Monday, 4 April 2022

சித்திரா பௌர்ணமி வழிபாட்டுச் சிறப்பு

சித்திரை 3 (16.04.2022) சனிக்கிழமையன்று சித்திரா பௌர்ணமி 


சித்திரா பௌர்ணமி

வழிபாட்டுச் சிறப்பு

சித்திரா பௌர்ணமியின் சிறப்பைச் சிறப்பாகத் திருவிளையாடற் புராணம் எடுத்துக் கூறியுள்ளது.

பருவகாலங்களில்  சிறந்தது வேனில் காலம், 
12 மாதங்களில் சிறந்தது “வான்தகர் மாதம்”  (தகர்  என்றால் ஆடு என்று பொருள், வான் தகர்  என்றால் வானிலுள்ள ஆடு, அதாவது மேஷராசி, சித்திரைமாதம் என்று பொருள்),
நட்சித்திரங்களில் சிறந்தது சித்திரை நட்சத்திரம்,
திதிகளில் சிறந்தது பூரணை( பௌர்ணமி)......

“சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், சித்திரா பௌர்ணமி நாளன்று மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டு வணங்கினால் வருடம் 365 நாட்களும் வணங்கிய பலன் கிடைக்கும்” என்று அருள்மிகு சோமசுந்தரேசுவரர் இந்திரனுக்கு அருளிச் செய்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.   இதன்படியே தேவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் சித்திராபௌர்ணமி நாளன்று மதுரைக்குவந்து அருள்மிகு மீனாட்சி சுந்தரேசவரரை வழிபடுகின்றனர் என்பது ஐதீகம்.   இவ்வாறு வணங்கிய இந்திரன் சிவபெருமானிடம் “உனது அடியார்களுள் ஒருவனாக அடியேனும் இருக்க அருளிச் செய்ய வேண்டும்” என வரம் வேண்டிப் பெற்றுள்ளான்.   

    இந்திரன் முதற்றான தேவர்கள் போல், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரின் அடியார்களாகிய நாமும் வரும் ஸ்ரீ சுபகிருது வருடத்தில், சித்திரைமாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் சித்திரா பௌர்ணமி (சித்திரை 3(16.04.2022) சனிக்கிழமை) நாளன்று வழிபட்டு வேண்டிய வரங்கள் பெறுவோம்.  அருள்மிகு மீனாட்சி சோமசுந்தரேசுவரரின் அடியாராய் வாழ்ந்து உய்வடைவோம்.

அன்பன்,
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்,
ஆராய்ச்சி அமைப்பாளர், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்,
மதுரை.
(மேனாள் துணைப் பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி)

---------------------------------------------------------

திருவிளையாடற் புராணம் பாடல் எண் 437 -

“இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்,  பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்,  மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து அருச்சித்தோர் வருடம்  தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்”

உரை  -  பருவங்களுள்  உயர்ந்த வேனிற் பருவமும், மாதம் பன்னிரண்டனுள், மிகச்சிறந்த சித்திரை  மாதமும்,  ஒப்பற்ற நாள்மீன்களுள்(நட்சத்திரங்களுள்)  உயர்ந்த சித்திரை நட்சத்திரமும்,  திதிகளுள் உயர்ந்த பௌர்ணமியும், ஆகிய இவைகள் கூடிய, சித்திரைத் திங்களின் சித்திரை நாள்தோறும்,  வந்து வந்து வழிபடுவாயாக,  ஓர் ஆண்டுக்கு வரையறுத்து,  முந்நூற்று அறுபத்தைந்து நாட்களிலும், அருச்சனை செய்தலால் வரும் பயன் (உன்னை, இந்திரனை) அடையும். 

------------------------------------

திருவிளையாடற் புராணம் 
வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

“சித்திரை மதியிற் சேர்ந்த சித்திரை நாளிற் றென்னன்
மைத்திரண் மிடற்று வெள்ளி மன்றுளாற் களவு மாண்ட
பத்திமை விதியிற் பண்டம் பற்பல சிறப்ப நல்கிப்
புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்த லுற்றான்.”
(திருவிளையாடற் புராணம் பாடல் எண் 1289.)

சித்திரை மதியில் சேர்ந்த சித்திரை நாளில் தென்னன்  மைத்திரள் மிடற்று வெள்ளி மன்று உளாற்கு களவு மாண்ட பத்திமை விதியில் பண்டம் பலபல சிறப்ப நல்கிப்  புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்தல் உற்றான்.

