Tuesday, 18 December 2018

மதுரைக்குக்குக் ‘கூடல்’ என்றும் ‘நான்மாடக் கூடல்‘ என்றும் எதனால் பெயர் உண்டானது?“

மதுரைக்குக்குக் 
கூடல் என்றும், ‘நான்மாடக் கூடல்‘ என்றும் எதனால் பெயர் உண்டானது?“




மதுரை மாநகருக்குக் கடம்பவனம், ஆலவாய், சிவபுரம், மன்றல், மதுரா நகர், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன.  அவற்றுள் நான்மாடக் கூடல்“ என்ற பெயரும் ஒன்று. பரஞ்சோதி முனிவர் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தை எழுதியுள்ளார்.  

திருவிளையாடல் புராணத்தில் 105 பாடல்களில் ‘நான்மாடக் கூடல்‘ என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  இந்தப் பாடல்கள் கீழே இணைக்கப் பெற்றுள்ளன.

332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.


1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.


1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.

மேற்கண்ட 332, 1309 மற்றும் 1332 ஆவது பாடல்களில், மதுரைக்குக் “கூடல்“ என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணம்  விளக்கப்பட்டுள்ளது.


1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.

மேலே கண்ட 1596 ஆவது பாடலில் வைகைநீர் கூடல் செய்த இடம் மதுரை என்ற குறிப்பு உள்ளது.

பண்டைய பாண்டிய நாட்டை ‘அபிடேகபாண்டியன்‘ ஆட்சி செய்து வந்த காலத்தில், பேரூழி ஏற்பட்டது.  இதனால் கடல் பொங்கிச் சீற்றம் கொண்டு (Tsunami) , கடலலைகள் மதுரைவரை வந்தன.  அப்போது பூமியில் படிந்த கடல்நீர் எல்லாம் ஆவியாகி ஏழு மேகங்களாக மாறின. இம் மேகங்கள், பூசணிக்காய் போன்ற நீர்த்துளிகளுடன், பளிங்குத் தாரைபோன்ற நீர்த் தாரைகளுடன்  இடைவிடாது மழையாய் பெய்தன. இப் பெரு மழையில் மதுரை மாநகரம் அழியும் நிலை ஏற்பட்டது.  அப்போது, மதுரை அருள்மிகு சோமசுந்தரர் திருவருள் செய்து, தனது ஜடாமுடியிலிருந்து நான்கு மேகக் கூட்டங்களை அனுப்பினார்.  இந்த நான்கு மேகக் கூட்டங்களும் மதுரையை வளைத்து மாடங்களாகிச் சந்துவாய் தெரியாதவாறு, மதுரைக்கு மேலே ஒரு குடைபோல் காத்து நின்றன. இதனால் பெருமழையின்  அழிவிலிருந்து மதுரை மாநகரம் காப்பாற்றப் பெற்றது.  இந் நிகழ்ச்சியால் மதுரைக்கு, “நான்மாடக் கூடல்“ என்ற பெயர் உண்டானது என்கிறது திருவிளையாடற் புராணம்.  மதுரையில் “எழுகடல் தெரு“ என்ற பெயரில் ஒரு வீதி உள்ளதும் இங்கு கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இப் புராணப் பாடல்களின் வாயிலாக, பண்டைக்காலத்தில் மதுரையானது சுனாமியால் பாதிப்பு அடைந்துள்ளது என்ற செய்தியையும், அதன் பின்னரே மதுரைக்கு “நான் மாடக் கூடல்” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி.காளைராசன்


--------------------------------------------------------

திருவிளையாடல் புராணத்தில்  கூடல் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு 

332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.

1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.

1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.

1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.

மதுரைக்குக் “கூடல் என்ற பெயர் இடம் பெற்றுள்ள திருவிளையாடற் புராணப் பாடல்கள்
31.
அறு கால் பீடத்து உயர் மால் ஆழி கடைந்த அமுதை அரங்கேற்று மா போல்
அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை அரும் தமிழால் பாடி
அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில் அமரர் சூழும்
அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு ஏற்றி னானே.

136.
தேர் ஒலி கலினப் பாய் மான் சிரிப்பு ஒலி புரவி பூண்ட
தார் ஒலி கருவி ஐந்தும் தழங்கு ஒலி முழங்கு கைம்மான்
பேர் ஒலி எல்லாம் ஒன்றிப் பெருகு ஒலி அன்றி என்றும்
கார் ஒலி செவி மடாது கடி மணி மாடக் கூடல்.

165.
தேசு அவிர் நீல மாடம் செம் மணிச் சென்னி மாடம்
காசறு கனக மாடம் சந்திர காந்த மாடம்
மாசு அற விளங்கு மின்ன மாட நீண் மாலைக் கூடல்
பாசிழை மடந்தை பூண்ட பன் மணிக் கோவை அன்ன.

253.
அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம் அமர்ந்தோர் சீவன்
முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா ஞானம்
புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம் தென் கூடல்
பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால் பகர்வர் நல்லோர்.

312.
அற உருவன் ஆலவாயான் ஆமஞ் செவி மடுத்தால் அடைந்த பத்துப் 
பிறவி வினை அறு நினைந்தான் ஊறு பெரும் பவப் பாவப் பிணி போம் கூடல்
இறைவனை இன்று இறைஞ்சுதும் என்று எழுந்து மனைப்புறம் போந்தால் ஈரைஞ்நூறு
மறமுறு வெம் பவத்து இழைத்த பாதக வல் வினை அனைத்தும் மாயும் மன்னோ.

321.
ஒருகால் அட்டாங்கமுடன் பஞ்சாங்கமுடன் நாத ஒண் செம் கால் வெண்
குரு காலு மலர்த் தடம் சூழ் கூடல் நாயகற் பணிவோர் கோல் ஒன்று ஓச்சி
பொருகாலின் வரு பரித்தேர் மன்னவராய் வரும் தம் புடைவந்து எய்தி
இருகாலும் தலைவருட எக்காலும் தமை வணங்க இருப்பர் அன்றே.

325.
மான் மதச் சுந்தரன் கொடிய பழி அஞ்சு சுந்தரன் ஓர் மருங்கின் ஞானத்
தேன் மருவி உறை சோம சுந்தரன் தேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த
கான் மருவு தடம் பொழில் சூழ் ஆலவாய்ச் சுந்தரன் மீன் கணங்கள் சூழப்
பால் மதி சூழ் நான் மாடக் கூடல் நாயகன் மதுரா பதிக்கு வேந்தன்.

326.
சிர நாலோன் பரவரிய சமட்டி விச்சா புர நாதன் சீவன் முத்தி
புர நாதன் பூஉலக சிவ லோ காதிபன் கன்னி புரேசன் யார்க்கும்
வரம் நாளும் தரு மூல லிங்கம் என இவை முதலா மாடக் கூடல்
அரன் நாமம் இன்னம் அளப்பு இலவாகும் உலகு உய்ய வவ்வி லிங்கம்.

332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.

339.
வய ஏனக் குருளை களை மந்திரிகள் ஆக்கியதும் வலி உண்டாகக்
கயவாய்க்குக் குருமொழி வைத் அருளியது நாரைக்குக் கருணை நாட்டம்
தயவால் வைத்து அருண் முத்தி நல்கியதும் கூடல் நகர் தன்னைச் சித்தர்
புய நாகம் போய் வளைந்து திரு வால வாயாக்கிப் போந்த வாறும்.

1307.
பூதங்கள் அல்ல பொறி அல்ல வேறு புலன் அல்ல உள்ள மதியின்
பேதங்கள் அல்ல இவை அன்றி நின்ற பிறிது அல்ல என்று பெருநூல்
வேதம் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளி என்ப கூடல் மறுகில்
பாதங்கள் நோவ வளை இந்தன் ஆதி பகர் வாரை ஆயும் அவரெ.

1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.

1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.

