Saturday, 18 June 2022

கீழடி – மணலூர் கல்வெட்டு

கீழடி – மணலூர் குறிப்புகள் 

திருவிளையாடற் புராணம் உக்கிரபாண்டியனுக்கு மணவூர் காந்திமதியைத் திருமணம் செய்துவைத்ததாக உள்ளது.

தீந்தண் புனல்சூழ் வடபுலத்து மணவூ ரென்னுந் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திருமரபின் விளங்குஞ் சோம சேகரனென்
றாய்ந்த கேள்வி யவனிடத்துத் திருமா தென்ன வவதரித்த
காந்தி மதியை மணம்பேச விருந்தா ரற்றைக் கனையிருள்வாய்.


மணலூர் மணவூர் "சீர்க்கிரி" (?)என்று மகாபாரதத்தில் உள்ளது.

ஸிகதா என்றால் மணல், வடமொழியில். எனவே, ஸிக்கதாபுரி < மணலூர் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

சோமசுந்தர பாண்டியனும் தடாதகைப் பிராட்டியும் இன்புற்றுப் பிறந்தவன் உக்கிரபாண்டியன்.  இவனுக்கு மணவூர் சோமசேகரனின் புதல்வியான காந்திமதியைத் திருமணம் செய்து வைத்தனர்.
உக்கிரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு கடல் (சுனாமி) கரைகடந்து மதுரை வரை வந்துள்ளது.  இதனால் காந்திமதி பிறந்து வளர்ந்த மணவூர் மண்ணுள் புதையுண்டு போனது.
மணவூரின் மேற்கே தற்போது (கீழடி அருகே) தொல்லியல்துறையினரின் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
மணவூர்  புதையுண்டுள்ள இடத்தில் பண்டைக் காலத்திய காந்திமதி வாழ்ந்த வரலாற்றுத் தடையங்களைத் தேடித் திரிந்த போது,  அன்னை மீனாட்சியின் பெயரையும் காந்திமதி என்ற பெயரையும் தாங்கிய  இக்காலத்திய கல்வெட்டு ஒன்றை என்னால்  காண முடிந்தது.






dorai sundaram  22/10/2016

கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு:
1 சாலிகவாகன
2 சகாப்த்தம்  1.. ( த்த- கூட்டாக ஒரே எழுத்து)
3 5 ற்மேல்ச் செ
4 ல்லாய்நின்ற பிரமா
5 தீட்ச வரு. சித்திரை (மீ)
6 30 உ சங்கிலி சேரு
7 வை காறரவர்கள்  ப
8 பட்டையமாவது மது
9 ரையில் மீனாட்சி சுந்த
10 ரறைக்கட்டளைக்(கி)
11  காந்திமதி மகள் தா
12 யம்மாளுக்கு நம்மிட (க்கு- கூட்டாக ஒரே எழுத்து)
13 பேற் குடுத்து மண (த்து- கூட்டாக ஒரே எழுத்து)
14 லூரில் கோரஞ்
15 செய்தடி 3(1) உ
16 (உம்பள) .. கல்
17 லுங் காவே(ரி) வரை(க்)
18 கும்

குறிப்பு:   கல்வெட்டில் சாலிவாகன் சகாப்தம் கொடுக்கப்பட்டிருந்தாலும்
தெளிவின்மை காரணமாகக் கல்வெட்டின் காலத்தைத் துல்லியமாகக்  கணிக்க இயலவில்லை. தமிழாண்டின் பெயர் பிரமாதீட்ச  என்னும் குறிப்பு கி.பி. 1853, 1913 ஆகிய இரு ஆண்டுகளையும் குறிக்கும். 
சங்கிலி சேர்வைக்காரர் என்பவர் பட்டையம் அளித்துள்ளார். மீனாட்சிசுந்தரர்
அறக்கட்டளை என்பதாக் இறைவர்க்கு ஒரு கொடை அளிக்கப்படுகிறது. 
காந்திமதி மகள் தாயம்மாள் குறிக்கப்படுகிறார். பட்டயம் அவருக்கு  அளிக்கப்படுகிறதா என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
“நம்மிட பேர் குடுத்து மணலூரில் கோரஞ்செய்தபடி”  என்பதன்  பொருளும் புலப்படவில்லை.  கொடை, கல்லும் காவேரியும் உள்ளவரை
நடக்கவேண்டும் என்னும் குறிப்புள்ளது.

சுந்தரம்.


 ஸ்ரீ சங்கலிச்சேர்வை வாரிசான திருமதி. காந்திமதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தேவாரம் பாடியவர்க்கு மானியமாக மணலூரில் உள்ள மூன்று தடி நிலத்தை உபயமாக வழங்கியுள்ளார் 

 எவனொருவன் அக்கல்வெட்டையோ  அல்லது அந்த உபயம் அளித்த நிலத்தையோ அழிக்கவோ அல்லது தான் அதை அடைய முற்பட்டாலோ காவிரிக் கரை துவங்கி குமரிக்கரை வரை உள்ள மக்கள் செய்யும் எல்லாப் பாவங்களும் அவனைச் சேரும் .