உரை  -  அபிடேக பாண்டியன், சித்திரைத் திங்களில் வந்த  சித்திரை நாளில் கருமை மிக்க மிடற்றினையுடைய வெள்ளியம்பல வாணனுக்கு,  அளவிறந்த அன்பினால், ஆகம நெறிப்படி,  பூசைப் பொருள்கள் பலவற்றைச்  சிறக்க அளித்து, போகத்தையும் வீடுபேற்றையும் அளிக்கும் பூசையை நடாத்தத் தொடங்கினான் என்கிறது திருவிளையாடற் புராணம்.

-------------------------------------------------

திருவிளையாடற் புராணம்
இந்திரன் பழி தீர்த்த படலம் 
பாடல்கள் -

435.
ஐய நின் இருக்கை எல்லைக்கு அணியன் ஆம் அளவின் நீங்கா
வெய்ய என் பழியினோடு மேலை நாள் அடியேன் செய்த
மையல் வல் வினையும் மாய்ந்து உன் மலரடி வழுத்திப் பூசை
செய்யவும் உரியன் ஆனேன் சிறந்த பேறு இதன் மேல் யாதோ.
436.
இன்ன நின் பாதப் போதே இவ்வாறே என்றும் பூசித்து
உன் அடியாருள் யானும் ஓர் அடித் தொண்டன்  ஆவேன்
அன்னதே அடியேன் வேண்டத் தக்கது என்று அடியில் வீழ்ந்த
மன்னவன் தனக்கு முக்கண் வரதனும் கருணை பூத்து.
437.
இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்
பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்
மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து  அருச்சித்தோர் வருடம்
தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்.
438.
துறக்க நாடு அணைந்து சுத்த பல் போகம் துய்த்து மேல் மல பரி பாகம்
பிறக்க நான் முகன் மால் முதல் பெரும் தேவர் பெரும் பதத்து ஆசையும் பிறவும்
மறக்க நாம் வீடு வழங்குதும் என்ன வாய் மலர்ந்து அருளி வான் கருணை
சிறக்க நால் வேதச் சிகை எழு அநாதி சிவபரம் சுடர் விடை கொடுத்தான்.

நன்றி - திருவிளையாடற் புராணம் பாடல்கள் தொகுப்பு உதவி --
தமிழ் இணையக் கல்விக்கழகம்  https://www.tamilvu.org/

-------------------------------------------------

சங்கப்பாடல்களில் “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளின் தொகுப்பு -

அகை என்றால் 1. எரி, 2. கொஞ்சம் கொஞ்சமாகக் குறை, 3. செழி, 4. தளிர் என்று பொருள்.  அகைதல் என்றால் எரிதல், கிளைத்து எரிதல். அகைத்தல் என்றால் கிளைத்தல், விட்டுப் பிரிதல், செல்லுதல், எழுதல், உயர்த்துதல், வலிய மலர்த்துதல், முறித்தல் போன்ற வினைகளைச் சுட்டும்.

பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு - கலி 55/2
கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர - கலி 74/5
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் - கலி 139/26
கொய் அகை முல்லை காலொடு மயங்கி (கொய்யப்படும் தழைத்த முல்லை காற்றால் மயங்குதலின்) - அகம் 43/9
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை - அகம் 0/10
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து (தீ கிளைத்து எரிந்தாற்போன்ற தாமரைப் பூக்களையுடைய வயலில் ) - அகம் 106/1
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் - அகம் 106/2
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை - அகம் 116/1
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் - அகம் 277/14
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி (தம்மிடம் தளிர்க்கும் இளைய குழைகள் அடிமுதல் கிளைத்து அழகுபெற) - அகம் 283/10
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின் - அகம் 295/2
கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய/இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி - அகம் 339/8,9
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப/உறை கழிந்து உலந்த பின்றை பொறைய - அகம் 345/13,14
அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில் - அகம் 351/7
குப்பை கீரை கொய் கண் அகைத்த/முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று - புறம் 159/9,10
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப/பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி - நற் 5/4,5
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய/நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப - நற் 172/2,3
எரி அகைந்து அன்ன வீ ததை இணர - நற் 379/3
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு/அழுத கண்ணள் ஆகி - குறு 366/5,6
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் (யானை முறித்த ஒள்ளிய தளிர்களையுடைய யாமரம்) - மலை 429
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை - பொரு 159
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ - பதி 25/12
கயன் அகைய வயல் நிறைக்கும் - மது 92

