங்கர், கருநாடர், அங்கர், ஆரியர்கள், வங்கர், மாளவர்கள், குலிங்கர், கொங்கணர்கள், தெலுங்கர், சிங்களர்கள், கலிங்கர், கவுடத்தர் முதலான அண்டை நாட்டினர் அணிவகுந்து நின்றனர்.  இவர்கள் தமிழரல்லாத அண்டை நாட்டினர் என மெய்காட்டிச் சாமந்தன் பாண்டியனுக்கு அறிவித்தான்.

மேலும், காஞ்சி நாகரிகம் (சோழர் நாகரிகம்) உடையவர்களான கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலானோர் அணிவகுத்து நின்றனர்.  இவர்கள் காஞ்சி நாகரிகத்தை மேற்கொண்டவர்கள், ஆதலால் இவர்கள் “நம்முடைய (பாண்டிய) நாட்டோர்” ஆவர் எனவும் மெய்க் காட்டிச்  சாமந்தன் குலபூடணபாண்டியனுக்கு அறிவித்தான்.

கொல்லர், கூர்ச்சர்கள், பல்லவர், பப்பரர்கள், வில்லர், விதேகர், கடாரர், கேகயர்கள், மராடர் முதலான நாட்டவர்கள் காஞ்சிபுர நாகரிகத்தைப் பின்பற்றி வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.  மேலும் இவர்களை “நம்முடைய (பாண்டிய) நாட்டினர்” என்றே பாண்டியநாட்டின் சேனாதிபதி அடையாளம் காட்டுகிறார்.


இதனால் அனந்தகுணபாண்டியனின் மகனாகிய குலபூடணபாண்டியன் காலத்திலேயே  இந்நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.  மேலும், அந்தக் காலத்திலேயே கொங்கர்,குரு நாடர், கங்கர், கருநாடர், அங்கர், ஆரியர்கள், வங்கர், மாளவர்கள், குலிங்கர், கொங்கணர்கள், தெலுங்கர், சிங்களர்கள், கலிங்கர், கவுடத்தர் முதலான அண்டை நாட்டினர் பாண்டியருக்குக் கூலிப்படையாக இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது (பார்வை 1).

தமிழர்களாக அடையாளம் காட்டப்படும் பப்பர்கள் பற்றிக் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் குறிப்பிடுள்ளார்.  பப்பரர்கள் அரத்த நோக்கினையும், அல்திரள் மேனியையும் உடையவர்கள் என்கிறது கம்பராமாயணம் பாலகாண்டம் எழுச்சிப்படலம்  பாடல்.

பப்பரர்களைப் பார்பரா( Barbara) என்ற சொல்லோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் ,  Barbarossa புனித ரோமானியப் பேரரசர் (1152 - 1190) நினைவிற்கு வருகிறார் (பார்வை 2).

காட்டுமிராண்டி என்றும் கொள்ளையன் என்றும் கிருத்தவர்களால்  சொல்லப்பட்ட Barbary pirate (1546) நினைவுக்கும் வருகிறார்.




Armenian Apostolic Patriarch and Bishops of Jerusalem. Original description: "A picture taken by a local photographer of the Greek Orthodox Patriarch and Bishops of Jerusalem Circa 1880."
பாண்டியனது சின்னம் மீன்.
மீன் சின்னத்தை ஆடையாகப் பிசப் அணிந்துள்ளனர்.
மேலும் பாண்டியர்களின் வலைத்தடியைப் பிசப் கையில் ஏந்தியுள்ளார்.
மேலேயுள்ள படத்தில் சிலர் நெற்றியில் நீறு அணிந்துள்ளது போன்றும் தெரிகிறது.

இதனால் “நம் (பாண்டிய) நாட்டவர்” என்று திருவிளையாடற் புராணத்தில் அடையாளம் காட்டப்பெற்றுள்ள  பப்பரர்கள் ரோமானிய தேசத்தை ஆண்டுள்ளனர் என்றும்,  பிசப்களாகவும் உள்ளனர் என்றும் கருத வேண்டியுள்ளது.

சோமாலியா என்ற நாட்டின் பெயர்ச் சொல்லுக்குப் பொருள் ஏதும் கிடைக்கவில்லை.   ஆனால் சோமாலியா என்ற சொல்லைத் தமிழ்ச் சொல்லாக்கினால் பொருள் கிடைக்கிறது.
சோமாலியா = சோமாளியா = சோம ஆள்யா, 
சோம = சந்திர
ஆள் = ஆட்கள்.
சோமாலியா = சந்திர வம்சத்தவர் (பாண்டியர்) எனப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.    