15 செய்தடி 3(1) உ
16 (உம்பள) .. கல்
17 லுங் காவே(ரி) வரை(க்)
18 கும்

சம்பளம் உம்பளம்

இது “உம்பள” என்னும் சொல். தானமாகக் கொடுத்த நிலம் எனப் பொருள். உம்பளம்¹ umpaḷam
, n. [T. umbaḷamu, K. umbaḷi.] Land granted rent-free for the performance of services; மானியநிலம். Loc.
உம்பளித்தல், உம்பளம் = தானமாக பரம்பரையாக அனுபவித்துக்கொள்ள தரும் முற்றூட்டு, கொடைநிலம்.

தானமாகக் கொடுப்பதை “உம்பளிக்கை” எனச் சொல்கிறோம்.

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=759
”இதே போல் கோனேரின்மை கொண்டான் கல்வெட்டுகள் மூன்றில் குறிக்கப்பட்டிருந்த மைத்துனர் அழகப் பெருமாள், அண்ட நாட்டுப் பெருமணலூர் மந்திரி பல்லவராஜன், திருமல்லி நாட்டுத் தடங்கண்ணிச் சிற்றூருடையான் சோறந் உய்யநின்றாடுவானான குருகுலராயன் ஆகிய அரசு அலுவர்களின் பெயர்கள் அவை மாறவர்மன் சுந்தரபாண்டியரின் கல்வெட்டுகள் என்பதை உறுதிசெய்ய உதவின. ”

http://www.thehindu.com/features/metroplus/society/keezhadi-archaeological-excavation/article7557728.ece
The second locality has more of graffiti on pottery, bone tools and iron weapons. “We have got the fish symbol, both as an art and as a ‘sign representing a clan,” says Vadivel. Red-and-black pottery, groove tiles used for laying roofs and the typical flat brick measuring 38 centimetres are the other indications that the city unearthed belongs to the Sangam Age. “Keezhadi could as well be the ‘Peru Manalur’, the city of Sangam Pandiyas mentioned in literature,” suggests Amarnath. 

பழைய திருவிளையாடற் புராணத்தில் மணலூர்புரம் என்றுள்ளது. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடலில் மணவூர் என்றுள்ளது. மஹாபாரதத்தின் வடமொழிச் சுவடிகளில் - பஞ்ச த்ராவிட தேசத்துச் சுவடிகளில் - மணலூர்புரம் என்றுள்ளது. 
நா. கணேசன்




-----------------------------------------------------------

தினமணி செய்தி -  மணலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் தனது வயலில் கண்டெடுத்த பழங்கால கல்வெட்டு குறித்து கொடுத்த தகலின் பேரில் கி.பி 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டினை சொ. சாந்தலிங்கம்  உதவி செயலர் பா. ஆத்மநாதன் ஆகியோர் கல்வெட்டை படியெடுத்தனர். 

https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2014/aug/06/திருப்புவனம்-அருகே-பழங்கால--952340.html

-----------------------------------------------------------



Monday, 30 May 2022

அகரத்தில் சுடுமண் உறைகிணறு


31.05.2022 

தினத்தந்தி செய்தி -

அகரத்தில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை திருப்புவனம், திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது அகரம் கிராமம். இங்கு கடந்த வருடம் நடைபெற்ற 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின்போது சிறிய, பெரிய பானைகள், ஓடுகள், சுடு மண்ணால் ஆன உறைகிணறுகள், சுடுமண்ணால் ஆன பொம்மைகள், பழங்கால செங்கல் சுவர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இங்கு 8-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு தோண்டப்பட்ட முதல் குழியில் மண்பாண்ட ஓடுகள், சிறிய பானைகள், சிறுவர்கள்-பெண்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், பழங்கால விலங்குகளின் எலும்புகள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன. 2-வது குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டபோது சுடுமண் பாசிமணிகள், சிவப்பு நிற சிறிய மண் பானை போன்ற குடுவை கிடைத்து உள்ளது. தற்போது 3-வது குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது 2 அடுக்குகள் உடைய சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முதல் அடுக்கின் மேல்புறம் வட்ட வடிவில் அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது. இதன் மூலம் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பண்டைய தமிழர்கள் சிந்தனை செய்து, சுடுமண் உறைகிணறு உள்ளிட்ட நீர்நிலைகளை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது இன்னும் கூடுதலாக சுடுமண் உறை அடுக்குகள் கிடைக்கலாம் என தெரிய வருகிறது.


https://www.dailythanthi.com/News/State/well-711446

கீழடி அகழ்வாராய்ச்சி சூடுமண் தலை கண்டுபிடிப்பு!


கீழடி அகழ்வாராய்ச்சி: பெண்ணின் தலை கண்டுபிடிப்பு!

