Showing posts with label செழியன். Show all posts
Showing posts with label செழியன். Show all posts

Sunday, 16 November 2025

கீழடி அல்ல, அது செழியன் ஆண்ட கூடல்

கீழடி அல்ல,  

அது செழியன் ஆண்ட கூடல் என்ற மதுரை 


கூடல் என்ற மதுரையைச் செழியன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான்.



இவன் கரடி போன்றவனாம்.  

கரையான் போன்றவர்கள் சிறுசிறு சிற்றரசர்கள்.   

கரையான் மண்ணால் புற்று கட்டி அதன் உள்ளே வாழும்.

கரையான் போன்று இந்தச்  சிற்றரசர்கள் பெரிதும் முயன்று மண்-கோட்டைகளைக் கட்டியுள்ளனர்.

கரடி போன்ற  செழியன்  தனது வலிமையான நகம்போன்ற வேல்-படையால் அந்த மண்-கோட்டைகளை அழித்தான். 

அந்த மண்-கோட்டைகளுக்குள் உள்ளே இருந்த செல்வத்தை எடுத்துச் சென்றுவிட்டான்.  

ஆனாலும் அவனுக்குத் திருப்தி இல்லை.


சேரநாட்டில் மலை மேல் முசிறி என்ற நகரம் உள்ளது.  

அதன் அருகே சுள்ளி என்றொரு அழகிய பெரிய ஆறு ஓடுகிறது.  

அந்த ஆற்றில் வெண்மையான நுரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன.  

அந்த நுரைகள் சிதறுமாறு மரக்கப்பல்கள் செல்கின்றன.  

அந்தக் கப்பல்களில் யவனர்கள் சேரநாட்டிற்கு வந்து வணிகம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறையில் பொன்னைக் கொண்டுவது கொடுத்துவிட்டு கரியநிறத்தில் உள்ள மிளகை வாங்கிச் செல்கின்றனர்.  

இந்த முசிறி நகரத்தில் வணிகம் விறுவிறுப்பாக நடைபெறுவதால், எப்போதும் ஆட்களின் ஆரவாரம் மிகுந்துள்ளது.


கரையான் போன்ற சிற்றரசர்களை வென்றும் திருப்தி அடையாத கரடி போன்ற செழியன், 

யானை போன்ற முசிறியின் மீதும் படையெடுத்து வென்றான்.

அங்கிருந்த தங்கத்தால் ஆன பாவைச் சிலை ஒன்றையும் கவர்ந்து வந்து விட்டான்.

செழியன் ஆண்ட கூடல் நகரம் கீழடியின் கீழே புதைந்து உள்ளது.

அந்தக் கூடல் நகரைத் தொல்லியலாளர்கள் தோண்டிக்  கண்டறிந்துள்ளனர்.

கூடுதலான விவரங்களுடன்  படங்களையும் இணைத்துள்ளேன்.

https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/10/blog-post.html