1334.
தேட அரும் கதிர் மணி முடிச் செழியனும் பாண்டி
நாடரும் திரு எய்தி மேல் நல்ல வீடு எய்தக்
கூடல் அம் பதி மேவிய குணம் குறி கடந்த
வேடர் அங்கு ஒரு சித்த மெய் வேடராய் வருவார்.

1425.
பின்னும் சில் வரங்கள் நல்கப் பெற்று நான் மாடக் கூடல்
மன்னும் சின் மயனை வந்து வந்தித்து வருநாள் காமன்
என்னும் சில் மலர்ப் பூம் தண்தார் இராச சேகரனைப் பெற்று
மின்னும் சில்லியம் தேர் வேந்தன் மேதினி புரக்கும் மன்னோ.

1459.
தாய் இலாப் பிள்ளை முகம் தனை நோக்கித் தெருவின் இடைத் தளர்வாள் உள்ளம்
கோயிலாக் கொண்டு உறையும் கூடல் நாயகனை மனக் குறிப்பில் கண்டு
வேயில் ஆக்கிய தடம் தோள் கௌரி திரு மந்திரத்தை விளம்ப லோடும்
சேயிலாய்க் கிடந்து அழுத குழவி விசும்பு இடை மேல் தெரியக் கண்டாள்.

1492.
குரவன் செம்கோல் கைக் கொண்ட குலோத்துங்க வழுதி செம்கண்
அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை நித்தம்
பரவு அன்பின் வழிபாடு ஆனாப் பத்திமை நியமம் பூண்டான்
இரவு அஞ்சும் கதுப்பின் நல்லார் ஈர் ஐயா இரவர் உள்ளான்.

1504.
மாண்டவளைத் தன் வெந் இடை இட்டான் மகவு ஒக்கல்
தாண்ட அணைத்தான் தாய் முலை வேட்டு அழும் தன் சேயைக்
காண் தொறும் விம்மாக் கண் புனல் சோரக் கடிது ஏகா
ஆண் தகை மாறன் கூடல் அணைந்தான் அளி அன்றான்.

1555.
கொலை இரும் பழிக்கு அன்று அஞ்சும் கூடல் எம் பெருமான் கொன்றை
மிலை இரும் குஞ்சி வேங்கை மெல் இணர்க் கண்ணி வேய்ந்து
கலை இரு மருப்பில் கோடிக் காது அளவோடும் தாடி
சிலை இரும் தடக்கை வேடம் திரு உருக் கொண்டு தோன்றி.

1571.
ஆததாய் இயும் கண்டு ஆனா அற்புதம் அடைந்து கூடல்
நாதனார் நவின்ற ஆற்றான் நல்நெறி விரதச் செய்கை
மாதவ ஒழுக்கம் தாங்கி வரு முறை மதிய மூன்றில்
பாதகம் கழிந்து தெய்வப் பார்ப்பன வடிவம் ஆனான்.

1574.
அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்.

1576.
கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி ஞாலம்
காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில் உடுத்த கூடல்
மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி வாழ்வான்.

1583.
அறம் கடை நின்றாள் உள்ளம் ஆற்றவும் கடையன் ஆகிப்
புறம் கடை நின்றான் செய்த புலமை தன் பதிக்கும் தேற்றாள்
மறம் தவிர் கற்பினாள் தன் மனம் பொதிந்து உயிர்கள் தோறும்
நிறைந்த நான் மாடக் கூடல் நிமலனை நினைந்து நொந்தாள்.

1584.
தாதக நிறைந்த கொன்றைச் சடையவன் புறம்பு செய்த
பாதகம் அறுக்கும் கூடல் பகவன் எவ்வுயிர்க்கும் தானே
போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் புலைஞன் செய்த
தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு உள்ளம் கொண்டான்.

1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.

1598.
அம்மனை அருளிச் சொன்னபடி எலாம் அருளிச் செய்து
தெம் முனை அடுவாள் வீரர் சித்தனை மாய்த்தார் ஈது
மெய்மை ஆம் என்று கண்ட மைந்தரும் விளம்பக் கேட்டான்
எம்மை ஆளுடை கூடல் இறை விளையாடல் என்றான்.

1599.
கொடியை நேரிடையாள் ஓடும் கொற்ற வாள் இளைஞ ரோடும்
கடிய நான் மாடக் கூடல் கண்ணுதல் அடிக்கீழ்த் தாழ்ந்து
நெடியன் நான் முகனும் தேறா நெறியது சிறிய ஏழை
அடியனேன் அளவிற்றே நின் அருள் விளையாடல் என்றான்.

1613.
கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம்
கொண்டல் கண் வளர் மதில் வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்
அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய்
விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்.

1630.
குண்டு அழல் கணின் எழுந்த அக் கொடிய வெம் பசுவைப்
பண்டு போல் அவர் விடுத்தனர் கூடல் அம் பதிமேல்
உண்டு இல்லையும் எனத் தடுமாற்ற நூல் உரைத்த
பிண்டியான் உரை கொண்டு உழல் பேய் அமண் குண்டர்.

1648.
உலகு அறி கரியாத் தன் பேர் உருவினை இடபக் குன்றாக்
குல உற நிறுவிச் சூக்க வடிவினால் குறுகிக் கூடல்
தலைவனை வணங்க ஈசன் தண் அருள் சுரந்து பண்டை
இலகு உரு ஆகி இங்ஙன் இருக்க என இருத்தினானே.

1651.
அன்னது தெரிந்து விந்தம் அடக்கிய முனி அங்கு எய்தி
மன்னவற்கு ஆக்கம் கூறி மழவிடைக் கொடியோன் கூடல்
பன்னரும் புகழ்மை ஓது பனு வலை அருளிச் செய்ய
முன்னவன் பெருமை கேட்டு முகிழ்த்தகை முடியோன் ஆகி.

1680.
அடியவர் குறைவு தீர்த்து ஆண்டு அருள்வதே விரதம் பூண்ட
கொடி அணி மாடக் கூடல் கோ மகன் காமன் காய்ந்த
பொடி அணி புராணப் புத்தேள் புண்ணியன் அருளினாலே
இடி அதிர்விசும்பு கீறி எழுந்தது ஓர் தெய்வ வாக்கு.

1685.
பொருநரே அனையான் நேர்ந்து போந்து நான் மாடக் கூடல்
கருணை நாயகனைத் தாழ்ந்து கை தொழுது இரந்து வேண்டிப்
பரவி மீண்டு ஒளி வெண் திங்கள் பல் மணிக் குடைக்கீழ் ஏகிக்
குரு மதி மருமான் கோயில் குறுகுவான் குறுகும் எல்லை.

1702.
அறைந்தவர் கழல் கால் சேனை காவலன் அனிகம் தம்தம்
சிறந்த சேண் நாட்டில் செல்லத் செலுத்துவான் போன்று நிற்ப
நிறைந்த நான் மாடக் கூடல் நிருத்தன் அந் நிலை நின்று ஆங்கே
மறைந்தனன் மனித்த வேடம் காட்டிய மறவ ரோடும்.

1703.
கண்டனன் பொருனை நாடன் வியந்தனன் கருத்தா சங்கை
கொண்டனன் குறித்து நோக்கி ஈது நம் கூடல் மேய
அண்டர் தம் பெருமான் செய்த ஆடல் என்று எண்ணிக் கண்ணீர்
விண்டனன் புளகம் போர்ப்ப மெய்யன்பு வடிவம் ஆனான்.
1704.
தனக்கு உயிர்த் துணையா நின்ற சாமந்தன் தன்னை நோக்கி
உனக்கு எளி வந்தார் கூடல் உடைய நாயகரே என்றால்
எனக்கு அவர் ஆவார் நீயே என்று அவற்கு யாவும் நல்கி
மனக்கவல்பு இன்றி வாழ்ந்தான் மதி வழி வந்த மைந்தன்.

1710.
கோளா அரவம் அரைக்கு அசைத்த கூடல் பெருமான் குறை இரக்கும்
ஆளாம் அரசன் தவறு சிறிது அகம் கொண்டு அதனைத் திருச் செவியில்
கேளர் போல வாளாதே இருப்ப மனையில் கிடைத்த அமலன்
தாள் ஆதரவு பெற நினைந்து தரையில் கிடந்து துயில் கின்றான்.

