Showing posts with label பொரு. Show all posts
Showing posts with label பொரு. Show all posts

Sunday, 13 November 2022

இதிகாசங்களில் இந்து, இந்துஸ்தான்



இதிகாசங்களில் இந்து, இந்துஸ்தான்

இந்து, இந்துமதம் என்பன மிகப் பழமையான பெயர்கள் என்பதை பல்வேறு புராண இதிகாசங்கள் விவரிக்கின்ற.

அந்த வகையில், ப்ருஹஸ்பதி சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள் ஆகியவற்றில் ஹிந்து என்ற சொல் குறிக்கப்பட்டிருப்பதோடு, இந்து என்ற சொல்லிற்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஹிம்ஸயா தூயதே யஸ்ச ஸதாசரண
தத்பர: வேத, கோ, ப்ரதிமா
ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக

(புத்தஸ்ம்ருதி கி.மு.4&ம் நூற்றாண்டு)

பொருள்:  யார் ஹிம்ஸிக்கப் பட்டாலும், எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரஹங்கள் இவற்றை பக்தியுடன்வழிபடுகிறானோ அவனே ஹிந்து.

------------------------------

ஹிமாலயாத் ஸமாரப்ப யாவத் இந்து
ஸரோவரம்
தத்தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷத

(ப்ருஹஸ்பத்ய ஆகமம் கி.மு. 4&ம் நூற்றாண்டு)

பொருள்: ஹிமாலயம் முதல் ஹிந்து மஹா ஸாகரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என்றுஅழைக்கப்படுகிறது.

------------------------------

ஜானுஸ்தானே ஜைன ஸப்த ஸப்த
சிந்துஸ் ததைவ ச;
ஹப்த ஹிந்துர்யாவனிய புனர்ஞேயா
குருண்டிகா:

(பவிஷ்ய புராணம் 4&ம் நூற்றாண்டு)

பொருள்: ‘ஸ’ என்ற எழுத்து யவனர்களின் (கிரேக்கர் முதலான தேசத்தவர்கள்) பாஷையில் ‘ஹ’ என்று திரிகிறது.  எனவேதான், ‘ஸப்த ஸிந்து’ என்ற வாக்கியம் ‘ஹப்த’ ஹிந்து என்பதாக மாறியது

--------------------------------

கலினா பலினா கலிதகலௌ
நூம்தர்மா
யவனையோ ரதரமாக்ராஜதா
ஹிந்தவோ விந்த்ய மாவிஹன!!

(காலிகா புராணம் கி.பி. 5ம் நூற்றாண்டு)

பொருள்:  அதர்ம ஆகிரமிப்பாளர்களின்படை யெடுப்புகளினால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து ஹிந்துக்கள் தப்பிக்க விந்தியமலையை பயன் படுத்தினர்.  

--------------------------------

சமஸகிருதம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் இதிகாச புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த வகையில், 

"இந்து வார்சடை எம்மிறையே"-  திருஞான சம்மந்தர்.
"வந்து மேருவினை நாள்தொறும் வலம் செய்து உழல்வோர்;
இந்து சூரியனை ஒத்து இருவரும் பொலியவே"-  கம்பராமாயணம்.

"செக்கர்அத் தீயவன் வாயில் தீர்ந்து; வேறு உக்கவான் தனிஎயிறு ஒத்த இந்து"- மூவருலா

"பொன்துவரை இந்துமரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த"-  மூவருலா.

-------------------------------

இதுபோன்று தமிழில் எழுதப்பட்ட புராணங்களில் இந்து இந்துமதம் பற்றிப் பல் வேறு தகவல்களை கூறப்பட்டுள்ளன. ஒருசிலவற்றை மட்டும்  மேலே கண்டோம்.