கீழடியில் கிடைத்த இரும்பு
![]() |
தினமலர் செய்தி --
திருப்புவனம் :கீழடியில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புஉள்ளது என தொல்லியல்ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.கீழடியில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகின்றன. தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் இப்பணியில் சிவப்பு நிற பானைகள் கடந்த வாரம் கண்டறியப்பட்டன. இரண்டு பானைகளையும் நீண்ட சுவர் இணைக்கும் வகையில் அமைந்துஉள்ளது. சுவரின் அருகில் இரும்பு பொருட்களும், இரும்பை உருக்கும் போது வெளியாகும் கழிவுகளும் கிடைத்துள்ளன. நுண்துகள் மணற்பரப்பும் காணப்படுவதால் உலைகலனாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே மணலுார், கீழடியில் உலைகலன் கண்டறியப்பட்ட நிலையில் இதுவும் உலைகலனாக இருக்க வாய்ப்புஉள்ளது. எனவே கீழடியில் நெசவு மட்டுமல்லாது இரும்பு தொழிற்சாலையும் செயல்பட்டு வந்துள்ளது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3035098