1738.
பொய் தவ வடிவாய் வந்து நம் மனைப் பொன்னின் அன்னார்
மெய் தழை கற்பை நாண வேரொடும் களைந்து போன
கைதவன் மாடக் கூடல் கடவுள் என்று எண்ணித் தேர்ந்தார்
செய் தவவலியால் காலம் மூன்றையும் தெரிய வல்லார்.

1739.
கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீர் ஆழி
வெற்புத் திரிந்த மதில் கூடல் மேய வணிகர் கன்னியராய்ப்
பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு
அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்.

1760.
கொத்து இலங்கு கொன்றை வேய்ந்த கூடல் ஆதி மாட நீள்
பத்தியம் பொன் மருகு அணைந்து வளைபகர்ந்த பரிசு முன்
வைத்து இயம்பினாம் இயக்க மாதர் வேண்ட அட்டமா
சித்தி தந்த திறம் இனித் தெரிந்த வாறு செப்புவாம்.
1825.
திரண்டு அதிர்ந்து எழுந்து வந்த சென்னி சேனை தன் நகர்க்
இரண்டு யோசனைப் புறத்து இறுக்கும் முன்னர் ஒற்றரால்
தெருண்டு தென்னனை மாட நீ கூடல் மேய சிவன் தாள்
சரண் புகுந்து வேண்டுக என்று சார்ந்து தாழ்ந்து கூறுவான்.

1848.
ஆயது ஓர் அமையம் தன்னில் அளவு இலா உயிர்க்கும் ஈன்ற
தாயனார் துலை போல் யார்க்கும் சமநிலை ஆய கூடல்
நாயனார் செழியன் தானை நனந்தலை வேத நாற்கால்
பாயதோர் தண்ணீர்ப் பந்தர் பரப்பி அப் பந்தர் நாப்பண்.

1889.
பலர் புகழ் சுந்தரேச பாத சேகரன் ஆம் தென்னன்
அலை புனல் உடுத்த கூடல் அடிகளுக்கு அன்பன் ஆகிக்
கொலை புணர் வேலால் வெம் கோல் குறும்பு எனும் களைகள் தீர்த்து
மலர் தலை உலகம் என்னும் வான் பயிர் வளர்க்கும் நாளில்.

1890.
பத்துமான் தடம் தேர் நூறு பனைக்கை மா நூற்றுப் பத்துத்
தத்துமான் அயுத மள்ளர் தானை இவ் அளவே ஈட்டி
இத்துணைக்கு ஏற்ப நல்கி எஞ்சிய பொருள்கள் எல்லாம்
சித்து உரு ஆன கூடல் சிவனுக்கே செலுத்தும் மன்னோ.

1898.
கடல் என வருமா ஊர்ந்து கைதவன் சேனை முன்போய்
அடல் அணி மேருக் கோட்டி ஆலவாய் நெடு நாண் பூட்டி
மடல் அவிழ் துழாய்க் கோன் ஆட்டி வாய் எரி புரத்தில் ஊட்டி
மிடல் அணி கூடல் கோமான் வேடு உருவாகி நின்றான்.

1906.
மீனவன் மதுரை மூதுர் மேல் திசைக் கிடங்கில் வீழ
மான வெம் புரவி யோடும் வளவனும் வீழ்ந்தான் கூடல்
கோன் அவன் அருளால் வானோர் குரை கடல் கடையத் தோன்றும்
ஆனையின் எழுந்தான் தென்னன் கோழிவேந்து ஆழ்ந்து போனான்.

1909.
பொடி ஆர்க்கும் மேனிப் புனிதர்க்குப் புனித ஏற்றுத்
கொடியார்க்கு வேதக் குடுமிக்கு இணையான கூடல்
படியார்க்கும் சீர்த்திப் பதி யேர் உழவோருள் நல்லான்
அடியார்க்கு நல்லான் அறத்திற்கும் புகழ்க்கும் நல்லான்.

1927.
கன்னி நான் மாடக் கூடல் கடி நகர் வணிக மாக்கள்
தன்னின் மா நிதிக் கோன் அன்னான் தனபதி என்னும் பேரான்
மன்னினான் அனையான் கற்பின் மடவரல் சுசீலை என்பாள்
பொன்னி நாள் முளரிச் சேக்கைப் புண்ணியத் திருவின் அன்னாள்.

1932.
விளை நிலன் அடிமை பைம் பூண் வெறுக்கை நல் பசுக்கள் ஏனை
வளனும் மாற்றவர் கைக் கொள்ள வன் சிறை இழந்த புள் போல்
தளர் உறு மகனும் தாயும் சார்பு இலாத் தம்மனோர்க்கு ஓர்
களை கணாய் இருக்கும் கூடல் கடவுளே சரணம் என்னா.

1961.
இம் எனப் பலரும் காண மறைந்தவர் இரும் தண் கூடல்
செம்மல் என்று அறிந்து நாய்கச் சிறுவனுக்கு உவகை தூங்க
விம்மிதம் அடைந்து வேந்தன் வரிசைகள் வெறுப்ப நல்கிக்
கைம் மறி வணிகர் கோயில் புதுக்கினான் கனகம் கொண்டு.

1973.
மறையோர்கள் பின்னும் பழி மேலிடு வண்ண நோக்கி
இறையோய் இது நான் முகன் சென்னி இறுத்த கூடல்
அற வேதியனைத் தினம் ஆயிரத் எண்கால் சூழல்
உறவே ஒழிக்கப் படும் இன்னம் உரைப்பக் கேட்டி.

1984.
நிரா மய பரமானந்த நிருத்த நான் மாடக் கூடல்
பராபர இமையா முக்கண் பகவ பார்ப்பதி மணாள
புராதன அகில நாத புண்ணிய மருதவாண
அரா அணி சடையா என்று என்று அளவு இலாத்துதிகள் செய்தான்.

1987.
திருப்பணி பலவும் செய்து தென் திசை வழிக் கொண்டு ஏகிச்
சுருப்பணி நெடு நாண் பூட்டுஞ் சுவைதண்டச் சிலையால்காய்ந்த
மருப்பணி சடையான் கோயில் வழி தொறும் தொழுது போற்றிப்
பொருப் பணி மாடக் கூடல் பொன்னகர் அடைந்தான் மன்னோ.

2037.
தென்னவர் பெரும யான் உன் திரு உள வலனும் கூடல்
முன்னவன் அருளும் ஊட்டும் முயற்ச்சியான் முயன்றுபாடி
அன்னவன் விருது வாங்கி அவனை வீறு அழிப்பன் என்றான்
மன்னவன் நாளைப் பாடு போ என வரைந்து சொன்னான்.

2064.
பாடல் மறையும் தெளியாப் பரமன்
கூடல் கோயில் கொண்டான் என்னே
கூடல் போலக் கொடி ஏனகமும்
ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே.
2095.
ஏவல் மைந்தர் போய் விளங்கி வந்து இசைத்தலும் வீணைக்
காவலன் கனா நிகழ்ச்சியும் ஒத்தலில் கைக்கும்
பூ அலங்கலான் இஃது நம் பொன் நகர்க் கூடல்
தேவர் தம்பிரான் திரு விளையாட்டு எனத் தெளிந்தான்.

2103.
இத் தொழில் அன்றி வேறு தொழில் இவற்கு இன்மையாலே
பத்திரன் இலம்பாது எய்த பொறுப்பரோ பழனக் கூடல்
சித்தவெம் அடிகள் வேந்தன் பொன்னறைச் செல்வம் வௌவிப்
பத்தர் யாழ் இடத் தோள் ஏந்திப் பாடுவான் காணவைப்பார்.

