Showing posts with label பாண்டியர். Show all posts
Showing posts with label பாண்டியர். Show all posts

Tuesday, 24 December 2019

பாண்டியரைக் கண்டுமிரண்ட ராவணன்

Gowtham Tamilan in FB
27.11.2019
பாண்டியரைக்  கண்டுமிரண்ட ராவணன்!!
+++++++++
மாகவி காளிதாசரின் இரகுவம்சத்தில்!!
+++++++

பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:--

அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:

புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)

இதன் பொருள்:-- தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர்  அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62)

ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!

ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.

ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம்  என்பதும் தெளிவாகிறது.

இனவெறி பரப்பும் ஆரிய—திராவிடக் கொள்கைக்கு காளிதாசனும், நச்சினார்க்கினியரும் கொடுக்கும் அடி இது, என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்

Friday, 25 January 2019

இந்துஸ்தான் என்றால் பாண்டியநாடு என்று பொருள்


இந்துஸ்தான்
பாண்டியநாடு என்று பொருள்


இந்தியாவின் பண்டைய பெயர் இந்துஸ்தான் என்பதாகும்.  இந்தியாவிற்கு அருகே, பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்று பெயரில் நாடுகள் உள்ளன.  "ஸ்தானம்" என்றால் வடமொழியில் இடம் என்று பொருள். "ஸ்தான்" என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.
இந்து என்றால் சந்திரன்,  இந்துஸ்தான் என்றால் சந்திரர் தேசம், பாண்டியர் நாடு என்று பொருள்.  சந்திர வம்சத்திரரான பாண்டியர்கள், வடக்கே இமயமலையை எல்லையாகவும், தெற்கே குமரியை எல்லையாகவும் கொண்டு பாரததேசம் முழுவதையும் பலகாலம் ஆண்டுள்ளனர்.   இதற்கு ஏராளமான சங்க இலக்கியச் சான்றுகள் உள்ளன.  
சேரர்கள் அக்னி வம்சத்தினர், சோழர்கள் சூரிய வம்சத்தினர், பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் என்கிறது திருவிளையாடல் புராணம்.   பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடல் புராணத்தில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் உள்ளன.  இந்து என்றால் சந்திரன் என்று நாவலர், பண்டித . மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை யெழுதியுள்ளார்கள்.
இந்து என்றால் சந்திரன் என்பதையும், இந்துஸ்தான் என்றால் பண்டைத் தமிழப் பாண்டியர்களது நாடு என்பதை அறிவோம்.   பண்டைய பாரதத்தைத் தமிழர் அரசாண்டது போன்று இன்றைய இந்தியாவைத் தமிழர் ஆள வேண்டும்.

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் " இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும் " என்பார். 
தேவார பதிகத்திலும் ' இந்து வார்சடை யெம்மி றையே ' என்பார் திருஞான சம்மந்தர்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


திருவிளையாடல் புராணத்தில்
'இந்து' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

திருவிளையாடல் புராணம் பாடல் எண் 212

அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
சந்தி யாதி தவமுடித் தீறிலா
இந்து சேகரன் றாணினைந் தேத்தியே.
   
இந்தப் பாடலுக்கு,
நாவலர், பண்டிதர், . மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
அந்த வேலையில் - அப்பொழுதில்,
அச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கி - வந்து அத் தீர்த்தத்தின்கண் நீராடி,
அம்மண்டபத்து ஏறியே - அந்தமண்டபத்திலேறி,
சந்தி ஆதி தவம் முடித்து - சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, (சந்தியிற் செய்யப்படுவதனைச் சந்தி யென்றார், தவம் - செய்கடன்)
ஈறு இலா இந்து சேகரன் - அழிவில்லாத சந்திர சேகரனாகிய இறைவனுடைய,
தாள் நினைந்து ஏத்தி - திருவடிகளைத் தியானித்துத் துதித்து

285.       
பொரு அரிய தகர்த் திங்கள் துலாத் திங்கள் இவை உதிக்கும் போது மூழ்கின்
ஒரு பதினாயிர மடங்காம் சுறவு கவைத் தாள் அலவ உதிப்பின் மூழ்கின்
இருபதினாயிர மடங்காம் இந்து ரவியிடத்து ஒடுங்கு இந்து வாரம்
வருவது அறிந்து ஆடி மனு ஓதல் செயின் அனந்த மடங்கு உண்டாகும்.             
  
300.       
மனிதரில் உயர்ந்தோர் ஆதி மறையவர் தேவர் தம்மில்
பனிதரு திங்கள் வேணிப் பகவனே உயர்ந்தோள் வேட்டோர்க்கு
இனிது அருள் விரதம் தம்முள் அதிகம் ஆம் இந்து வாரம்
புனித மந்திரங்கள் தம்முள் போத ஐந்து எழுத்து மேலாம்.

542.       
மகவு இன்றிப் பல பகல்யான் வருந்தி அரும் தவம் புரிந்தேன் மைந்தன் பேறு
தக இந்த மகம் செய்தேன் அதுவும் ஒரு பெண் மகவைத் தந்தது அந்தோ
முக இந்து நிலவு ஒழுக வரு பெண்ணு முலை மூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நக வந்தது என்னேயோ என்று வகை இலனாகி நலியும் எல்லை.            

692.       
விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி
அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்
பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல் காலும்
இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து மண்டலம் மானும்.            

932.       
மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம் நீங்க
ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள் செய்த
பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன் கோள்வந்து
தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப.

946.       
இன்னணம் களிப்ப மூதூர் இந்து ஆதிரை நல் நாளில்
பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த
தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி
மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி.    

1106.    
இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த
மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி
சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம
சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா.

1321.    
வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும் சூழ்ந்து
சந்து வாய் தெரியாது ஒன்றித் தாம் ஒரு குடிலாய் மாடப்
பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரிப்பப் போர்த்த
இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும்.       

1789.    
சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்
அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா
வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து அழைத்து
இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.

1964.    
இய மானன் இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல எறிகால் எனும் பகுதி இரு நால்
மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை வழிபாடு அடைந்து வர குணனாய்ச்
சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு சத வேள்வி இந்திரனை நிகர்வோன்
இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி இனன் தேசு வென்ற வர குணனே.

2130.    
வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி எல்லாம்
இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும்
முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை நல்கிச்
சந்த யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் வைகினான்.

2453.    
கலையினால் நிறைந்த இந்து காந்த மண்டபத்தும் செய்த
மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலைத்
தலையினும் கமல வாவித் தடத்தினும் தண் முத்து ஆரம்
முலையினும் அன்றிக் கோடை முடிவிடம் காணார் மைந்தர்.

2691.    
நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து
இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்பத்
தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து
உந்து நீர்ச் சடையார் மணம் உன்னினார் மன்னோ.

2801.    
சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு
மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட
நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்
இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார்.

படிக்கப்பெற்றது -
Ref: 2
Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent (1989), p. 46: "They used the name Hindustan for India Intra Gangem or taking the latter expression rather loosely for the Indian subcontinent proper. The term Hindustan, which in the "Naqsh-i-Rustam" inscription of Shapur I denoted India on the lower Indus, and which later gradually began to denote more or less the whole of the subcontinent, was used by some of the European authors concerned as a part of bigger India. Hindustan was of course a well-known name for the subcontinent used in India and outside in medieval times." 

நன்றி -   ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகம்’ பதிவு செய்துள்ள திருவிளையாடல் புராணப் பாடல்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன.  tamilvu.org/library/libindex.htm பதிவுகளுக்கு நன்றி.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
தை 11 (25.01.2019) வெள்ளிக்கிழமை