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

பார்வை - 1) பரஞ்சோதிமுனிவர் மொழிபெயர்த்துப் பாடிய திருவிளையாடல் புராணம் (30) மெய்க் காட்டிட்ட படலம், பாடல் எண் 1664 முதல் 1704 முடிய.
2) https://www.vocabulary.com/dictionary/Barbarossa
----------------------------
திருவிளையாடற் புராணம் பாடல்கள்
1692.
தெவ் அடு மகிழ்ச்சி பொங்கச் சேனையின் செல்வ நோக்கி
எவ் எவ் தேயத்து உள்ளோர் இவர் என எதிரே நின்று
கௌவையின் மனச் சாமந்தன் கையில் பொன் பிரம்பு நீட்டி
அவ் அவர் தொகுதி எல்லாம் மணி அணி நிறுவிக் கூறும்.
1693.
கொங்கர் இவர் ஐய குரு நாடர் இவர் ஐய
கங்கர் இவர் ஐய கருநாடர் இவர் ஐய
அங்கர் இவர் ஐய இவர் ஆரியர்கள் ஐய
வங்கர் இவர் ஐய இவர் மாளவர்கள் ஐய.
1694.
குலிங்கர் இவர் ஐய இவர் கொங்கணர்கள் ஐய
தெலுங்கர் இவர் ஐய இவர் சிங்களர்கள் ஐய
கலிங்கர் இவர் ஐய கவுடத்தர் இவர் ஐய
உலங்கெழு புயத்து இவர்கள் ஒட்டியர்கள் ஐய.
1695.
கொல்லர் இவர் ஐய இவர் கூர்ச்சர்கள் ஐய
பல்லவர் இவர் ஐய இவர் பப்பரர்கள் ஐய
வில்லர் இவர் ஐய இவர் விதேகர் இவர் ஐய
கல் ஒலி கழல் புனை கடாரர் இவர் ஐய.
1696.
கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண்
மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி
நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர்
ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான்.
1697.
இத்தகைய சேட் புலன் உளாரை இவண் உய்த்த
இத்தகைமை என் என வினாவி அருள் செய்யேல்
அத்த நின்னரும் பொருள் அனைத்தும் வரையாதே
உய்த்தலின் அடைந்தனர்கள் என உரைத்தான்.
1698.
அந் நெடும் சேனை தன்னுள் சேண் இடை அடல் மா ஊர்ந்து
பின் உற நிற்கும் ஒற்றைச் சேவகப் பிரானை நோக்கி
மன்னவன் அவர் யார் என்னச் சாமந்தன் வணங்கி ஐய
இன்னவர் சேனை வெள்ளத்து யாரை என் அறிவது என்றான்.
1699.
அவரை இங்கு அழைத்தி என்றான் அரசன்தன் வழிச் செல்வார் போல்
கவயம் இட்டவரும் போந்தார் காவலன் களி கூர்ந்து அம் பொன்
நவமணிக் கலன் பொன் ஆடை நல்கினான் உள்ளத்து அன்பு
தவறிலான் பொருட்டு வாங்கித் தரித்து தன் தமர்க்கும் ஈந்தார்.

பாடல்கள் - நன்றி  http://www.tamilvu.org/library
-------------------------------------
பப்பரர் பாரம் சுமந்து செல்லுதல்
“அரத்த நோக்கினர், அல் திரள் மேனியர்,
பரிந்த காவினர், பப்பரர் ஏகினார்-
திருந்து கூடத்தைத் திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே” 37
பாடல் - நன்றி https://ta.wikisource.org/wiki/கம்பராமாயணம்/பால_காண்டம்/எழுச்சிப்_படலம்

“பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும் கபிலைமாட்டு உதித்து, வேந்தன்
துப்புடைச் சேனை யாவும் தொலைவுறத் துணித்தலோடும்,
வெப்புடைக் கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார்”. 17
https://ta.wikisource.org/wiki/கம்பராமாயணம்/பால_காண்டம்/கைக்கிளைப்_படலம்
---------------------------------------------------
படங்கள் - நன்றி http://nizharchirpikalstudios.blogspot.com/2015/10/hominins.html