நன்றி - “அகை” என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல்வரிகள் தொகுப்பு உதவி http://tamilconcordance.in

----------------------------------------------------

Sunday, 3 April 2022

தமிழ்ப் புத்தாண்டு விழா, திருவிளையால் புராண ஆராய்ச்சி மையம்

தமிழ்ப் புத்தாண்டு விழா

திருவிளையால் புராண ஆராய்ச்சி மையம்

சுபகிருது வருடம், சித்திரை 1 (14.04.2020) 

தலைமை -- காசிஸ்ரீ, முனைவர், கி. காளைராசன்



தினமலர் செய்தி -
மதுரை : திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா மதுரையில் நடந்தது.   

அழகப்பா பல்கலை முன்னாள் துணைப் பதிவாளர் காளைராஜன் தலைமை வகித்தார். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.விக்ரம் கல்லுாரிகள் குழும தலைவர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது:
    சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. சூரியன் மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளில் தமிழ்ப் புத்தாண்டு துவங்குகிறது. இதற்கு திருவிளையாடல் புராணம், நக்கீரர் இயற்றிய நெடுநெல்வாடையில் ஆதாரம் உள்ளது. தெய்வம், தமிழ் இணைந்ததுதான் ஹிந்து மதம் என்றார்.
    தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் மலர்விழி மங்கையர்க்கரசி, தருமை ஆதீனப் புலவர் குருசாமி தேசிகர், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய நிறுவனர் சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், ஆன்மிக நன்னெறி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் பங்கேற்றனர். செயலாளர் கண்ணன் பஞ்சாங்கம் வாசித்தார். செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3007850

Wednesday, 19 January 2022

127 சோகாப்பர் நாகாக்க

 


கி. காளைராசன் to thiruppuvanam

13 Mar 2019, 18:32:44


“நாக்குல சனி” என்பார்கள்.  நாவைக் காக்காவிட்டால் சோகத்தைக் காப்பார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ குற்றமுடைய சொற்களைச் சொல்லி அதனால் துன்பப்படுகின்றனர்.

“யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்காற் 

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு ”

என்கிறது திருக்குறள் (127).  

ஒருமுறை குறள்வடிவில் இருந்த ஒரு முனிவரை ஏளனம் செய்த காரணத்தினால் , மூன்று தேவியருள்  ஒருவரான மகாலெட்சுமி  நேர்ந்த இழுக்குப் பற்றியும், அந்த இழுக்கு எவ்வாறு நீங்கியது என்பது பற்றியும் திருப்பூவணப் புராணத்தில் ஒரு கதை உள்ளது.

வைகுண்டத்திலே, பொன்மண்டபத்தில் சிங்காசனத்திலே, இலக்குமியுடன் திருமால் வீற்றிருக்கிறார்.  அவர் திருமுன்பு வித்தியாதரர் பாடினார். அரம்பை முதலாயினோர் ஆடினார். தேவர் முதலாயினோர் துதித்தனர்.

அதன்பின்னர், இலெட்சுமிதேவி திருவடிப் பணிவிடை செய்யத் திருமால் நித்திரை புரிந்தார். அப் பொழுது,  ஒன்னேமுக்கால் அடி உயரமுடைய வாலகில்லி என்ற குள்ளமான முனிவர் திருமாலைப் பார்க்க வந்தார்.

வந்தரை வாயில்காப்போர் எதிர்சென்று வணங்கி உபசரித்து ஆசனத்தில் அமரச் செய்தனர்.   வைகுண்டத்தின் உள்ளே போய்ச் சேடியர்களை அழைத்து முனிவர்கள் வரவைத் திருமாலுக்கு விண்ணப்பம் செய்தனர்.

அதனைச் சேடியர்கள் இலெட்சுமிதேவியிடம் தெரிவித்தனர்.  மலைபோன்ற தோள்களை உடைய மாபெரும் திருமேனியை உடைய திருமாலையே அனுதினமும் கண்பவள் இலெட்சுமிதேவி. 

மிகவும் குள்ள உருவமாய் இருந்த வாலகில்லி முனிவரின் உருவத்தைப் பார்த்ததும் இலக்குமிதேவி பெரிதும் நகையாடினள்.  இதனால் முனிவர் பெரிதும் வருந்தித் திருமாலைச் சந்திக்காமலேயே திரும்பிச் சென்றுவிட்டார்.