2123.
மின் அவிரும் செம் பொன் மணி மாடக் கூடல் மேய சிவன் யாம் எழுதி விடுக்கும் மாற்றம்
நன்னர் முகில் எனப் புலவர்க்கு உதவும் சேர நரபாலன் காண்க தன் போல் நம்பால் அன்பன்
இன் இசை யாழ்ப் பத்திரன் தன் மாடே போந்தான் இருநிதியம் கொடுத்து வர விடுப்பதுஎன்னத்
தென்னர் பிரான் திரு முகத்தின் செய்தி நோக்கிச் சோர் பிரான் களிப்பு எல்லை தெரியான் ஆகி.

2141.
ஒண் நுதலாய் வெண் தலை கொண்டு உண் பலிக்கு நம் மனையின் ஊடேகூடல்
கண் நுதலார் உள் ஆளக் கானம் இசைத்து என் உள்ளம் கவர்ந்தார் போலும்
கண் நுதலார் பாடு அவி நயம் கண்டு ஆகம் கலப்பேன் பாதி
பெண் உருவமாய் இருந்தார் வெள்கி விழித்து ஆவி பெற்றேன் போலும்.

2149.
கூடல் அம் பதியில் ஆடக மேருக் கொடிய வில்குரிசில் அடியவனுக்குப்
பாடலின் பரிசில் ஆகிய செம் பொன் பலகை இட்டபடி பாடின மன்னான்
வீடரும் பொருவில் கற்புடையாள் ஓர் விறலி யைப் பரமன் இறை அருள் பற்றி
மாடகம் செறியும் யாழ் வழி பாதி வாது வென்ற வரலாறு இசைப்பாம்.

2156.
ஆடு அமைத் தடம் தோளினாய் அவளொடும் கூடப்
பாட வல்லையோ பகர் எனப் பாடினி பகர்வாள்
கோடரும் தகைக் கற்பும் இக் கூடல் எம் பெருமான்
வீடரும் கருணையும் எனக்கு இருக்கையால் வேந்தே.

2201.
என்னை ஆளுடைய கூடல் ஏக நாயகனே உங்கள்
அன்னையாய் முலைதந்து ஆவி அளித்து மேல் அமைச்சர் ஆக்கிப்
பின்னை ஆனந்த வீடு தரும் எனப் பெண் ஓர் பாகன்
தன்னை ஆதரித்தோன் சொன்னான் பன்னிரு தனயர் தாமும்.

2229.
நீநில் எனத் தன் பெடை தன்னை நிறுத்தி நீத்து என்
கானில் என வாழ் கருமாவின் கணங்கள் எல்லாம்
ஊனில் உயிர் உண்டனம் என்று இனி ஓடல் கூடல்
கோனில் என ஆர்ப்பவன் போலக் கொதித்து நேர்ந்தான்.

2235.
சத்திப் படைமேல் விடு முன்னர்த் தறுகண் வீரன்
பத்திச் சுடர் மாமணித் தார்ப் பரிமாவின் பின் போய்
மொத்திக் குடர் செம்புனல் சோர முடுகிக் கோட்டால்
குத்திச் செகுத்தான் பொறுத்தான் அலன் கூடல் வேந்தன்.

2258.
அனையராய் அவர் வைகு நாள் அறைபுனல் கூடல்
புனித நாயகன் அருள் திறம் உயிர்க்கு எலாம் பொதுவாய்
இனிய ஆவன என்பதை யாவரும் தேற
வனிதை பால் மொழி மங்கைதன் மணாளனை வினவும்.

2280.
ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளது ஆகப்
பார் இடத்து இல்லை ஏனை பதி இடத்து ஒன்றே என்றும்
சிர் உடைத்து ஆகும் கூடல் செழும் நகர் இடத்தும் மூன்றும்
பேர் உடைத்து ஆகும் என்றால் பிறிது ஒரு பதி யாது என்றான்.

2283.
ஆய் மலர்க் கான நீங்கி ஆடக மாடக் கூடல்
போய் மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து ஆம்பல்
வாய் மலர்க் கயல் உண் கண்ணாள் மணாளனை வலம் செய்து அன்பில்
தோய் மலர் கழல் இனானை அகத்தினால் தொழுது அர்ச்சித்தே.

2308.
தன் நிகர் தவத்தோர் யாரும் தடம் படிந்து ஏறி நித்த
மன்னிய கருமம் முற்றிச் சந்தியா மடத்தில் வைகி
மின்னிய மகுடம் சூடி வேந்தனாய் உலகம் காத்த
பொன்னியல் சடையான் கூடல் புராண நூல் ஒதுகின்றார்.

2309.
அண்ணல் எம் பெருமான் செய்த அருள் விளையாட்டும் ஆதிப்
பண்ணவன் சிறப்பும் கூடல் பழம் பதிச் சிறப்பும் தீர்த்தத்
தெண்ணரும் சிறப்பும் சேர்ந்தோர்க்கு எளிவரும் இறைவன் என்னும்
வண்ணமும் எடுத்துக் கூறக் கேட்டு அங்கு வதியும் நாரை.

2310.
மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.

2310.
மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.

2323.
வேதன் நெடு மால் ஆதி விண் நாடர் மண் நாடர் விரத யோகர்
மாதவர் யாவரும் காண மணி முறுவல் சிறிது அரும்பி மாடக் கூடல்
நாதன் இரு திருக் கரம் தொட்டு அம்மியின் மேல் வைத்தகையான் நாட்டச் செல்வி
பாதமலர் எழுபிறவிக் கடல் நீந்தும் புணை என்பர் பற்று இலாதோர்.

2324.
ஓலவாய் மறைகள் தேறா ஒருவன் தன் உலகம் தன்னைச்
சேலவாய் உழலும் நாரைக்கு அருளிய செயல் ஈது அம்ம
நீலவாய் மணி நேர் கண்ட நெடிய நான் மாடக் கூடல்
ஆலவாய் ஆகச் செய்த அருள் திறம் எடுத்துச் சொல்வாம்.

2388.
புரத்தினுள் உயர்ந்த கூடல் புண்ணியன் எழுதி எய்த
சரத்தினுள் அவிந்தார் சென்னிக்கு உற்றுழிச் சார்வாய் வந்த
அரத்தினை அறுக்கும் வை வேல் அயல் புல வேந்தர் நச்சு
மரத்தினை அடுத்து சந்துங் கதழ் எரி மடுத்தது என்ன.

2410.
மறையினால் ஒழுகும் பன்மாண் கலைகள் போல் மாண்ட கேள்வித்
துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ மீண்டு ஏகிக் கூடல்
கறையினார் கண்டத்தாரைப் பணிவித்துக் கரந்தார் ஒற்றைப்
பிறையினார் மகுடத் தோற்றத்தார் அறிஞராய் வந்த பெம்மான்.

2434.
மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணி மாறன்
தென்னவர் ஆகித் திகிரி உருட்டும் தென்கூடல்
முன்னவர் அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்றப்
பன் மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணி பூண்டான்

2440.
அன்னது ஒர் நாமம் பெற்றனர் இன்று மணிக் கூடல்
முன்னவர் அந்தத் தாமம் அவர்க்கு முடிக்கு ஏற்றும்
இன்னது ஓர் நீரார் சண்பக மாறன் என்ற பேர்
மன்னி விளங்கினன் வங்கிய சூடா மணிதானும்.

2454.
நிலம் தரு திருவின் ஆன்ற நிழல் மணி மாடக் கூடல்
வலந்தரு தடம் தோள் மைந்தர் வானமும் வீழும் போக
நலம் தரு மகளிரோடு நாக நாடவர் தம் செல்வப்
பொலம் தரு அனைய காட்சிப் பூம் பொழில் நுகர் வான் போவார்.

2566.       
சம்பக மாறன் என்னும் தமிழ்நர்தம் பெருமான் கூடல்
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்.

2567.
கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான் செம்பொன்
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் இப்பால்
தென் தமிழ் அனையான் தேறத் தெருட்டிய திறனும் சொல்வாம்.

2568.       
முன்பு நான் மாடக் கூடல் முழு முதல் ஆணையால் போய்
இன்புற அறிஞர் ஈட்டத்து எய்தி ஆங்கு உறையும் கீரன்
வன்புறு கோட்டம் தீர்ந்து மதுரை எம் பெருமான் தாளில்
அன்பு உறு மனத்தன் ஆகி ஆய்ந்து மற்று இதனைச் செய்வான்.