Poonguzhali R Updated on 4 May, 2022 12:43 PM IST

Keeladi excavations: Head of Female has been Found!

கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழ் நாடு தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும். இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்கிறது. இத்தொல்லியல் களம் சுமார் கிமு 6-ஆம் நூற்றாண்டிற்கும், கிமு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியது எனக்கணித்துள்ளனர். இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்புள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி புராதன தளத்தில் பெண் சிலையின் தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சி ஆணையரும் தள இயக்குநருமான ஆர். சிவானந்தம் கூறுகையில், மாநில தொல்லியல் துறையின் எட்டாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 105 செ.மீ ஆழத்தில் தலை கண்டெடுக்கப்பட்டது என்றும் இதன் எடை 74 கிராம் என்றும் கூறியுள்ளார். இந்த தலை, டெரகோட்டாவால் ஆனது என்றும், இதனை கையால் வடிவமைத்திருப்பதாகவும் அவர், கூறியுள்ளார்.


கிடைக்கப்பெற்ற தலையின் வடிவ அமைப்பானது, இரண்டு அடுக்குகளில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் இடதுபுறத்தை விட உயரமாக இருக்கும். சிகை அலங்காரம், நெற்றிக்கு மேலே, பின்னப்பட்ட முடியின் ஒரு இழை உள்ளது. தலையில் மேலும் மூன்று வரிசை ஜடைகள் காணப்படுகின்றன.

இது மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு தெளிவாகக் காணப்படுகிறது. உயர்த்தப்பட்ட முடியில் பல இடையிடையே கீறல்கள் உள்ளன. நெற்றிக்கு மேலே உள்ள பின்னல் வரை, ஒரு ஜடையைச் சித்தரிக்கும் அலை அலையான கீறல்களால் குறிக்கப்பட்டுள்ளது. அதோடு, தலையில் நேரியல் கீறல்கள் உள்ளன.

சிலையின் நெற்றி தட்டையானது மற்றும் அதன் கண்கள் மெல்லிய கோடுகளால் வெட்டப்பட்டுத் திறந்திருக்கும் நிலையில் காணப்படுகின்றது. புருவங்கள் மற்றும் கண் இமைகளும் காணப்படுகின்றன. இதில் மூக்கு மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கின்றது. ஏனெனில் அது கூர்மையான அழகிய வடிவமாக உள்ளது. சிலையின் உதடுகள் ஆழமாக வெட்டப்பட்டு நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டுள்ளன.

சற்று நீளமான இடது காதில் வட்டமான காதணி உள்ளது. வலது காது உடைந்து சேதமடைந்துள்ளது. தலை பகுதி மட்டும் கிடைத்ததாகவும், மற்ற பகுதிகள் உடைந்து காணவில்லை என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.

https://tamil.krishijagran.com/news/keeladi-excavations-head-of-female-has-been-found/

Sunday, 22 May 2022

கீழடியில் கிடைத்த இரும்பு

கீழடியில் கிடைத்த இரும்பு 



தினமலர் செய்தி --
திருப்புவனம் :கீழடியில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புஉள்ளது என தொல்லியல்ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.கீழடியில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகின்றன. தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் இப்பணியில் சிவப்பு நிற பானைகள் கடந்த வாரம் கண்டறியப்பட்டன. இரண்டு பானைகளையும் நீண்ட சுவர் இணைக்கும் வகையில் அமைந்துஉள்ளது. சுவரின் அருகில் இரும்பு பொருட்களும், இரும்பை உருக்கும் போது வெளியாகும் கழிவுகளும் கிடைத்துள்ளன. நுண்துகள் மணற்பரப்பும் காணப்படுவதால் உலைகலனாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே மணலுார், கீழடியில் உலைகலன் கண்டறியப்பட்ட நிலையில் இதுவும் உலைகலனாக இருக்க வாய்ப்புஉள்ளது. எனவே கீழடியில் நெசவு மட்டுமல்லாது இரும்பு தொழிற்சாலையும் செயல்பட்டு வந்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3035098

உறைகிணறு (மெசபடோமியா)


20 மே,2022  பிற்பகல் 6:41
4000 BC க்கு முன்னர் வரலாற்றில் முதல் நீர் வடிகால் அமைப்பாகக் கருதப்படும் கழிவுநீர் மற்றும் மழைநீர் வலையமைப்பாகப் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டக் குழாய்களை  பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லியானார்ட் வூலி மற்றும் அவரது மனைவி கேத்தரின் 1930 இல் கண்டுபிடித்துள்ளனர்..
ஊர் (மெசபடோமியா) 

British archaeologist Leonard Woolley and his wife Catherine at the moment of the discovery of pottery pipes that were used as a sewage and rainwater network in what is considered the first water drainage system in history before about 4000 BC. Ur (Mesopotamia) in 1930
youtube:https://www.youtube.com/channel/UC1P0Ba0F_DwYTom947IvB8w