திருமால் நித்திரைநீங்கி எழுந்து நிகழ்ந்தவைகளை உணர்ந்து கொண்டார்.  இலக்குமியைப் பார்த்து, நீ முனிவரை அவமரியாதை செய்துவிட்டாய் என்று கூறிச் சபித்து விலக்கினர். 

திருமாலின் இந்தச் சாபத்தை எப்படி நீங்குவது எனப் பலவாறும் ஆராய்ந்து பார்த்தார்.  முனிவரின் உருவம் குள்ளமாய் இருப்பதைக் கேலி செய்தது, அறிந்து செய்த பாவம் ஆகும்.

அறிந்து செய்த பாவத்தை நீக்கக்கூடிய திருத்தலம் திருப்பூவணம் ஆகும்.  எனவே இலக்குமிதேவி திருப்பூவண்ம் சேர்ந்து தவஞ் செய்தாள்.

இலக்குமியை விலக்கிய பின்பு திருமால் பயந்து விரைந்து சென்று வாலகில்லி முனிவரைச் சந்தித்து “இலக்குமி செய்த தவறை மறந்து கருணை புரிய வேண்டும்” என்று வேண்டினார்.

அதற்கு முனிவரும் மனமிரங்கி, திருமாலே, 12 ஆண்டுகள் திருமகள் திருப்பூவணத்திலே தவம் செய்து முடித்தவுடன் அவளது பாவம் நீங்கிவிடும். நீ சென்று அவளை அழைத்து வந்து முன்போல் வைகுண்டத்தில் வாழ்வாயாக என்று அருளினார்கள். 

உடனே திருமால் மகிழ்ந்து, "முனிவரே, நீங்கள் என்னைக் காண வைகுண்டம் வந்த காரண யாது?" என்று கேட்டார்.

அதற்கு அம் முனிவர், முனிவர்களாகிய நாங்கள் செய்யும் வேள்வியைத் திருமாலாகிய நீங்கள் காத்தல் வேண்டும் என்றனர். 

அங்ஙனமே முனிவர்கள் வேள்வியைக் காத்து அருளினார்.

12 வருடங்கள் நடைபெற்ற வேள்வியும் திருமாலின் திருவருளாலே சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

வேள்வி முடிந்த பின்பு திருமாலும் திருப்பூவணம் சேர்ந்து இலக்குமி தேவியுடன் சேர்ந்து சென்று சிவலிங்கத்தைப் பூசித்தார்.  இதனால் திருப்பூவணத்தில் சுயம்புலிங்கத்தின் நெற்றியில் திருநாமம் போன்ற அடையாளம் காணப்படும்.  இதனை திரிசூல அடையாளம் என்று அப்பர் பெருமான் பாடியுள்ளார்.  இந்த அடையாளத்தை இன்றும் சிவலிங்கத்தில் காணலாம்.

திருப்பூவணத்தில் உள்ள சுயம்புலிங்கத்தைப் பூசித்ததனால் இலக்குமி அறிந்து செய்த பாவமும் அதனால் உண்டான சாபமும் நீங்கின.  

திருமாலும் இலக்குமிதேவியும் வைகுண்டஞ் சார்ந்து வாழ்ந்தனர். 

திருப்பூவணநாதருக்கு மேற்குத் திசையிலே, இரண்டம்பு செல்லுந்தூரத்திலே, திருமால் தம் பெயராலே ஒரு சிவலிங்கப் பிரதிட்டை செய்தனர். ஒரு தீர்த்தமுண்டாக்கினர். சித்திரை மாதத்திலே, ஆதிவாரத்திலே, அத்தீர்த்தத்திலே மூழ்கி விஷ்ணுலிங்கத்தை வழிபட்டோர் பாவநீங்கிப் பதமுத்தி பெறுவர்.

குற்றமில்லாத சொற்களைச் சொல்லிடவும், குற்றமுடைய  நமது சொற்களால் நமக்கு உண்டாகும் தீமைகளில் இருந்து விடுபடவும் திருப்பூவணம் சென்று நாமும் வழிபடுவோம்.  நல்வாழ்வு வாழ்வோம்.

https://thiruppuvanam-kalairajan.blogspot.com/2012/03/blog-post_8258.html  

அன்பன்

கி. காளைராசன்

குறள் 134 ஓத்து என்றால் என்ன பொருள்

 கி. காளைராசன் to mintamil

17 Mar 2019, 21:36:14


“மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்”

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)


ஓத்து என்றால் ஓதுதல் அல்லது படித்தல் என்று பொருள்.