2571.
மையறு மனத்தான் வந்து வழிபடு நியமம் நோக்கிப்
பை அரவாரம் பூண்ட பரஞ்சுடர் மாடக் கூடல்
ஐயனும் அணியன் ஆகி அகம் மகிழ்ந்து அவனுக்கு ஒன்று
செய்ய நல் கருணை பூத்து திரு உளத்து இதனைத் தேர்வான்.

2634.
தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன் கூடல்
மன்னவன் கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட
உன்னது சோத்த நாம் கேட்டு உவந்தனம் இனிய தாயிற்று
இன்னம் ஒன்று உளது கேட்டி என்றனன் அருளிச் செய்வான்.

2650.
அந்தம் இல் அழகன் கூடல் ஆலவாய் அமர்ந்த நீல
சுந்தரன் உலகம் ஈன்ற கன்னிஅம் கயல் கண்ணாள் ஆம்
கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு வேறு இடத்து வைகி
மந்தணம் ஆன வேத மறைப் பொருள் உணர்த்தும் மாதோ.

2656.
வரை பக எறிந்த கூர்வேல் மைந்தனும் தந்தை கையில்
உரை பெறு போத நுலை ஒல் எனப் பறித்து வல்லே
திரை புக எறிந்தான் ஆகச் செல்வ நான் மாடக் கூடல்
நரை விடை உடைய நாதன் நந்தியை வெகுண்டு நோக்கா.

2674.       
பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ்க் கூடல்
வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள்
துள்ள அன்பு கூர் தொடுத்து திருத் தோள் உறப் புல்லித்
தள்ளரும் தகைக் கற்பினாள் தனது கைக் கொடுத்தான்.

2785.
எழுந்தார் உடைய பெருந்துறையார் இருந்தாள் பணிந்தார் இனி இப் பிறப்பில்
அழுந்தார் வழிக் கொண்டார் அடைந்தார் அகன்றார் நெறிகள் அவிர் திங்கள்
கொழுந்தார் சடையார் விடையார் தென் கூடல் அடைந்தார் பாடு அளி வண்டு
உழும் தார் வேந்தன் பொன் கோயில் உற்றார் காணப் பெற்றார் ஆல்.

2823.
என்று இரங்குவோர் இரங்கு ஒலி இளம் சிறார் அழுகை
சென்று தாயார் தம் செவித் துளை நுழைந்து எனச் செல்லக்
குன்று இரும் சிலை கோட்டிய கூடல் நாயகன் கேட்டு
அன்று வன் சிறை நீக்குவான் திரு உளத்து அமைத்தான்.

2867.
நெஞ்சே உரையே செயலே எல்லா நின வென்றாய்
வஞ்சே போலும் அஃதேல் இன்று வாராயோ
பஞ்சேர் அடியாள் பாகா கூடல் பரமேட்டீ
அஞ்சேல் என்னாய் இது வோ அருளுக்கு அழகு ஐயா.

2878.
பின் அவன் ஆணையாலே மறைப்பு உண்ட பெரு நீர்க் கூடல்
மன்னவன் அறிவு தோன்ற இன்று ஒரு வயமா வீரன்
தன்னை நாம் கண்டு எழுந்து தடம் கரம் கூப்பி நின்ற
என் எனத் தவிசின் மீள இருந்திட நாணி நின்றான்.

3001.       
வளைந்த மெய் உடைய அந்த மாதவ நரை மூதாட்டிக்கு
அளந்த பங்கு அடைப்பான் கூலி ஆள் கிடையாமல் ஆற்றத்
தளர்ந்து இனி என்னே மன்னன் தண்டிக்கின் என் செய்கேன் என்று
உளம் தடுமாறிக் கூடல் உடைய நாயகனை உன்னா.

3049.
வன்பு தாழ் மனத்தோர் வலி செய இன்ன மன்னான் மறுக்கம் உண்டேயோ
முன்பு போகிய ஆள் என் செய்தான் என்னாய் முடியுமோ இனி எனத் திரங்கி
என்பு போல் வெளுத்த குழலினாள் கூடல் இறைவனை நோக்கி நின்று இரங்க
அன்பு தேன் ஆக வருத்திய சிற்றூண் அமுது செய்து அருளினார் அருளால்.

3058.
அச்சம் உற்று உவகை ஈர்ப்ப அதிசய வெள்ளத்து ஆழ்ந்து
பொச்சம் இல் அன்பர் எங்கு உற்றார் எனப் புகுந்து தேடி
நச்சு அரவு அசைத்த கூடல் நாயகன் கோயில் நண்ணி
இச்சையில் இருக்கின்றாரைக் கண்டு போய் இறைஞ்சி வீழ்ந்தான்.

3110.
துண் துழாவும் கைம்மாவும் வெறுக்கைக் குவையும் மணிக் குவையும்
வண்டு வீழும் தார் அளக வல்லி ஆய மொடு நல்கிக்
கண்டு கூடல் கோமகனைக் காலில் வீழ்ந்து தன்னாடு
பண்டு போலக் கைக் கொண்டு போனான் தேன் ஆர் பனம் தாரான்.

3119.
பொய் உரை பிதற்றும் இந்தப் புன் சமண் களைகட்டு ஈண்டு
மெய் உரை வேத நீதி வியன் பயிர் தலைச் செய்து ஓங்கச்
செய்யுநர் எவரோ என்று சிந்தையில் கவலை பூண்டு
நையுநர் ஆகிக் கூடல் நாதனை வணங்கப் போனார்.

3121.
வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில்
பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல்
ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும்
நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா.

3137.       
செம்பியன் நாடு நீந்தித் தென்னவன் நாடு நண்ணி
வெம்பிய சுரமும் முல்லைப் புறவமும் மேக வில்லைத்
தும்பிகை நீட்டி வாங்கும் மலைகளும் துறந்து பாகத்
தம்பி கையுடையான் கூடல் நகர்ப் புறம் அனுகச் செல்வார்.

3150.       
சிட்டர் நோக்கி அத் தீயினை தென் தமிழ்க் கூடல்
அட்ட மூர்த்தியை அங்கு இருந்து அரு மறைப் பதிகம்
துட்டர் பொய் உரை மேற் கொண்டு தொல் முறை துறந்து
விட்ட வேந்தனைப் பற்று எனப் பாடினார் விடுத்தார்.

3230.
கண்டு கூடல் கோமகனும் கற்பும் நிறைந்த பொற்புடைய
வண்டு கூடும் தார் அளக வளவன் மகளும் மந்திரியும்
தொண்டு கூடி மடியாரும் காழிக்கு அரசைத் தொழுது துதி
விண்டு கூடற்கு அரிய மகிழ் வெள்ளத்து அழுந்தி வியந்தனர் ஆல்.

3237.       
இன்று நீர் இட்ட ஏடு இங்கு யாவரும் காண நேரே
சென்றதே எங்கே என்றான் அதனை யாம் செம்பொன் கூடல்
மன்றவர் அருளால் இன்னே வருவிப்பம் என்று வாது
வென்றவர் நதியின் மாடே மேல் திசை நோக்கிச் செல்வார்.

3250.       
வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்
கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான் தன்னை
இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும் பெற்று
விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார்.

3300.
அல்லல் உற்று அழுங்கி நின்றாள் பரிவு கண்டு அம் தண் கூடல்
எல்லை இல் கருணை மூர்த்தி அருளினால் எவரும் காணத்
தொல்லையின் படியே அன்னாள் சொல்லிய கரிகள் மூன்றும்
ஒல்லை வந்து இறுத்த கோயில் உத்தர குணபால் எல்லை.

3313.
கோட்டம் சிலை குனித்த கூடல் பிரான் ஆடல்
கேட்ட அம் செவி படைத்த பேறு அடைந்தேம் கெட்ட படி
நாட்டம் களிப்ப நறுமலர் தூஉய்க் கண்டு இறைஞ்ச
வேட்டங்கள் யாங்கள் என ஓதினார் மெய்த் தவரே.

