Showing posts with label கேழல். Show all posts
Showing posts with label கேழல். Show all posts

Sunday, 1 September 2019

திருவிளையாடல் புராணம் 'கேழ்' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

திருவிளையாடல் புராணம்
'கேழ்' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

கேழ் = ஒளி, நிறம், ஒப்பு
கேழ்த்த = adj. bright, abundant., நிறங்கொண்ட. கேழ்த்த வடித்தாமரை (திவ். இயற். 3, 96)
மிகுந்த. கேழ்த்த சீரன் (திவ். திருவாய், 3, 1, 7)
கேழ்பவர் = நன்மையுடையார் the blessed.
கேழ்பு = நன்மை blessing.
கேழல் = நிறம், பன்றி, குளநெல்
கேழ்வரகு = ஒருவகைத் தவசம், கேப்பை
கேழற்பன்றி = ஆண்பன்றி

50.
பல நிற மணி கோத்த என்ன பல் நிற ஏறு பூட்டி
அலமுக இரும்பு தேய வாள் வினைக் கரும் கால் மள்ளர்
நில மகள் உடலம் கீண்ட சால் வழி நிமிர்ந்த சோரிச்
சலம் என நிவந்த செம் கேழ்த் அழல் மணி இமைக்கும் மன்னோ.

170.
தம் உயிர்க்கு இரங்கார் ஆகித் தருக்கொடு மானம் ஈர்ப்ப
தெம் முனை எதிர்ந்தார் ஆற்றும் செரு எனக் குருதிச் செம்கேழ்க் 
கொய்ம் மலர்க் குடுமிச் சேவல் கோழிளம் தகர் யோர் முட்டி
வெம் முனை நோக்கி நிற்பார் வேறு அவற்று ஊறு நோக்கார்.

352.
அழல் அவிர்ந்து அனைய செம் கேழ் அடுக்கிதழ் முளரிவாழ்க்கைத்
தொழுதகு செம்மல் தன்னைத் தொழுது மீண்டு  அகன்று நீங்கா
விழை தகு காதல் கூர விச்சுவ உருவன் தன்னை
வழிபடு குருவாக் கொண்டான் மலர் மகன் சூழ்ச்சி தேறான்.

756.
கொங்கையின் முகட்டில் சாந்தம் குளிர் பனிநீர் தோய்த்து அட்டிப்
பங்கய மலர் மேல் அன்னம் பவளச் செவ்வாய் விட்டு ஆர்ப்பத்
தங்கிய என்ன வார நூபுரம் ததும்பச் செங்கேழ் 
அங்கதிர்ப் பாதசாலம் கிண் கிணி அலம்பப் பெய்து.

773.
பண்ணுமின் இசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில்
நண்ணும் இன் சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அம் கேழ் 
வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால் ஒத்த
அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது அம்மா.

1696.
கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண்
மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி
நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர்
ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான்.

2344.
கீழ்த் திசைத் தலைச் சென்று தன் கேழ் கிளர் வாலை
நீட்டி மா நகர் வலம் பட நிலம் படிந்து உடலைக்
கோட்டி வாலை வாய் வைத்து வேல் கொற்றவற்கு எல்லை
காட்டி மீண்டு அரன் கங்கணம் ஆனது கரத்தில்.