Showing posts with label சுபகிருது. Show all posts
Showing posts with label சுபகிருது. Show all posts

Sunday, 3 April 2022

தமிழ்ப் புத்தாண்டு விழா, திருவிளையால் புராண ஆராய்ச்சி மையம்

தமிழ்ப் புத்தாண்டு விழா

திருவிளையால் புராண ஆராய்ச்சி மையம்

சுபகிருது வருடம், சித்திரை 1 (14.04.2020) 

தலைமை -- காசிஸ்ரீ, முனைவர், கி. காளைராசன்



தினமலர் செய்தி -
மதுரை : திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா மதுரையில் நடந்தது.   

அழகப்பா பல்கலை முன்னாள் துணைப் பதிவாளர் காளைராஜன் தலைமை வகித்தார். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.விக்ரம் கல்லுாரிகள் குழும தலைவர் ஸ்ரீனிவாசன் பேசியதாவது:
    சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. சூரியன் மேஷ ராசியில், அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளில் தமிழ்ப் புத்தாண்டு துவங்குகிறது. இதற்கு திருவிளையாடல் புராணம், நக்கீரர் இயற்றிய நெடுநெல்வாடையில் ஆதாரம் உள்ளது. தெய்வம், தமிழ் இணைந்ததுதான் ஹிந்து மதம் என்றார்.
    தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் மலர்விழி மங்கையர்க்கரசி, தருமை ஆதீனப் புலவர் குருசாமி தேசிகர், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய நிறுவனர் சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் சோமசுந்தரம், ஆன்மிக நன்னெறி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் பங்கேற்றனர். செயலாளர் கண்ணன் பஞ்சாங்கம் வாசித்தார். செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=3007850