3318.
ஐம் புலனும் கூடல் பெருமான் அடி ஒதுக்கி
நம்பன் உரு ஐந்து எழுத்து நாவாடக் கை கூப்பித்
தம் புனித சைவ தவத் தெய்வத் தேர் மேல் கொண்டு
உம்பர் வழி நடக்கல் உற்றார்கள் நற்றவரே.

--------------------------------
திருவிளையாடற் புராணப் பாடல்களை இணையத்தில் வழங்கியுள்ள தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு http://www.tamilvu.org/ நன்றி.

--------------------------------------------------------------------------
(கலித்தொகை 92-10)
நனவினால் போலும் நறு நுதால் அல்கல் 
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில்வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவின் அகத்து

(கலித்தொகை-குறிஞ்சிக்கலி - 57-8)
பூம் தண் தார்ப் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் 
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின் மொழி

(அகநானூறு 315/7)
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் 
அருங்கடி வியன் நகர்ச் சிலம்பும் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி

ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரு பெயர் கூடல் அன்ன நின் 10
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே

அரும்பு அவிழ் பூஞ்சினை தோறும் இருங் குயில்
ஆனாது அகவும் பொழுதினான் மேவர
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு

நான்மாடக்கூடல் (65) – நச்சினார்க்கினியர் உரை – நான்கு மாடம் கூடலின் ‘நான் மாடக் கூடல்’ என்றாயிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்

எம் மனை வாராயாகி முன்னாள்
நும் மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள் நெடுந்தேர்
இழை அணி யானைப் பழையன் மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் 20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க்
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி
ஏதின் மன்னர் ஊர் கொளக்
கோதை மார்பன் உவகையின் பெரிதே

நெடு நல் யானை அடு போர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய 15
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து

--------------------------------------------

மதுரையைச் சூழ்ந்துள்ள கோயில்கள்

மதுரையைச் சூழ்ந்துள்ள  கோயில்கள்

மதுரையைச் சூழ்ந்துள்ள கோயில்களைக் கல்லாடம் பட்டியிலிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஐயா நூ த லோ சு அவர்களுக்கும்,
நண்பர் திருமதி.தேமொழி அவர்களுக்கும் எனது நன்றி.

---------------------------------------------------------------------
நூ த லோ சு 
மயிலை 
N D Logasundaram <selvindls61@gmail.com>8 April 2015 at 00:40

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil <mintamil@googlegroups.com>
கல் லாடம் 61  
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - - 
வடதிருஆலவாய் திருநடுவூர்                                  22
வெள்ளியம்பலம் நள்ளாறு இந்திரை                    23  
பஞ்சவனீச்சரம் அஞ்செழுத்து அமைத்த                 24
சென்னிமாபுரம் சேரன் திருத்தளி                              25
கன்னி செங்கோட்டம் கரியோன் திருவுறை          26
விண் உ டைத்து (உ)ண்ணும் கண்ணிலி ஒருத்தன் 27
மறிதிரைக் கடலுள் மா வெனக் கவிழ்ந்த                  28 
களவுடற் பிளந்த ஒளிகெழு திருவேல்                       29
பணிப் பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன்            30
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த                31
அருவி அம்சாரல் ஒரு பரங்குன்றம்            32
சூழ்கொள இருந்த கூடலம்பெருமான்                        33
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -

என 11 கோயில்கள் ஆலவாய் அண்ணல் கோயிலைச் சூழ்ந்துள்ள 
மற்ற கோயிஉல்களாக காட்டப்படுகின்றன 

இந்தப்ப் பாடல் வரிகளில் கூடலம் பெருமானைச் சூழ்ந்து நின்ற கோயில்கள் பட்டிலி டப்பட்டுள்ளன. 
இவற்றில் பரன்குன்றத் துடன் நிற்காது கரியோன் திவுறை என கள்ளழகர் கோயிலும் குறிக்கப்படுகின்றது.
இம்மையே நன்மை தருவர் கோயில் காஞ்சமலைக் கோயில் திருவேடகம் ஆப்பனூர் திருப்பூவணம் போன்றவை மற்றவையில் அடங்கும் எனலாம்  வெள்ளியம்பலம் (எது?) இன்றும் உள்ளது.

நூ த லோ சு 
மயிலை


--------------------------------------------------------------------------------------

தேமொழி <jsthemozhi@gmail.com>
8 Apr 2015, 06:49
to   mintamil <mintamil@googlegroups.com>

சங்கப் பாடல்களிலேயே  "நான்மாடக்கூடல்" என்பது வழக்கில் இருந்தது தெரிகிறது .....

நான் தேடியதில் கிடைத்த தகவல்கள் கீழே காண்க:

நான்மாடக்கூடல் என்பதற்கு வேறுவகையிலும் பொருள் கொள்ளப்பட்டிருப்பதும் காட்டப்பட்டுள்ளது...

கூடனெடுங்கொடி யெழவே (கலித். 31)
நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92, 65).
குன்றத்தாற் கூடல் வரவு (பரிபா. 8, 28)
_____________________________________________________
பத்துப்பாட்டு மூலமும்
நச்சினார்க்கினியருரையும்


 [மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் :] பிறங்கிய மாடம் மலிபுகழ் கூடல்-பெரிய நான்மாடத்தாலே மலிந்தபுகழைக் கூடுதலையுடைய மதுரை (699) என மேலேகூட்டுக.
 "நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92:65) என்பதும், ‘நான்குமாடம் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று;
______________________________________________________


நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின்
--21. வஞ்சின மாலை
சிலப்பதிகாரம் - 2. மதுரைக் காண்டம்
_______________________________________________________


“மாடமலி மறுகிற் கூடல்” (முருகு.71); 
“மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்” (மதுரைக்.429); 
“மாடக் கூடல்” (பரி.20 : 106); 
“மாட மதுரை”, “மாட மதுரையும்” (சிலப்.பதி. 203, 8 : 3, 9: 76, 15 : 112); “நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும்” (கலித். 92) என்பதும், 

‘நான்கு மாடங் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று; அவை 
திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்; 

இனி, கன்னி, கரியமால், காளி, ஆலவாயென்றுமாம்’ என்னும் அதன் விசேடவுரையும், “அம்புத நால்களா னீடு கூடல்” (திருநள்ளாறும் திருவாலவாயும்; தே.) என்னும் திருவாக்கும், 
“மதிமலி புரிசை மாடக் கூடல்” (திருமுருகப் பாசுரம்) என்பதும், “ஈசனார் மகிழ்ந்த தானம்” (திருவால.நகர. 12) என்பது முதலிய திருவிருத்தங்கள் நான்கும், 
“கன்னிதிருமால்காளி யீசன் காக்குங் கடிமதில்சூழ் மாமதுரை” (திருவால.பயன் முதலியன. 5) என்பதும் இங்கே கவனிக்கத்தக்கவை.
__________________________________


சங்ககாலத்தில் கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். அவை பல மாடங்களைக் கொண்டிருந்தன. மாடங்கள் மிகுந்தும் சிறந்தும் விளங்கிய மதுரை பற்றிப் புறநானூறு, மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, கலித்தொகை போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
 

மாட மதுரை (புறம். 32)
மாடமலி மறுகிற்கூடல்  (திருமுருகு. 71)
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி, 429)
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் (கலித்தொகை, 92)
+
"மதிமலி புரிசை மாடக் கூடல்" (திருமுகப் பரசுரம்). 
___________________________________________________


நான்மாடக் கூடல் என்னும் என்னும் பெயர் மதுரையைக் குறிக்கிறது. எனினும் அது 'நான்கு மாடக் கூடல்' என்பதன் குறுக்கம்.

திருவாலவாய் (மதுரை)
திருநள்ளாறு
திருமுடங்கை
திருநடுவூர்
ஆகியவை அக்கால நான்கு மாடக் கூடல்கள்.