நினைவாற்றல் குறைவாக இருந்து மறந்துவிட்டாலும் பரவாயில்லை ஓத்துக் (படித்துக்) கொள்ளலாம்.  ஆனால் பிறப்பு ஒழுக்கம் குறைந்தால் பிறப்பு கெட்டுவிடும் என்கிறார் திருவள்ளுவர்.


“மறப்பினும் படித்துக் கொள்ளலாகும், பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்”

ஞாபகமறதியாகித் தேர்வைச் சரியாக எழுதமுடியாவிட்டாலும் பரவாயில்லை. மீண்டும் படித்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒழுக்கம் தவறிப் “பிட்“ அடித்தால் debar ஆகி மாணவனின் மாண்பு கெட்டு விடும் என்பது போன்ற அறிவுரையை இந்தக் குறள் வழங்குகிறது.

அன்பன்

கி. காளைராசன்

திருக்குறள் ஓலைச்சுவடி இணையத் தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

http://www.tamilvu.org/library/suvadi/s210/html/s2100052.htm

---------------------------------------------------------

On Sun, 17 Mar 2019 at 20:56, செல்வன் <hol...@gmail.com> wrote:

ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்-> தேவாரம், திருவாசகம் முதலான நூல்களை ஓதுபவர்களை ஓதுவார் என அழைக்கும் வழக்கம் உண்டு.


ஓதுதல் என்பது பொதுவாக ஆன்மிகநூல்களை தினமும் கடவுள் முன் பாராயணம் செய்வதையே குறிக்கும்.


படிப்பதை குறிக்க "கற்றல், கற்பது" எனும் வார்த்தைகள் உன்டு


ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம் என்பது தினமும் இறைநூல்களை ஓதுக, வழிபாடு செய்க எனும் பொருளில் வரும்.


அன்பன்

கி. காளைராசன்

Tuesday, 18 January 2022

ஊழி குறித்த திருவிளையாடல் புராணம்

ஞாலம் முடித்த ஊழி

(ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது)


ஊழ் குறித்து ஓர் அதிகாரமே இருந்தாலும், ஊழி குறித்து ஒரேயொரு குறள் மட்டுமே உள்ளது. 

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி யெனப்படு வார் “

என்று ஊழியையும் ஆழியையும் தொடர்பு படுத்திக் குறள் கூறுகிறது.  திருக்குறள் போன்றே திருவிளையாடல் புராணமும் ஊழியையும் ஆழியையும் சேர்த்தே பாடுகிறது.


ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது.

1) 202.

புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்

பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்

வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்

உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.


2) 265.

அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்

பௌவ நீர் என்ன ஓங்கப் பாணியால் அமைத்து வேணித்

தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம்  ஆக்கிக்

கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்.


3) 625.

சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி

கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்

வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே

ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.


4) 630.

சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி

பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்

ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்

காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.


5) 709.

இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின  வெண் கொடி ஞாலம்

முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் என மூச் செறி விடநாகம்

துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து  சேவகம் செய்யும்

கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.


6) 1037.

பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என

இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்

ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து

அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்.


7) 1039.

கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய்

அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய்

மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப் பொருப்பு

உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே.


8) 1154.

ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய உலகொடு மயன் மால்

உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது  ஓர் ஊழி வந்து எய்தச்

செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர் கடவுள் முன் மலரும்

வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமும் மாதோ.


9) 1301.

சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின்

சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ

ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்

காலமோ எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த.


10) 1313.

ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப்

பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி

ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய திக்கில்

சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள.


11) 1608.

அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து எழுவான் என

பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர் மதிக்கு

ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல்  விழிகளும்

வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான் ஒரு தானவன்.


12) 1761.

மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில்

தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள்

முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே

மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல்.


13) 1844.

விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித்

துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த

உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத்

தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற.


14) 2074.

வாழிய உலகின் வானோர் மனிதர் புள் விலங்கு மற்றும்

ஆழிய கரணம் எல்லாம் அசைவு அற அடங்க ஐயன்

ஏழ் இசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம்

ஊழியில் ஒருவன் தாள் புக்கு ஒடுங்கிய தன்மை ஒத்த.