நச்சினார்க்கினியர் விளக்கம்
கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என இவற்றை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். [1]
கூடல் என்பது கோபுரத்தைக் குறிக்கும்.

அடிக்குறிப்பு[தொகு]
கலித்தொகை பாடல் எண் 92, அடி 65-ல் வரும் 'நான்மாடக் கூடல்' என்னும் தொடருக்கு நச்சினார்கினியர் தரும் உரை
_________________________________________________________


திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை

66

...............  நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

நிலவொளி வெளிப்படுமாறு வெண்மையான சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.



74

இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

 அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக் கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
___________________________ 


வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் .. . .5
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.

பரிபாடல் திரட்டு
முதற் பாடல்

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே- தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.

பரிபாடல் திரட்டு
ஏழாம் பாடல்

..... தேமொழி 





மதுரை பெயர்க்காரணம், ஊரும் பேரும்

மதுரை பெயர்க்காரணம்


Meaning of the name 'Madurai'

 

சிறப்புகள் மிகுந்த பழமையான ’மதுரை‘ மாநகருக்கு, மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?

வீட்டுமனை(plots for sale) விற்பனையே சிறந்ததொரு வணிகமாக உள்ளது.  ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கி, அந்த இடத்தை, வீட்டுமனை, சாலை, விளையாட்டுத் திடல், பூங்கா, வழிபாட்டுத் தலம் என்றெல்லாம் திட்டமிட்டுப் பிரித்து விற்பனை செய்கின்றனர். இந்த வணிகம் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் வருவாய் தரக்கூடிய ஒரு தொழிலாக உள்ளது. இவ்வாறு மக்கள் குடியிருப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதால் சாலை, குடிநீர், மின்சாரம், மற்றும் கழிவுநீர் வசதி என ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செவ்வனே கிடைக்கின்றன.

இவ்வாறு இக்காலத்தில் திட்டமிட்டு நகரங்கள் உருவாக்கப்படுவது போன்று வாஸ்து இலக்கணப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் மதுரை ஆகும். இது உலகில் உள்ள தொன்மையான நகரங்களுள் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பெற்று குலசேகர பாண்டியமன்னனால் நிருமாணிக்கப் பெற்ற நகரம்.

மதுரைக்குக்  கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், வெள்ளியம்பலம், தூங்காநகர் என்று பல சிறப்புப் பெயர்கள் உள்ளன. சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுராநகர் எனப் பெயர் பெற்றது. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.  மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டானது .

மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?
மதுரை என்ற சொல்லை இலக்கணப்படி பிரித்து எழுதினால் ம=குறில், து=குறில், ரை=நெடில். எனவே மது.ரை = நிரை நேர்
மதுரை என்பது “மது.ர்+ஐ“ என்று வரும்.  மதுர் என்றால் அழகு நிறைந்த என்றும், ஐ என்றால் தலைவன் என்றும் பொருள்.  எனவே, மதுரை என்ற சொல்லை தமிழ் இலக்கணப்படிப் பிரித்துப் படித்தால் “மதுரை“ என்ற சொல்லுக்கு “அழகிய தலைவன்“ அதாவது “சுந்தர ஈசுவரன்“ என்று பொருளாகிறது.  மதுரை = மதுர்+ஐ = அழகிய+தலைவன் = சுந்தர + ஈசுவரன்
மதுரை என்றால் “அழகிய தலைவன் = சுந்தர ஈசுவரன்” என்று பொருள்


மதுரை, மதுரை பெயர்க் காரணம்


எது அழகு? சுந்தரம் என்றால் என்ன?  
மொழிக்கு இலக்கணம் இருப்பது போன்று,  உடலுக்கும் இலக்கணம் உண்டு. உடலின் அமைப்பை (லட்சணத்தை) 32 ஆகப் பிரித்துக் கூறுகிறது சாமுத்திரிகாலட்சணம். இந்த எண் நான்கு (8 x 4 =32) மேனி இலக்கணங்களும் நேர்த்தியாக அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரை சுந்தரேசுவரர்என்றும், இதன் காரணமாகவே இந்தச் சிவலிங்கத்திற்குச் “சுந்தரேசுவரர்“ என்று பெயர் வைத்துத் தேவர்கள் வழிபட்டதாகவும் பரஞ்சோதிமுனிவர் தமிழிலில் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடல் புராணம் கூறுகிறது.  இதனால் சிவலிங்கத்திற்கான தமிழ்ப்பெயரே அந்த ஊருக்கும் ஆகிவந்துள்ளது.
எனவே, மதுரை என்றால் “அந்தமில் அழகன்“, “அழகியபிரான்“, “சுந்தரேசுவரன்“ என்று பொருள் கொள்ள வேண்டும்.

மதுரை என்றால் சுந்தரேசுரவன் என்று பொருள்.  சிவலிங்கத்திற்கான பெயரே ஊருக்கும் ஆகி நிலைபெற்றுள்ளது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வாசிக்கப்பட்டவை........................................................

மதுராபுரி = மதுர் + ஆர் + புரி
மதுர் = ஒரு நடிகரின் பெயர்?
மதுரா / மதுரம் = அழகிய+வாயல் = மதுரவாயல்
மதுராந்தகம்
மதுராஷ்டகம்
......................................................................................

திருவிளையாடற் புராணம்
மூர்த்திவிசேடப் படலம்

ஆலவா யலர்ந்த செம்பொ னம்புயப் பெருந்தீர்த் தத்தின்
மேலவாம் பெருமை தன்னை விளம்புவா ரெவரே யங்கண்
நீலமா மிடற்று முக்க ணிராமய னறிவா னந்த
மூலமா விலிங்க மேன்மை முறையினா லறைய லுற்றாம்.

     (இ - ள்.)திருவாலவாயின் கண் மலர்ந்த சிவந்த பொற்றாமரை ஆகிய, பெருமை பொருந்திய தீர்த்தத்தின் சிறப்புமிக்க பெருமைகளைக் கூறுவார் எவரே; அவ்விடத்து, மிக்க கருமையுடைய கண்டத்தினையும், மூன்று கண்களையும் உடைய,சோமசுந்தரக் கடவுளாகிய, ஞானானந்த வடிவான, பெருமை பொருந்திய மூல விலிங்கத்தின்,பெருமையை, முறைப்படி சொல்லுதல் உற்றோம்.

பொன்னெடு மேலு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி யாதிப்
பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்.

     (இ - ள்.) பொன்னாகிய நெடிய மேரு மலையும், கைலைமலையும், மந்தரமலையும், திருக்கேதாரமும், வலிய நெடிய மதில் சூழ்ந்த, காசி  முதலாகவுள்ள, சொல்லுதற்கரிய திருப்பதிகளின் கண், பராபர இலிங்கங்கள்  தோன்றுவதற்கு முன்பே, இக்கடம்ப மரத்தினடியில், இந்தச் சிவலிங்கம் தோன்றி அருளியது.

அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
கப்புவிட் டெழுந்த விந்தக் காரண மிரண்டி னாலும்
ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந்தத்
திப்பிய விலிங்க மூல விலிங்கமாய்ச் சிறக்கு மன்னோ.

     (இ - ள்.) மகாமேரு முதலிய திருப்பதிகளிலுள்ள இலிங்கங்கள் அனைத்தும், அருட்குறியாகிய இந்தச் சிவலிங்கத்தினில் கிளைத்துத் தோன்றின.
இந்த இரண்டு ஏதுக்களாலும், ஒப்பில்லாத, ஞானவொளி திரண்டாற் போன்ற, இந்தத் திப்பிய இந்தத் திவ்விய இலிங்கமானது, மூல லிங்கமாகச் சிறந்து விளங்கும்.

இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சுந்தர னென்று நாமஞ் சாத்தினார்* துறக்க வாணர்.

     (இ - ள்.) இந்தப் பெருமை பொருந்திய லிங்கத்தின் கண்,முப்பத்திரண்டு
இலக்கணங்களையுடைய,  ஞானவடிவாகிய,  முடிவில்லாத அழகினையுடைய இறைவன், ஒரு பாகத்தில் உமையம்மை யோடும், அழகினைச் செய்து, எப்போதும், அருள் பாலிக்கின்ற, தன்மையைக் கண்டு, தேவர்கள்,சோமசுந்தரன் என்று பெயர் கூறினார்கள்.

திருவிளையாடற் புராணப் பாடல்கள் - தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
-------------------------------

Monday, 17 December 2018

மதுரைக்கு மதுராநகர் என்ற பெயர் அமைந்த காரணம், ஊரும் பேரும்

புலிக்கரை ஐயனார் துணை

மதுரை மாநகருக்கு “மதுரா நகர்“ என்ற பெயர் அமைந்ததற்கானகாரணம்




மதுரை நகருக்குக் கடம்பவனம், ஆலவாய், நான்மாடக் கூடல், சிவபுரம், மன்றல், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன.  அவற்றுள் “மதுரா நகர்“ என்ற பெயரும் ஒன்று. பரஞ்சோதி முனிவர் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தில் உள்ள கீழ்க்கண்ட பத்துப் பாடல்களில் மதுரா என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  இப் பத்துப் பாடல்களில், 513ஆவது பாடலிலும், 1624 பாடலிலும் “மதுரா நகர்“ என்ற பெயர் எவ்வாறு உண்டானது என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. 
சிவபெருமான் தன் தலையில் அணிந்துள்ள வளர்பிறை மதி(திங்கள் அல்லது சந்திரன்) யின் அமுதத்தை மதுரை நகரில் தெளித்தான்.  பிரளயகாலத்தில் கடல்பொங்கி எழுந்து அழித்த மதுரையைச் சிவபெருமான் சிந்திய திங்களின் அமுது சிதறிச் சாந்தி செய்த காரணத்தினால் மதுரை நகருக்கு ‘மதுரா நகர்‘ என்ற பெயர் இட்டு அழைத்துள்ளனர் தமிழர்.  வானிலிருந்து அமிழ்தம் விழுந்த இந் நிகழ்ச்சியைத் திருக்குறளும் வான்சிறப்பு என்ற அதிகாரத்தின் முதற் குறளில்,
      “வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
      தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று“ (குறள் 11)
பதிவு செய்துள்ளது. மழையின் சிறப்பைப் புகழத் தலைப்பட்ட திருவள்ளுவர், “வானிலிருந்து விழுந்து அமிழ்தத்தை ஒத்த சிறப்புடையது மழை“ என்று சிறப்பிக்கிறார்.
மதுரா என்ற பெயர்தான் மதுரை என்று ஆனதாகச் சிலர் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.  ஆனால் மதுரை மாநகரின் மற்றொரு பெயர்தான் மதுரா ஆகும்.  மதுரை என்பது சிவலிங்கத்திற்கான பெயராகும்.  சிவலிங்கத்தின் பெயர் மதுரை என்பதால் அதுவே ஊருக்கும் பெயராகி உள்ளது.  மதுரைப் பெயர்க்காரணம் பற்றிய விளக்கத்தை இதே வளைப்பூவில் “மதுரை - பெயர்க்காரணம்” என்ற தலைப்பில் காணலாம்.  

“மதுரா” என்ற சொல் இடம்பெரும் திருவிளையாடல் புராணப் பாடல்களின் தொகுப்பு

325.        
மான் மதச் சுந்தரன் கொடிய பழி அஞ்சு சுந்தரன் ஓர் மருங்கின் ஞானத்
தேன் மருவி உறை சோம சுந்தரன் தேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த
கான் மருவு தடம் பொழில் சூழ் ஆலவாய்ச் சுந்தரன் மீன் கணங்கள் சூழப்
பால் மதி சூழ் நான் மாடக் கூடல் நாயகன் மதுரா பதிக்கு வேந்தன்.

513.        
பொன் மயமான சடை மதிக் கலையின் புத்தமுது உகுத்தனர் அது போய்ச்
சின் மயமான தம் அடி அடைந்தார்ச் சிவமயம் ஆக்கிய செயல் போல்
தன் மயம் ஆக்கி அந்நகர் முழுதும் சாந்தி செய்து அதுவது மதுர
நன் மயம் ஆன தன்மையான் மதுரா நகர் என உரைத்தனர் நாமம்.

548.        
தூமரபின் வரு பெரு மங்கல கவிகட்கு இரு நிதியம் துகில் பூண்பாய்மா
காமர் கரி பரித் தடம் தேர் முதலாய பல் பொருளும் களிப்ப நல்கிக்
கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடும் எண்ணெய் விழாக் குளிப்ப நல்கி
மா மதுரா நகர் அன்றி மற்றும் உள நகர் எங்கும் மகிழ்ச்சி தூங்க.     

645.        
என்ற நாதன் மேல் அன்பையும் உயிரையும் இருத்தி ஆயம் சூழக்
குன்றம் அன்னது ஓர் மேல் கொடு தூரியும் குரைகடல் என ஆர்ப்ப
நின்ற தெய்வ மால் வரைகளும் புண்ணிய நீத்தமும் நீத்து ஏகி
மன்றல் மா மதுரா புரி அடைந்தனள் மதிக் குல விளக்கு அன்னாள்.

971.        
அன்னம் இறை கொள் வயன் மதுரைச் சிவன் யாம் அரச நீ ஈன்ற
பொன்னை அனையாள் தனை மதுரா புரியில் கொடுபோய் மறு புலத்து
மன்னர் மகுட மணி இடற மழுங்கும் கழல் கால் சுந்தரன் ஆம்
தென்னர் பெருமான் குமரனுக்குக் கொடுத்தி என்று செப்புதலும்.

1357.      
செல்லார் பொழில் சூழ் மதுரா புரிச் சித்தர் எல்லாம்
வல்லார் அவர் ஆடலை யார் உரை செய்ய வல்லார்
எல்லாரும் வியப்பு உற இத் தனிச் சித்த சாமி
கல்லானை தின்னக் கரும்பு ஈந்த கதையும் சொல்வாம்.

1461.      
திருத்தராய் மதுரா புரி மேவிய சித்தர் ஆகியச் செல்வர்
விருத்தராய் இளையவரும் ஆய் மழவும் ஆய் வேடம் கொண்டு அடல் ஏற்றின்
ஒருத்தர் ஆய் விளையாடிய ஆடலை உரைத்தனம் இனி மன்றுள்
நிருத்தர் ஆயவர் மாறி நின்று ஆடிய நிலை சிறிது உரை செய்வாம்.     

1624.      
அருள் கடல் அனைய ஆதிநாயகன் தன் அவிர் சடை அணி மதிக் கொழுந்தின்
பெருக்கு அடை அமுதத் தண் துளி சிறிது பிலிற்றினான் பிலிற்றிடலோடும்
பொருக்கு என எங்கும் பாலினில் பிரை போல் புரை அறக் கலந்து பண்டு உள்ள
திருக்கிளர் மதுரா நகரம் ஆப் புனிதம் செய்த அச்சிறுதுளி அம்மா.

2096.      
இகழ்ந்த கூற்று எறி சேவடிக்கு இடை அறா நேயம்
திகழ்ந்த பத்திரன் அன்பையும் தேவரைக் காப்பான்
அகழ்ந்த ஆழி நஞ்சு உண்டவன் அருளையும் வியந்து
புகழ்ந்து போய் மதுரா புரிப் புனிதனைப் பணியா.

3356.      
திரு மணி மைந்தன் மைந்தன் முடி சூட விற்ற திருமல்கு செல்வ சரணம்
மருமகன் என்று மாமன் உருவாய் வழக்கு வலிபேசு மைந்த சரணம்
குரு மொழி தந்து நாரை குருவிக்கு வீடு குடி தந்த எந்தை சரணம்
வரு பழி அஞ்சி வேட மகனுக்கு இரங்கு மதுரா புரேசசரணம்.
*****
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Mon, 30 Mar 2015, 21:56

திருவிளையாடற் புராணப் பாடல்களை இணையத்தில் வழங்கியுள்ள தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு http://www.tamilvu.org/ நன்றி.