15) 2637.

அறைந்தவித் தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழிக் காலத்து

இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம் அதனால் இங்கே

உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய் ஆய்ச்

சிறந்திடத் தகுவது இன்று முதல் இந்தத் தெய்வத் தானம்.


16) 2977.

கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்

சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா

வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்

இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.


17) 3082.

வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப்

பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து

முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி

எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார்.


18) 3123.

ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக்

காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப

ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா

ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார்.


19) 3325.

அடி முடி விலங்கும் புள்ளும் அளந்திடாது அண்டம் கீண்டு

நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது முள்வாய்க் கங்க

வடிவு எடுத்து இருவர் நோற்கும் மலை இது பல்வேறு ஊழி

இடை உற முன்னும் பின்னும் இருக்கும் இக் குன்றைக் காண்மின்.


‘ஊழிற் பெருவலி யாவுள‘ :)

அன்பன்

காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்

சித்திரை 31 (14.05.2017) ஞாயிற்றுக் கிழமை.

Saturday, 9 October 2021

பார்ப்பார் அந்தணர் ஐயர்

ஒரே பரிபாடலில் பார்ப்பார் அந்தணர் ஐயர் மூவரும் இடம் பெற்றுள்ளனர்.

பார்ப்பார் அந்தணர் ஐயர்  என்போர் வேறுவேறு பிரிவினரா ?


பரிபாடல்

.....

எனவாங்கு,

ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என

பார்ப்பார் ஒழிந்தார் படிவு

மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று 60

அந்தணர் தோயலர் ஆறு

வையை தேம் மேவ வழுவழுப்பு_உற்று என

ஐயர் வாய்பூசுறார் ஆறு

விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல்

கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை ...


வாய் கழுவார் எனவாங்கு -  ஈப்பாய் அடுநறாக் கொண்டதிவ் யாறெனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு: மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்றென்று Ꮾ0 அந்தணர் தோயலர் ஆறு, - வையைதே மேவ வழுவழுப்பு உற்றென ஐயர்வாய் பூசுறார் ஆறு: நீர் விளையாட்டிற்குக் களிப்போடு வந்த மக்கள் பலரும் மதுவை யுண்டு'களித்தனர். எஞ்சிய மதுவை அவர்கள் ஆற்று நீரில் ஊற்றினர். இவ்வாறு மதுக்கலந்து வரும் நீரிலே வண்டினம் மொய்த்தது. அதனால், ஈக்கள் மொய்க்கும் அடப்பெற்ற நறவினை இவ்வாறு கொண்டுள்ளது' எனக் கூறியவராக, அதன்பால் நீராட வந்த பார்ப்பார்கள் நீராடாதேயே தம் வீடு சென்றனர்.


பார்ப்பன், பார்ப்பான், பார்ப்பார் சொல்கள் அடங்கிய சங்கப்பாடல்வரிகளின் தொகுப்பு  

நன்றி - தொகுப்பு உதவி http://tamilconcordance.in/

பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய - நற் 321/4

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறு 156/1

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறு 156/1

படிவ உண்டி பார்ப்பன மகனே - குறு 156/4

பார்ப்பன குறு_மக போல தாமும் - ஐங் 202/2

ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் - புறம் 9/1


பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக - ஐங் 4/2

பார்ப்பார் ஒழிந்தார் படிவு - பரி 24/59

பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் - புறம் 34/3

பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது - புறம் 43/14


பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே - பதி 63/1

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய - புறம் 367/4

பனி பொழி சாரலும் பார்ப்பாரும்/துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் - பரி  8/52,53


கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்/முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் - முல் 37,38

பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்/உமையொடு புணர்ந்து காம வதுவையுள் - பரி  5/27,28

முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது - கலி 65/20

வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்/வீழ்க்கை பெரும் கரும்_கூத்து - கலி  65/28,29

வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த - அகம் 24/1

தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை - அகம் 337/7

உயவல் ஊர்தி பயலை பார்ப்பான்/எல்லி வந்து நில்லாது புக்கு - புறம் 305/2,3

சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை/தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே - கலி  65/8,9

----------------------------------

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் - திரு 96

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை - திரு 263

அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் - சிறு 187

கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315

குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474

ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656

அந்தி அந்தணர் அயர கானவர் - குறி 225

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி - பதி 24/8

அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/5

நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 1/13

விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் - பரி 1/40

நா வல் அந்தணர் அரு மறை பொருளே - பரி 2/57

அந்தணர் காணும் வரவு - பரி 2/68

நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை - பரி 3/14

நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை - பரி 4/65

புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு - பரி 6/45

விரி நூல் அந்தணர் விழவு தொடங்க - பரி 11/78

புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப - பரி 11/79

ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே - பரி 14/28

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/20

அந்தணர் தோயலர் ஆறு - பரி 24/61

கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25

அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் - கலி 99/2

அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து - கலி 119/12

முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் - கலி 126/4

மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6

அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் - புறம் 2/22

அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20

அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204

ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1

கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு/அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை - புறம் 361/4,5

அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே/வீயா திருவின் விறல் கெழு தானை - புறம் 122/3,4

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ - பரி 5/22

அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் - பரி 11/7

இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்/உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக - கலி  38/1,2

ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5

அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ - கலி 72/18

யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்/தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே - அகம் 0/15,16

யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே - புறம் 200/13

அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே - புறம் 201/7

ஆ குரல் காண்பின் அந்தணாளர்/நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/8,9

புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்/இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி - புறம் 126/11,12

சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்/நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் - ஐங் 384/1,2

திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்/வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை - கலி  9/4,5

---------------------------------------------------

ஐயர் (14)
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத - நற் 122/1
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும் - நற் 127/5
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே - குறு 123/5
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர்/சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி - குறு 272/4,5
கண மா தொலைச்சி தன் ஐயர் தந்த - ஐங் 365/1
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை - பதி 70/19
ஐயர் வாய்பூசுறார் ஆறு - பரி 24/63
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் - கலி 130/9
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர்/காலை தந்த கணை கோட்டு வாளைக்கு - அகம் 126/7,8
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய - அகம் 240/6
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர்/புலி மருள் செம்மல் நோக்கி - அகம் 259/16,17
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத - அகம் 302/9
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர்/பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் - புறம் 337/16,17
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர்/கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி - புறம் 355/4,5

ஐயர்க்கு (2)
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது - திரு 107
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் - கலி 39/22

ஐயர்க்கும் (1)
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை - குறி 17

ஐயரும் (1)
தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும்/தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் - கலி  39/18,19

ஐயவி (14)
நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து - திரு 228
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி/ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி - மது 287,288
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை - நெடு 86
ஐயவி அமன்ற வெண் கால் செறுவில் - மலை 123
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி - நற் 40/7
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் - நற் 370/3
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் - குறு 50/1
பூணா_ஐயவி தூக்கிய மதில - பதி 16/4
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி/கடி மிளை குண்டு கிடங்கின் - பதி 22/23,24
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென - புறம் 98/15
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி - புறம் 281/4
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும் - புறம் 296/2
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை - புறம் 342/9
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் - புறம் 358/4

ஐயள் (3)
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று - நற் 2/7
ஐயள் மாயோள் அணங்கிய - நற் 146/10
ஐயள் அரும்பிய முலையள் - ஐங் 255/3

ஐயன்மார் (1)
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு - கலி 107/34

ஐயனை (1)
ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற - கலி 43/5

ஐயும் (2)
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும்/களிற்று முகம் திறந்த கல்லா விழு தொடை - நற் 389/3,4
அது போர் என்னும் என் ஐயும் உளனே - புறம் 89/9
 
ஐயென (9)
நள்ளென் யாமத்து ஐயென கரையும் - குறு 261/4
செம் வாய் வானத்து ஐயென தோன்றி - குறு 307/2
வாங்கு கதிர் தொகுப்ப கூம்பி ஐயென/அலங்கு வெயில் பொதிந்த தாமரை - குறு 376/4,5
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் - அகம் 114/5
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் - அகம் 151/10
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் - அகம் 223/7
தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய - அகம் 305/2
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென/நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை - அகம் 319/6,7
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை - புறம் 395/29

ஐயை (3)
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே - ஐங் 312/4
இழை அணி பணை தோள் ஐயை தந்தை - அகம் 6/3
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே - புறம் 88/6